தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
கடந்த 2 வருடமாக இழந்த மருத்துவப் படிப்பை மீண்டும் பெறுவதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலைப் போராட்டாத்தில் நேற்று இறங்கி மாணவர்கள் போராடி உள்ளனர் . டிடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முன் சுமார் 75 மாணவிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர். அங்குவந்த காவல் துறையினர் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக அம் மாணவிகளை பேருந்தில் ஏற்றிச் சென்று மின்ட்யில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து மாணவிகளை துன்புறுத்தியதாக தெரிவித்தள்ளனர். இந்த செயலுக்கு காவல்துறையை கண்டித்து மாணவர்களின் நூதன போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதன் போது தமிழக அரசுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் ஒன்றும் கொடுத்துள்ளனர்:- எங்களின் மருத்துவப் படிப்பு தொடர வழிவக…
-
- 0 replies
- 361 views
-
-
கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் - ரூ. 100 கோடி நஷ்டத்தை எதிர்கொள்ளும் தமிழக விவசாயிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஏ.எம். சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 18 நவம்பர் 2022 கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை நம்பி தமிழ்நாட்டில் இருந்து தினமும் லட்சகணக்கான ரூபாய் மதிப்புக்கு பூக்களையும் மலர்களையும் அனுப்பி வந்த விவசாயிகள் கடுமையான வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் ரூ. 100 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். என்ன நடக்கிறது அங்கே? விரிவாக படிக்கலாம். தமிழ்நாட்டில்…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பில் யூடியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் March 30, 2019 பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு அதனை பதிவு செய்தவரின் தகவலை பெறுவது தொடர்பாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய குழுவொன்றினை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அது தொடர்பில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் முகப்புத்தகம் , வட்ஸ்-அப், யு-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தநிலையில் அவ்…
-
- 0 replies
- 627 views
-
-
அகதிகள் முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்கள், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முகாம்களில் வசிக்காத அகதிகள் என்ற வகையில் காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வரும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு வருமான வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் இலங்கை தமிழர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவல…
-
- 0 replies
- 192 views
-
-
மகனுக்குத் திருமணம் – ரொபர்ட் பயஸ் பரோல் மனு தாக்கல் September 26, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்தற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்து…
-
- 0 replies
- 605 views
-
-
ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% - ஆனாலும் பெரியார் மண்ணில் பலிக்காத சீமானின் கனவு! ஈரோடு தேர்தலில்... 'நாம் தமிழர் கட்சி படுதோல்வி... நூலிழையில் டெபாசிட்டையும் இழந்தது', 'தி.மு.க அபார வெற்றி' என்று பரபரப்பான பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், விழுந்திருக்கும் வாக்குகளைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அலசினால்... சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட, சுமார் ஒன்றரை மடங்கு வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஆனால், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இல்லாத நிலையில், அந்த வாக்குகளை மொத்தமாக 'சீமான் அள்ளுவார்' என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த ஆச்சர்யமும் நிகழ்ந்துவிட வில்லை. ஈரோடு கி…
-
- 0 replies
- 478 views
-
-
‘நாங்களும் தமிழர்கள் தான்... எமக்காகவும் பேசுங்கள்!' -அகதிகள் முகாமின் குரல்கள்... உலகில், உச்சபட்ச வன்முறை என்றுமே ஆயுதங்களால் நிகழ்வதில்லை; அது தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுப்பதால்தான் நிகழ்கிறது. நிச்சயம் ஒரு மனிதனை அன்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏங்கவிட்டு, அலைய விடுவதைவிட ஒரு வன்முறை இப்புவியில் இருந்துவிட முடியாது. ஆனால், நாம் தினமும் அந்த வன்முறையை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறோம். இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுக்கிறோம் அல்லது இதே காரணங்களுக்காக அரசு வன்முறையை ஏவும்போது கள்ள மெளனம் சாதிக்கிறோம். அன்பும், பாதுகாப்பும் மறுக்கப்பட்டவர்களை அகதிகள் எனும் புது அடையாளத்துடன், சொந்த மண்ணிலிருந்து பெ…
-
- 0 replies
- 535 views
-
-
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..! தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயுத்துறை அமைச்சருமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் திணறி வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,18,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்…
-
- 0 replies
- 393 views
-
-
