தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
முதல் மாத சம்பளத்தை வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு நிவாரணமாக அறிவித்தார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி பாட்னா: பீகார் மாநில துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். …
-
- 0 replies
- 220 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந…
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
புதுச்சேரிக்கு ரூ.10,606 கோடி பட்ஜெட்: நீங்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளார். புதுச…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது முறையாக வருமானவரித்துறை புதன்கிழமை சோதனை நடத்தியது. படப்பையில் உள்ள மிடாஸ் மற்றும் அதன் அருகில் உள்ள ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. முன்னதாக, சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 2…
-
- 0 replies
- 219 views
-
-
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழப்பு 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@SHOBHABJP (இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (13/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) பந்திப்பூர் காட்டுப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்ததாக, 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த யானையின் உடல் கபினி அணை அருகே குழித்தோண்டி புதைக்கப்பட்டது. அச்செய்தியில், "கபினி அணையின் பின்புறம் உள்ள நாகரஒலே, பந்திப்பூர் வனப்பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அந்த யானை 'போகேஸ்வர…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்: உலக தண்ணீர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை Published By: RAJEEBAN 22 MAR, 2023 | 10:46 AM ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான் நீரின்றி அமையாத…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றத்தால் சென்னையில் பேய் மழை: - இயற்கை வழித்தடங்களை மறைத்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். விஞ்ஞானிகள் தகவல் [ சனிக்கிழமை, 05 டிசெம்பர் 2015, 07:08.39 AM GMT ] வரலாறு காணாத அளவுக்கு பெய்த பேய் மழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்ததற்கு விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய டைரக்டர் சுனிதா நாராயணன் இதுபற்றி கூறியதாவது:– பருவ நிலை மாற்றத்தால் சில இடங்களில் எதிர்பாராத அளவுக்கு அதிக மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரிய அளவில் மழை பெய்ததற்கு இதுதான் காரணம். இந்திய துணை கண்டம் முழுவதுமே இது போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்திய நகரங்களில் இயற்கையான நீரமைப்ப…
-
- 0 replies
- 218 views
-
-
“விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு. தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” - இது ’திமுக 75 - அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியது. இணையத்தில் அவரது பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘சிலர் இது திமுக அதிருப்தி பேச்சு என்று கத…
-
- 0 replies
- 218 views
-
-
எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார். சி.விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். எத்தனை இடங்களில் சோதனை? முந்தைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில், நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், பதவியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு ஓட்டம் பிடித்து வருகின்ற னர். தங்களது கூடாரம் காலியாவதால், சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியலை, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி. ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்து போராடினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும், கட்சி பதவியில் நியமிக்கப்பட்டது கிடையாது. ஆனால், ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., தற்காலிக பொதுச்ச…
-
- 0 replies
- 217 views
-
-
ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் சிறைபிடிப்பு நடந்தது என்ன ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யச் சென்ற தமிழ்நாடு போலீசார் 12 பேரை லஞ்சம் பெற முயன்றதாக பொய்ப் புகாரில் சிறைபிடித்த ராஜஸ்தான் போலீசார், தமிழ்நாடு காவல்துறை வழங்கிய ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு அவர்களை விடுவித்தனர். சென்னை: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா மற்றும் பன்னாலால் தம்பதி நேற்று அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில் 12 தமிழக போலீசார் தங்களை மிரட்டி கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றால் இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் நேற்று 25 லட்சம் ரூபாய் லஞ்சம் …
-
- 0 replies
- 217 views
-
-
இலங்கை மீனவர்கள் 7 பேர் இந்தியாவில் கைது.! இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, 5 ஆயிரம் கிலோ கிராம் மீனுடன் 7 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18734
-
- 0 replies
- 217 views
-
-
24 FEB, 2025 | 10:46 AM சென்னை- ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 32 மீனவர்களை கைது செய்தனர். இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினர…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
போயஸ் கார்டனையும் ஜெயலலிதாவின் சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும்... காரியத்தில் கண்ணாக இருக்கும் சசி சிறைக்கு செல்ல உள்ள சசிகலா போயஸ் கார்டனையும் அவரது சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். சென்னை: தான் சிறைக்கு சென்றாலும் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்கமால் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டனர். …
-
- 0 replies
- 217 views
-
-
