தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
டெல்லியில் முதல்- அமைச்சர்கள் மாநாடு இன்று நடந்தது. மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:–வலிமையான மாநிலங்களால்தான் வலிமையான மத்திய அரசு அமையும். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் பழைய போக்குகளை மாற்றியாக வேண்டும்.அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்து மாறி வரும் காலம் இது. மாநிலக் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கோஆப்ரேடிவ் கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. அந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. நாட்டின் வளர்ச்சிக்கு மாநில அரசுகள் சரிசமமாக பங்குதாரர்கள் என்ற கருத்தை நான் எப்போதும் வர…
-
- 0 replies
- 279 views
-
-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணற்றில் திண்பண்டம் திருடியதாக 10 வயது சிறுமி உள்பட மூன்று குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக உயிரிழந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தை கைது செய்யபட்டுள்ளார். இவர்களில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, அவரது வளர்ப்புத் தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம்…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
திமிங்கல வாந்தி: ரூ. 2 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸை பதுக்கியதாக நாகை மீனவர்கள் இருவர் கைது 18 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அம்பர் கிரிஸ் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் கண்டெடுத்த அரிய வகை அம்பர் திமிங்கலத்தின் அம்பர்கிரிஸை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்த இரண்டு மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு, ஆனந்த் ஆகிய இருவரும் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸ் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதை விதிகளின்படி வனத்துறையினரிடம் ஒப்படைக்கா…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழக சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, பெங்களூரு சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனு திடீரென வா…
-
- 0 replies
- 279 views
-
-
ஜெயலலிதா மரண மர்மத்தை சசிகலா வெளியிட வேண்டும்- தீபா பரபரப்பு பேட்டி Posted on December 12, 2021 by தென்னவள் 19 0 வீட்டில் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இப்போது இல்லை. மோசமான நிலையில் இந்த வீடு உள்ளது. அது வேதனை அளிக்கிறது. அழகாக இருந்த அந்த வீடு பாழடைந்து உள்ளது. பராமரிப்பு பணிகள் அதிகளவில் செய்ய வேண்டி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இதையடுத்து போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் நடைபெற்றன. ஆனால் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவரது சகோதரர் தீபக் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்…
-
- 0 replies
- 279 views
-
-
சென்னை சுங்கத்துறையின் இணையதளம் தீவிரவாதிகளால் முடக்கம் சென்னை மண்டல சுங்கத்துறைக்கு சொந்தமான ‘இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் முடக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை மண்டல சுங்கத்துறையினரால் செயற்படுத்தப்ட்டு வரும் ‘www.chennaicustoms.gov.in’ என்னும் இணையதளமே இன்றைய தினம் இணையத்திருடர்களினால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டீன் பாக் சைபர் ஸ்கல்ஸ்’ என்னும் பாகிஸ்தானை சேர்ந்த இணையத்திருடர்கள் இணையத்தினை முடக்கி அதில் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவான வாக்கியங்களை பதிவு செய்ததுடன் இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிது நேர…
-
- 0 replies
- 278 views
-
-
போராட்டம் கை கொடுத்தது.. மதுரை நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாட அனுமதி!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை திரும்பப் பெறுவதாக நீதிபதி மணிக்குமார் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இனி அந்த நீதிமன்றத்தில் தமிழில் வாதாட முடியும். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் பகத்சிங் என்பவர் 2 வழக்குகளை தொடர்ந்திருந்தார். இந்த 2 வழக்குகளும் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் தமிழில் வாதாடினார். ஆனால் இதற்கு நீதிபதி மணிக்குமார் அனுமதி மறுத்தார். தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று கூறி 2 வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடியும் செய்தார். இது கடும் எதிர்ப்பை உருவாக்கி…
-
- 0 replies
- 278 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்த அறிக்கை செப்டம்பர் மாதம் தாக்கல் February 2, 2019 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கையினை தாக்கல் செய்யவுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் இடம்பெற்ற போராடத்தின் கடைசி நாளன்று, கடற்கரையில் வன்முறை வெடித்திருந்தது. இது குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் வி…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது. மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்தபடி உள்ளன. இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி போக்குவரத்துத்துறை பதிவேடு களின்படி, தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 72 ஆயிரத்து 131 வாகனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக் குள் அது இரண்டு கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று, மாநிலத்தில் ஒரு கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 787 வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இதன்படி ஓராண்டு காலத்துக்குள், 17 லட்சத்து 7 ஆயிரத்து 344 வாகனங் கள் புதிதாக பதிவு செய்யப்பட்டி…
