தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தே.மு.தி.க.,வை கைகழுவி விட்டு, விஜயகாந்த், பா.ஜ., தலைமையை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த, 2005ல் துவங்கப்பட்ட, தே.மு.தி.க., 2006ல் சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலையும், 2009ல் லோக்சபா தேர்லையும், பல சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலையும் தனியாக சந்தித்தது.இதன் மூலம், ஓட்டு வங்கி பலத்தை, அரசியல் களத்தில் உணர்த்தி, அ.தி.மு.க., - -தி.மு.க.,விற்கு அடுத்து, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையைப் பெற்றது. 2011 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எழுச்சியாக இருந்த... இதில், அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தே.மு.தி.க.…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிருக்கும் பனை மரம் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டப்பட்டு அழிவின் விளிம்பினை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும். மாநில அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மாநில மலர் செங்காந்தள், மாநில பறவை மரகதப் புறா, மாநில விலங்கு வரையாடு, மாநில விளையாட்டு சடுகுடு, மாநில நாள்காட்டி திருவள்ளுவர் ஆண்டு, மாநிலத் திருநாள் தைப் பொங்கல் போன்ற மாநில சின்னங்களின் வரிசையில் மாநில மரமாக இருப்பது பனைமரம். மக்களின் இயல்பு நிலையை பனை, தென்னை, வாழை என்று 3 மரங்களின் இயல்புடன் ஒப்பிட்டு, திரைப் பாடல் ஒன்று விளக்குகிறது. எந்தவிதப் பயனையும் பெறாமல் பிறருக்கு உதவும் குணம்…
-
- 0 replies
- 525 views
-
-
தஞ்சாவூர்: தஞ்சை வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,'' என, அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார். கர்நாடக இசை உலகில், உன்னதமான இடத்தைப்பெற்றது, தஞ்சாவூர் வீணை. தஞ்சையில், 17ம் நூற்றாண்டில், ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில், புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது. இதனால், தஞ்சாவூர் வீணை என்றும், ரகு நாதவீணை என்றும் பெயர் பெற்றது. 40 ஆண்டு விளைந்த பலா மரத்தின், அடி மரத்தில் இருந்து, வீணை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில், அறிவுசார் சொத்துரிமை பேரவை தலைவர் சஞ்சய்காந்தி கூறியதாவது; கலைஞர்களையும், பாரம்பரிய கலையையும் பாதுகாக்கத்தான், அரசு, இந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது. அ…
-
- 0 replies
- 493 views
-
-
ராஜபக்சேவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - பாஜக அலுவலகம் முற்றுகை ( படங்கள் ) நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிறார். இதைக்கண்டித்து தமிழுணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் கமலாலயத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். படங்கள் : அசோக் ---------------------------------------------- ராஜபக்சேவுக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம் ( படங்கள் ) சி.பா.ஆதித்தனாரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தனார் உருவபடத்திற்கு வணக்கம் செலுத்தினார். பின்னர், நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜப…
-
- 0 replies
- 505 views
-
-
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்கிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று 110 டிகிரி வெயில் பதிவானது. தமிழகத்தில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னிநட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. இது வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. கத்திரி வெயில் துவங்கிய நாளன்றே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவியதால், மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் உக்கிரம் அதிகரித்தது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெயில் சதத்தை தாண்டியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பகல் வேளைகளில் …
-
- 0 replies
- 426 views
-
-
சேலம்: சேலம் மாநகர பகுதியில் தொடரும் புற்றுநோய் இறப்புகளை மறைப்பதற்காக மயானத்திலிருந்து ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச்சென்றிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகராட்சி 50வது கோட்டத்தில் உள்ள எஸ்.கே.கார்டன் மற்றும் கொடம்பக்காடு சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வருடத்தில் 10பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை களிலிருந்து வெளியேறும் கழிவுகளே காரணம் என்று மக்கள் திடுக்கிடும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தலைமையிலான சிறப்பு மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர். தொழிற்சாலைகளிலிருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு கிண்டியில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 50வ…
-
- 0 replies
- 429 views
-
-
ராஜபக்சே மோடி பதவியேற்பு விழாவிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தீக்குளிக்க முயற்சி &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ள ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்…
