Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுத்து இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 4 திங்கள் கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வழக்குரைஞர்கள் அறிவித்திருக்கின்றனர். இன்று சேலத்தில், தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்குரைஞர்கள் கூட்டமைப்பினர் இதனை செய்தியாளர்களிடம் அறிவித்தனர். http://dinamani.com/latest_news/article1483880.ece

    • 0 replies
    • 568 views
  2. புதுக்கோட்டையில் இன்று கலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் ராமதாசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவிடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியினருக்கும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து தலித் அமைப்பினரையும் காவல்துறை கைது செய்தது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13015:viduthalaisiruththai&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 472 views
  3. இலங்கை விவகாரத்தில், ஐ.நா., சபையில் கொண்டு வரவுள்ள தீர்மான அம்சங்களை பரிசீலித்த பிறகே, தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போடுவதா, ஆதரித்து ஓட்டு போடுவதா என்பதை, முடிவு செய்ய முடியும் என, மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதே சமயம், இலங்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு உள்ளது என, வெளியுறவு துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து, அந்நாட்டுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளில் உள்ளது. அந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டுமென, தமிழக அரசியல் கட்சிகள், கோரிக்கை விடுத்தபடி உள்ளன. இந்நிலையில்,…

    • 1 reply
    • 824 views
  4. "டெசோ'வில் கலந்து கொள்ள காங்., மறுப்பு! ""வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சாலும், கலந்துக்கக் கூடாதுன்னு ரொம்ப தெளிவான முடிவை எடுத்திருக்காவ வே...'' என, முதல் தகவலுடன் நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""யார் வீட்டு விசேஷத்தை சொல்ல வர்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ""டெசோ அமைப்பு சார்புல, 7ம் தேதி, டில்லில நடக்குற மாநாடு, கருத்தரங்கத்துக்கு, காங்கிரஸ், பா.ஜ.,ன்னு எல்லா கட்சித் தலைவர்களையும் அழைப்போமுன்னு, தி.மு.க., தரப்புல அறிவிச்சிருக்காவ... ஆனா, காங்கிரஸ் தரப்புல, டெசோ மாநாட்டுக்கு, தலைவர்கள் யாரும் கலந்துக்கக் கூடாதுன்னு முடிவு செய்திருக்காவ... ""போன வருசம், ஆகஸ்ட் மாசம், சென்னையில நடந்த டெசோ மாநாடுக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்களை…

  5. . சென்னை: மு.க.ஸ்டாலினைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. மு.க.ஸ்டாலினுக்கு 60 வயது நிறைவடைகிறது. இது அவருக்கு மணிவிழா ஆண்டாகும். நாளை அவர் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை தான் ஆடம்பரமாக கொண்டாடப்போவதில்லை என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், தென் சென்னை திமுக சார்பில் 60 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கும் வைபவம் இன்று சென்னையில் நடந்தது. திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது ஸ்டாலினை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் கருணாநிதி. கருணாநிதி பேசுகையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் விழா கொண்டா…

  6. சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து கோகுல இந்திரா, என்.ஆர். சிவபதி மற்றும் டாக்டர் விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக வைகைச் செல்வன், கேசி வீரமணி, பூனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். புதிய அமைச்சர்கள் மூவரும் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்கின்றனர். இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில். சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய் மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சிவபதி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச் செல்வன், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. கேசி வீரமணி மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. டிபி பூ…

    • 4 replies
    • 1.4k views
  7. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்…

    • 0 replies
    • 684 views
  8. தமிழக பாராளுமன்றத்தில் ஒரு நாள்.............

  9. தஞ்சாவூர்: தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது கட்சி எம்.எல்.ஏ.வே அடித்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் வருகை தந்திருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தார். அப்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர். அப்போது சில தொண்டர்களை அடிக்கவும் தொடங்கினார் அவர். தொண்டர்களை அடித்துக் கொண்டிருந்த அந்த எம்.எல்.ஏ. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென விஜயகாந்த்தையும் ஓங்கி அடித்துவிட்டார். எல்லோரையும் …