-
- 0 replies
- 278 views
-
-
பட மூலாதாரம்,X/@ARIVALAYAM படக்குறிப்பு, திமுகவில் "ஏகப்பட்ட பழைய மாணவர்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசியிருந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 26 ஆகஸ்ட் 2024, 13:57 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மூத்த தலைவர்கள் குறித்து பேசிய கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் “ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள்” என்று ரஜினி பேசினார். முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதய…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,Getty Images and UGC கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 செப்டெம்பர் 2025, 08:06 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் 'வீட்டு மின்சார கட்டணமாக 1.61 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என்று செப்டம்பர் 3-ஆம் தேதி வந்த குறுந்தகவலால் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது. 'மனித தவறு காரணமாகவே அதீத மின் கட்டணம் பதிவாகிவிட்டது. தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது' என, நெல்லை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். நெல்லை கூலித் தொழிலாளி வீட்டில் மின்சாரத்தை அளவிடுகையில் தவறு எவ்வாறு நடந்தது? இதுபோன்ற சிக்கல் வரும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் வீட்டுக்கு வரும் மின்சார கட்டணம் அசாதாரணமா…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஓய்கிறது என கருதப்பட்ட நிலையில் 10 மாநிலங்களுக்குட்பட்ட 46 மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் தொற்று வேகம் எடுத்து பரவி வருகிறது. இதனால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை வகித்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் பூஷண், கேரளா, தமிழ்நாடு, மகராஷ்ட்ரா, ஒடிசா, அஸ்ஸாம், மீசோரம், மேகாலயா, ஆந்திரா, மணிப்பூர்…
-
- 0 replies
- 278 views
-
-
தீபா - தீபக் மோதல் பின்னணியில் தினகரன்: கார்டனில் நடந்த கலாட்டா சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கும், அவரது சகோதர ருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு, தினகரன் தரப்பினரே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது. ஜெ.,மறைவுக்கு பின், அவரது சொத்துக்களுக்கு, அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், உரிமை கொண்டாடி வருகின்றனர். சொத்துக்கள் தொடர்பாக, ஜெ., உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்த தகவல் எதுவும், இதுவரை வெளியாகவில்லை. தனிக்கட்சி தற்போதைய நிலையில், ஜெ., சொத்துக்கள் அனைத்தும், சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. தீபக்கும், அவர்களின்…
-
- 0 replies
- 278 views
-
-
ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் தவறா? சட்டசபையில் நடந்த, ஓட்டெடுப்பில் பங்கேற்ற, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையில் குளறுபடி நிகழ்ந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது தவறானது என, தெரிய வந்துள்ளது. தமிழக சட்டசபையில், மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 234. ஜெயலலிதா மரணத்தால், ஆர்.கே.நகர் தொகுதி, காலியாக உள்ளது. மீதம், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நேற்று முன்தினம், நம்பிக்கை ஓட்டு கோரியது. அப்போது, ஏற்பட்ட அமளி யால், 88 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளி யேற்றப்பட்டனர். தி.மு.க.,வின் மற்றொரு …
-
- 0 replies
- 278 views
-
-
எம்.எல்.ஏ.,க்களுக்கு வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு? கூவத்தூர்: கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர் அணிக்கு தப்பி செல்வதை தடுக்க சசி தரப்பில் இருந்து வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் முக்கிய திருப்பமாக நேற்று மாலை சசிகலா தரப்பு அ.தி.மு.க., சார்பில் இடைப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச…
-
- 0 replies
- 277 views
-
-
துடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியிடம் சி.பி.ஐ,. ரகசிய விசாரணை நடத்தியுள்ளது. சென்னையில் பிரபல வக்கீலான இவர் பலரை ஏமாற்றிய நிதி நிறுவனம் சாரதா சிட்பண்ட் நிறுவன அதிபரிடம் ரூ. ஒரு கோடி வாங்கியதாகவும், மேலும் இவரை காப்பாற்ற தான் துணை இருப்பதாகவும் கூறியதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது என்றாலும், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ.,க்கு கிடைத்த கடிதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்கம் கோல்கட்டாவை மையமாக கொண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் கொடி கட்டி பறந்தது. இந்த நிறுவனத்தில் பணம் போட்ட அப்பாவி மக்களுக்கு முதிர்வு தொகை தராமல் அந்த நிறுவனம் இழுத்து மூடியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுத…
