தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது கல்வீச்சு! சென்னை: சென்னையில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் இன்று கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் அந்த அலுவலகத்தின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பதாகவும், அதை ஆராய்ந்து குற்றவாளிகளை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிறகு, இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு ம…
-
- 1 reply
- 840 views
-
-
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று அரசிதழில் வெளியானது. காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து இரு மாநிலங்களும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது குறித்து இறுதித் தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியானது. இதையடுத்து அரசாணையின் நகல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கு இன்று அரசாணையின் நகல் வழங்கப்படும். காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி தண்ணீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி த…
-
- 0 replies
- 656 views
-
-
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற செயல். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இன்ப படுகொலை செய…
-
- 1 reply
- 828 views
-
-
வீரப்பன் கூட்டாளிகளுக்கு மேலும் 6 வாரத்திற்கு நிம்மதி: இப்போதைக்கு தூக்கு இல்லை Posted by: Siva Updated: Wednesday, February 20, 2013, 12:22 [iST] டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிடுவது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. 1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் 21 போலீசார் உயிரிழந்தனர். இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதையா, பிலவேந்திரா ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் கடந்த 12ம் தேதி நிராகரிக்கப்பட்டன. கருணை மனுக்க…
-
- 0 replies
- 631 views
-
-
: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கோவளத்தில் தொடங்கிய பயணம் இரவு திருப்போரூரில் முடிவடைந்தது. இன்று காலையில் திருப்போரூரில் பயணத்தை தொடங்கிய வைகோ சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த வைகோவை பார்த்த ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் காரிலிருந்து இறங்கி வைகோவிடம் சென்று பேசினார். அப்போது, மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும், மதுவிலக்கு அமல்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் முதல…
-
- 3 replies
- 1.4k views
-
-
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ்ச்சியைக் காணும் போது, கொடுமை, கொடுமை, இதைவிடப்பெரிய கொடுமையை வேறெங்கும் காண முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிங்கள இனவாத வெறியர் ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி என்பதற்கு ஆதாரம் தேடி உலக நாடுகளோ, ஐ.நா. மன்றமோ வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. அதற்காக எந்த விசாரணையும் மேற்கொள்ளவும் தேவையில்லை. விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ…
-
- 1 reply
- 962 views
-
-
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடிக்கச் சென்றனர்.அப்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 22 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கொண்டு வந்த ஜி.பி.எஸ்.கருவிகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து டெசோ அமைப்பு சார்பில் இன்றைய தினம் நாகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=780741848819684336
-
- 1 reply
- 717 views
-
-
வீரப்பன் வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ???- வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் .............!!! இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய…
-
- 0 replies
- 1.6k views
-
-
நேற்று இதைப் பார்த்தபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஆரம்பத்தில் இந்தப் பெண்மணியின் வாதம் எரிச்சலைத் தந்தாலும், போகப் போக அவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் போல மாறிவிடுகிறார். பொய் சொல்கிறார் என்பது அவர் உட்பட எல்லோருக்குமே தெரிகிறது. நீங்களும் ஒருதரம் பார்த்துவிடுங்கள்..! http://www.youtube.com/watch?v=T6iG4ibDie0
-
- 2 replies
- 800 views
-
-
ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் வினோதினி மரணம்: கனவுகேளோடு காலமானார் வினோதினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை மருத்துவமனையில் வினோதினி இறந்ததை அடுத்து பல இயக்கங்கள், கட்சிகள் , மனித உரிமை ஆர்வலர்கள் விநோதினியை பார்வையிட்டு சென்றனர் . சிபிஎம் ராமகிருஷ்ணன் , நாம் தமிழர் கட்சி சீமான், பெண்கள் அமைப்பினர் , மற்றும் வினோதினிக்கு உதவிய தோழர்கள் அனைவரும் விநோதினியை காண குவிந்தனர். தற்போது விநோதினியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் . அங்கு அவருக்கு உடற்கூறு ஆய்வு செ…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஈழ இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும் - புகழேந்தி தங்கராஜ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும், கேட்போம் என்று மூத்த பத்திரிக்கையாளரும், திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை, ஈழ மண்ணில் நிகழ்த்திய திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக, வருகிற மார்ச் மாதம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், சர்வதேசத்தின் எதிர்ப்பைச் சந்திக்க இருக்கிறது இலங்கை. சென்ற ஆண்டு இலங்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டித்துள்ள நிலையில், உலக அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி வரு…