படக்குறிப்பு, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அந்த வாகனங்களை நான்கு சக்கர வாகனங்கள் என அரசு கருதுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசிக்காக 25 செப்டெம்பர் 2023 சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனம் இருப்பதாகக் குறிப்பிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்களிற்கு நீதி கோரி திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன் 09 JUL, 2025 | 10:52 AM சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது. 07.09.1996 அன்று சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் 11 சிங்கள ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொட…
-
- 2 replies
- 216 views
- 1 follower
-
-
தமிழகத்தில்... 14 லட்சம் பேருக்கு, நகைக்கடன் தள்ளுபடி! தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். சென்னை அண்ணாநகர், திருமங்கலம், தியாகராயநகர் உள்ளிட்ட 10 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் …
-
- 0 replies
- 216 views
-
-
நிச்சயமாக தேர்தலில் போட்டி: தீபா அறிவிப்பு சென்னை: ''ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மர்மம் உள்ளது,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்தார். அவர் கூறியதாவது: மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவருக்கு அளிக்கப்படும், சிகிச்சை குறித்த விபரங்களை கேட்டு வருகிறேன். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மர்மம் உள்ளது என்பதை, நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.ஜெ., மறைந்து, இரண்டு மாதங்களுக்கு பின், நிருபர்களை சந்தித்து, மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்; அது ஏற்புடையதாக இல்லை. குடும்பத்தாரிடம் சிகிச்சை குறித்து தெரிவித்ததாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர்; எந்…
-
- 0 replies
- 216 views
-
-
கேரள ஆளுநர் கோரிக்கையை மறுக்கும் முதல்வர் - அமைச்சரை நீக்கக் கோரும் விவகாரத்தின் முழு பின்னணி முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI கேரளாவில் மாநில நிதியமைச்சர் பேசிய பேச்சு ஒன்றுக்காக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கேரளாவின் நிதியமைச்சர் கே.என். பாலகோபால் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து பிராந்தியவாதத்தைத் தூண்டுவதாகவும் இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாகவும் கேரள…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
'கொடிபிடித்த காம்ரேட்டுக்கள்.. கொதித்த சாம்சங் நிறுவனம்!' காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கூடவே 'தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். இதற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 9-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கினார்…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அமெரிக்காவை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டது. எந்த பொருளாதார நலனுக்காக தமிழீழ விடுதலையை அமெரிக்கா அழிக்கத் துடிக்கிறதோ, அந்த பொருளாதாரத்தை முடக்குவோம். அமெரிக்காவின் நிறுவனங்களான PEPSI, COCA COLA. KFC போன்றவற்றின் பொருட்களைப் புறக்கணிபோம். தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் இனப்படுகொலை. இனப்படுகொலைக்கான சர்வத…
-
- 1 reply
- 216 views
-
-
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படுமா– முதல்வர் ஸ்டாலினின் கூறுவது என்ன ? By Vishnu 05 Sep, 2022 | 09:34 PM குமார் சுகுணா தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் நீடித்து வரும் நிலையில், மரண விசாரணை அறிக்கையைச் சட்டசபையில் கொண்டு வருவோம். என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் மரணம் மீண்டும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. எதிரி என்றாலும் எதிரே நிற்பது சிங்கமல்லவா என்று தனது அரசியல் எதிரிகளாலேயே போற்றப்பட்டவர் தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா. இவர் அரசியல் எதிரிகளுக…
-
- 0 replies
- 216 views
-
-
தி.மு.கவினர் கையில் இருக்கும் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள்: அதிர்ச்சி தகவல்[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 08:38.19 AM GMT +05:30 ] தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன என்பது பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில்தான் தமிழகத்தில் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடம் இருந்துதான் டாஸ்மாக்கிற்கு அதிகமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது. பீர் வகைகள்: சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர். மோகன் புருவரீஸ் - மருத்துவக் கல்லுரி உரிமையாளர். எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன். கல்ஸ…
-
- 1 reply
- 215 views
-
-
துறைமுக சட்டமூலத்திற்கு... எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை! மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய துறைமுக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதன்படி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய 9 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் “சிறு துறைமுகங்களை ஒழுங்குப்படுத்துவதாக கூறி மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக சட்டமூலம் மாநில அரசின் பல அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது. இதனால் மாநில அரசின் கீழ் இருக்கும் சிறு துறைமுகங்களின் மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படும் என்பதால் நாளை மறுநாள் மத்திய …
-
- 0 replies
- 215 views
-
-
விருதுநகர்: 'ஜீரோ பிரசவ மரணம்' என்ற சாதனை- தமிழ்நாட்டில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விருதுநகர் சுகாதார மாவட்டம் ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் விருதுநகர் சுகாதார மாவட்டம் ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது எப்படி? இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் விரு…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-