தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
சென்னை: திராவிட இயக்க கொள்கைகளுக்கு இன்னும் உயிர் சக்தி உள்ளதாக, திராவிட கழக பொருளாளர் சாமிதுரை படத்திறப்பு விழாவில் கருணாநிதி பேசினார். பெரியார் திடலில் இன்று திராவிடர் கழக பொருளாளர் சாமிதுரை படத்திறப்பு விழாவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, சாமிதுரை உருவ படத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது, ''சாமிதுரையின் புகழ் என்றென்றும் வாழும் என்று நாம் நம்பிக்கை பெறும் நாள். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம் என்ற சூளுரையை நாம் இங்கிருந்து மேற்கொள்வோம். இங்கு பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நான் தன்னந்தனியாக வந்து சாமிதுரையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதற்கு நன்றி தெரிவித்து நினைவு கூர்ந்தார். இது…
-
- 0 replies
- 331 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியல்ல: நாராயணசாமி பேட்டி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியல்ல என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் திடீரென்று மாற்றுக் கருத்துக்களை கூறிவருகின்றனர். அரசு உயர் அதிகாரிகள் பதவியில் இருக்கும்போது ஒரு மாதிரியும், ஓய்வு பெற்ற பிறகு வேறு மாதிரியும் மாற்றி, மாற்றி பேசி வருவது சரியல்ல. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முழுவதும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென மறு விசாரணை கோருவது சரியல்ல என்றார்.…
-
- 4 replies
- 600 views
-
-
பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவுசெய்யவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அறிவு என்கிற ஏ.ஜி.பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பேரறிவாளன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது வி.தியாகராஜன் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி சி.பி.ஐ. கேரள பிரிவின் எஸ்.பி.யாக இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் அளித்துள்ள பேட்டியொன்றில் பேரறிவாளனின் வாக்கு மூலத்தை தான் முழுமையாக பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். பேரறிவாளளின் வாக்கு மூலத்தில் தான் மாற்றம் செய்ததால் அவர…
-
- 21 replies
- 3.7k views
-
-
-
மனித மலம் ஒரு துளிக்கே மரனமென்றால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கோப்பை விஷம் - இளவேனில் சமீபத்தில் ஒரு ஆய்விற்காக மதுரைக்கு அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்திற்கு சென்றிருந்தோம். இருபதுக்கு மேற்பட்டோரை கொண்டிருந்த அணி பல்வேறு விதமான தகவல்களை திரட்டியது. விவசாயத்தை பிரதானமாகக் கொண்டிருந்த கிராமத்தில், அடுத்த தலைமுறை விவசாயத்தில் ஈடுபடுமா என்பது வினாக்குறி? 144 வீடுகள், ஏழு வீடுகளில் யாரும் குடியிருக்க வில்லை. இரண்டு வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு இல்லை. (இப்போது மின் இணைப்பு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?) அனைத்து வீடுகளிலும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது. அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது. சில வீடுகளில் இரண்டு மூன்று அலைபேசி இருப்பது…
-
- 1 reply
- 3.8k views
-
-
சாதி கட்சிகளின் நாடகங்கள் இப்படிதான் அரங்கேறுகின்றன. https://www.facebook.com/photo.php?v=413257952124593
-
- 1 reply
- 479 views
-
-
தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்கா மற்றும் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதை தடுத்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்ப ட்டனர். பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், ‘’முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கக் கூடாது என்று பல்வேறு வழிகளில் முயன்று தோற்றுப்போய், ஏதாவது செய்ய வேண்டும் என்று, இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக செய்த செயல். முதல்வருக்கு தெரியாமல் இது நடந்தி ருந் தால் இந்த இருட்டு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த பழி முதல்வர் மீதே விழுந்துவிடும். இல்லை யென்றால் ந…
-
- 20 replies
- 1.1k views
-
-
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான சோ ராமசாமி இன்று தலைமை செயலகத்தில் திடீரென சந்தித்துப் பேசினார். பகல் 12.15 மணி அளவில் சென்னை கோட்டைக்கு வந்த சோ, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தனது மகனுக்கான திருமண அழைப்பிதழை அவர் முதலமைச்சரிடம் வழங்கி, திருமணத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டார். இதுதவிர அரசியல் தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. ஆனால் ஜெயலலிதாவுடன் பேசியது என்ன என்பதை சோ தெரிவிக்க மறுத்துவிட்டார். http://news.vikatan.com/article.php?module=news&aid=21487
