Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. “என் குழந்தைக்குக் கல்யாணம்!” ‘`என் மகள் அரித்ரா திருமண வயதை அடைந்துவிட்டாள். ‘என் அம்மா, அப்பா என் திருமணத்துக்கு வருவதற்கான சூழ்நிலை அமைந்தால் மட்டுமே நான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று பிடிவாதமாக இருக்கிறாள். நாங்களும் எங்களுக்கு பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அரசும் நீதிமன்றமும் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுகிறோம். என் மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும், உறவினர்கள் அனைவரையும் ஒருசேரப் பார்க்க வேண்டும்’’ - நளினியின் வார்த்தைகளில் தவிப்பு மிகுந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி, 26 வருடங்களாகச் சிறையிலிருக்கிறார். 21 வயதில் சிறைக்குச் சென்றவருக்கு இப்போது 47 வயதாகிறது. தன் மகளின் திருமண…

  2. போரூர் ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு மரண தண்டனை குற்றவாளி தஷ்வந்த், தூக்குக்கயிறு - கோப்புப் படம் போரூர் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொடூர குற்றவாளியான தஷ்வந்த் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்திருந்தார். தீர்ப்பு வெளியாவதை அடுத்து தஷ்வந்தை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். கடந்த முறை பொதுமக்கள், மாதர் அமைப்பினர் தஷ்வந்தை தாக்கியத…

  3. “டயர் சைஸ் கூட இல்லை, உனக்கு பஸ் வேணுமான்னு கேப்பாங்க” - பேருந்து ஓட்டுநராக துடிக்கும் ஷர்மிளாவின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான ஷர்மிளா பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார். தற்போது முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்டுள்ளார். பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அதற்கான உரிமமும் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே அ…

  4. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் …

  5. முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 23 நிமிடங்களுக்கு முன்னர் தீபாவளியை ஒட்டி ஏற்படும் காற்று மாசுபாடு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஒலி மாசுபாடு சில இடங்களில் அதிகரித்திருக்கிறது. இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெருநகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவு, அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறையால் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவும் 7 நாட்கள் பின்பாகவும் ஒலி மாசுபாடும் காற்றுத் தர மாசுபாடும் கண்காணிக்கப்படுகிறத…

  6. 05 DEC, 2023 | 02:46 PM மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வின்போது அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமை…

  7. பாலியல் கொடூரங்கள்: காரணிகளை, பின்னணிகளை அலச வேண்டாமா? Published : 15 Mar 2019 09:39 IST Updated : 15 Mar 2019 09:39 IST ஓவியா இதயத்தை அறுக்கும் அனாதரவான அழுகை கடந்த சில தினங்களாக தமிழகத்தையே உறையச் செய்திருக்கிறது. “உன்னை நம்பித்தானே வந்தேன். ஏண்டா இப்பிடி பண்ணிட்ட?” என்ற இளம்பெண்ணின் பரிதவித்த அழுகுரல் நம்மைக் கையறு நிலையில் நிறுத்தியிருக்கிறது. பொதுவாக நாம் கேள்விப்படும் தனிநபர் பாலியல் வன்முறைகளிலிருந்து இந்தப் பிரச்சினை வேறுபடும் புள்ளி மிக முக்கியமானது. இது ஒரு தனிநபர் குற்றச் செயலல்ல. குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர்களுக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் நீண்டுசெல்லும் அதிகார மையங்களின் வலைப்பின்னலே நம்மை அச்சுறுதலுக்…

  8. பட மூலாதாரம்,FACEBOOK/THIRUMAOFFICIAL கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநிலக் கட்சி அந்தஸ்தை சாதித்துள்ளது. இந்த நிலையில் அந்த கட்சி மேற்கொள்ளும் அரசியல் நிலைப்பாடுகள், திமுகவை சங்கடத்தில் தள்ளி வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆட்சியி…

  9. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினதுறையினர் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஆறு வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. திண்டுக்கல்லில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தளங்கள் கொண்ட அந்த மருத்துவமனையின் நேற்றிரவு (டிச. 12) தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி, மருத்துவமனையின் லிஃப்ட்டில் உள்ளே இருந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்…

  10. பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2025 எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 43 வயதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதில் சிறுமியின் பாட்டிக்கு பிரதான பங்கு உள்ளதாகக் கூறுகிறார், அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா. வழக்குப் பதிவான ஓராண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. போக்சோ வழக்குகளில் முன்னுதாரண வழக்காக இது இருப்பதாகக் கூறுகின்றனர், குழந்…

  11. பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் க…

  12. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் கடந்த 4 ஆண்டுகளாக முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார். முறைகேடுகள் நடந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4, குரூப்2ஏ முறைகேடுகள் பூதாகரமாகி 45க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தை கத்தையாக பணத்தை அள்ளிக் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்த பலருக்கும், சேரத்துடித்த சிலருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார்தான் காட்ஃபாதர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சென்னை ஆவடியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார் ஜெயக்குமார். போதிய வருவாய் இன்றி தவித்தபோதுதான…

