தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
அரக்கோணம் அருகே சித்தேரியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி என்ற பகுதியில் இன்று காலை முஸராப்பூர் - யஷ்வந்த்பூர் ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டன. அதிகாலை 5.50 மணியளவில் விபத்து நடந்ததால், ரயிலில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். நிலைமையின் விபரீதத்தை உணரும்முன் ஏராளமானோர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், காயமடைந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி பீகாரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ரயில் தடம்புரண்டதன் காரணமா…
-
- 0 replies
- 492 views
-
-
திமுகவில் நடிகை குஷ்புவுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கும் வராமல், சினிமாக்காரர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தவறாமல் போய் வரும் அவருக்கு திமுகவில் நெருக்கடி அதிகரித்து வருவதால் அங்கிருந்து அவர் வெளியேறி காங்கிரஸில் புகலிடம் நாடலாம் என்று செய்திகள் கூறுகின்றன. ஒரு நேரத்தில் பெரும் ஆரவாரத்துடன், குதூகலத்துடன் திமுகவில் வரவேற்கப்பட்டவர் குஷ்பு. அவரை திமுகவுக்குக் கூட்டி வந்ததில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கு பெரும் மகிழ்ச்சி. சூட்டோடு சூடாக சட்டசபைத் தேர்தலிலும் குஷ்புவை பிரசாரக் களத்தில் இறக்கி விட்டனர். அவருக்கு கட்சியில் நல்ல முக்கியத்துவமும் தரப்பட்டது. ஆனால் இப்போது குஷ்புவுக்கு நேரம் சரியி…
-
- 1 reply
- 928 views
-
-
நெல்லை: "ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எனது போராட்டம் தொடரும்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூரில் நேற்றிரவு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கபுலி பாண்டியன் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது உலக கோடீஸ்வரன் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் அனில் அகர்வால் பல தலைவர்களை அசைத்து பார்த்துவிட்டாலும், அசைக்கமுடியாத ஆள் நான் ஒருவன்தான். வைகோவிடம் நெருப்பு கூட அண்டமுடியாது. ஆலையை மூடும்வரை என் போராட்டம் தொடரும். ஆலையை மூட ஐகோர்ட தீர்ப்பு வழங்கியது, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் ஆலை தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டாலும், மார்ச் 30ஆம் தேதி பிறப்…
-
- 0 replies
- 432 views
-
-
முல்லைப் பெரியாறு அணை வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136ல் இருந்து, 142 அடிகளாக உயர்த்த வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் பல மாதங்களாக விசாரணை நடந்து வந்தது. இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் உள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. இந்த ஆய்வறிக்கை மீது தமிழகம், கேரளா அரசு வ…
-
- 0 replies
- 361 views
-
-
டெல்லி வந்த மம்தா பானர்ஜிக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அவருடன் வந்த மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவை தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாணவர் சங்க தேர்தலை நடத்த வலியுறுத்தி இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட அச்சங்கத்தின் தலைவர் குப்தா போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் தாக்குதலில் குப்தா உயிரிழக்கவில்லை என்றும், மின்கம்பத்தில் மோதியதால் அவர் உயிரிழந்தார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் …
-
- 1 reply
- 489 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் - ப.சிதம்பரம் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி, சென்னையில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்திற்கு நேற்று (07) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும் போதே ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியபோது, காங்கிரஸ் கட்சி தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியில் இலங்கை தமி…
-
- 3 replies
- 635 views
-
-
சென்னை உயர்நீதிமன்றில், தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். டில்லியில், முதல்வர்கள் மற்றும் அனைத்து மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில், நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநாட்டை, பிரதமர் மன்மோகன்சிங் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில், தமிழக உள்ளாட்சிதுறை மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.ப.முனுசாமி பங்கேற்று, முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். அந்த உரையில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருப்பதாவது: நம் நாட்டின், சிறந்த தலைவர்கள் உருவாக்கிய சட்டநெறி முறைகளின்படி, நமது நாடு, ஜனநாயகப் பாதையில் இயங்குகிறத…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கை அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,இந்திய பெருங்கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையுடன் அங்கு தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாவதை நான் மிகுந்த வேதனையுடன் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.இலங்கை அரசால் இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலை…
-
- 0 replies
- 423 views
-
-
