தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
நிரபராதி தமிழர்களின் வேதனையை படம் பிடிக்கும் "உயிர்வலி" ஆவணப்படம் திரையிடல் வருகின்ற 07/01/2014 அன்று பாளையங்கோட்டை ADMS அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வினை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் நடத்துகின்றது. வாய்ப்பிருக்கும் தோழர்களையும், மாணவர்களையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.. (facebook)
-
- 0 replies
- 329 views
-
-
மிஸ்டர் கழுகு: முந்தும் ‘தம்பி சார்’... பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’ ‘முந்தும் தம்பி சார்... பிந்தும் மாப்பிள்ளை சார்’ என்று காகிதத்தில் எழுதி எடுத்துவந்து காண்பித்தார் கழுகார். முதலில் நமக்குப் புரியவில்லை. அதன்பிறகு, ‘தி.மு.க’ என்று எழுதி அதைக் காண்பித்தார். ‘புரிந்துவிட்டது’ என்று தலையசைத்தோம். சிரித்தபடியே செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார். “தி.மு.க-வில், ‘தலைவர்’ என்றால் கலைஞர்; ‘தளபதி’ என்றால் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரியும். நெருங்கியவர்களுக்கு மட்டும்தான், ‘தம்பி சார்’ என்றால் உதயநிதி, ‘மாப்பிள்ளை சார்’ என்றால் சபரீசன் என்று தெரியும்.” ‘‘ஓஹோ!” ‘‘அதனால்தான், ‘தம்பி சார் முந்துகிறார்’ என்று சொன்னேன். உதயநிதி ஸ்டாலினின் அரசி…
-
- 0 replies
- 1.3k views
-
-
'ஹெச்.ராஜா: ருசிகண்ட அரசியல் பூனை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) "இன்று லெனின் சிலை, நாளை ஈவெரா சிலை" என்கிற ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பதிவின் நோக்கமே கவன ஈர்ப்பு, ஊடக வெளிச்சம், பேசுபொருள், சர்ச்சை, பிராமணர் - பிராமணர் அல்லாதார் மோதல் ஆகியவை…
-
- 0 replies
- 599 views
-
-
தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் இந்தியாவின் முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசிய நிறுவனம் மேக்ஸிஸுக்கு விற்கப்பட்டது தொடர்பில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின்னரே சிபிஐயின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இவர்களில் ஜே.எஸ்.ஷர்மா உயிரிழந்து விட்டாலும் அவரது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.இந்தக் குற்றப்பத்திரிக்கையில், மாறன் சகோதரர்களைத் தவிர மலேசியத் தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மற்றும் முன்…
-
- 0 replies
- 490 views
-
-
ரயில்வே வேலைவாய்ப்பு மோசடி: 28 தமிழர்களை ரயில்களை எண்ணச் செய்த கும்பல் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் 46 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சேர்ந்த 28 இளைஞர்களை ரயில்வேயில் வேலைக்கு பயிற்சி எனக் கூறி, ஒரு மாதமாக டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்களை எண்ண விட்டு ஏமாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்புசாமி (78), டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில் …
-
- 0 replies
- 765 views
- 1 follower
-
-
சென்னை: அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று அறிக்கை மேல் அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளதை அகற்ற முடியுமா?என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்களுக்கு எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி, நல்லாட்சி புரிந்து வந்துள்ள ஜெயலலிதா எதிர்க்கட்சிகளால் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து விரைவில் வெற்றி காண்பார் என்பது உறுதி. தமிழகத்தில் அமைதி நிலவுகிற போது, சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சிதைந்து விட்டது, அமைதி இழந்து விட்டது என்று எத…
-
- 0 replies
- 545 views
-
-
"குவாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக தமிழ்நாடு அரசு செய்த சட்டத் திருத்தம்" கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு அரசு செய்திருக்கும் மாற்றம், தமிழகத்தில் உள்ள காப்புக்காடுகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பான அரசாணையை ரத்துசெய்யக் கோரி, ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பூவுலகின் நண்பர்கள் போன்ற சூழலியல் அமைப்புகள்…
-
- 0 replies
- 639 views
- 1 follower
-
-
தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்! தூத்துக்குடியில் காவற் துறையின் உச்சபட்ச அராஜகம்…. க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) ———————————– தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் டுக்காக கொலை செய்த போலீசின் வன்மம் தொடர்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒற்றை மனிதனாக எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே கண்ணில்படுவோர் அனைவரையும் காட்டு மிராண்டித்தனமாகவும் கொலை வெறியோடும் தாக்குதல் நடத்தி தனது விசுவாசத்தை வேதாந்தா குழுமத்திற்கு சமர்ப்பித்திருக்கிறது காவல்துறை. இதன் ஒரு பகுதியே, ம…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்: பி.ஜோதி ராமலிங்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே வைகோவும் ராமதா ஸும் மோடியை விமர்சித்து எதிர்க்கட்சிபோல் செயல்படக்கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்தது உட்பட தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரு கிறது. அடுத்தாண்டு முதல் நாடு முழுவதும் பள்ளிகளில் திரு வள்ளுவர் தினம் கொண்டாடப் படும் என மத்திய அரசு அறி வித்துள்ளது. அடுத்து பாரதியார் தினமும் கொண்டாடப்படும். காங்கிரஸ் அரசில் மு.க. அழகிரியை நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்கவில்லை. பாஜக ஆட்சியி…
-
- 0 replies
- 517 views
-
-
