Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பழனிசாமி அதிரடியில், 'பணால்' ஆன சசி குடும்பம் முதல்வர் பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை, சசிகலா குடும்பத்தினரை மிரள வைத்துள்ளது. ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 21 பேர் உதவியுடன், முதல்வர் பழனிசாமியை மிரட்டி பணிய வைக்க, சசிகலா குடும்பத்தினர் முயற்சித்தனர். அவர், மிரட்டலுக்கு பயப்படாமல், பொதுக்குழுவை கூட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியிலிருந்து, சசிகலாவை துாக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்த தினகரன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார். முதல்வராக இருந்த ஓ…

  2. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியான நளினி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட நால்வர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை ரத்தாகி இவர்கள் மூவரின் விடுதலையை மாநில அரசு முடிவு செய்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்ற முந்தைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, மேற்கண்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்திருந்தது. ஆனால், இவர்களின் விடுதலைக்கு எதிராக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உச்ச …

  3. 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது By T. SARANYA 06 SEP, 2022 | 12:34 PM மீன்பிடி படகில் கனடா செல்ல திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் நேற்று (05) கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அளித்த தகவலின் பேரில் தெற்கு கேரளாவில் கொல்லத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் காணாமல் போயுள்ளார்கள். க்யூ பிரிவு (சிஐடி பிரிவு) அவர்களின் தொலைபேசி சிக்னல்களைப் பின்பற்றி கொல்லத்தில் அவர்களைக் கண்டுபிடித்துள்ளனர். தேடுதலுக்குப்…

  4. அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை. தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது, நீங்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். கெடுகாலம். நாடக நடிகர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்தார். வன்னி யுத்தம் முடிந்து எதுவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் நடந்து …

  5. கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 15 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பழனி முருகன் கோவிலில் புலிப்பாணி சித்தர்கள் போகர் ஜெயந்தி நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. கோவில் நடைமுறையில் இல்லாத விழாவை நடத்த முற்படுகின்றனர் என கோவில் நிர்வாகம் கூறும் நிலையில் தங்களின் நடைமுறையில் கோவில் நிர்வாகம் தலையிடுவதாக புலிப்பாணி சித்தர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலிப்பாணி சித்தர்கள் யார்? திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் முருகனின் அறுப…

  6. இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்துள்ளதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: அன்புமணி ராமதாஸ் இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்திருப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்த போது, அவருக்கு இந்தியா வலிந்து சென்று உதவினாலும் அவர் சீனாவுக்கு மட்டு…

  7. சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 5 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் பல்வேறு பகுதிகளை தீவிரமாக பாதித்துள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் நான்கு அடிக்கும் குறையாமல் இருந்தது. இந்த புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்க்காத அளவுக்கான அதிகனமழையை கொடுத்துள்ளது. இந்த புயல் மற்ற புயல்களிலிருந்து சில காரணிகளால் வேறுபட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் எப்படி வித்தியாசமானது? புயல்கள் கரைக்கு எவ்வளவு அருகில் இருக்கிறதோ அவ்வளவு அத…

  8. விதம் விதமாக பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான்.. திடீர் உடல் நலக்குறைவு. நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார் நடிகர் மன்சூரலிகான். தினம் ஒரு வித்தியாசம்.. தினம் ஒரு தோற்றம்.. தினம் ஒரு யுக்தியில் பிரச்சாரம் செய்து தொகுதி மக்களை ஈர்த்து வருகிறார்.வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிக்குள் சென்று களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அப்போது முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிலேயே மிக முக்கியமான வேட்பாளராக இவர் தன்னை முன்னிறுத்தி வருகிறார். இந்நிலையில், சர…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 5 அக்டோபர் 2024 காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவனை கொன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். போக்சோ குற்றங்களுக்கு யார் காரணம்? குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்? இந்த வழக்கில் கைதாகியுள்ள அரசு ஊழியரின் பெயர் ராஜேஷ். காஞ்சிபுரம் நில அளவைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ், பரந்தூர் விமான நிலைய…

  10. இராமேஸ்வரம்: இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 5வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும், உளர் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறு…