-
- 10 replies
- 4.3k views
-
-
சென்னை: இந்த ஆட்சியை பாராட்டிக் கொண்டு வந்த பழ நெடுமாறன், முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு, மற்றும் கைதுக்குப் பிறகு திட்ட ஆரம்பித்துள்ளார். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கையின் ஒரு பகுதி: கேள்வி: முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட சம்பவத்தினையொட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நெடுமாறன் உட்பட சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்களே, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று "டெசோ" சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையே? கலைஞர்: 'டெசோ' சார்பில் நாங்கள் அப்படியொரு தீர்மானத்தை நிறை…
-
- 2 replies
- 774 views
-
-
தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்பதை உலக நாடுகளிற்க்கு உணர்த்தும் வகையில், ஜனவரி 1 முதல் 15 வரை தமிழக மாணவர்களினால் தமிழகத்தில் தனி ஈழத்திற்கான மாதிரி பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம். ஆகவே அரசாங்கமானது போராட்டத்தை ஒடுக்கிவரும் இந்த சூழலில் மக்களிடையே நமது கோரிக்கையை எடுத்து செல்வதற்காக தமிழகம் முழுவதும் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை இளைஞர்க…
-
- 0 replies
- 768 views
-
-
(facebook)
-
- 1 reply
- 332 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் இந்திய அரசு சார்பில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்…
-
- 0 replies
- 381 views
-
-
முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிழை கொடுத்தார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று(21.11.2013) கோபாலபுரம் இல்லத்தில் சோ நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். நன்றி நக்கீரன் .
-
- 5 replies
- 903 views
-
-
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : புதிய நீதிபதி விசாரணை தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வந்த போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி ஜான் மைக்கேல் கும்ஹா விசாரணை நடத்தினார். இதுவரையிலான வழக்கு விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். இந்த விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்குரைஞர்கள் மட்டுமே ஆஜராகி நீதிபதிக்கு விளக்கம் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. http://tamil24news.com/news/archives/117847
-
- 0 replies
- 413 views
-
-
Thirumurugan Gandhi: நீண்ட நாட்களாக உழைத்து உண்மையை வெளியே கொண்டு வர பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள் தோழர்கள்..நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகள் மற்றும் மரணதண்டனைக் குறித்து அறிவதற்கான மிக மிக முக்கிய ஆவணம். வெள்ளி மாலையில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். அவசியம் பார்க்கவும், பரப்பவும். இதற்கான கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை, 23-நவ, தி. நகர் - சர்.பிட்டி தியாகராய அரங்கில் நடக்கிறது. அனைவரும் அவசியம் வரவேண்டும்.. இது தமிழ்ச் சமூகத்தின் வலி. அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம். குறுஞ்செய்திகள், நேரடி அழைப்புகள், மின்னஞ்சல் மூலமாக அனைவரிடத்தில் பரப்புவது நம் கடமை... அடுத்த மாதத்தில் மூவ…
-
- 0 replies
- 377 views
-
-
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியை நிலைநாட்டுவோம் என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறினார். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய நீதிபதியாக ஜான்மைக்கேல் குன்ஹாவை கர்நாடக அரசு நியமித்தது. இந்நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "எனக்கு புதிய வழக்கு என்பதால் ஆரம்பத்தி்ல் இருந்து …
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கை இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. உலக தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ந்தேதி இந்த நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்ட பகுதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என கூறப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அதனை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் போலீஸ் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 85 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக…
