Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சசிகலா சிறை முறைகேடு – லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரிக்காதது ஏன்? ரூபா கேள்வி:- பெங்களூர் சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்ற விவகாரத்தில், லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரணைக் குழு ஏன் விசாரிக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கேள்வி எழுப்பியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜி ரூபா, “சசிகலா, அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட கைதிகள் சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்காக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள…

  2. இதுதான் என் லட்சியம்: திருச்சியில் முதல்வர் உறுதி! மின்னம்பலம்2021-12-31 தமிழகத்தில் எந்தவொரு தனிமனிதருக்கும், அரசிடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒருநிலையை உருவாக்குவோம். இதுதான் என் லட்சியம் என்று திருச்சியில் முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் என மொத்தம் ரூ.1,231 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் முதல்வரால் தொடங்கப்பட்டன. அதுபோன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,084 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொட…

  3. 'காலம்' ஆன கருணாநிதியின் களஞ்சியம் சண்முகநாதன் மின்னம்பலம்2021-12-21 ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் தனிச்செயலாளர் சண்முகநாதன், சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சென்று பார்த்துவந்தார். கடைசியாக, நேற்றும் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்ததை, ஸ்டாலின் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சண்முகநாதனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தச் சென்றபோது, மிகவும் உடைந்த…

  4. வாழை நாரில் நாப்கின் தயாரிக்கும் தம்பதி - சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் வாழை நாரில் நாப்கின் தயாரித்து வருகின்றனர் சென்னையை சேர்ந்த சக்திவர்ஷினி மற்றும் ஷனத்குமார் தம்பதி. பிபிசி தமிழுக்காக அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். "நாங்கள் இருவரும் முதுகலை படிப்பை லண்டனில் ஒன்றாக படித்தோம். அப்போது நிக்கி ஜோடன்ஸ் என்ற பேராசிரியர் தலைமையில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் நாங்கள் இருவரும் ஈடுபட்டிருந்தோம். அந்த ஆராய்ச்சியின் முடிவில் சாதாரண பிளாஸ்டிக் …

  5. முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! கலகலக்கும் தலைமைச்செயலகம் முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகளுக்குள்ளும் மீண்டும் பனிப்போர் நடந்துவருகிறது. கட்சி இணைப்புகுறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. கட்சி நிர்வாகம், பதவி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சிக்கல் நிலவிவருகிறது. அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டுமென்றால், டி.டி.வி.…

  6. சசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் பழனிச்சாமி கலக்கம் சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு, உள்துறை, போலீஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிதி நிர்வாகம், பொதுப் பணி, நெடுஞ்சாலை என, முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் பதவியேற்க அழைப்பு விடுத்ததும், அவர், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுடன், அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் பொதுச் செயலர் கொடுத்திரு…

  7. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது! அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 3 நாள்களாக சென்னையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் பிரமாணப் பத்திரம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பிரமாணப் பத்திரத்தில், 'கட்சியை வலுப்படுத்த பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதற்கு உறுதுணையாக இருப்போம்' என்று எழுதப்பட்டு இருந்ததாக ஓ.பி.எஸ். அணிக்கு தகவல் கிடைக்கவே, பேச்சுவார்த்தை பஞ்சாயத்தாக மாற…

  8. ஆளுநரின் மும்பை பயணம் ரத்து! தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் மும்பை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக இன்று கூடிய சட்டப்பேரவையில், கடும் அமளி நடைபெற்றது. இதனால், இன்று மட்டும் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரணமான சூழல், இன்று உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தான் ஏற்கெனவே மும்பை செல்லத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். http://www.vikatan.com/news…