Jump media player Media player help Out of media player. Press enter to return or tab to continue. வேர்களை வெறுக்கும் விழுதுகள்7: கண்டிக்காத சமூகம்; தண்டிக்காத சட்டம் 21 டிசம்பர் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:16 ஜிஎம்டி தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர் கொலைகள் வாழ்வின் சடங்கு போல நடப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரமிளா கிருஷ்ணன். கண்டுகொள்ளாத சமூகமும், தண்டிக்காத சட்டமும் இவை தொடர்வதற்கான காரணிகள் என்கிறார் அவர். பிறந்த குழந்தைக்கு காது குத்துவது, பெண் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா நட்த்துவது என்பதைப் போல, வயதான, சுயமாக வாழ இயலாத முதியவர்களை, தலைக்கூத்தல் மூலமோ, விஷ ஊசியின் மூலமோ கொல்வது என்பது வாழ்வின் இயல்பானதொரு சடங்கான நிகழ்ச…
-
- 0 replies
- 330 views
-
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி? தினமலர் சென்னை : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, ஆளுங்கட்சியான தி.மு.க., வேட்பாளரை அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலை போல், இடைத்தேர்தலிலும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க.,வின் புகழேந்தி, உடல் நலக்குறைவால், ஏப்., 6ல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மனுத் தாக்கல் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு,…
-
- 0 replies
- 396 views
-
-
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு நியமனம் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. குறித்த திட்டத்தின்படி 10 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மேம்பாட்டுக்கு 1,000கோடி ரூபாய் அளிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வானது போதும், இடஒதுக்கீடு உட்பட சில காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக த…
-
- 0 replies
- 451 views
-
-
தேமுதிகவை திமுக உடைத்தது இப்படிதான்! மக்கள் நலக் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நாளை மதியம் வரை கெடு விதித்திருக்கிறது எம்.எல்.ஏ. சந்திரகுமார் தலைமையிலான அணி. மக்கள் நலக் கூட்டணிக்கு எதிரான தி.மு.கவின் இந்த அஸ்திரத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு சேலம், தாதகாப்பட்டி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, " எங்கள் கட்சியைச் சேர்ந்த எத்தனை மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தீர்கள் என்பதும் தெரியும். எங்கள் நிர்வாகிகளோடு நீங்கள் பேசியதை நான் நிரூபித்துக் காட்டட்டுமா?" என பகிரங்கமாக சவால்விட்டார். இதைப்போலவே, மூன்று நாட்களுக்கு…
-
- 0 replies
- 635 views
-
-
பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்! கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு முதல் விவசாயிகளின் இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் விடயங்கள் வரை 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்போது, கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கட்சி கடுமையாகக் கண்டித்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யுமாறு…
-
- 0 replies
- 271 views
-
-
இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படாது இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படாது என இந்திய உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியா இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்ற வகையீடு ஒன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினரை அந்த…
-
- 0 replies
- 550 views
-
-
சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும் - கடற்றொழில் சங்க பிரதிநிதி சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படுமென ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்க பிரதிநிதி எமரால்ட் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். குறிப்பாக தனுஷ்கோடி கடற்பரப்பில் இரவு பகலாக தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் படகுடன் கடற்றொழிலாளர்களை மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமநாதபுரம், தஞ்சை, புது…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
சுவாதியை பார்த்தது முதல் கொலை வரை..! ராம்குமாரிடம் போலீஸ் அடுக்கிய கேள்விகள் சுவாதி கொலை வழக்கு பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு அசைவுகளையும் பொது மக்கள் கவனித்து வருகின்றனர். ராம்குமார் மட்டுமா குற்றவாளி, இல்லை வேறு யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு எல்லாம் விடையளிக்கும் வகையில் போலீஸார், ராம்குமாரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ராம்குமாரை போலீஸார் கைது செய்ய முயன்ற போது அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் அப்போது எந்த விசாரணையும் போலீஸாரால் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் மூன்று நாள் போலீஸ் காவலில் முழு விவரங்களையும் பெற போலீஸார் முனைப்புடன் செயல்பட்டு …
-
- 0 replies
- 431 views
-
-
http://www.facebook.com/spudayakumar1 எங்கேப் போகிறோம், மாணவர்களே? கனவா, கற்பனையா, காட்சிப்பிழையா என்று நம்மை கிள்ளிப்பார்க்கச் செய்கிறது தமிழத்தில் தற்போது நடந்துவரும் மாணவர் புரட்சி. நீண்ட காலமாக எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டிருக்கும் தமிழினம், ‘பொறுத்தது போதும்’ எனப் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த எழுச்சி 2009-ம் ஆண்டே முழு வீச்சில் வரவேண்டியது. ஆனால் சில சுயநலவாத இனத்துரோகிகளால் அது மழுங்கடிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. தொடங்கிவிட்ட மாணவர்கள் எப்படித் தொடரலாம் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை இங்கேப் பதிவிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம், தெரிவு, உரிமை. [1] களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் க…
