Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாகப்பட்டிணம்: இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து மீனவ பெண்கள் சார்பில் 10ம் தேதி ஆர்பாட்டம் நடக்கிறது. நாகை மாவட்ட மீனவர்கள் 5 விசைப்படகுகளிலும், காரைக்கால் மீனவர்கள் 4 விசைப்படகுகளிலும் என மொத்தம் 9 விசைப்படகுகளில் மீன் பிடிக்க தென்கிழக்கு பகுதி நடுகடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் 9 விசைப்படகுகளையும், 65 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கூட்டி சென்றனர். இதில் 41 பேர் நாகையை சேர்ந்தவர்கள், 24 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 34 பேர் யாழ்பாணம் சிறையிலும், 31 பேர் திரிகோணமலை சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி மீனவர்க…

  2. திருவள்ளூர்: திருத்தணியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருத்தணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் ராஜா(32). நாம் தமிழர் கட்சி மாவட்ட இணை செயலாளர். அவர் அகூர் பகுதியில் கோணிப்பை தைத்து விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி சரண்யா. அவர்களின் மகன் மருதப்பாண்டியன்(4). நேற்று மதியம் கடைக்கு சென்ற ராஜா இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் கவலை அடைந்த சரண்யா அக்கம் பக்கத்தினரிடம் விவரத்தை தெரிவித்து அவர்கள் உதவியுடன் தனது கணவரை தேடினார். இந்நிலையில் சித்தூர்-திருத்தணி சாலையோரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நள்ளிரவு 1 மணி அளவில் தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

  3. சென்னை: பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைவர் பன்முகம் கொண்டவர். சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். டிவி வைத்திருக்கிறார். பத்திரிக்கை வைத்திருக்கிறார். இவர் மீதுதான் இந்தப் பரபரப்பான புகார் எழுந்துள்ளது. அவர் மீது குற்றம் சாட்டியிருப்பவர் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ஆவார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக இவர் போட்டியிட்டாராம். அந்த கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட அந்த பெ…

  4. சென்னை: தூய்மையான எண்ணத்துடன் எளிமையாக வாழுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா இப்தார் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏற்பாட்டின்படி, அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தியினை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய பெருமக்கள் 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் கடுமையாக நோன்பு இர…

    • 1 reply
    • 256 views
  5. சித்தூர்: ஆந்திராவை பிரித்து தெலுங்கானாவை உருவாக்கினால் சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரி, நாகலாபுரம், விஜயபுரம் பகுதிகளை தமிழ்நாட்டின் இணைக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். நகரி, நாகலா புரம், விஜயபுரம் போன்ற பகுதிகளில் 60% தமிழர்கள் உள்ளனர். ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஆந்திரா பிரிவது உறுதியானால் எங்கள் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்து நகரி தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆ…

    • 2 replies
    • 534 views
  6. விருதுநகர்: தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அரசியல் கட்சிகளுக்கு மாற்று அரசியலின் நுழைவு வாயிலாக ம.தி.மு.க. திகழும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.வின் மாநில மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடக்கிறது. மாநாட்டுக்காக, விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் சூலக்கரை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. விருதுநகர் மாநாடு மாநாட்டு பந்தலுக்கான பந்தக்கால் நடும்விழா இன்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் நடந்தது. அப்போது, நிருபர்களிடம் பேசிய வைகோ, ‘‘தமிழகத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்னை உள்பட தமிழக மக்களின் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. விருதுநகரில் நடக்…

    • 1 reply
    • 437 views
  7. விருதுநகரில் செப்டம்பர் 15–ந்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாநாடு நடைபெறும் இடமான விருதுநகர்–சாத்தூர் சாலையில் மாநாடு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நடை பெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று செப்டம்பர் 15–ந்தேதி காமராஜர் பிறந்த பூமியில் ம.தி.மு.க. மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நடைபெறும் மாநாட்டுக்கு உயர்நிலைக் குழு ஜெபராஜ் தலைமை தாங்குகிறார். சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சண்முகசுந்தரம் வரவேற்று பேசுகிறார். இந்த மாநாடு மாற்று அர…

    • 0 replies
    • 349 views
  8. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 அப்பாவி மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு நான் கடந்த 17.6.2013, 8.7.2013, 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்து இருந்தேன். இந்த விவகாரத்தில் தாங்களே நேரிடையாக தலையிட்டு தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ந்து வாடி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 3–ந்தேதி ராமேசுவரத்தில் மீன் ப…

