தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
சென்னை: தமிழக மக்கள் என்னை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்காத நிலையில் வேறு மாநிலங்களிலிருந்து ராஜ்யசபாவுக்கு செல்ல மாட்டேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. வின் உயர்நிலை ஆட்சி மன்ற மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. இதில் லோக்சபா தேர்தலுக்கான தோல்வி மற்றும் மோடி அரசின் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வைகோ கூறுகையில்; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க. அங்கம் வகிப்பதை பா.ஜ. தலைவர்கள் வரவேற்கின்றனர். லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி பா.ஜ. தலைவர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ. தலைவர்கள் ம.தி.மு.க.வை மிகுந்த மரியாதைய…
-
- 2 replies
- 624 views
-
-
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு…
-
- 0 replies
- 447 views
-
-
அரியலூர்: அரியலூர் அருகே பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். அரியலூர் ஒட்டக்கோவில் அருகே இன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. அரியலூரில் இருந்து செந்துறை சென்ற அரசுப் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காயமடைந்த அப்பேருந்தில் பயணித்த 9 பேர் பலியாகினர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 13 பேரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://n…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=122213
-
- 31 replies
- 2.6k views
-
-
துக்ளக் ஆசிரியர் சோ திடீர் சுகவீனம்... ஏன்..? சென்னை: துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக திடீர் திடீரென முக்கியஸ்தர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 2ஜி வழக்கில் மே 26ம் தேதி அதாவது நாளை கோர்ட்டில் ஆஜராகவேண்டிய நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும், அவரது மகள் கனிமொழிக்கும் அடுத்தடுத்து சுகவீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாளை மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று கருதப்பட்ட துக்ளக் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், மோடி மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி திடீர…
-
- 13 replies
- 2.3k views
-
-
சென்னை: முதல் வரிசையில் இடம் தராததால் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புறக்கணித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கட்சியான தே.மு.தி.க. 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் தனது கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியாவது பெற்று விட வேண்டும் என்று விஜயகாந்த் டெல்லி சென்றார். மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார். மோடியும் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மனைவியுடன் சிறந்த முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி பாராட்டினார். மோடியின் பாராட்டை வைத்து தே.மு.தி.க.வுக்கு ஒரு அமைச்சர் பதவி அல்லது மாநிலங்…
-
- 2 replies
- 805 views
-
-
டெல்லி : மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் கல்வித் தகுதி விவகாரம், பா.ஜ.க, மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 12ம் வகுப்பு மட்டுமே படித்தவர் எவ்வாறு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சராக முடியும் என்ற காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கு பதில் கேள்வியாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள மத்திய அமைச்சர் உமாபாரதி, அமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வித் தகுதி குறித்து காங்கிஸ் சார்பில் தெரிவிக்கப்படும் விமர்சனங்களை சோனியா காந்தி கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி இல்லாவிடில் சோனியா காந்தி அவரது கல்வித் தகுதிகளை வெளியிட வேண்டும், என்றும் கூறி உள்ளார். http://www.di…
-
- 3 replies
- 774 views
-
-
இணையத்தை கலக்கும் சோனியா அண்டி , ராகுல் மாமா நடித்த ''நான் ஒரு ராசியில்லா ராஜா. '' என்ற சூப்பர் ஹிட் சோகப் பாடல் ... பார்த்து மகிழுங்கள் .
