Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. படக்குறிப்பு, ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 59 நிமிடங்களுக்கு முன்னர் தைவானைச் சேர்ந்த மொபைல் போன் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக வந்த செய்தி தவறு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், உண்மை என்ன? தைவானைச் சேர்ந்த மொபைல் உதிரிபாக நிறுவனமான ஃபாக்ஸ்கான் க்ரூப் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டு செய்யவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்வீட் மூலம் திங்கட்கிழமையன்று தெரிவித்தார். …

  2. பேனா நினைவுச்சின்னம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் christopherAug 01, 2023 12:31PM கலைஞர் பேனா நினைவுச் சின்னம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது. இந்த நிலையில், கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, சென்னை தங்கம், நாகர்கோவில் ஆகியோரின் பொதுநல மனுக்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையீட்டு மனு ஆகியவை உச்சநீதிமன்றத…

  3. 29 JUL, 2023 | 11:12 PM சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) ஒரே நாளில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் ஏர் விமானம் நேற்று (28) காலை புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணிக்க வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவகஜன் லிட்டி (43) என்ற பெண், பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். …

  4. செங்கல்பட்டை சேர்ந்த டெல்பின் ஸ்டெபினோ தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்தாலும் சக்கர நாற்காலியில் இயங்கியபடியே தன்னம்பிக்கை பேச்சாளராகவும் மனநல ஆலோசகராகவும் செயல்படுகிறார். Muscular Dystrophy என்று அழைக்கப்படும் தசைச்சிதைவு நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடைய தசைகள் செயல் இழந்து கொண்டே வரும். உடலுக்குள் அதற்கு மிகப்பெரிய போராட்டம் நடக்கும். ஆனாலும் தன்னுடைய தன்னம்பிக்கையால் அதை எதிர்த்து போராடி என்று மற்றவர்களுக்கும் உதாரணமாய் திகழ்கிறார் டெல்பின். தான் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், அது நாளடைவில் உடலில் உள்ள அத்தனை தசைகளையும் பாதிக்கும் என்பது பற்றியும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்க…

  5. 3 மணி நேரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில், நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகிலேயே, ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். அதே பகுதியில், வெல்டிங் கடை, ஹோட்டல், வாட்டர் கம்பெனி மற்றும் குடியிருப்புகள் இருந்துள்ளன. ரவி, வழக்கம் போல் பட்டாசு குடோனில் பட்டாசுகளை பேக்கிங் செய்துள்ளார். அப்போது அவரது மனைவி ஜெயஸ்ரீ, குழந்தைகள் ருத்திகா,ருத்தீஸ் ஆகியோர் இருந்துள்ளனர். நடந்தது என்ன? இன்று காலை,9:30 மணி அளவில் திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து ச…

  6. 28 ஜூலை 2023, 09:40 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போலீசார் மீது பாமகவினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதையடுத்து பாமகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்து வருவதால் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே அங்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று கடலூரில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாமக தொண்டர்கள் சிலர் வஜ்ரா வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். …

  7. படக்குறிப்பு, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விருதாச்சலத்தில் இருந்து சேத்தியோதோப்பு வழியாக கத்தாழை கிராமத்திற்குச் சென்றோம். மதிய நேர உச்சி வெயில் ஏற்படுத்திய களைப்புக்கு நடுவே, நெற்பயிர்களின் முற்றிய கதிர்களுடைய பால் வாசம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்தப் பால் வாசம் வீசிய நெற்பயிர்களுக்கு நடுவே, நிலத்தை அழித்து வேலை செய்துகொண்டிருந்த இயந்திரங்களின் சத்தமும் அதிகமா…

  8. படக்குறிப்பு, கூலி வேலைக்குச் சென்று தினசரி வாழ்க்கையை நடத்தி வருவதாகக் கூறும் ராஜேஷின் தாய் சூர்யா, தனது மகன் மூன்று ஆண்டுகளாகப் பட்ட அவஸ்தைக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டதாக நெகிழ்ந்து கூறுகிறார் 27 ஜூலை 2023, 11:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒன்று கூடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இடையே ஒரு குழந்தை மட்டும் தனிமைப்படுத்துவது, அந்தக் குழந்தைக்கு மனரீதியாக பலமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையாக வளர்ந்த சிறுவன்தான் ராஜேஷ். ராஜேஷ், அப்படி நடத்தப்பட்டதற்குக் காரணம் அவரது மூக்கினுள் சிக்கியிருந்த பேட்டரிகள். அந்த பேட்டரிகளை இப்போது கள்ளக்குறிச்சி அ…

  9. தழிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் – ஸ்டாலின் நம்பிக்கை புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் இதன்போது தெரவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கு…

