Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டு நினைவு: சேலம் மாணவர்கள் அனுசரிப்பு சேலம்: இலங்கை, முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலில் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள். சேலம் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இலங்கை, முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், சேலம் கலைக்கல்லூரியிலிருந்து, போஸ் மைதானம் வரை ஊர்வலமாக வருவதற்காக சேலம் மாநகர காவல்துறையில் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால், திடீரென்று நேற்று காவல்துறை அனுமதியை ரத்து …

  2. நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவு தின கருத்தரங்கு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கடலூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதிய கடலூர் புதுநகர் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பேரணிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் கடலூர் நகரின் முக்கிய இடங்களில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் மறைந்த பிரபாகரன் மற்றும் சீமான் ஆகியோர் படத்தை அச்சிட்டு 20 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். இதை அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்த…

  3. 16th May 2013 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடந்தது. சென்னை தங்கசாலை அருகில் நடந்த கூட்டத்துக்கு தி.மு.க. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:- சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற இந்த எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கிலே குழுமி உள்ள உங்களை காண்பதிலும், நீங்கள் அளிக்கின்ற உற்சாகமான ஆதரவை காண்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெறுகின்றேன். சேது சமுத்திர திட்டம் வருவதால் யாருக்கு என்ன பயன், திட்டத்தின் பலன் என்ன? பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும். இப்படி நடந்தால…

  4. 15th May 2013 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி. இங்கு மீனாட்சி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுற்று பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பென்சில் வெடிக்கு முனை மருந்து தடவி கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று பட்டாசில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ அருகில் இருந்த மேலும் 2 அறைகளுக்கும் பரவியது. அங்கு குவிக்கப்பட்டு இருந்த பட்டாசுகளும் வெடித்தன. பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் 3 அறைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிகிறது. …

  5. 13th May 2013 திருவாரூர் கொரடாச்சேரி பகுதியில் உள்ள பிஎம்எச் காலனியைச் சேர்ந்தவர்களான மதன் (23). ராஜா ஸ்ரீதர் (19) ஆகிய சகோதரர்கள் இருவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியை சேர்ந்த ஹாஜி முகம்மது தலைமையிலான கும்பல் கொடூரமாக வெட்டியது. இருசக்கர வாகன பழுது பார்ப்பில் ஏற்பட்ட சண்டை காரணமாக விரோதம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் திருவாரூர் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நள்ளிரவு ஒரு மணி அளவில் நடந்துள்ளது. இந்த இச்சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் இறந்த ஒருவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவார். h…

  6. கோவை: வணிக வளாகம் கட்ட ரூ20 லட்சம் செலவில் 35 அடி தூரம் செயற்கையாக நகர்த்தப்பட்ட வீடு. கோவை: கோவையில் பெரிய பங்களா வீட்டை பாதியாக பிரித்து, அதில் ஒரு பாதியை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மூன்று தலைமுறை பழமையான மாடி வீடொன்று அதன் உள்ளே உள்ள அனைத்து பொருட்களுடனும் 35 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. வீட்டை நகர்த்தும் இம்முயற்சியை ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமானக் கம்பெனி ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது குறித்து அவ்வீட்டின் உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியதாவது, ‘ கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந…

  7. முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த மலிவு விலை உணவக திட்டத்தில், கூடுதலாக பொங்கல் சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும், மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட சபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது, வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் வயிறார உணவு உண்ணும் வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை நான் திறந்து வைத்துள்ளேன் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.…

  8. இந்தியப் பெருங்கடலின் மீதான மூலோபாய கவனிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் தனது அதிசக்தி வாய்ந்த சுகோய் போர் விமானங்களை நிறுத்தும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 27ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில், புதிய விமானத்தளத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி திறந்து வைக்கவுள்ளார். சுகோய் போர் விமான அணி ஒன்றின் (ஸ்குவாட்ரன்) உறைவிடமாக அமையவுள்ள இந்தத் தளத்தில், விமானத் தரிப்பிடங்கள், எரிபொருள் குதங்கள், உள்ளிட்ட எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் அடுத்த சில ஆண்டுகளில் செய்யப்படவுள்ளன. இந்த அணியில் சுமார் 16 தொடக்கம் 18 வரையான சுகோய் போர் விமானங்கள் இடம்பெறவுள்ளன. தஞ்சாவூர் ஓடுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து வழக்கமான போர் விமானங்கள் ம…