  9. மிஸ்டர் கழுகு : விரக்தியில் ஜெ. பதவியை குறிவைக்கும் அப்பீல் மனு ! ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் கவனம் எல்லாம் இப்போது டெல்லியை நோக்கித்தான் இருக்கிறது” என்றபடியே லேண்ட் ஆன கழுகார் மேலும் தொடர்ந்தார். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கின் சுழல் மீண்டும் தொடங்கிவிட்டதுதான் ஜெயலலிதாவின் பயத்துக்குக் காரணம். ஆச்சார்யா தாக்கல் செய்த மனு, முதல்வர் பதவியைக் குறி பார்ப்பதாக அமைந்திருக்கிறது. தீர்ப்பில் உள்ள குளறுபடிகள் பற்றி உமது நிருபர் எழுதி இருப்பார். அப்பீல் மனுவின் மையப்புள்ளியாகச் சொல்லப்பட்ட விஷயங்களை நான் சொல்கிறேன்!” ‘‘ம்!” ‘‘நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பைப் பற்றிய காரசாரமான விமர்சனங்கள் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில் இருக்கின்றன. ‘நீதிபதி குமாரசாமி, வழக்கின் …

  10. மகளிர் தினம் : உடல் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை படக்குறிப்பு, சாதனைப் பெண் ரூபா. கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மார்ச் 2024, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வண்டலூரைச் சேர்ந்த 41 வயதான ரூபா வைரபிரகாஷ் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. உயரக் குறைபாடு (Dwarfism) காரணமாக சிறுவயதில் இருந்தே இவருக்கு வளர்ச்சிதையில் சவால்கள் இருந்ததால் அவர் உயரம் குறைந்தவராக காணப்படுகிறார். இதனால் இவருடைய பள்ளிப்படிப்பை 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். ஆனாலும் வாழ்வின…

  11. மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையைப் பார்ப்போம்; என் ரசிகர்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டாம்: ரஜினி ஆவேசம் நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடையே திடீரென பேசினார். அப்போது தனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தரவேண்டாம் என்றும் மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையை பார்ப்போம் என்றும் கூறினார். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்கு பின் தமிழக அரசியலில் இறங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் கடந்த டிச.31 அன்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். கட்சி தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் பிக…

  12. 4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை.! இபிஎஸ் கடும் விமர்சனம்.! வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பலவேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியை எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித…

  13. உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாருக்கு கமல்ஹாசன் ஆதரவு இலங்கையை கண்டித்து அம்பிகை செல்வகுமார் பிரித்தானியாவில் ஆரம்பித்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் ஆதரவளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ருவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பெப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலி…

  14. சீமானை கைது செய்: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்! மின்னம்பலம்2021-10-12 காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை , கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் இன்று (அக்டோபர் 12) சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவரான செல்வப் பெருந்தகை, “தொடர்ந்து சீமான் அவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது தொடர்கிறது. அவர் வாங்குகிற கூலிக்கு சரியாக வேலை பார்க்கிறார் என்று தோன்றுகிறது. உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்கிறார…

  15. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை புதுதில்லி, ஏப்.5- கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24 அன்று நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்த ரவு அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை அம லில் இருக்கும். பொதுமக்கள் அளிக்கும் ஒத்து ழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75ல் இருந்து 79…

  16. தமிழகத்தில் 100 கோடி ரூபாய் பறிமுதல் சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இது நாள் வரையி்ல 100கோடி ரூபாய் வரையி்ல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பறக்கும் படையினர் சார்பில் 34.83 கோடியும், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் 32.64 கோடி ரூபாய், மற்றும் வருமானவரித்துறை சார்பில் 30.60 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1520845

  17. அ.தி.மு.க.,வில், நியமன பொதுச் செயலரான சசிகலாவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை என்ற, திடீர் சர்ச்சை வெடித்துள்ளது. கோஷ்டிகளை சமாளிக்க, ஒரே நாளில், 23 பேருக்கு பதவிகளை வாரி வழங்கியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சசிகலா வருகைக்கு பின், கட்சியில், காங்., கலாசாரம் தலைதுாக்குவதாகவும், தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக காங்கிரசில், கோஷ்டிகளை சமாளிக்க வும், சரிக்கட்டவும், ஏராளமான பதவிகள் வழங்கப்படுவது உண்டு. அதே போல், ஆளும், அ.தி.மு.க.,வில், 23 பேருக்கு, திடீரென கட்சி பதவிகளை வாரி வழங்கியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா.தன் தலைமையை பிடிக்காமல், ஒதுங்கியிருந்த வர்களை தேடிப் பிடித்து, கட்சி பதவிகளில் அமர்த்தி, தன் ஆ…