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: விஜயகாந்த் டெல்லி சென்ற போதிலும், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு, மைத்துனர் சுதீஷுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததுதான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் வீசிய நரேந்திர மோடி அலையில் தமிழ்நாட்டிலும் அரசியல் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்த்து, பா.ஜனதா தலைமையில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியும் கணிசமான இடங்களை கைப்பற்றும் என்ற கனவுடன் இருந்தது. ஆனால் அது கனவாக வந்து கனவாகவே போய்விட்டது. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா), தர்மபுரியில் அன்புமணி (பா.ம.க) ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரிய மாநிலமான தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஒ…
-
- 9 replies
- 953 views
-
-
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது பா.ஜனதாவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும்., தமிழகத்தின் உணர்வுகளை மனதில்கொண்டு அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் ஆதரவை பெற பா.ஜனதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகள் காரணமாக ரஜினி பிடிகொடுக்காமல் நழுவிவிட்டார். இருப்பினும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்று தமிழக பா.ஜனதா தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்குபோதெல்லாம் கூறிவந்தனர். ஆனால் அதற்கும் ரஜினி தரப்பில் எவ்வித ரியாக்ஷனும் வெளிப்படவில்லை. ஆனாலும் மனம் தளராத பா.ஜனதாவினர் மோடியிடம் பேசி, …
-
- 0 replies
- 1.9k views
-
-
தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோயில் பாதுகாப்பு கருதி ரூ.1.30 கோடி மதிப்பில் 31 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நேற்று முதல் செயல்பட துவங்கியது.தஞ்சை பெரிய கோயில், யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.இந்தநிலையில், கூடுதல் பாதுகாப்பு கருதி கோயில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை பெரிய கோயில் மராட்டா நுழைவு வாயில், கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், விமான கோபுரம், நந்தி மண்டபம், கோயில் திருச்சுற்று என்று 31 இடங்களில் கண்காணிப்ப…
-
- 0 replies
- 537 views
-
-
சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் இருப்பதால், பா.ம.க.,வின் அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க பா.ஜ., முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி, ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவர் என்பதால், மோடி அமைச்சரவையில் இடம் பெற முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி அனந்தராமன் ஆகியோருடன், டில்லியில் முகாமிட்டிருந்தார். இணை அமைச்சர் பதவியாவது...: அமைச்சர் பதவி வேண்டி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை, பா.ம.க., குழு சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது, கேபினட் அமைச்சர் இல்லையென்றாலும், இணை அமைச்சர் பதவியாவது அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால், பா.ம.க.,வின் கோரிக்கையை, பா.ஜ., தலைமை ஏற்றுக் கொள்ளவில…
-
- 0 replies
- 570 views
-
-
சென்னை: மோடி பிரதமராக பதவியேற்க தயாராகும் நேரத்தில் கிட்டத்தட்ட அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் போல மாறிவிட்டார் திமுக பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு. மோடியின் கொ.பா.சேவாக 'மாறிய' குஷ்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு, பாஜகவையும், மோடியையும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், இப்போது குஷ்புவின் மோடி மீதான நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. நரேந்திரமோடியின் டுவிட்டர்களை ரீடுவிட் செய்வதிலேயே குஷ்பு இன்று பெரும்பொழுதை கழித்தார் என்றால் அது மிகை கிடையாது. "நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பங்களிப்பு அவசியம். வீ…
-
- 0 replies
- 646 views
-
-
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் மீது கோரக்பூர் விரைவு ரயில் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் பலியானார்கள். சன்ட் கபிர்நகர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்த கோரக்பூர் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து ரயில்வே மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மோடி இரங்கல் இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும், இன்று மாலை பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், கேபினட் செயலாளரை தொடர்பு கொண்ட அவர், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவி…
-
- 0 replies
- 799 views
-
-
புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ம…
-
- 0 replies
- 780 views
-
-
மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார் ஜெயலலிதா இதற்கிடையே மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ராஜபக்சே வருவதால் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ராஜபக்சே வருவதையடுத்து மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ள…
-
- 7 replies
- 1.1k views
-
-
குடிநீரையே காசு கொடுத்து வாங்கும்போது, இவ்வளவு பெரிய மாநகரில், நல்ல பாரம்பரிய உணவுக்கு எங்கே போவது' என்கிறீர்களா? சைதாப்பேட்டை, தபால் நிலையத்திற்கு எதிரில், செயல்படும் 'தாய்வழி இயற்கை உணவகம்' அதற்கு பதில் சொல்கிறது. அந்த உணவகத்தை மகாலிங்கம், ரவி என்ற நண்பர்கள் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் பேசியதில் இருந்து... * இயற்கை உணவகம் ஆரம்பிக்கணும்ங்கற எண்ணம் எப்படி வந்தது? மகாலிங்கம்: ஆறு மாசத்துக்கும் முன்னாடி வரைக்கும், நான் காரசாரமா, அசைவ உணவு தயாரிச்சு, 'செட்டிநாடு டிபன் சென்டர்'ங்கற பேருல நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருந்தேன். ஏழு வருஷமா அந்த தொழில்ல இருந்தாலும், சமீப காலமா ஏதோ மனக்குறை. சின்ன வயசுலேயே பலபேருக்கு வியாதி வர்றதுக்கு காரணம், 'பாஸ்ட்புட்' மாதிரியான உணவ…