  10. இலங்கை தமிழர் விவகாரம்; கட்சிகள், "எஸ்கேப்!' ""கடைசி நேரத்துல, நம்ம ஊரு தலைவர்கள் கைவிரிச்சதால, நடக்குமா, நடக்காதாங்கற குழப்பம் உருவாகியிருக்கு வே...'' என, புதுத் தகவலைக் கூறியபடியே, நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""விவரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ""சுவிட்சர்லாந்துல, அடுத்த மாசம், 2, 3ம் தேதி, ஈழ மக்களவை அமைப்பு சார்புல, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு சம்பந்தமா, மாநாடு நடத்தப் போறதா அறிவிச்சாங்க... இந்த மாநாட்டுல, நம்ம ஊரு அரசியல் தலைவர்களை, கட்சி சார்புல அழைச்சிருக்காங்க... ""தி.மு.க., சார்புல ஒருத்தரு, "தலைவர்ட்ட அனுமதி, விசா வாங்க, நாள் இல்லை'ன்னு சொல்லிட்டாரு... கம்யூனிஸ்ட் கட்சி சார்புலயும், "வர இயலவில்லை'ன்னு சொல்லிட்டாவ... மற…

    • 5 replies
    • 800 views
  11. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டனர். சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில் அசின…

  12. இலங்கையில் பிப்ரவரி 28ஆம் தேதி கொழும்பில் ஜவுளி நிறுவன கண்காட்சி நடக்க உள்ளது. ஜவுளித் தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து கண்காட்சியில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனன. நிறுவனங்களின் முடிவை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டது தந்தை பெரியார் திராவிடர் கழகம். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=92998

    • 0 replies
    • 613 views
  13. உறையவைத்த ரத்தத்தில் ஜெயலலிதா சிலை: கராத்தே வீரர் ஹுசைனி சாதனை Posted by: Vadivel Published: Tuesday, February 26, 2013, 13:25 [iST] சென்னை: கராத்தே வீரர் ஹுசைனி உறைய வைத்த ரத்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை செய்து சாதனை படைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்த நாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 65 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை அதிமுகவினர் வழங்கி வருகின்றனர். இது தவிர நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் போடுவது, தங்களது உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வது, கோட்டையில் காலில் செருப்பு அணிந்து நடக்காம…

  14. தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, 500, மதுபானக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில், 6,654 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மது அருந்தி விட்டு, வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோரை, குஷிப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில், நீண்ட தூர பயணம் செய்யும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், தாக சாந்தி செய்து விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புக…

    • 0 replies
    • 625 views
  15. இலங்கை கிரிக்கெட்; வீரர்கள் இந்தியா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பதட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம் கட்சி ஆகியன இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்;டத்தை மேற்கொள்கின்றன. இலங்கை கிரிக்கெட்; வீரர்கள் இந்தியா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதானது தமிழ்நாட்டில் உள்ளவர்களை உளவியல் ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாக்கும் என எனவும் ஆர்ப்பாட்ட காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். …

  16. காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துள்ளது என்று முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியிலிருந்து தண்ணீர்விடுவது தொடர்பாக அண்மையில் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. இதற்கு மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசுதான காரணம். உச்சநீதிமன்றத்தில் காவிரியிலிருந்து தண்ணீர் விடுவதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்த ஜெகதீஷ்ஷெட்டர் தலைமையிலான பாஜக அரசு, தற்போது ஏதேதோ காரணங்களை கூறி மக்களை திசைதிருப்பி வருகின்றது. இதே கால கட்டத்தில் கர்நாடகத்தின் முதல்வராக நான் இருந்திருந்தால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையில் வெளியிடாமல் தடுத்தி…

  17. அண்ணா அறிவாலயத்தில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், வருகிற 5ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. http://dinamani.com/latest_news/article1478268.ece டெசோ கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது. தி.மு.க., தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கலந்துரையாடல் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%9F%…

    • 0 replies
    • 434 views
  18. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்தும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் ஆஜராகி,பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுவேன் என, முன்னாள் அமைச்சர் ராஜா, குட்டையை குழப்பியுள்ளார். ராஜாவின் இந்த மிரட்டல் கோரிக்கை குறித்து, ஐ.மு.கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசுவோம் என, தி.மு.க.,வும், மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது . 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை, நடப்பு பார்லிமென்ட் தொடருக்குள் தாக்கல் செய்யும் வகையில், இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இக்குழு, முன் ஆஜராகி விளக்கம் அளித்த, அட்டர்ஜி ஜெனரல் வாகன்வதி, மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள்அமைச்சர், ராஜாவின் செயல்பாடுக…