இவர் சசிகலா மட்டும் அல்ல... ஜெயலலிதாவின் நிழல் ! தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் துவங்கி... தமிழக ஆளுநர், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றவர்கள், மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் நலம் குறித்து கேட்டு திரும்பினர். 'பார்த்தவர்களை பார்த்தோம். அவர்கள் சொன்னதை சொல்கிறோம்' என்பதை மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க சென்றவர்கள் சொல்ல முடிந்தது. உண்மையில் மருத்துவர்களை தவிர்த்து ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்தித்திருப்பார்கள் என்றால், ஒருவர் பெயரைத்தவிர வேறு யார் பெயரையும் அறுதியிட்டு கூற …
-
- 0 replies
- 1.2k views
-
-
மதுரை குலமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தபால்தந்தி நகரைச் சேர்ந்த ஹெரன்ஸ் (வயது51), ஆத்திக்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புறநகர் செயலாளர் பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார். போலீசார் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் ஹெரன்ஸ், விஜயகுமார் ஆகிய இருவரையும் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தில் கூடல்நகர் போலீசார் கைது செய்தனர். கைதான ஆசிரியர்களை போலீசார் …
-
- 0 replies
- 855 views
-
-
“அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா தமிழ்நாட்டு அரசியல் சசிகலாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்குமான அரசியலாக மாறிவிடும்போல இருக்கிறது! ஜெயலலிதா இருக்கும்போதே பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்த சசிகலா புஷ்பா, இதோ அடுத்த அஸ்திரத்தை வீசி இருக்கிறார். ‘‘ஜெயலலிதா, இயற்கையாக இறந்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்’’ என்று அடுத்த ஷாக் கிளப்பி இருக்கிறார் சசிகலா புஷ்பா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ‘‘எந்த ஆதாரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறீர்கள்?’’ ‘’செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஆரம்பித்து, உயிரற்ற உடலாக அம்மாவை வெளி…
-
- 0 replies
- 1k views
-
-
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்தவர் சைலேந்தர். இவரும் இவருடைய தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கினார்கள். அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டில் விடுத்தனர். இதுதொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு …
-
- 0 replies
- 513 views
-
-
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினா போராட்டம் தொடரும்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்; 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர் சங்கர் மற்றும் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினாவில் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று அப்போராட்டத்தில் பங் கேற்று வரும் இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், சென்னை மெரினாவில் நடத்தி வரும் …
-
- 0 replies
- 320 views
-
-
பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்... -கார்டனைப் பதறவைத்த எடப்பாடி பழனிசாமி 'அறப்போருக்குத் தமிழக மக்களும் தொண்டர்களும் அமோக ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். எம்.ஜி.ஆரின் புகழை நிலைநிறுத்தவும் அம்மாவின் ஆட்சியை நிலைநாட்டவும் நாம் மேற்கொண்டுள்ள தர்மயுத்தம் தொடரும்' - சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறிய வார்த்தைகள் இவை. 'அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கொறடாவின் உத்தரவுக்கு மாறாக வாக்களித்ததால், அவர் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 ஓட்டுக்களைப் பெற்று முதல்வர் பதவியைத் தக்க வைத்துக…
-
- 0 replies
- 415 views
-
-
மிஸ்டர் கழுகு: 121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ! ‘‘ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...’’ என்ற பழைய சினிமா பாடலைப் பாடியபடியே அறைக்குள் நுழைந்தார் கழுகார். ‘‘புரிகிறது... எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களில், இடம் மாறத் துடிக்கும் அந்த ஆறு பேர்தானே?’’ ‘‘ஆமாம். ஆறு பேர் தாவினால், அ.தி.மு.க-வின் மெஜாரிட்டி போய்விடும். எடப்பாடியின் முதல்வர் நாற்காலி தடதடக்கும். அதனால், எடப்பாடியை ஆதரிக்கும் 121 எம்.எல்.ஏ-க்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டுகிறது. இந்த சீசன், அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பொற்காலம் என்றே சொல்லித் திரிகிறார்கள். எடப்பாடியின் மெஜாரிட்டி ‘வீக்னஸை’ நன்றாகவே புரிந்துவைத்திருக்கும் இந்த எம்.எல்.ஏ-க்கள், காலரைத் தூக்கிவிட்டபடி உலா வர ஆரம்…
-
- 0 replies
- 2.1k views
-
-