  18. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, 2ஜி விவகாரம் தொடர்பாக எடுத்த முடிவுகளுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கைது செய்யப்பட்டு சுமார் 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வரும் நவம்பரில் வெளியிட இருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு ‘இன் மை டிபன்ஸ்' என ராஜா பெயரிடப்பட்டுள்ளார்.இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, அதே கால …

  19. ராமநாதபுரம்: நாம் தமிழர் கட்சி இப்போதும் தனது தலைமையில்தான் செயல்பட்டு வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் சமீபத்தில் பிளவு ஏற்பட்டது. அந்த அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலர், சீமானை நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு ராமநாதபுர்ம மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் இன்று ராமநாதபுரம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாம் தமிழர் கட்சி இப்போதும் என் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது கட…

  20. சென்னையில் வாடகை தாய்மாரை வீடுகளில் அடைத்து வைத்து சிகிச்சை! நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பெண்களிடம் இதுபற்றி விசாரித்த போது அவர்கள் சூளைமேடு பகுதியில் உள்ள சி.எப்.சி. மருத்துவமனையின் நோயாளிகள் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சூளைமேடு பகுதியில் ம…

  21. சென்னை தினம்: மெட்ராஸ் நகரத்தின் உண்மையான வயது என்ன? - கல்வெட்டுகள் விவரிக்கும் வரலாறு பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FOX PHOTOS/GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸிலுள்ள சட்டமன்றப்பேரவை கட்டடம் (2017ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை மீண்டும் மீள்பகிர்வு செய்கிறோம்) ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் உதய தினத்தை கொண்டாடுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைப் பயணம், சென்னை நகரத்தின் தொன்மை க…

  22. பொதுமக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி.திருச்சியில் நடைபெற்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 20-ஆவது ஆண்டு கல்லூரி நாள் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதனால்தான் அரசியல்வாதிகளும் கொடுக்கின்றனர். மக்களும், அரசியல்வாதிகளும் நினைத்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். 144 தடை உத்தரவால் பணம் கொடுப்பதை தடுக்க முடியாது. 144 தடை உத்தரவு இல்லாத சமயங்களிலும் அரசியல்வாதிகள் பணம் கொடுத்துள்ள…

  23. ஓகி புயல் எதிரொலி: தமிழக மீனவர்களுக்காக தனி சேட்டிலைட் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரத்யேக செயற்கைக்கோள் ஒன்றை விரைவில் தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. மீனவர்களுக்காக பயன்படுத்தப்படும் அந்த செயற்கைக்கோள் தற்போது சோதனை ஓட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். 2017ல் ஏற்பட்ட ஓகி புயலில் சிக்கி 200க்கும் மேற்பட்ட மீனவர்க…

  24. மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை. அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மர…

    • 1 reply
    • 329 views
  25. நீச்சல் வீரர்கள், நிவாரண பொருட்களோடு, மீட்பு பணிக்காக சென்னை வருகிறது கடற்படை கப்பல்! சென்னை: மழையால் தத்தளிக்கும் சென்னை மக்களை காப்பாற்ற, நிவாரண பொருட்களோடு, இந்திய கடற்படை கப்பல் விரைந்து கொண்டுள்ளது. இன்று மாலை அது சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், மக்கள் தத்தளித்துள்ளனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் போக முடியவில்லை. இந்நிலையில் மக்களை மீட்டு காப்பாற்ற இந்திய கடற்படையின் ஐஎன்எஸ்i எரவத் கப்பல் இன்று மாலை சென்னை வருகிறது. விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் இருந்து அந்த கப்பல் புறப்பட்டு தற்போது சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளது. இன்று மாலை அக்கப்பல் சென்னை வந்தடையும். இந்த கப்பல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.