-
- 0 replies
- 549 views
-
-
தே.மு.தி.க.,வை கைகழுவி விட்டு, விஜயகாந்த், பா.ஜ., தலைமையை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த, 2005ல் துவங்கப்பட்ட, தே.மு.தி.க., 2006ல் சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலையும், 2009ல் லோக்சபா தேர்லையும், பல சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலையும் தனியாக சந்தித்தது.இதன் மூலம், ஓட்டு வங்கி பலத்தை, அரசியல் களத்தில் உணர்த்தி, அ.தி.மு.க., - -தி.மு.க.,விற்கு அடுத்து, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையைப் பெற்றது. 2011 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எழுச்சியாக இருந்த... இதில், அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தே.மு.தி.க.…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிருக்கும் பனை மரம் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டப்பட்டு அழிவின் விளிம்பினை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும். மாநில அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மாநில மலர் செங்காந்தள், மாநில பறவை மரகதப் புறா, மாநில விலங்கு வரையாடு, மாநில விளையாட்டு சடுகுடு, மாநில நாள்காட்டி திருவள்ளுவர் ஆண்டு, மாநிலத் திருநாள் தைப் பொங்கல் போன்ற மாநில சின்னங்களின் வரிசையில் மாநில மரமாக இருப்பது பனைமரம். மக்களின் இயல்பு நிலையை பனை, தென்னை, வாழை என்று 3 மரங்களின் இயல்புடன் ஒப்பிட்டு, திரைப் பாடல் ஒன்று விளக்குகிறது. எந்தவிதப் பயனையும் பெறாமல் பிறருக்கு உதவும் குணம்…
-
- 0 replies
- 526 views
-
-
தஞ்சாவூர்: தஞ்சை வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,'' என, அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார். கர்நாடக இசை உலகில், உன்னதமான இடத்தைப்பெற்றது, தஞ்சாவூர் வீணை. தஞ்சையில், 17ம் நூற்றாண்டில், ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில், புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது. இதனால், தஞ்சாவூர் வீணை என்றும், ரகு நாதவீணை என்றும் பெயர் பெற்றது. 40 ஆண்டு விளைந்த பலா மரத்தின், அடி மரத்தில் இருந்து, வீணை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில், அறிவுசார் சொத்துரிமை பேரவை தலைவர் சஞ்சய்காந்தி கூறியதாவது; கலைஞர்களையும், பாரம்பரிய கலையையும் பாதுகாக்கத்தான், அரசு, இந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது. அ…
-
- 0 replies
- 495 views
-
-
ராஜபக்சேவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - பாஜக அலுவலகம் முற்றுகை ( படங்கள் ) நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிறார். இதைக்கண்டித்து தமிழுணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் கமலாலயத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். படங்கள் : அசோக் ---------------------------------------------- ராஜபக்சேவுக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம் ( படங்கள் ) சி.பா.ஆதித்தனாரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தனார் உருவபடத்திற்கு வணக்கம் செலுத்தினார். பின்னர், நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜப…
-
- 0 replies
- 508 views
-
-
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்கிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று 110 டிகிரி வெயில் பதிவானது. தமிழகத்தில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னிநட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. இது வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. கத்திரி வெயில் துவங்கிய நாளன்றே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவியதால், மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் உக்கிரம் அதிகரித்தது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெயில் சதத்தை தாண்டியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பகல் வேளைகளில் …
-
- 0 replies
- 428 views
-
-
சேலம்: சேலம் மாநகர பகுதியில் தொடரும் புற்றுநோய் இறப்புகளை மறைப்பதற்காக மயானத்திலிருந்து ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச்சென்றிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகராட்சி 50வது கோட்டத்தில் உள்ள எஸ்.கே.கார்டன் மற்றும் கொடம்பக்காடு சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வருடத்தில் 10பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை களிலிருந்து வெளியேறும் கழிவுகளே காரணம் என்று மக்கள் திடுக்கிடும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தலைமையிலான சிறப்பு மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர். தொழிற்சாலைகளிலிருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு கிண்டியில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 50வ…
-
- 0 replies
- 431 views
-
-
ராஜபக்சே மோடி பதவியேற்பு விழாவிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தீக்குளிக்க முயற்சி &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ள ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்…
-
- 0 replies
- 851 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதிவியேற்கும் நிகழ்விற்கு சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற போர்வையில், தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த சிங்கள பெளத்த இனவெறி இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்திய அயலுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்திருப்பது இந்திய நாட்டின் அங்கமாக இருக்கும் 9 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் பரப்புரைக்காக முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வந்த நரேந்திர மோடி, திருச்சியில் நடந்த பா.ஜ.க.வின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது, இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதை பா.ஜ.க. அரசு உறுதி செ…
-
- 0 replies
- 513 views
-