கவிஞர் இன்குலாப் அவர்களுடன் இச்சந்திப்பை ஒரு மதியப்பொழுதில் அவரது ஊரப்பாக்கம் வீட்டில் நிகழ்த்தினோம். எளிமையான உருவம். மிகவும் பணிவோடு வரவேற்றார். அவருடைய கம்பீரத்தை மேடைகளில் பார்த்திருக்கிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மிகத்தீவிரமாகப் பங்கெடுத்த மாணவர் தலைவர்களில் அவரும் ஒருவர். ஈழப்பிரச்னை சம்பந்தமாக இப்போது தமிழ்நாட்டில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் போராடிக்கொண்டிருக்கும் புதுக்கல்லூரி மாணவர்களைச் சென்று பார்த்து வந்திருக்கிறார். போராடும் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாக மனம்திறந்து கூறுகிறார். ஈழத்தமிழர் பிரச்னை குறித்து அக்கறையோடு பேசுகிறார். ஈழத்தமிழ்மக்களின் வேதனை அவருக்கு சித்திரவதையைக் கொடுக்கிறது என்பதை…
-
- 0 replies
- 615 views
-
-
சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணையை கட்டி நீரை, 160 ஏரிகளுக்கு திருப்புவதாக தி.மு.க குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.வி.ராமலிங்கம், காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தி.மு.க மீது குற்றச்சாட்டினர். அமைச்சரின் குற்றச்சாட்டை திரும்ப பெற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், அவையின் கண்ணியத்தை கெடுக்கும் வகையி்ல் நடந்து கொண்டதாக கூ…
-
- 1 reply
- 432 views
-
-
சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "மனதிலும், உடலிலும் உறுதியுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்குவதிலும், சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலைநிறுத்துவதிலும் இன்றியமையாத் தன்மையை வகிப்பது விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இளைய சமுதாயத்திற்குத் தேவையான நற்பண்புகளை புகட்டி அவர்களை பொறுப்புள்ள மனிதர்களாக மலரச் செய்யும் விளையாட்டுத் துறைக்கு எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு உலக…
-
- 1 reply
- 564 views
-
-
இனியும் தமிழகத்தில் அகதி முகாம்கள் தேவையில்லை! - தினமணி [Monday, 2013-04-08 08:23:13] தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியா சென்ற சில மாதங்களிலேயே தங்களுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் வாழ்வு தேடித் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், இங்கே படித்துப் பட்டம் பெற்றாலும் கூட, இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலையும் கிடைப்பதில்லை, தனியார் அலுவலகங்களிலும் வேலை கிடைப்பதில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் வாழ்க்கைச…
-
- 1 reply
- 795 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் நடாத்தும் எழுச்சிகரமான போராட்டங்களை குழப்பும் நடவடிக்கையை சிறீலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளதாக தற்போது கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், தமிழக போராட்டங்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்த அகில இந்திய பௌத்த பிக்குமார் சபை தீர்மானித்துள்ளது. மஹாராஷ்ரா மாநிலம் நாக்பூர் நகரில் எதிர்வரும் 13 ஆம் திகதி இந்த பேரணியும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் பௌத்தர்கள் அதிகம் வாழும் பிரதான நகரில் உள்ள புனித புத்த விகாரையில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை இந்த பேரணி நடத்தப்பட உள்ளது. அதேவேளை தமிழகத்தில் சிறீலங்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டித்து, அதற்கு எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் வறுத்தெடுத்து விரட்டியடித்திருக்கிறார். கேரள கடற்பரப்பில் மீனவர்களை படுகொலை செய்த இத்தாலி மாலுமிகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை அல்டமாஸ் கபீர் பிறப்பித்துக் கொண்டிருந்த போது வழக்கறிஞர்கள் அமரும் இருக்கையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி எழுந்து நான் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கிறேன் என்றார். அவ்வளவுதான்... உஷ்ணமானார் அல்டமாஸ் கபீர்..." யார் நீங்கள்" என்று சுவாமியைப் பார்த்துக் கேட்டார் அவர். அதற்கு "நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்" என்றார். அதைப் பற்றி…
-
- 1 reply
- 514 views
-
-
அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியல்!!! தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார். முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இத…
-
- 3 replies
- 1k views
-
-
ஜெட் விமான கொள்முதலில் ராஜீவ் காந்தி இடைத்தரகராக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது என்றும், ராஜீவ் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை அலட்சிஒயப்படுத்த முடியாது என்று பாஜக தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனத்தின் தரகராகவே இருந்து வந்துள்ளார். இநதியாவிற்கு ஸ்வீடனுடன் உள்ள தொடர்பு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெளிநாட்டுக் கொள்முதல் பலவற்றில் காந்தி குடும்பத்துக்கு தொடர்பு உண்டு என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13868:rajiv-gandhi&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 675 views
-
-
ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தக்கூடாது என்றும், மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி தலைமையில் குழு ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்து இருந்தார். பச்சோரி குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், பொருளாதார ரீதியிலும் கடல் வாழ் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும் சேது சமுத்திர திட்டம் பயனுள்…
-