-
- 0 replies
- 876 views
-
-
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என கர்நாடகா மாநிலம் பெல்காமில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில்நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்தில் 4 பேரது உறவினர்களும் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். மேலும் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக விசாரிக்க மறத்து விட்டது. மேலும் நாளையே தூக்கு நிறைவேற்றடுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக…
-
- 5 replies
- 1.4k views
-
-
காற்றின் வேகம் அதிகரித்ததால், காற்றாலைகளிலிருந்து, 1,000 மெகா வாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இதன்மூலம், நீண்ட நாட்களுக்குப் பின், 10 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தியை, தமிழகம் கடந்துள்ளது. தமிழகத்தில், 4,000 மெகா வாட் மின் பற்றாக்குறை நிலவுகிறது. சென்னை தவிர்த்து, பல மாவட்டங்களில், 14 மணி நேரத்திற்கும் மேலாக, மின் தடை நிலவி வருகிறது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், கடந்த சில மாதங்களாக, 7,000 முதல் 8,000 மெகா வாட் மின் உற்பத்தியே கிடைத்தது.நவம்பர் முதல் வாரத்தில் துவங்கும் குளிர் காலம், மார்ச் இரண்டாம் வாரம் வரை நீடிக்கும். இக்காலத்தில், மின் பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால், கடந்த இரு மாதங்களாக, மாநிலத்தில் அமல் செய்யப்பட்ட மின் வெட்டும் கணிசமாக குறைந்தது. …
-
- 3 replies
- 809 views
-
-
மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, இனி எந்த காரணத்தை முன்னிட்டும், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவது சாத்தியமில்லை, என்று முதல்வர் ஷெட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹூப்ளியில் நிருபர்களிடம் முதல்வர் ஷெட்டர் கூறியதாவது: காவிரி நதிநீர் விஷயத்தில், மாநிலத்தின் உண்மை நிலவரங்களை பிரதமருக்கு விளக்கவும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது, என்று வலியுறுத்தவும், அனைத்து கட்சி குழுவுடன் நாளை (இன்று) டில்லி செல்ல தீர்மானித்துள்ளேன். அனைத்து கட்சிக்குழுவில், மாநிலத்தின் சார்பில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் இருப்பர். என் தலைமையில், டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ள இக்குழு, அவரிடம்,…
-
- 4 replies
- 1.1k views
-
-
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறயுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த சுபா. முத்துக்குமாரின் நினைவிடத்தில் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இதற்கு வருகை தந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகாவில் ஆதரவு “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதால் வெறுப்படைந்த ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களைய சமாதானப்படுத்தவும், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாக உள்ள கர்நாடகாவில் ஆதரவு திரட்டவேண்டும் என்பதற்காகத்தான் வீரப்பன், ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டோருக…
-
- 1 reply
- 839 views
-
-
ஈழப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா நாடகமாடுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம்தான்( முதல்வர் ஜெயலலிதா) வலியுறுத்தியதாகவும், முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், தனது தொடர் வலியுறுத்தலால் ஆதரித்தது என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் இதே முதல்வர்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எ…
-
- 1 reply
- 598 views
-
-
தமிழக மக்களின் குறைகளை கேட்கும் மத்திய அரசை அமைப்பதே தனது குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் 65 ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் : காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் , பா.ஜ., கட்சிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். மின் வெட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னையை சரி செய்ய மத்தியில் தமிழகத்திற்கு ஆதரவான அரசு தேவை என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் உருவாகும் மாற்றம் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவில்லை என கூறிய அவர் கேபி…
-
- 1 reply
- 738 views
-
-
சென்னை: வீரப்பனின் நண்பர்களான நான்கு தமிழர்களைக் காப்பாற்றாவிட்டால் நாளை நமது மூன்று தம்பிகளை காப்பாற்ற முடியாது போய்விடுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பை தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அஜ்மல் கசாப் , பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மரண தண்டனையை இரகசியமாக நிறைவேற்றிய மத்திய காங்கிரஸ் அரசு, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேகமாக தூக்கில் போட்டுக் கொன்று அதன் மூலம் நாட்டையும் சட்டத்தையும் காப்பதில் தாங்கள் உறுதியாக செயற்படுகின்றோம் என்று காட்டி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது. இந்த நான்கு பேர் மட்டுமல…
