தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ... தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், கொளுத்தும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது. தேமுதிக யாருடன் கூட்டு சேரும் என்று எதிர்பார்த்து இலவு காத்து வந்த தி.மு.க, பா.ஜ.க இன்னும் பிற கட்சிகள், மக்கள் நலக் கூட்டணியுடன் அது இணைந்ததையடுத்து, அந்த கூட்டணியை தற்போது விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. இது ஒருபுறமிருக்க கேப்டன் விஜயகாந்த் அணியில் இணைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நாளுக்கு ஒரு கருத்தைக் கூறி, கூட்டணிக்குள் குழப்பமான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ கூட்டணி அமைத்ததே மாபெரும் சாதனையாக நினைத்து, மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார். மிகவும் உற்சாகத…
-
- 0 replies
- 700 views
-
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா! சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 15 ம் தேதியன்றே, ராகுல் காந்தியிடம் அளித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் ம…
-
- 0 replies
- 407 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்…
-
- 0 replies
- 682 views
-
-
பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார். மரக்காணம் அரு…
-
- 0 replies
- 334 views
-
-
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறி…
-
- 0 replies
- 498 views
-
-
மிஸ்டர் கழுகு: ‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார். ‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம். ‘‘அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கைப்பற்றி விட்டது என்று வெளியில் இருப்பவர்கள் மொத்தமாகச் சொன்னாலும் அதனை அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ‘கட்சியை தினகரன் கைப்பற்றிவிட்டார்’ என்றே பிரித்துச் சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்ததும், கட்சி சசிகலா கைக்கு வந்தது. ‘கட்சி திவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
பன்னீர்செல்வம் அணியில் இணைந்த ராஜகண்ணப்பன் திடீர் சபதம்! முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று இணைந்தார். அப்போது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெற்றவுடன், அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம்' என சபதம் எடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. சசிகலா அணி- பன்னீர்செல்வம் அணி என்று பிரிந்தது. இதில், சசிகலா அணியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இருந்துவந்தார். இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு, ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திடீரென வருகைதந்தார். பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய அவர், அ.தி.மு.க புரட்சித்தலைவி …
-
- 0 replies
- 358 views
-
-
7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பிரமாண்ட ஏற்பாட்டில் கருணாநிதி வைர விழா தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்திற்கு, முதன்முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் காலடிவைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. 1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. 13 முறை தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓரே சட்டமன்ற உறுப்பினராக இந்தியாவில் இவர் மட்டுமே உள்ளார். தமிழக சட்டச…
-
- 0 replies
- 370 views
-
-
$ பெங்களூரு மாநகராட்சியின் 51-வது மேயராக சம்பத் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழரான சம்பத் ராஜ் மேயராகி இருப்பதால் கர்நாடகாவில் தமிழ் அமைப்பினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக 100, காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14, சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றின. இதில் காங்கிரஸ் கட்சி, மஜத மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக மேயர் பதவியை வகித்த பத்மாவதியின் பதவி காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியின் மேயர் (எஸ்.சி), துணை மேயர் (பொது) பதவிக்கான தேர்தல் நேற்று (வியாழக…
-
- 0 replies
- 375 views
-
-
'அம்மா'வுக்காக அனைத்து தியேட்டர்களும் இன்று மூடல்- மதுரையில் உணவகங்களும்.. சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து த…
-
- 0 replies
- 589 views
-
-