- 0 replies
- 473 views
-
-
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். அவர்கள் கலெக்டர் க. மகரபூஷணத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது… சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் சமூகவியல், கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர், 8ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து வருகிறார். உயரம் குறைந்த மாணவிகளை பின் இருக்கையிலும், உயரம் அதிகம் கொண்ட மாணவிகளை முன் இருக்கையில் அமர வைப்பதும், மாணவியின் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்கிறார். மிக கொச்சையாக நடந்துகொள்கிறார். சனிக்கிழமை நாள்களில் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்ததோடு, ஆலை செயல்படவும் அனுமதி அளித்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எந்த ஒரு பொருளும் வாங்கமுடியாத சூழ்நிலையே ஏற்படுகிறது. ஷேர் ஆட்டோ, மினி லாரி போன்ற எந்தவொரு வாகனங்களும் ஓடவில்லை. "ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் பொருளாதாரம் முன்னேறியபோதிலும், கடந்த 23ஆம் தேதி வெளியான வாயகசிவு காரணமாக க…
-
- 0 replies
- 368 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொண்றமை தொடர்பில் காணொளி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கூடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூடலூர் பழைய நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழக்கத்தில் தீவிரவாதிகள் எதிரியிடம் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட் குப்பிகளை உட்கொள்வது அல்லது ஒருவரையொருவர் சுட்டுக்கொல்;வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். எனினும், சிறுவனை கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அழகிரி குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையும் தமிழ்ம மக்களின் க…
-
- 2 replies
- 1.2k views
-
-
டில்லி மேலிடத்தின் பாரபட்ச நடவடிக்கை, இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் த.மா.கா.,:அப்பிரச்னைகளை மையப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை, இரண்டாக உடைக்க, மத்திய அமைச்சர் வாசனும், அவருடைய ஆதரவாளர்களும் தயாராகியுள்ளனர் என்றும், லோக்சபா தேர்தலுக்கு, மூன்று மாதம் முன், மீண்டும், த.மா.கா., உதயமாகும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆறு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் துவக்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படுதோல்வி: தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிலைப்படு…
-
- 4 replies
- 993 views
-
-
சென்னை: "காங்கிரசில் சேரப்போவதாக எனக்கு வேண்டாதவர்கள் வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்" என்று கூறிய நடிகை குஷ்பு, தி.மு.க.வில்தான் இருக்கிறேன், தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன் என்றார். தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினைத்தான் நான் முன்மொழிவேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பேட்டி ஒன்றில் கூறினார். இதனை நடிகை குஷ்பு விமர்சித்திருந்தார். இதையடுத்து, திருச்சியில் நடிகை குஷ்பு மீது மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியதோடு., சென்னையில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. இதனிடையே, இந்த தாக்குதலை கண்டித்த தி.மு.க. தலைமைக் கழகம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை நடவ…
-
- 0 replies
- 524 views
-
-
மதுரை: தி.மு.க. பொதுக்குழு கூட்டம் புறக்கணிப்பு, ஆதரவாளர்களுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. நோட்டீஸ் என கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய மு.க.அழகிரியை இன்று கனிமொழி திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை படபடக்க வைத்துள்ளது. சமீபத்தில் மதுரையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் கலந்து கொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் பதினைந்து பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் விட்டது தி.மு.க தலைமை. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அழகிரி ஆதரவாளர்கள், நாங்கள் நடத்திய அஞ்சா நெஞ்சன் பிறந்த நாள் விழாவில், கலந்து கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர் கேள்வி கே…
-
- 0 replies
- 581 views
-
-
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் மீனவ குடும்பத்தினர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட இவர்கள் இலங்கை போலீஸார் மூலம் மல்லாஹம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் 26 பேரையும் வரும் 11ஆம் தேதி வரை சிறைவைக்க மல்லாஹம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து 634 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி பெற்றிருந்தன. ஆனாலும் இலங்கை கடற்படையினர் மீதுள்ள அச்சத்தால் 300…
-
- 0 replies
- 374 views
-
-
டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம், சட்டம், நீதிக்கான அமைச்சர் கே.பி.முனுசாமி இந்த மாநாட்டில் பங் கேற்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையை இந்த மாநாட்டில் வாசித்தார். அந்த அறிக்கையில், பிராந்திய மொழி வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் நீதித்துறை நடவடிக்கைகளில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.. என்று அவர் கூறியுள்ளார்.htt…
-
- 0 replies
- 422 views
-