-
- 0 replies
- 632 views
-
-
தனிஈழம் அமைத்திட ஐ.நா மேற்பார்வையில் ஈழதமிழ் மக்கள் மற்றும் புலபெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு உட்பட, கடந்த 60 வருடங்களாக ஈழ தமிழ் மக்கள் மீதும்,மலையகத் தமிழர்கள் மீதும் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய மனிதஉரிமை மீறல்கள்,போர் விதிமுறை மீறல்கள் அனைத்தும் இனஒழிப்பு நடவடிக்கைகளே.மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை விசாரிக்க அனைத்துலக சுதந்திரமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளப்பட வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது ஐ.நா-வில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் கடந்த ஆண்டைப் போலவே! நீர்த்துப் போய்விட்டது. இதே சரத்துக்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஈழ தமிழ் மக…
-
- 0 replies
- 1.3k views
-
-
வட இந்தியாவின் புலந்த்சாகரில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 10 வயது சிறுமி, பெற்றோருடன் காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த போது அவளை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், எப்படி ஒரு 10 வயது சிறுமியை சிறையில் அடைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில அரசு வரும் திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஞாயிறன்று, கடைக்குச் சென்ற சிறுமி அடையாளம் தெரியாத ஒரு நபரால் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார். இது குறித்து புகார் அளிக்கச் சென்ற சிறுமியை, அப்போது பணியில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் சிறை…
-
- 0 replies
- 848 views
-
-
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! ‘கோபல்ஸ்’ (Goebbels), வரலாற்றின் பக்கங்களை இருள் சூழவைத்த ஹிட்லரின் பரப்புரையாளன்; எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி, மக்களை நம்பவைக்கும் வித்தை அறிந்தவன்; ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து... அதை, பொதுக் கருத்தாக்கி... அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைப்பவன்; பெரும் தந்திரக்காரன். அவன், பிரசாரத்துக்காக 19 யுக்திகளை வகுத்துச் சென்றான். அதை, அப்படியே சுவீகரித்துக் கொண்டு... அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, மிகத் தந்திரமாக காய்களைக் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நகர்த்திக் கொண்டிருக்கிறார். பிரசாரத்துக்கு கோபல்ஸின் யுக்திகளும்... சசிகலாவின் நகர்வுகளும்!…
-
- 0 replies
- 518 views
-
-
அரசியலில் உச்சக்கட்ட மோதல்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு -சென்னையில் விடிய விடிய சோதனை தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. சென்னை, பிப். 12- தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2 மாதங்களாக அமைதியாக இருந்த தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஜெயலலிதாவின் திடீர் மரணத்துக்கு பிறகு முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு…
-
- 0 replies
- 212 views
-
-
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் எதிர்க்கட்சி கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் (திமுக) பேசுகையில், 'சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பை சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. அவை இப்போது மாயமாகி விட்டன. இதில் ஊழல் நடந்து இருக்கிறது' என்று குற்றம் சாட்டினார். மேயர் மீதும் புகார் கூறினார். உடனே மேயர் சைதை துரைசாமி, அவரை பார்த்து, 'ஊழல் பற்றி பேச உங்களுக்கும், உங்கள் கட்சி தலைவர்களுக்கும் யோக்கியதை இல்லை' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து வந்து மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கலைந்து போக மறுத்து விட்டனர். இந்த சமயத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கு வந்து தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற…
-
- 0 replies
- 308 views
-
-
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மீத்தேன் வாயு திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார். முழுமையாக ஆய்வு செய்து முடிவெடுக்க தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, உற்பத்தி செய்ய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திட் டம் செயல்படுத்தப்பட்டால், மண் வளம் பாதிக்கும், நிலத்தடி நீர் குறையும், விளைநிலம் உப்பளமாக மாறிவிடும். மீத்தேன் வாயு நச்சுத்தன்மை வாய்ந்ததால், வாயு கசிவு ஏற்பட்டா…
-
- 0 replies
- 682 views
-
-
‘சசிகலாவின் அன்-அக்கவுண்ட் எங்கே?’ - விவேக்கை வளைக்கும் வருமான வரித்துறை #VikatanExclusive இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார் டி.டி.வி.தினகரன். இதையடுத்து, அ.தி.மு.க அணிகள் இணைப்பின் ஒரு பகுதியாக தலைமைக் கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. 'சசிகலாவிடம் உள்ள பதிவு செய்யப்படாத சொத்து ஆவணங்களைத் துருவிக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு. இந்த உண்மைகளை முழுமையாக அறிந்த விவேக் ஜெயராமன் வளைக்கப்பட இருக்கிறார்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். சசிகலா குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது பா.ஜ.கவின் அகில இந்திய தலைமை. அ.தி.மு.…
-
- 0 replies
- 310 views
-