-
- 0 replies
- 405 views
-
-
இங்கை ஜனாதிபதிக்கு தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டி விட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.இவ்வாறு தெரிவிக்கின்றார் திமுக தலைவர் கருணாநிதி இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது.அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு ராஜபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனமும் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்றுவிட்டார்.இந்தப் புகழும், பெருமையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும்…
-
- 0 replies
- 466 views
-
-
புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக ஜான்மைக்கோல் குன்ஹாவை கர்நாடகா அரசு நியமித்தது. இந்நிலையில், நீதிபதி நியமனத்தில் உச்ச நீதிமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு சார்பில் இன்…
-
- 0 replies
- 371 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக பிரித்தானிய பிரதமர் குரல் கொடுத்தமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, கமரூன் எடுத்துக் கொண்ட முனைப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் குரல் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71…
-
- 0 replies
- 470 views
-
-
சென்னை: இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியின் நேரடி தொலைபேசி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்மை தரக்குறைவாக பேசிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி போலீசில் புகார் அளித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டெலிபோன் மூலம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். நேரடி ஒளிபரப்பின் போது எம்.எல்.ஏ. விஜய தாரணியிடம் பேசிய வாலிபர் ஒருவர் அவரை தரக்குறைவான ஆபாசமான வார்த்தையால் திட்டினார். அந்த வார்த்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்த…
-
- 2 replies
- 532 views
-
-
அண்ணா அறிவாலயத்தில், டெசோ மாநாடு தொடங்கியது. http://www.youtube.com/watch?v=9Ijc1JEowmA
-
- 1 reply
- 428 views
-
-
உலகமெங்கும் வாழும் ஈழத்து மக்களுக்கு ஒரு கடிதம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு பயந்து - அல்லது சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து - அல்லது என்ன இழவோ ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டு - ராஜபக்சே சில உறுதிமொழிகளை இந்திய அரசுக்கு வழங்கியிருக்கிறார். "சரித்திரம் திரும்பும் ; சரித்திரம் திரும்புகிறது " என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிளிறுவதை கேட்டிருக்கிறேன். இதோ இலங்கையில் ஒரு சரித்திரம் திரும்புகிறது : ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம்! 'மாகாண சபை அதிகாரம்' என்கிற முதல் உரிமைப் படிக்கட்டில் ஏற்றி வைத்த இந்த ஒப்பந்தம் யார் யாராலோ அலைக்கழிக்கப்பட்டு - சிதறடிக்கப்பட்டு -பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த பிறகு - சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் எழுப்பப்படுகிறத…
-
- 2 replies
- 593 views
-
-
அநீதிகளுக்கும் ,அடக்குமுறைகளுக்கும் ,இன படுகொலைக்கும் எதிராக நாளை புது டெல்லி யில் பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பு November 14, 2013 Venue: Press Club, New Delhi Time: 3 pm to 8 pm Program Schedule: 3.00 pm to 4.00 pm 1. Press Meet: "The Condition of Muslim Prisoners in India" Presided by Prof. S. A. R. Geelani and Mr. Umar Kayan Co-ordinator, Islamic Youth Movement Against Genocide, along with Hon. Simranjith Singh Mann, President, Shiromani Akali Dal (Amristar), Mr. Syed Akhlak Ahmad, Secretary, Delhi Chapter, Association for Protection of Civil Rights (APCR), Mr. Feroz Khan Ghazi, Secretary General, South Asian Minorities Lawyers Association (SAMLA), Mr. Thi…
-
- 1 reply
- 487 views
-
-
சென்னை: நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் கூட்டம், கருணாநிதி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டொசோ அமைப்பு சார்பில் விடுத்துள்ள அறிவிப்பில், ''தமிழ் ஈழம் அதரவாளர் அமைப்பின் (டெசோ) கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்'' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் டெசோஅமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=21288
-
- 2 replies
- 519 views
-