-
- 0 replies
- 277 views
-
-
144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு: 11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் 2020-04-06@ 10:05:50 சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரே நாளில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாக ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து நூதன முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் வெளியில் சுற்றி தான் வருகின்றனர். அந்…
-
- 0 replies
- 277 views
-
-
தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம் இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் இன்று காலை விரட்டியடிக்கப்பட்டது. தற்போது இதற்கான காரணத்தை இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத சீனக்கப்பல் ஒன்று மர்மமான முறையில் இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்றது. தமிழகம் வழியாக நுழைய முயன்ற இக்கப்பலை இந்தியக் கடலோரக் காவல்படையினர் விரட்டியடித்துள்ளனர். அடையாளம் தெரியாத சீனக் கப்பல் மீது இந்தியப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்து சீனக்கப்பல் விரட்டப்பட்டுள்ளது. இது குறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் இ…
-
- 0 replies
- 277 views
-
-
மதுரையில் குறையும் கரோனா பாதிப்பு: மாநாராட்சிப் பகுதிகளில் 16.3 சதவீதமாக இருந்த பாதிப்பு 7.2 சதவீதமாக சரிவு மதுரை மதுரை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. இது நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மருந்தும், எந்த சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படாதநிலையில் தமிழகத்தில் ‘கரோனா’ தொற்று முதல் அலை பரவத்தொடங்கியபோது இந்தத் தொற்றின் முதல் உயிரிழப்பு மதுரை அண்ணாநகரில்தான் நிகழ்ந்தது. பெரும் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனால், …
-
- 0 replies
- 277 views
-
-
தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனம் பற்றிய பன்வாரிலால் புரோஹித்தின் சர்ச்சை பேச்சு - பின்னணி என்ன? 22 அக்டோபர் 2022, 10:03 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பன்வாரிலால் புரோஹித் தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றியது மிக மோசமான அனுபவமாக இருந்தது என்றும், துணைவேந்தர் பதவிகள் ரூ.40 முதல் ரூ.50கோடிகள் வரை விற்கப்படும் சூழல் இருந்தது என்றும், தன்னுடைய பதவிக் காலத்தில் தான் நியாயமாக 27 பதவிகளுக்கு நியமனம் செய்ததாகவும் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது சர்ச்சையாகியுள்ளது. தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக இருக்கு…
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
அதிமுகவில் புதிய நிர்வாகிகள்: தேர்தல் ஆணையத்துக்கு பன்னீர் கடிதம்! மின்னம்பலம்2022-07-14 அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சென்னை வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொ…
-
- 0 replies
- 277 views
-
-
இலங்கைக்கு கடல்வழியாக கடத்தவிருந்த கேரள கஞ்சா மீட்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கஞ்சா மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் தப்பியோடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகுமூலம் கேரளா கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து மண்டபம் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரியமாண் கடற்கரை அருக…
-
- 0 replies
- 277 views
-
-
அரசியலுக்கு வருவதற்கான அவசரம் தற்போது இல்லை: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி சென்னை: அரசியலில் நுழைவதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் உரையாற்றும் போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. நான் அரசியலுக்கு வருவது "கடவுள் விருப்பம்" என்றால் அரசியலின் பாதையை அவர் தேர்ந்தெடுப்பார் என்றார். "ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் முடிவு செய்கிறார். இப்போது, அவர் என்னை ஒரு நடிகர் ஆக வ…
-
- 0 replies
- 277 views
-
-
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோர தீர்மானித்தது எடப்பாடி தரப்பு! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையகத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்த வாரம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது இதுகுறித்து பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2023/1320859
-
- 0 replies
- 277 views
-
-
முதல்வருக்கு ஆதரவாக இளைஞர்கள் திரள வாய்ப்பு: மெரினா கடற்கரையில் போலீஸார் குவிப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினாவில் திரளப்போவதாக தகவல் கிடைத்ததையொட்டி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர் | படம்: ம.பிரபு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி கடந்த மாதம் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடந்து…
-
- 0 replies
- 277 views
-