    • 1 reply
    • 407 views
  9. "தமிழ்நாட்டை அவமதிக்கும் இந்திய மத்திய அரசு தமிழர்களை இப்படி அவமதிப்பது இந்திய அரசின் பாரபட்ச செயட்பாடுகள் வெளிப்படுகின்றன. இதுபோன்ற அவமதிப்புகள் தமிழ்நாட்டை பிரிக்க இந்தியா விரும்புகிறதா என்ற கேள்வி தமிழர்கள் மனதில் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது இது போன்ற செயற்பாடுகளை கட்சி வேறுபாடு இன்றி எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும்." சரவணை மைந்தன் NEWS தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த அவமானம் என்றால், இந்திய அரசு சராசரி தமிழர்களை எப்படி மதிக்கும், ஈழ தமிழர்களை எப்படி நடத்தும் என சொல்ல வேண்டியதே இல்லை. தமிழர்களை அவமதிப்பது என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கு பிடித்த ஒரு செயல். தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாகவே இந்தியா பார்க்கிறது. திருச்சியில் வரவேற்புக்காக வந்த…

  10. இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார். செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது. உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது ஈழ உணர்வாளர் காளிமுத்து கயல்விழியின் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து …

    • 135 replies
    • 11.5k views
  11. சென்னையில் மெட்ரோ ரயில் தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கப் போகிற நாள் கிட்டத்தட்ட வந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் கோயம்பேட்டில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்துக்குப் பின்னர் முதல் பாதையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் என்று தெரிகிறது. http://tamil.oneindia.in/news/2013/08/05/tamilnadu-chennai-metro-rail-trial-run-10-days-180537.html பிரேசிலிலிருந்து வந்த பெட்டிகள் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் மூலம் மே 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன. இந்தப் பெட்டிகள், கோயம்பேடு மெட்ரோ…

    • 13 replies
    • 1.8k views
  12. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு தெரியாது, எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn…

  13. டெல்லி: இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிந்த பிறகு முறையே தேர்தல் நடத்தி திமுகவின் கனிமொழி உள்பட 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கனிமொழியை தவிர மற்ற 5 பேரும் கடந்த மாதம் 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அப்போது ஆடி போர்க்காலம் நடந்ததால் தான் கனிமொழி பதவி ஏற்கவில்லை என்று கூறப்பட்டது. ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்காலம் என கூறப்படுகின்றது. இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. அப்போது கனிமொழி …

    • 2 replies
    • 313 views
  14. முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது : ஒரு பொய்யை பல முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் , என்பது கோயபல்ஸின் தத்துவம். இதையும் மிஞ்சும் அளவுக்கு "இரட்டை நாக்கு", "இரட்டை வேடம்", "கபட நாடகம்", "முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது", "அந்தர்பல்டி அடிப்பது", "குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது" என தன்னலத்திற்காக பல வழிமுறைகளை கருணாநிதி பின்பற்றி வருகிறார். அந்த வகையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் கருணாநிதியின் இரட்டை நிலைப்ப…

  15. அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மற்றும் இலக்கியப் பேரவை சார்பில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டபோது ம.தி.மு.க., கூட்ட நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு குறித்த வீடியோ இறுவெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன. சேலம் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் ஆத்தூரில் கடந்த, ஜூலை 30ம் திகதி தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. அடுத்த நாள் ஆத்தூர் இலக்கியப் பேரவை சார்பில் நகராட்சி அண்ணா கலையரங்கில் பட்டி மன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ம.தி.மு.க.,வில் இருந்து, அ.தி.மு.க.,வில் இணைந்த, நாஞ்சில் சம்பத் பேசினார். அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மற்றும் பட்டி மன்ற நிகழ்ச்சி நடந்த இடத்தில், ஆடியோ மற்றும் வீடியோ, இறுவெட்டுக்கள் விற்பனை …

    • 2 replies
    • 689 views
  16. கூடங்குளம் அணுவுலைக் கெதிரான போராட்டத்தில் போராட்டகாரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற மாநில அரசை வலியுறுத்தியும், மக்களை பாதிக்கும் கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக மூடக்கோரியும் எஸ்.டி.பி .ஐ கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று(03.08.2013) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட பொது செயலாளர் எ.கே.கரீம் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர்கள் ரத்தினம், அமீர் ஹம்சா, வட சென்னை மாவட்ட தலைவர் முகமது ரஷீத், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பாப்பு…