தமிழ் வழக்காடு மொழி... உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது... மத்திய சட்ட அமைச்சர் Published By: RAJEEBAN 29 MAR, 2023 | 04:33 PM சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றக் கோரி விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், தங்களது மாநில உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்று தமிழ்நா…
-
- 0 replies
- 652 views
- 1 follower
-
-
சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், ரூ. 4,500 வாடகை வீட்டில் இன்முகத்தோடு வரவேற்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இன்றைக்கு 90-வது பிறந்த நாள். இந்த வயதிலும் ஆள் அசரவில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்துக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவர் நள்ளிரவு வரை நீண்ட நேர்காணலுக்கு நிதானமாகப் பதில் அளித்தார். இந்த 90 வருஷ வாழ்க்கையின் ஊடே பார்க்கும் போது, ஸ்ரீவைகுண்டம், ராமசாமி, கருப்பாயி இந்தப் பெயர்களெல்லாம் இன்றைக்கு உங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு என்ன? இந்தப் பேரெல்லாம் இல்லைன்னா, இன் னைக்கு நான் இங்கெ உட்கார்ந்துருப்பேனானு தெரியல. ஒரு மனுசன் உருவாக்கத்துல தாய் - தகப்பன், குடும்பம், ஊரு எல்லாத்துக்கும் பங்கிருக்கு. ஸ்ரீவைகுண்டம…
-
- 0 replies
- 429 views
-
-
சூடுபிடித்துள்ள தேர்தல் களம் – 4 சட்டமன்ற தொகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு! தமிழகத்தின் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இன்று (திங்கட்கிழமை) இறுதிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளன. இதன்படி குறித்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 98 வேட்புமனுக்கள் தற்போது வரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 42 வேட்புமனுக்களும், சூலூரில் 23 வேட்புமனுக்களும், திருப்பரங்குன்றத்தில் 20 வேட்புமனுக்களும், ஒட்டப்பிடா…
-
- 0 replies
- 616 views
-
-
10 AUG, 2024 | 09:20 AM சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேர்,4 நாட்டுப் படகுகளை இலங்கைகடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழக மீனவ…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
நடிகர் சித்தார்த்... மழை தந்த நிஜ 'சூப்பர் ஸ்டார்'! கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. பல தரப்பில் இருந்தும் சென்னைக்கு உதவிகள் குவிந்து கொண்டிருக்கிறது. சினிமா நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் தன்னால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். சித்தார்த்துடன் இணைந்து நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான பாலாஜியும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த் நேற்றிரவு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார், அதில் அவரது வீட்டு …
-
- 0 replies
- 515 views
-
-
தமிழகத் தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து விவரங்கள் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளர்களில் 28 சதவீதம் பேர், தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பல வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் உள்ளன தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களில் அளித்திருக்கும் விவரங்களை ஆய்வுசெய்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மற்றும் தமிழக தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகியவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 3776 பேர். இவர்களில் பிரதான கட்சிகளின் சார்பில் 997 பே…
-
- 0 replies
- 474 views
-
-
தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட நெரிசல்ல எங்கள் நிருபர்களும் இருந்தாங்க. அதன் பிறகு களத்துக்கு போன எங்கள் செய்தியாளர்கள், இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி மக்களை சந்திச்சு பேசியிருக்காங்க. அதை பல காணொளிகளா பதிவு பண்ணி இருக்கோம். முதல்ல, இறந்துபோன 41 பேருக்கும் எங்களுடைய ஆழ் மனசுல இருந்து அஞ்சலிய செலுத்துறோம். கரூர் அசம்பாவிதத்தை முழுமையாக observe பண்ணோம் என்கிற அடிப்படையில், இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் மற்றும் தவெக ஆற்றிய எதிர்வினைகள் குறித்து சில கேள்விகள் எங்களுக்கு இர…
-
- 0 replies
- 166 views
-
-
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால், 1983 ஆம் ஆண்டு அடைக்கலம் கேட்டு முதன்முதலாக ஈழத்தமிழர்கள் தமிழகம் வந்தார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள் வருவது அதிகரித்து இலங்கையில் போர் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வந்துகொண்டே இருந்தனர். இப்படி அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் 112 முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். இந்த முகாம்களில் 63,938 பேர் வசிக்கின்றார்கள். இந்த முகாம்களில் 20 ஆயிரம் நபர்கள் 17வயதிற்குட்பட்டவர்கள். முகாமிற்கு வெளியே 34,482 நபர்கள் வசித்துவருகிறார்கள். அகதிகளாக வந்து இருபது ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் வசித்துவரும் இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப…