  9. 2000வது ஆண்டில் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரியில் வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் பேருந்துக்கு தீவைத்து 3 மாணவிகளை உயிருடன் எரித்துக் கொன்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு ஆகும். எதிர்க்கட்சிகள், அரசு ஊழியர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் இத்தகைய அடக்கு முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, பா.ம.க. மீது பழிபோட்டு, அது ஒரு வன்முறைக்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 14.05.2013 செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைய…

  10. இந்தியாவில் எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு, அரசுகளுக்கு அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பொது அமைதியைக் காக்கவேண்டி பாமகவைத் தடை செய்யவும் தனது அரசு தயங்காது என எச்சரித்திருந்தார், ராமதாஸின் கைதிற்குப் பின்னர் பாமக பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராமதாஸ், பேருந்துகள் மீதான கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்தல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் …

  11. சென்னை: "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், அதனை உலகெங்கும் பரப்புவதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், …

    • 8 replies
    • 862 views
  12. மே -17, 2009 : இன அழிப்புப் போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத் தமிழருக்கும் எமது நினைவஞ்சலி! இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவாக எதையும் ஏற்க மறுப்போம்! மே 17, 2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் சென்னையில் இடம்: வள்ளுவர்கோட்டம், நேரம் : காலை 11 மணி மாணவர்களே அணிதிரண்டு வாரீர்! அன்பார்ந்த மாணவர்களே – உழைக்கும் மக்களே! 2009 மே 17 -ல் ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிகட்டப்போரில் மே 17-ம் தேதி விடுதலைப்புலிகளின் அமைப்பு ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டது. இதோடு சேர்த்து மே-18,19 தேதிகளில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும்…

  13. த‌மிழ்நாடு என்ற‌தும் அத‌ன் வ‌ர‌லாறு, ப‌ழ‌மையான‌ கோயில்க‌ள், வான‌ளாவிய‌ கோபுர‌ங்க‌ள், ம‌சூதிக‌ள், தேவால‌ய‌ங்க‌ள் அர‌ண்ம‌னைக‌ள், கோட்டைக‌ள் என‌ அத‌ன் ப‌ழ‌மையும் பெருமையும் நினைவுக்கு வ‌ந்தாலும், அவ‌ற்றை எல்லாம் விட்டு,த‌மிழ்நாட்டைக் கேலி செய்ய‌ விரும்புகிற‌வ‌ர்க‌ள், அதிலும் குறிப்பாக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌ம‌து கையில் எடுக்கும் ஆயுத‌ம் இந்திய‌ நக‌ர‌ங்க‌ள் எல்லாவ‌ற்றிலும் காணப்ப‌டும் அழுக்கு, குப்பை, க‌ண்ட‌ இட‌த்திலும் காண‌ப்ப‌டும் ம‌ல‌ம், சிறுநீர் க‌ழிவுக‌ளைத் தான். தமிழ்நாட்டின் ந‌வீன‌ க‌ட்டிட‌ங்க‌ள் கூட‌ துப்புர‌வாக‌ இருப்ப‌தில்லை, க‌ட்டப்ப‌ட்டு முத‌ல் சில‌ மாத‌ங்க‌ள் துப்புர‌வாக‌ அழ‌காக‌ இருக்கும் அத‌ன் பின்னால் ப‌ழைய‌ குருடி கத‌வைத் திறவ‌டி தான். அத‌ற்கென்று துப்ப…