    • 0 replies
    • 382 views
  11. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து செவ்வாய்கிழமை பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களில் வழக்கு …

  12. சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்ட தமிழகர் குறித்து சுவாரஷ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பின் போது அவர்களுடன் மேலும் 2 பேர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீனர், மற்றோருவர் மதுசூதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி. ஒரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வரும் மதுசூதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் ஆவார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி- ஜின்பிங் சந்திப்பில் மொழியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்…

    • 0 replies
    • 462 views
  13. தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது. கணக்கெடுப்பு முடிவுகள் வருமாறு:-தமிழ்நாட்டில் 465.11 ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதில் ஹெக்டேருக்கு 14,873 தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 33.84 சதவீதம் ஆகும். கர்நாடகத்தில் ஹெக்டேருக்கு 9,982 தேங்காய்கள் வீதம் 515.03 ஹெக்டேரிலும் (25.15 சதவீதம்), கேரளாவில் ஹெக்டேருக்கு 7,535 தேங்காய்கள் வீதம் 649.85 ஹெக்டேரிலும் (23.96 சதவீதம்) தென்னை சாகுபடி நடக்கிறது.இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு…

  14. சிறப்புக் கட்டுரை: ரஜினியின் மருந்து! மின்னம்பலம் விநாயக் வே.ஸ்ரீராம் அன்றந்த வியாழக்கிழமையில் ரஜினி, தனது அரசியல் வியூகத்தின் முதற்கட்ட நகர்வை வெளிப்படுத்தியே விட்டார். அதில் மூன்று கூறுகள் முக்கியமானவை. 1. 65 சதவிகிதம் இளைஞர்களுக்கு வாய்ப்புத் தருவது. 2. தான் முதல்வர் பதவிக்கு வராமல் தன் செல்வாக்கை வைத்து மக்களிடம் பெருவாரியான வாக்குகள் பெற்று அதன் பிறகு ஓரளவுக்கேனும் படித்த, செயலாற்றலும் தன்மானமும்கொண்ட ஓர் இளைஞரைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்குவது. 3. தேர்தலுக்குப் பின் அவசியமற்ற தொங்கு சதைகள் போன்ற செயல் மையங்களுக்கு ஓய்வுகொடுத்து விடுவது. தன் 40 ஆண்டுக்கால உழைப்பால் தான்பெற்ற தனிப்பெரும் செல்வாக்கைவைத்து வேறு ஒருவரை முதலமைச்…

  15. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள் திருச்சியில் இருந்து வாகனத்தில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மும்பையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரம் நடந்தே வந்த பட்டதாரிகள். திருச்சி: நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் செயல்பட்டு வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பி.எஸ்சி, எம்.எஸ்சி. வேளாண் பட்டதாரிகள் ஆவர். அனைவரும் சோலாப்பூரில் தங்கி வேலை …

  16. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர் கடனுதவி! by : Benitlas அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் டொலரை வர்த்தக கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. N-95 மருத்துவ முகக் கவசங்கள், அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது. கொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வர்த்தகக் கடன் இலங்கையில் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் உயர்தர மருத்துவப் பொருட்களின் கொள்…

    • 0 replies
    • 426 views
  17. தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஓரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 5 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டி உள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக அ…

  18. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 27ஆம் தேதியில் இருந்து கதிர்வீச்சு கசிவதாக இலங்கையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு கசிவதாக கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களை இந்திய அதிகாரிகள் மறுத்தனர். இவை அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் என்றும் கூடங்குளத்தில் இருந்து கதிர்வீச்சு கசியவில்லை என்றும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் விளக்கம் அளித்தது. இந்தியாவில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களுமே அணுக்கழிவுகளை நிர்வகிக்கும் திறன் படைத்தவை என்றும் தெரிவித்தது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த "கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கம்' என்ற அமைப்ப…