    • 0 replies
    • 1.1k views
  13. பொதுமக்களுக்கு சேவை செய்வதுதான் ஸ்டாலின் தொழிலாம்.. வேட்புமனுவில் சுவாரசியம். சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தொழில் சேவை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தனது தொழில், அரசியல் கட்சி தலைவராக இருப்பதை குறிப்பிட்டுள்ளார். இவ்விரு தலைவர்களும், முறையே, கொளத்தூர் மற்றும் காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். நேற்று இவர்கள் இருவரும், வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஸ்டாலின், சமூக சேவை செய்வதை தன் தொழிலாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் கட்சி தலைவராக இருப்பதை தொழிலாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டாலின் தனது மனைவி தொழில் நிறுவன இயக்குனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். …

  14. சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கும், சிகிச்சை மற்றும் மாத்திரை பெற வருபவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்…

  15. ’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல் அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா கோரியிருந்தார்.மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார். தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நி…

  16. 2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை என்றும் இந்த முறைகேட்டிற்கான முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவையே சாரும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்தியது. இந்த குழு, 2ஜி…

    • 0 replies
    • 428 views
  17. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்: முதல்வர் ஓபிஎஸ் பேட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: பிடிஐ மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற பிரதமர் உறுதி அளித்தார். அவரின் உறுதியைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்…

  18. சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா ஆளுநர்?! - திடுக் டெல்லி காட்சிகள் 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'பதவியேற்பு நடக்கும் வரையில் பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார்' என அறிவித்துவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 'கிரிமினல் வழக்கு உள்ளவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது' என குடியரசுத் தலைவருக்குப் புகார் மனு அனுப்பியிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார் சசிகலா. இன்னும் சில தினங்களில் முதல்வராக அவர் பதவியேற்க இருக்கிறார். 'கட்சியி…

  19. “ஆம்... எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்குத்தான்!” - தமிழிசை செளந்தர்ராஜன் ஒப்புதல் ஆதரவு, எதிர்ப்பு என்று நிமிடத்துக்கு நிமிடம் மாறிவரும் அரசியல் சூழல்களால் தமிழகமே பரபரத்துக் கிடக்கிறது. ''டெல்லி மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழக அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது'' என்கிறார் தமிழக பி.ஜே.பி தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜன். தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து அவரோடு பேசினோம்... ''தமிழக அரசியல் சூழல் உச்சபட்ச குழப்பத்தில் இருக்கிறது. காபந்து முதல்வர் பொறுப்பில் இருக்கிறார். முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஒருவர் இருக்கிறார். அரசியல் சூழ்நிலை, உணர்வுப்பூர்வமான சூழ்நிலை என இரண்டு நிலைகள் உள்ளன. இதில் அரசியல் சூழ்நிலை என்பது கடந்த இர…

  20. கீதா லட்சுமி... துணைவேந்தர் பணவேந்தர் ஆன கதை! அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையைக் காட்டிலும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனை, அரசியல் அரங்கையே அதிரவைத்துள்ளது. மருத்துவத் துறை வட்டாரத்தில், கடந்த சில ஆண்டுகளில், டாக்டர் கீதா லட்சுமி குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகள் வலம் வந்தன. இந்த நிலையில், அவருடைய வீட்டில் தற்போது நடந்துள்ள வருமானவரிச் சோதனை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கீதா லட்சுமி மீது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எழுப்பிவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘மருத்துவத் துறையில், மிகக் குறுகிய காலத்தில்…

  21. இதுதான் ஜெ. சம்பாதிச்ச "பெயர்".. பறிமுதலாகிறது 68 சொத்துக்கள்... 6 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.தமிழக அரசு உ…

  22. சேலத்தில் மாற்றுத்திறனாளி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு - என்ன நடந்தது? 17 ஜனவரி 2022 படக்குறிப்பு, அமலா ராணி, ஹம்சலா சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்ற்றுத்திறனாளி பிரபாகரன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் சந்தேக மரணம் அடைந்த சம்பவத்தை மாநில குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரபாகரன். இவரது மனைவி ஹம்சலா. இவர்கள் இருவரையும் கடந்த 8ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நாமக்கல் மாவட்டம், சேந…

  23. பூவா, தலையா சொல்லி கரு பாலினத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி மையங்கள் - சிறப்புச் செய்தி பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கருவில் இருப்பது பூவா தலையா? பூ என்றால் பெண் குழந்தை, தலை என்றால் ஆண் குழந்தை. இதுபோன்ற குறியீட்டுச் சொற்களை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சொல்வதற்கு பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை 'பெண் குழந்தை' என தெரிய வந்தால் போலி மருத்துவர்கள் மூலமாக கருக்கலைப்பும் நடைபெறுகிறது என்று தெரியவந்துள்ளது. கடந…

  24. வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதல்ல, அவருக்கு வெகுகாலமாக தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டுவந்தன என்ற குற்றச்சாட்டுகள் ஓ. பன்னீர்செல்வம் அணியாலும் வேறு சிலராலும் சுமத்தப்பட்டன. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான தகவல்களை மார…

  25. ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்’ நலம்பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து! Jul 16, 2022 15:01PM IST கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வம் விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் மாறி மாறி நீக்கி வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி பன்னீரைக் கட்சியிலிருந்து நீக்க, பன்னீர் செல்வம் எடப்பாடியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியை பன்னீர் வகித்து வந்த நிலையில் அந்த பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.