தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
-
சென்னை: கருணாநிதியின் தத்துப்பிள்ளை, கனிமொழியின் தம்பி மு.க. மணி எங்கே என்று அதிமுக செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய அதிமுக செயற்குழு உறுப்பினருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பதோ கும்பல். ஆனால் அதிமுகவில் இருப்பதோ கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும். கூட்டமோ நிலையாக நிற்கும். நானும் உங்களுடன் நிலையாக நிற்பேன். தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான் திமுக எளிதில் வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் திமுக வெ…
-
- 0 replies
- 574 views
-
-
தினகரனுக்கு எதிராக பழனிசாமி சதி? தி.மு.க., பரபரப்பு புகார் சென்னை:'முதல்வர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் போன்றோர், தினகரனிடம் தற்காலிகமாக அடகு வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., தலைமையை நிரந்தரமாக மீட்பது என்ற ரகசிய உடன்பாட்டுக்கு, ஏற்கனவே வந்து விட்டனர்' என, தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக, ஸ்டாலின் சார்பில், மன்னார்குடி எம்.எல்.ஏ., - டி.ஆர்.பி.ராஜா ராஜா வெளியிட்ட அறிக்கை: 28 கோடி ரூபாய்: குடியுரிமையில் பொய் சொல்லி, 'பெரா' என்ற, அன்னிய செலாவணி மோசட…
-
- 0 replies
- 442 views
-
-
மழையால் தத்தளிக்கும் தமிழ்நாடு: மூழ்கிய பயிர்கள் முதல் கரை புரண்டோடும் வைகை வரை 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வைகை கனமழையால் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பரவலாக தத்தளித்து வருகிறது. மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து தரைப் பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து 569 …
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக ஜான்மைக்கோல் குன்ஹாவை கர்நாடகா அரசு நியமித்தது. இந்நிலையில், நீதிபதி நியமனத்தில் உச்ச நீதிமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு சார்பில் இன்…
-
- 0 replies
- 371 views
-
-
திருச்செந்தூரில் பொன்னாரைச் சந்தித்து கருணாஸ் வைத்த கோரிக்கை திருச்செந்தூரில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை திருவாடானைத் தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ், தனியாகச் சந்தித்து 15 நிமிடங்கள் வரை ரகசியமாகப் பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், நிதித்துறை இணை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு வந்தார். கோயில் வளாகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில், கட்சியினரின் வரவேற்புக்குப் பிறகு, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு, நாகர்கோயிலுக்குப் புறப்படத் தயாராகும் நேரத்தில், திருச்செந்தூரில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்துகொண்ட பிறகு, ஓய்வ…
-
- 0 replies
- 352 views
-
-
`இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு!' - கமல் புது ட்வீட்! நடிகர் கமல்ஹாசன் கடந்த பல மாதங்களாக பல்வேறு விஷயங்கள் பற்றி ட்விட்டர் மூலம் கருத்து கூறி வருகிறார். இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கமல்ஹாசன், `இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கலவலை அளிக்கின்றன' என்று ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் கமல் மேலும், `சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் முடிச்…
-
- 0 replies
- 597 views
-
-
"கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடந்த போட்டியில் நான் பலியாகிவிட்டேன்" - ஆ.ராசா எனது அமைச்சகத்தில் மர்மமான விஷயங்கள் நடப்பதாகவும், அதிகாரிகள் என்னைத் தவறாக வழி நடத்துவதாகவும் அப்போதே காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா எச்சரித்தார் என முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2G Scam Unfolds என்ற புத்தகத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஆ. ராசா விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்திருந்தவரும் இவர் ஒருவரே. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நட்வர் சிங், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு மிட்டல் ஆகி…
-
- 0 replies
- 551 views
-
-