    • 0 replies
    • 745 views
  19. இலவச வைஃபை, கலக்கும் காபிஷாப்... தமிழ்நாட்டில் ஒரு ஸ்மார்ட் கிராமம்! அது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழி. அங்கே இருக்கும் குருடம்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்தாலே நீங்கள் ஒரு புது பரவசத்தை உணரலாம். எல்லா கிராமங்களிலும் இருக்கும் அதே இயற்கை சூழல் இங்கேயும் நிச்சயம். அத்துடன் நவீன வசதிகளுடன் ஒரு ஸ்மார்ட் கிராமம் என மெச்சும் வகையில், மற்ற ஊர்களிடம் இருந்து தனித்து தெரிகிறது இந்த குருடம்பாளையம். அங்கே என்ன சிறப்பு? வாங்க தெரிந்துகொள்ளலாம். முதன்முதலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த இலவச இணையம், காபி ஷாப், சோலார் மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை என்று பல விதங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் கிராமம் தான் இந்த குருடம்பாளையம். இவை …

  20. தாம்பரம் பகுதியை சேர்ந்த வராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது மரக்காணம் கலவரத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முக்கிய காரணம். மாமல்லபுரம் சித்திரை விழாவில் பா.ம.க தலைவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சால் கலவரம் தீவிரமடைந்தது. எனவே பாமகவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாராயணன் விசாரித்து, தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15407:pmk-to-ban-the-ban-case-hc-notice-to-election-commission&catid=39:cinema&Itemid=107

    • 0 replies
    • 384 views
  21. முதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னரிடம் அனுமதி கேட்க தயாரா வோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவை அடுத்து, பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். எளிமையான முதல்வராக, மக்கள் விரும்பும் வகையில், செயல்பட்டு வந்தார். அவரே, முதல்வராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இருந்தது. பன்னீருக்கு நற்பெயர் கிடைப்பதை விரும்பாத சசிகலா, முதல்வராக துடித்தார். முதல்வரை மிரட்டி, ராஜினாமா க…

  22. இறாலுக்கு ஆசைப்பட்டு எம்.எல்.ஏ வை தப்பிக்க வைத்த குண்டர்கள்! - கூவத்தூர் ரிசார்ட் உள்ளிருந்து விகடன் நிருபர்! ஓ.பி.எஸ். கூடாரத்துக்குத் தப்பிவந்த எம்.எல்.ஏ-க்களில் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வருகை, தமிழக அரசியல் களத்தை வேறு வடிவத்துக்கு மாற்றியுள்ளது. ‘மாறுவேடத்தில் தப்பி வந்தேன்’ என்றும், ‘என்னைக் கடத்தினார்கள்’ என்றும் புகார்கொடுத்து பரபரப்பைக் கிளப்பிவருகிறார். கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ தப்பிவந்தது எப்படி? அந்தத் திக்... திக் நிமிடங்கள்.... ‘‘13-ம் தேதி இரவு 11 மணிக்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது விடாமல் எனது செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களின் வேலை பளு காரணமாகத் தெரிய…

  23. தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிபோனால், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். பன்னீர்செல்வம், மார்ச் 1ல், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அ.தி.மு.க.,வினர், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, இரண்டாக பிரிந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க, பன்னீர்செல்வம் முடிவு செய்தார். ஆனால், சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க் களுக்கு ஆசை வார்த்தை கூறி, தங்கள் விசுவாசியான இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, ஆட்சியை தங்கள் வசமாக்கிவிட்டனர்.…

  24. டெல்லி: கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தமானது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதாக ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்தார். கச்சத்தீவு பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் இன்று மைத்ரேயன் பேசினார். அப்போது அவர், 1974 ஆம் ஆண்டு ஜூன் 26ல் கச்சத்தீவு இலங்கையிடம் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி- இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் மைத்ரேயன் கூறினார். இந்திரா காந்தி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்று கூறிய மைத்ரேயன், கச்சத்தீவை இலங்கையிடம் அளித்தது தொடர்பாக அரசியல் சட்ட திருத்தமும் செய்யப்படவில்லை என்றார். எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க ம…

  25. "இரட்டை இலை" சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயற்சி? நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை, அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் தலைமைக்கு சாதகமாக பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நகர காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. படத்தின் காப்புரிமைBHASKER SOLANKI தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சுகேஷின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் (தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம்) இரண்டு முறையும் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முறையும் நிராகரித்துள்ளன. இந்த வழக்கை டெல்லி த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.