75 நாள்கள் எப்படி இருந்தார் ஜெயலலிதா? - மூன்று ரிப்போர்ட் முழு விவரம் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகச் சொல்லப்படும் விளக்கம், இன்னும் பல புதிய சந்தேகங்களை உருவாக்குமா? ஜெயலலிதா மரண விஷயத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கங்கள் அப்படியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘நர்ஸ்களோடு விளையாடினார்’, ‘காவிரிப் பிரச்னை குறித்து விவாதித்தார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘ஜெயலலிதா எப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’ என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி சொன்னார். ஆனால், ‘இவற்றில் எதுவுமே உண்மையில்லை’ என்பதை இப்போது அவர்கள் தந்திருக்கும் அறிக்கைகளே அம்பலப்படுத்தி இருக்கின்றன. ஜெயலலிதாவுக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொருளாதார வளர்ச்சி, ஆனால் மதுவை நம்பிய நிதிநிலை சீனுவாசன் இராமஇணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த 50 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், மக்கள் தொகைக் கட்டுப்பாடு, உணவுப் பங்கீடு மற்றும் மானியம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தியதால் மனித வளர்ச்சி குறியீட்டின்படி இன்று இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. படத்தின் காப்புரிமைDAN KITWOOD/GETTY IMAGES விளம்பரம் ஆனால், இந்த காலத்தின் பெரும் பகுதியில் தமிழக பொருளாதார வளர்ச்சி தேசியப் பொருளாதார வளர்ச்சியைவிட குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தேசிய பொருளாதாரத்த…
-
- 0 replies
- 495 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் இந்த அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார். தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். இப்பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன் முடிவில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-இ.கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார். மேலும் அமைதி, வளம் மற்றும் முன்னேற்றம் ஆகியவையே அதிமுக க…
-
- 0 replies
- 530 views
-
-
11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யுங்க! உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, ௧௧ எம்.எல்.ஏ.,க்களை தகுதியிழப்பு செய்யக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், கொறடாவுமான, ஆர்.சக்கரபாணி தாக்கல் செய்த மனு: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், ஓட்டெடுப்பு நடந்து, பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்…
-
- 0 replies
- 436 views
-
-
டெங்குவில் இருந்து தப்புவது எப்படி? சில நாட்களாக டெங்கு காய்ச்சல் விரைவாக பரவி பல உயிர்கள் பிரிந்தன. டெங்கு எப்படி வருகிறது ? எப்படி டெங்குவில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் ? மேலும் பல கேள்விகளும், விடைகளும்.
-
- 0 replies
- 282 views
-
-
விருத்தாசலத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை - முழு விவரம் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விருத்தாசலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரியாக படிக்க முடியாத மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடத்தை சேர்ந்த தம்பதி கோபி மற்றும் இளவரசி. விருத்தாசலத்தில் உள்ள செல் சர்வீஸ் சென்டரில் கோபி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது மகள், விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை படகுகளை விடுவிக்கவும், கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும ஜூலை 26ம் திகதி படகுகளில் வெள்ளைக் கொடிகளை கட்டி கச்சத்தீவில் தஞ்சமடைவது என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவ சங்ககூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் 150-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 46 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 2 ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகு இலங்கை கடற்படையினரால் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றத…
-
- 0 replies
- 344 views
-
-
3வது முறை கலைந்த கரு, வயிற்றில் துணி கட்டி 9 மாதம் நடித்த பெண் - சமூக அழுத்தம் பெண்களை எப்படி பாதிக்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்றாவது முறையாக கரு கலைந்த பெண் குடும்பத்தினருக்குப் பயந்து 9 மாதங்கள் வயிற்றில் துணி கட்டி நடித்து வந்த நிலையில், உண்மை வீட்டிற்குத் தெரிவதற்கு முன் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக மருத்துவர்களிடம் கூறிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவுற்று குழந்தை பிரசவிப்பது என்பது பெண்களுக்கு உடலில் இயற்கையாக உள்ள ஓர் அமைப்பாக இருந்தாலும், பெ…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள்: எப்படி நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN CYBER CRIME DEPT நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு கணினி பொறியாளர்கள் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கி உள்பட இந்தியாவில் பல வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் இரண்டு கோடி வரை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பணத்தை கொள்ளையடிப்பதற்காக கீ லாகர் என்ற மென்பொருளை இவர்கள் பயன்படுத்தியதாகவும் போலீசார் குற்ற…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
வா.மணிகண்டன் (எழுத்தாளர்) மதமாற்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில். மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் பலரும் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம், அவர்களைக் கட்டுப்படுத்த லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. மறுபக்கம், நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் புன்னகையோடு! எதிர்கேள்வி கேட்பவர்களிடம், இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர, இந்துக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை என்று சண்டைக்கு வருகிறார்கள். ‘அப்படினா, சட்டம் Anti conversion Law…
-
- 0 replies
- 376 views
-