சிபிசிஎல் ஆலையை சுற்றி பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்? கள நிலவரம் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் ஜோசபினின்(45) வாழ்க்கை, கடந்த ஒரு மாதமாக முழுமையாக மாறி விட்டது. ஓடி, ஓடி குடும்பத்திற்கு வேலை செய்த ஜோசபின் தற்போது மூச்சு விடவே சிரமப்படுகிறார். தினமும் வானம் இருட்டினாலே அவருக்கு அச்சம் வந்து விடுகிறது. நள்ளிரவில் தனது 20 வயது மகளின் உதவியின்றி உறங்குவதுகூட அவருக்கு சிரமமாகிவிட்டது. திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்று காரணமாக, ஜோசபின் போன்ற மூச்ச…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், 130 நாள்களைக் கடந்துவிட்டது. விசாரணை, குறுக்குவிசாரணை எனத் தீவிரமாக இயங்கினாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை. `இறுதி நாள்களில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு கமிஷன் வந்துவிட்டது. சசிகலாவுக்கு எதிரான விஷயங்கள் இதில் ஏராளம் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ஆணைய வட்டாரத்தில். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. …
-
- 0 replies
- 546 views
-
-
சசிகலா குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்'சென அம்பலமாகி வருகின்றன. தினகரன் - திவாகரன் இடையே வெடித்த குடும்பத்தில் கடும் கசமுசா ஏற்பட்டுள்ளது.இதை, திவாகரன் மகன், ஜெயானந்த், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரின் 'பேஸ்புக்'பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்திற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு சென்றதும், மோதல் அதிகரித்தது. சசிகலா அறிவுரைப்படி, அவரது அக்கா மகன் தினகரன், புதிய கட்சியை துவக்கி உள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியில் தன் மகனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி தினகரன் தனித்து செயல்பட்டு வருகிறார். இது, த…
-
- 0 replies
- 586 views
-
-
2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது. இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம். முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அத…
-
- 0 replies
- 730 views
-
-
சென்னை வந்த பிரதமர் மோடியிடம் அம்மையார் கோரிக்கை பட்டியலை தமிழக மக்களின் சார்பாக அளித்துள்ளார்.. நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. டிஸ்கி: கச்சத்தீவு எங்களுடையதுதான், சொல்லிப்புட்டோம்..! அடுத்த நூறு வருசத்திலையாவது திரும்ப வாங்கிப்புடவேணும்..!! - டைம்ஸ் ஆஃப் இந்தியா.
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,A.R. VENKATACHALAPATHY/ FACEBOOK படக்குறிப்பு, "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்ற நூலுக்காக ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்று தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது நூலுக்காக, ஆய்வுப் பிரிவின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இலக்கிய நூல்களுக்கே வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்த முறை வரலாற்று நிகழ்வு ஒ…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சு! தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1419446
-
- 0 replies
- 232 views
-
-
மதுரை தனியார் ஹோட்டலில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசியதாவது , ஆண்டுதோறும் ஜூலை 13 ஆம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும் , இந்தாண்டு 63 வது பிறந்தநாள் மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்தார் . இதனை கவிஞர்களின் திருநாள் என வெற்றி தமிழர் பேரவை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கவிஞரை தேர்ந்தெடுத்து பரிசளித்து வருவதாகவும் . அதனை தொடர்ந்து இந்தாண்டு ஈழத்து கவிஞர்கள் ஜமீல் , நெளபல் ஆகிய இருவருக்கு விருதும் , தலா 50 ஆயிரம் வீதம் நன்கொடையும் வழங்கப்படவுள்ளதாக கூறினார் . அறக்கட்டளை உருவாக்கி ஏழை மாணவர்கள் தாய்மொழி பயின்று உயர்கல்விக்கு உதவி செய்யும் வகையில் தேனி மற்றும் மதுர…
-
- 0 replies
- 495 views
-
-
தமிழக ஆளுநருடன் டிஜிபி, காவல் ஆணையர்கள் சந்திப்பின் பின்னணி தகவல்கள் ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு. டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரை நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தியதின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வராக வசதியாக ஓ.பன்னீர் செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். எந்நேரமும் ஆட்சி அமைக்க சசிகலாவை ஆளுநர் அழைக்கலாம் என்ற நிலை இருந…
-
- 0 replies
- 209 views
-
-
பெங்களூரு சிறையில் இருந்தபடி கட்சியை சசிகலா நடத்த முடியுமா? - லாலு போல் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கருத்து சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்தபடி கட்சியை நடத்தியது போல, தற்போது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவால் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கூறுகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு, பிஹார் முதல்வராக இருந்தபோது, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கினார். இதில் கடந்த 1997, ஜூலையில் முதல்வர் பதவியை அவர் இழக்க நேரிட்டபோது, தனது மனைவி ராப்ரி தேவியை அப்பதவியில் அமர வைத்தார். ராப்ரி பெயரளவில் முதல்வராக…