  14. சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்நாட்டுமுனைய மேற்கூரை இடிந்து விழுந்தது.சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்தமாதம் திறக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தின் மேற்கூரை இன்று அதிகாலை 4 மணிக்கு இடிந்து விழுந்தது. அந்த நேரம் எந்த விமானமும் தரையிறங்காததால், புறப்படாததால் பயணிகள் தப்பினர். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து ஹெச்1 மற்றும் ஹெச்2 நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. மேற்கூரை இடிந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=82591&am…

  15. கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக மே 15ல் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் சென்று மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டி வருகிறார். இதற்கிடையே இடிந்தகரையில் தாமஸ் மண்டபம் அருகே இன்று திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்தகரை மற்றும் சுற் றுப்புற கிராம மக்கள் போராடி வருகின்றனர். கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் கூடங்குளம் அணுமின்நிலையம் இயங்குவதற்கு தடை யில்லை என்று அறிவித் தது. இதையடுத்து இன் னும் ஓரிரு வாரங்களில் கூடங்குளத்தில் அணுமின்உற்பத்தி நடைபெறும் …

    • 0 replies
    • 541 views
  16. திருச்சி மத்திய சிறை வாசலில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாமல்லபுரத்தில் முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை. பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர். டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும், மந்திரிகள் வீட்டு முன்பும் அணுமதி இ…

    • 0 replies
    • 1.4k views
  17. மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் இன்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான கோர்ட்டு உத்தரவு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மகன் அ…

    • 0 replies
    • 546 views
  18. கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் சாதனை கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200-க்கு 1121 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கும்பகோணம் சிறியமலர் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராமகோபாலன் பள்ளி அளவில் முதலிடமும், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர் தமிழில் 177 மதிப்பெண்கள் உட்பட மொத்தம் 1121 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ராமகோபாலன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டு மக்களுக்கு ஊழல் அற்ற நிர்வாகம் மூலம் சிறப்பான பணி செய்வதே தமது லட்சியம் என்கிறார் இராமகோபாலன். ht…

    • 0 replies
    • 363 views
  19. கச்சதீவு அருகே, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதில் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர். இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ``இலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக பேசி தாக்குகிறது. கச்சதீவ…

  20. தர்மபுரி: ஓடும் பேருந்தில் தாயின் மடியில் உறங்கிய குழந்தை படியில் உருண்டு கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அதிசய சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சிலர் குழுவாக கோடை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்காக பேருந்து ஒன்றில் கிளம்பிய அவர்கள் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை சுற்றிப் பார்த்திருக்கிறார்கள். அதன்பின் அன்று மாலையே மேட்டூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கே.ஆர்.பி அணையை பார்க்கும் திட்டத்தோடு கிளம்பியிருக்கிறார்கள். அந்த சுற்றுலா குழுவில் உஷா என்ற பெண்ணும் அவரது 10 மாத கைக் குழந்தையான ஸ்ரீவாணியும் இருந்திருக்கிறார்கள். உஷா தன் குழந்தையுடன் பேருந்தின் படியோரத்தில் உள்ள சீட்டில் அ…

  21. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், ‘டெசோ’ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர். பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆ…

  22. 3 வழக்குகளிலும் ஜாமீன்: புழல் சிறையில் இருந்து அன்புமணி ராமதாஸ் விடுதலை பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அன்புமணி, திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி திண்டிவனம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த திண்டிவனம் கோர்ட், அன்புமணிக்கு இன்று ஜாமீன் வழங்கியது. சென்னை தி.நகரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதேபோல…

    • 0 replies
    • 447 views
  23. நெல்லை: பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற …

  24. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 27ம் தேதி வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in http://dge3.tn.nic.in இதில் http://dge3.tn.nic.in என்ற இணைய தளம் GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD<space><registration>,<DOB in DD/MM/YYYY> என்ற வடிவில் எஸ்எம்…

    • 0 replies
    • 415 views
  25. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு வெளியிட பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி முடிந்தது. விடைத்தாள் திருத்துவது முடிவடைந்ததும் மதிப்பெண் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி சென்னை கிண்டியில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்) மேற்கொள்ளப்பட்டது. மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடி…

    • 3 replies
    • 644 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.