-
- 0 replies
- 259 views
-
-
அடுத்த மாதம், 7ம் தேதி, டில்லியில் நடக்கும், டெசோ மாநாட்டில், பா.ஜ., தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இம்மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்@கற்று, தேசிய அரசியலில், புது அணியை உருவாக்குவதற்கு அச்சாரம் அமைப்பாரா என்ற சந்தேகம், காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது. டெசோ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் இம்மாதம், 25ம் தேதிஅறிவாலயத்தில் கூடுகிறது.அக்கூட்டத்தில், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், அடுத்த மாதம், ஐ.நா., மனித உரிமை கமிஷனில் நடைபெறும் கூட்டத்தில், இலங்கை அரசை நிர்பந்திக்கும் வகையில், புதிய தீர்மானத்தை அமெரிக்க அரசு தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இலங்…
-
- 0 replies
- 546 views
-
-
மதுரையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக பயங்கரவாதிகள் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தொடர் வாகன சோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்க்கிங் நெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13157:madurai-bom&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 556 views
-
-
‘மக்கள் நலக் கூட்டணியின் ஆயுள் முடிந்துவிட்டது!’ - அரசியல் விமர்சகர்கள் மக்கள் நலக்கூட்டணி முடிந்துவிட்டது என்று அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் பேசி வரும் நிலையில் அதில் உள்ள தலைவர்களான வைகோ மற்றும் திருமாவளவன். ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆகியோர் அவ்வப்போது தோன்றி கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தா.பாண்டியனிடம்…
-
- 0 replies
- 384 views
-
-
அன்று மாட்டு வண்டிகள்... இன்று டிராக்டர்கள்... விவசாயப் போராட்டங்கள் சொல்லும் வரலாறு! ஜி.பழனிச்சாமி மாட்டுவண்டிப் போராட்டம் அன்று கட்டை வண்டிகளால் கோவை குலுங்கியது. இன்று டிராக்டர்களின் அணிவகுப்பு கண்டு டெல்லி குலுங்குகிறது. 1970-களில் தமிழக விவசாயிகள் கொந்தளித்தது ஏன்? நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது. பெருவணிக நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்தைத் தாரை வார்க்கும் திட்டம். அந்த மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குடும்பம் குடும்பமாக டெல்லியை நோக்கி …
-
- 0 replies
- 542 views
-
-
ரிச்சர்ட் பீலே சொன்னது தெரியும்... எம்.ஜி.ஆர் இறந்தபோது, மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா? ஜெயலலிதாவின் மரணம் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி தமிழகத்தின் மேட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் சென்னையின் முதல்பயணத்தை துவக்கிவைத்துவிட்டு தன் வாழ்க்கையின் இறுதிப்பயணத்துக்குத் தயாரானார் . அன்றிரவு வீட்டில் மயங்கிவிழுந்தவரை அவசர அவசரமாக அப்போலோவில் சேர்த்தனர். அன்றிலிருந்து 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தவர், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11 மணிக்கு தொண்டர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையையும் மீறி மரணமடைந்தார். ஜெயலலிதா இறப்பு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் குறிப்பிடும் இந்…
-
- 0 replies
- 482 views
-
-
ஆட்சியமைக்க அழைப்பு வருமா? - ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் சந்திப்பு அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளதால், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: தமிழக அரசியல் களம் உச்சகட்டமான பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தா…
-
- 0 replies
- 287 views
-
-
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகேயுள்ள பெரியதாழையில் கடல் தாதுமணல் ஏற்றி வந்த லாரியை மீனவமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவி மினரல்ஸ், பி.எம்.சி உள்ளிட்ட கடல்தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் சிறப்பு ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடல்தாது மணல் குவாரிகளிலும் மணல் எடுப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளவிளை கடல் பக…
-
- 0 replies
- 343 views
-