-
- 0 replies
- 157 views
-
-
எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்களும் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளை அவர்களை…
-
- 0 replies
- 430 views
-
-
தர்மபுரியில் ரயிலில் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மது அருந்தியதாக ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டதன் மூலம், தர்மபுரியில் பெரும் கலவரம் உருவாக காரணமாக இருந்த திவ்யா-இளவரசன் ஜோடி இம்மாத தொடக்கத்தில் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜூலை 5ம் திகதி, தர்மபுரியில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டார் இளவரசன். அவரது உடலுக்கு அருகே சில மதுபாட்டில்கள் கிடந்தன. மேலும் அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட கடித்ததில் இருப்பது அவரது கையெழுத்துத் தான் என்பது உறுதியான நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என நிரூபணமானது. இந்நிலையில் தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. இது குற…
-
- 0 replies
- 571 views
-
-
சென்னை: திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியின்போது 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு ரூ.380 கோடி செலவு செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். பின்னர் சட்டசபையில் செம்மொழி மாநாடு சம்பந்தமாக விவாதம் நடந்த போதும் ரூ.380 கோடி செலவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்மொழி மாநாட்டிற்கான செலவு தொகை எவ்வளவு என்று தமிழக அர…
-
- 0 replies
- 321 views
-
-
முதல்வர் பழனிசாமி - தினகரன் இடையே விஜயபாஸ்கர் விவகாரத்தில் வெடித்தது மோதல் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில், முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. 'அமைச்சர்கள் அனைவரும், தங்கள் துறையில் எடுக்க வேண்டிய முடிவுகளை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்' என, தினகரன் சமீபத்தில் அறிவித்தார். இதனால், முதல்வருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டது. பெயரளவுக்கு முதல்வராக இருப்பதை, பழனிசாமி விரும்பவில்லை. தினமும் தலைமை செயலகம் வந்தாலும், எந்தப் பணியையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். இடைத்தேர்தலில், தினகரன் தோற்றுவிட்டால், …
-
- 0 replies
- 349 views
-
-
அமைச்சர்கள் அனைவரும் கரூர் செந்தில் பாலாஜியையும், எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் புதுக்கோட்டை விஜயபாஸ்கரையும் பின்பற்ற ஆரம்பித்தால்... தமிழ்நாடு என்னாகும்? 'அம்மா’ என்பது ஒரு பொதுச் சொல். ஆனால், பொதுவான சொல்லாகவா அது பயன்படுத்தப்படுகிறது? 'அம்மா குடிநீர்’ என்று பெயர் சூட்டினார்கள். அம்மா படத்தோடு, அந்தத் தண்ணீரில் இரட்டை இலை மலர்ந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், சிறிய பேருந்துகளிலும் இரட்டை இலைகள் பூத்துக் குலுங்குகின்றன. 'அரசுப் பணத்தில் கட்சி சின்னமா?’ என்றால், கறிவேப்பிலை, துளசி இலை, வாழை இலை... என்று தோட்டத்தில் பாத்தி கட்டுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்படி ஒரு பசுமைப் புரட்சியை இந்த அரை நூற்றாண்டு காலத்தில் எவரும் நடத்தியது இல்லை என்பதை உணர்ந்த ஜெயலலிதா, மு…
-
- 0 replies
- 725 views
-
-
பொலிஸார்... தங்கள் அதிகாரத்துக்கு உட் பட்டே, செயற்பட வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்து பொலிஸார் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டே செயற்பட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணை கைதிகள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். கடந்த மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த இளைஞர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததால் பொலிஸார் அடித்து துன்புறுத்தியதாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. பொலிஸார் உங்கள் நண்பன் எ…
-
- 0 replies
- 165 views
-
-
படக்குறிப்பு, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அந்த வாகனங்களை நான்கு சக்கர வாகனங்கள் என அரசு கருதுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசிக்காக 25 செப்டெம்பர் 2023 சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனம் இருப்பதாகக் குறிப்பிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-