    • 2 replies
    • 602 views
  19. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, யுவராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என, யுவராஜா ஆவேசமாகக் கூறினார். சென்னையில் யுவராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கியிருப்பதாக, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சத்தவ், இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பதவி நீக்கத்துக்கு, எந்த காரணமும் அவர் சொல்லவில்லை. மனசாட்சியின் அடிப்படையில், கட்சி வளர்ச்சிக்காக, கடந்த மூன்றரை ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். என் மீது, இதுவரை யாரும் குற்றம் சொன்னது கிடையாது.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஐஸ்வர்யாவின் மரணத்துடன் என்னை தொடர்புபட…

    • 3 replies
    • 1.2k views
  20. தமிழக முதல்வர் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து முக்கியப் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் சார்பில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,தமிழக ஆளுநர் கே. ரோசைய்யா, முதல்வருக்கு வாழ்த்துக் கடிதம் மற்றும் பூங்கொத்து அனுப்பியதோடு தொலைபேசி மூலமும் தனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ. ராமசுவாமி ஆகியோர் தொலைபேசி மூலம் தங்…

  21. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் தூக்கிலிடுவது அரசியலமைப்பு ரீதியாக தவறானதாக இருக்கும் என நீதியரசர் கே.டி.தோமஸ் தெரிவித்தார். இந்த மரண தண்டனைகளை உறுதி செய்த உயர் நீதிமன்ற குழாமிற்கு தலைமை தாங்கிய இவர், "அந்த குழாமிற்கு தலைமை தாங்கியது எனது துரதிர்ஷ்டம்" என டைம்ஸ் ஒப் இந்தியாவிற்கு கூறியுள்ளார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஒரு நேர்காணிலின்போது நீதியரசர் தோமஸ் மரண தண்டனையை உறுதி செய்தது தவறானது என கூறினார். இதன்போது முன்னுதாரணங்கள், குற்றம் சுமத்தப்பட்டவரின் இயல்பு மற்றும் குணாம்சங்களை கருத்திற்க…

    • 7 replies
    • 1.4k views
  22. புலிகள் இயக்க தலைவர் பிராபகரன் இளைய மகன் கொல்லப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்காததை கண்டித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை சிலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95-061600494.html

  23. இலங்கை விவகாரம் : இந்திய ஜனாதிபதியின் உரை தமிழர் உணர்வை பிரதிபலிக்கவில்லை :திமுக தலைவர் கருணாநிதி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்கள் தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிப்பதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.உலக நாடுகள் “ராஜபக்ஷ ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி” என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், “இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது” என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை என்று கேட்டுள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கை அதிபர் ராஜபக்ஷ அவர்கள் …

  24. மீண்டும் சூடு பிடிக்கிறதா இலங்கை தமிழர் விவகாரம்? இலங்கையில் நடந்த, இறுதிகட்ட போரின் போது நடந்த படுகொலைகள் தொடர்பான பதிவுகள், மீண்டும் தமிழகத்தையும், உலகையும் உலுக்கியுள்ளன. "பிரபாகரனின் மகன் என்ற ஒரு காரணத்திற்காக, 12 வயதான, பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றது, மன்னிக்க முடியாத போர்குற்றம்' என, முதல்வர் ஜெயலலிதா தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதற்காக, ஆசிய தடகள போட்டிகளை ரத்து செய்ததும், அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளன. இலங்கை தமிழர்கள் நலனுக்காக, தமிழக அரசியல் கட்சிகள், ஒன்று திரளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் குறித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் உள்…

  25. அடுத்த மாதம், 7ம் தேதி, டில்லியில் நடக்கும், டெசோ மாநாட்டில், பா.ஜ., தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இம்மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்@கற்று, தேசிய அரசியலில், புது அணியை உருவாக்குவதற்கு அச்சாரம் அமைப்பாரா என்ற சந்தேகம், காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது. டெசோ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் இம்மாதம், 25ம் தேதிஅறிவாலயத்தில் கூடுகிறது.அக்கூட்டத்தில், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், அடுத்த மாதம், ஐ.நா., மனித உரிமை கமிஷனில் நடைபெறும் கூட்டத்தில், இலங்கை அரசை நிர்பந்திக்கும் வகையில், புதிய தீர்மானத்தை அமெரிக்க அரசு தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இலங்…

    • 0 replies
    • 547 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.