  17. அரசு விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் பூங்கொத்து, சால்வை, விலை உயர்ந்த பொருட்களை நினைவுப் பரிசாக அளிப்பதை விட தரமான புத்தகங்களை கொடுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தக திருவிழா நேற்று மாலை துவங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், என் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் நான் படித்தேன். சட்டப்படிப்பு படிக்கையில் என் ஆங்கில அறிவை வளர்க்க ஆங்கில தினசரி பத்திரிக்கைகளை படித்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது ஒரு நாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எனக்கு போன் செய்து, உங்…

  18. கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்க முடியும் என்ற அமர்த்தியா சென்னின் கருத்து குறித்து திமுக தலைவர் கருணாநிதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘நோபல்'' பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, வெளிவந்துள்ள நூலினை அண்மையில் நக்கீரன் காமராஜ் தனது பிறந்த நாளினையொட்டி என்னிடம் அளித்தார். இவர்கள் எழுதிய ‘‘நிலையில்லா புகழ்-இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும்'' என்ற தலைப்பு கொண்ட அந்நூலில், பக்கம் 72-ல், ‘‘தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் ப…

  19. தலைவர் பிரபாகரன், மனைவி சேலத்தில் பதுங்கி இருப்பதாக சி.பி.ஐ.க்கு எஸ்.எம்.எஸ்.: துறையூர் என்ஜினீயர் கைது. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் (வயது 32). என்ஜினீயர். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. துரைராஜ் முதலில் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி நின்று விட்டார். பின்னர் வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வேலை தேடி வந்தார். இந்த நிலையில் துரைராஜ், தனது மனைவியுடன் சேலம் வந்து தனது மாமனார் வீட்டுக்கு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து தனியே வசித்து வந்தார். இங்கு வந்து வேலை தேடி வந்த துரைராஜ், கரூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு …

  20. தமிழால் இணைவோம் படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்! ""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ 'தற்கொலை' பண்ணிக்கிறாங்க பசங்க. பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும் "பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க. எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த ஈடுபாடுதான், ஐ.நா.,சபை இளைஞர்கள் மாநாட்டுல, எனக்குப் பேசுற வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு...'' எ…

  21. எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக எதிர்பார்ப்பதில் தவறில்லையே என இயக்குனர் சேரன் கேட்டுள்ளார் அதேசமயம் நான் காதலுக்கு எதிரானவன் அல்ல...என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி (20). தனது தந்தைக்கு எதிராக நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வீட்டுச்சிறையில் தந்தை சேரன் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தாமினி தெரிவித்தார். இது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேரன் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சந்துரு மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்ச…

    • 8 replies
    • 675 views
  22. தமிழ்நெட் இணையத்தளத்திற்கு அறப்போர் ஆவணப்படத்தின் இயக்குனர் வெற்றிவேல் அவர்களின் செவ்வி. https://www.youtube.com/watch?v=-ax03GUHgek

  23. தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் …

  24. காரைக்கால்: காரைக்கால் மீனவர்களை இன்று இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை சேர்ந்த 45 மீனவர்கள் இன்று காலை 11 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். திருமலைராயன்பட்டினம் அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியதாக தெரிகிறது. மேலும், துப்பாக்கி காட்டியும் மிரட்டி உள்ளனர். அதோடு, மீனவர்களின் வலையை இந்திய கடலோர காவல் படையினர் அறுத்து எறிந்துள்ளனர். இதனால், அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பியுள்ளனர். இதுநாள் வரை இலங்கை கடற்படையினர்தான் தாக்குதல் நடத்தி வந்தனர் இந்த நிலையில் இந்திய கடற்படையினர் நம்நாட்டு மீனவர்கள் மீனவர்கள் மீதே த…

    • 5 replies
    • 614 views
  25. ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழக வந்தÂ பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக திருச்சியில்Â Â கருப்புக் கொடி போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உட்பட 1000 பேர் கைதுÂ Â http://www.dinaithal.com/tamilnadu/18062-velmurugan-including-the-arrest-of-1-000-people.html

    • 8 replies
    • 696 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.