-
- 1 reply
- 695 views
-
-
சென்னை : உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட்ட தண்ணீரானது, தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு 5 நாட்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை வந்தடைந்தது. மத்திய நிபுணர் குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு கடந்த 7 ஆம் திகதி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதன்படி கடந்த சனிக்கிழமை விநாடிக்கு 1,250 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தண்ணீரானது புதன்கிழமை இரவு வரை தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேரவில்லை. மழையின்றி காவிரிப் படுகை வறண்டிருந்ததாலும் கர்நாடக எல்லைப் பகுதியில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கான வெள்ளோட்டத்துக்கு அந்த மாநில அரசு தண்ணீரை…
-
- 0 replies
- 567 views
-
-
காங். மீது முதல்வர் குற்றச்சாட்டு Friday, 15 February, 2013 01:49 PM சென்னை,பிப்.15:காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு இல்லாததால் காவிரி நதிநீர் பிரச்சனையில் இந்த இரண்டு கட்சிகளும் கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கின்றன என்று முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். இந்த இரண்டு கட்சிகளும் தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் அவர் கூறினார். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். ஜெயலலிதாவின் 65வது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப் பேட்டையில் அம்மா பேரவை சார்பில் 65 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா இத…
-
- 0 replies
- 654 views
-
-
26 பேர் கொல்லப்பட காரணமாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 1990களில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை கலக்கி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்நிலையில், கடந்த 1991ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷன் மீது, வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் பலியாகினர். இதே போல், கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 22 போலீசார் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, வீரப்பன் க…
-
- 3 replies
- 1.1k views
-
-
"குஷ்பு இன்னொரு மணியம்மை"? கொந்தளிக்கும் உறவுகள்! என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதியும் நடிகை குஷ்பு மணியம்மையார் வேடத்தில் இருக்கும் படத்தை இணைத்து அட்டைப்பட கட்டுரையாக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கருணாநிதி மற்றும் குஷ்பு பற்றிய இந்த கட்டுரையால் திமுகவினரும் திகவினரும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குமுதம் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மணியம்மையார் யார்? தந்தை பெரியார் முதுமை காலத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் தேவைப்பட்டார். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேலூர் கனகசபை தமது மகளான அரசியல் மணியை பெரியாரிடம் உதவியாளராக சேர்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரான்சுடன் இணைந்து ஏவுகணை தயாரிக்க இந்தியா பேச்சு! [Friday, 2013-02-15 09:09:30] தரையில் இருந்து வானில் உள்ள குறுகிய தூர இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் திறன் படைத்த ஏவுகணையை பிரான்ஸூடன் இணைந்து தயாரிக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதன் தயாரிப்புப் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஷுவா ஹொலாந்த், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தில்லியில் சந்தித்துப் பேசினர். ராணுவம், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி இருவரும் விவாதித்தனர். பின்னர், இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் நடுத்தர-பல்வகைப் பயன் இலக…
-
- 3 replies
- 738 views
-
-
காவிரி எங்கே? - காத்திருந்த விவசாயிகள் ஏக்கம்! கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு வரை தமிழகத்துக்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியது. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழகத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு, கடந்த வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து உடனடியாக திறந்துவி…
-
- 1 reply
- 595 views
-
-
சென்னையில் ஜிலுஜிலு மழை...தென் மாவட்டங்களும் குளிர்கின்றன Posted by: Sudha Published: Friday, February 15, 2013, 10:20 [iST] சென்னை: அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் இன்று காலையிலிருந்து வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு மேல் மெதுவாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மேலும் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை, ராஜாபாளையம், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி திருமங்கலம், திண்டுக்கல், தேனி, சிவங்கை, கொடைக்கானல் உள்ள…
-
- 0 replies
- 548 views
-