-
- 0 replies
- 847 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதிவியேற்கும் நிகழ்விற்கு சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற போர்வையில், தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த சிங்கள பெளத்த இனவெறி இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்திய அயலுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்திருப்பது இந்திய நாட்டின் அங்கமாக இருக்கும் 9 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் பரப்புரைக்காக முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வந்த நரேந்திர மோடி, திருச்சியில் நடந்த பா.ஜ.க.வின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது, இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதை பா.ஜ.க. அரசு உறுதி செ…
-
- 0 replies
- 510 views
-
-
சென்னை கிழக்குகடற்கரை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். மகாபலிபுரம் மணவை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த நாசரின் மகன் உள்ளிட்ட சிலர் பயணித்த கார் எதிரே வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் நாசர் மகன் பைசில் நாசர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காஞ்சிபுரம் பொலிஸார் கூறுகையில்: “விபத்து காலை 8 மணியளவில் நடந்துள்ளது. கார் திடீரென தாறுமாறாக ஓடி எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதியுள்ளது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 3 பேர் சம்பவ…
-
- 4 replies
- 1.2k views
-
-
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=122213
-
- 31 replies
- 2.5k views
-
-
மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே... முதல்வர் ஜெ. புறக்கணிப்பு? சென்னை: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது. நரேந்திர மோடி பிரதமராக வரும் 26-ந் தேதியன்று மாலை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் நேற்று வெளியானது முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன. பாரதிய ஜனதா…
-
- 3 replies
- 973 views
-
-
தமிழருவி மணியன்.| கோப்புப் படம். பாஜக கூட்டணியில் தமிழக முதல்வர் வேட்பாளருக்கு வைகோ தான் தகுதியானவர். விஜயகாந்த் கறைபடியாதவர் என்று என்னால் சொல்ல முடியாது என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நீங்கள் விரும்பிய பாஜக கூட்டணி அமைந்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே? இலங்கைத் தமிழின அழிப்புக்கு உதவிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழகத்தில் காங்கிரஸ் அழிக்கப்பட வேண்டும். திமுக, அதிமுகவிடமிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற நோக்கத்துக்காக பாஜக கூட்டணிக்கு பாடுபட்டேன். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. காங்கிரஸ் 37 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. திராவிடக் கட்சிகளில் ஒன்றை மக…
-
- 3 replies
- 697 views
-
-
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மகள் கனிமொழிக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தயாளு அம்மாளைத் தொடர்ந்து கனிமொழியும் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி 2ஜி வழக்கு தொடர்பாக மே 26ம் தேதி தயாளு அம்மாள், கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி கோர்ட்டில் ஆஜராக வேண்டியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தயாளு அம்மாளுக்கு திடீரென உடம்பில் நீர்ச்சத்து குறைந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கனிமொழிக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல…
-
- 9 replies
- 756 views
-
-
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தனி மரியாதை அளிக்கப்பட்டது. இவர்களை வரவேற்று பேசிய பாஜகவின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், விஜயகாந்தின் பெயரைக் குறிப்பிடும்போது ‘உங்கள் மனைவி பிரேமலதா வந்திருக்கிறார்களா? எனக் கேட்டு அவர் அமர்ந்திருந்த இடத்தை பார்த்தார். பிரேமலதாவும் எழுந்து ராஜ்நாத்தை கைகூப்பி வணங்கினார். அதேபோல் நரேந்திர மோடியும் தனது ஏற்புரையின்போது, ‘விஜயகாந்த் ஜி, எங்கே உங்கள் மனைவி பிரேமலதா ஜி?’ எனக் கேட்டு அனைவரின் முன்னிலை யிலும் தனி அங்கீகாரம் அளித்துப் பாராட்டினார். அப்போதும் கூட்டத்தினரி டையே அமர்ந்திருந்த பிரேமலதா எழுந்து நின்று மோடியை வணங்கினார். இந்தக் கூட்டத்தில் என்.ஆர். க…
-
- 4 replies
- 2.1k views
-
-
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மு.க. ஸ்டாலின் ராஜினாமா...? சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று மு.க.அழகிரி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தான் விலக முன்வருவதாகவும், அவர் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தபோது தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 35ல் திமுக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. இதனால், இத்தோல்விக்கு முழுப் பொறுப்ப…
-
- 18 replies
- 1.3k views
-
-
கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு நேற்று மாலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று மாலையில் தயாளு அம்மாளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ரனர். அவரது உடல் நல பாதிப்பு குறித்த விவரம் தெரியவில்லை. அவருக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. -தற்ஸ் தமிழ்-
-
- 3 replies
- 1k views
-
-
தமிழகத்தில் கன்னியாகுமரி தவிர மற்ற 38 தொகுதிகளில் டெபாசிட் தொகையை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் 4.4 சதவீத வாக்குகள் மட்டுமே காங்கிரஸýக்கு கிடைத்துள்ளது. நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. ஒரு வேட்பாளர், தான் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பப் பெற வேண்டுமானால் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-இல் 1 பங்குக்கு அதிகமாக பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் எச். வசந்தகுமார் சுமார் 2.50 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இவரைத் தவிர காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 38 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். எஸ்.எஸ். ராமசுப்பு (திருநெல்வேலி), சாருபாலா தொண்டைமான் (…
-
- 9 replies
- 1.2k views
-
-
மத்தியில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 16-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட கூட்டணி அமைந்தது. இந்தக் கூட்டணிக்கு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியிலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று நரேந்திர மோடியும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் அறிவித்திருந்தனர். அதன்…
-
- 0 replies
- 1k views
-
-
விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதியில் மதிமுக வேட்பாளர் வைகோ தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராதா கிருஷ்ணன் 1,45,915 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 4,06,232 ஓட்டுகள் பெற்றார். வைகோ 2,60,317 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் ரத்தினவேல் 2,41,089 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 38,439 ஓட்டுகளும், மார்க்.கம்யூ., வேட்பாளர் சாமுவேல் ராஜா 20,107 ஓட்டுகளும் பெற்றனர். http://election.dinamalar.com/detail.php?id=8571
-
- 9 replies
- 805 views
-
-
சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான மலைச்சாமி, பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 1999 ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.பி.யானார். அந்த பதவிக்காலம் முடிவடைந்ததும், அதிமுகவில் சொல்லிக்கொள்ளும்படியான பொறுப்பில் ஏதும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜனதா கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் மோடி ஆட்சிய…
-
- 2 replies
- 593 views
-
-
புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபசார விருந்தில் விருந்தில் ராகுல் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து, அவரை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் ஒருவேளை காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும், மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆகப்போவதில்லை. அவர் வருகிற 17 ஆம் தேதியுடன் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் மன்மோகன் சிங் நேற்று தமது அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்று…
-
- 1 reply
- 515 views
-
-
கூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை 1ல் இருக்கும் டர்பைன் கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வால்வில் ஏற்பட்ட கசிவால், சுடு நீர் 6 பணியாளர்கள் மீது பட்டது. இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. இவர்கள் அனைவரும் முதலில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த ஆறு பேரில் ராஜன், பவுல் ராஜ், செந்த…
-
- 1 reply
- 428 views
-
-
யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள். வழிகாட்டும் ஒளி ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்…
-
- 0 replies
- 1.9k views
-
-
சென்னை: மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே முடிவு செய்யப்படும் என்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மாத காலம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்த தேர்தலில் வாக்களித்த பின்னர், 27ஆம் தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டிற்கு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை ஜெயலலிதா கவனித்து வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் (16ஆம் தேதி) வெளிவர உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 2.38 மணிக்கு கோவை விமான நிலையம்…
-
- 1 reply
- 482 views
-
-
தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் என சந்தோஷமாக சுற்றினர். காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கினாராம். இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை…
-
- 7 replies
- 861 views
-