  10. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டுள்ள பட்டியலின இளைஞர் முத்தையா கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 24 ஜூலை 2023 திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஆணவக்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டியல் சாதி இளைஞர் கொலை திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை கிராமம் சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவ…

  11. CM MK Stalin: பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை.. அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காத்திட உண்மையான இந்தியா உருவாகி இருக்கிறது. அமலாக்கத்துறை…

    • 1 reply
    • 273 views
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் வரை குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 20 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு நெல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என அச்சத்தில் உள்ளனர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள். கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முறையாகக் கிடைக்காததால் குறுவை சாகுபடியைத் தொடங்கிவிட்டுப் போதிய நீர் இல்லாமல் தவிப்பதாகச் சொல்கின்றனர் காவிரி டெல்டா விவ…

  13. பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 ஜூலை 2023, 15:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் பசுமையான அழகுக்கு பின்னால் இருக்கும் சோகக்கதைகள் குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. மேலை நாடுகளில் சுரங்கப்பாதை தொழிலாளர்கள் எந்த அளவு அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்களோ அதை விட அதிக சுரண்டல்களையும் கொடுமைகளையும் அனுபவித்தவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். 1941 முதல் 1965 வரை வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் தலைமை மருத்துவராகப் பணிபுரிந்…

  14. தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 400 லீற்றர் பெற்றோலை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி – திரேஸ்புரம் கடற்கரையில் வடபாகம் தனிப்படை பொலிஸார் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றை சோதனையிட்டுள்ளனர். இதன்போது, 9 கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெற்றோலை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/264658 பெற்றோல் தட்டுப்பாடு இங்க இல்லை என்று அவர்களுக்கு தெரியவில்லை! வேறு…

  15. 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 35 வயதான சதீஷ்குமார் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவரால் நடக்க முடியாது. ஆனால் அது அவரை முடக்கிவிடவில்லை. பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற தனது ஆர்வத்தை செயல்படுத்தி வருகிறார். ஸ்கூபா டைவிங், பாராஷூட்டில் பறப்பது, ராம்ப் வாக், கிரேனில் தொங்கியபடி நடனமாடுவது என்று பல விஷயங்களிலும் ஈடுபட்டு வாழ்க்கை தரும் அத்தனை சுவாரஸ்யமான அனுபவங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார். மேலும், மாறுத்திறனாளிகளால் பயன்படுத்தக்கூடிய வகையில் பொது போக்குவரத்துச் சேவைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தாம் முயன்று வருவதாகவும் தெரிவிக்கிறார். இந்தக் காணொள…

  16. படக்குறிப்பு, கடந்த 16ஆம் தேதி மாலையில் வீட்டுக்கு அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை கட்டுரை தகவல் எழுதியவர், பி. சுதாகர் பதவி, பிபிசி தமிழுக்காக 20 ஜூலை 2023, 13:50 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம். தருமபுரி மாவட்டம் புழுதிகரையை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் ஆதிமூலம்(30). இவர் மனைவி சுதா(27). இவர்களின் 7 வயது மகன் கடத்தூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் இவர் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். …

  17. மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சந்திக்க உள்ள நிலையில் குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார் அத்துடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஈழ தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசாங…

  18. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்? - மு.க.ஸ்டாலின் விளக்கம் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 27 மார்ச் 2023, 11:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணி புரியும் மகளிர் உள்ளிட்டோர் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்ட…

  19. செந்தில் பாலாஜி புழல் சிறைச்சாலைக்கு மாற்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமுலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அவரது வீட்டில் விசாரணை நடத்திய பின்னர் அவரைக் கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதி…

    • 2 replies
    • 652 views
  20. பட மூலாதாரம்,MAHADEVAN படக்குறிப்பு, சாலை வசதி வேண்டி ஜூலை 12ம் தேதியிலிருந்து 14ம் தேதி வரை 48 மணிநேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி மலை அடிவாரத்தில் இருந்து குருமலை மலைக்கிராமம் வரை உள்ள மலைப்பாதையில் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கினார். ஆனால், இந்த அனுமதி இரண்டு தலைமுறை பழங்குடியின மக்கள் போராடியும் கிடைக்காமல், இறுதியாக கடந்த ஜூலை 12ம் தேதி துவங்கி ஜூலை 14ம் தேதி வரை இரவு பகலாக நடந்த தொடர் போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது என்பதுதான் இதன் சுவாரஸ்யம். …

  21. படக்குறிப்பு, பொன்முடி, தமிழ்நாடு அமைச்சர் 34 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. இதேபோல், அவரது மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த ஆண்டு விடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலு…

  22. பட மூலாதாரம்,MADRAS LOCAL HISTORY GROUP படக்குறிப்பு, எம்டன் போர்க்கப்பல் கட்டுரை தகவல் எழுதியவர், சிவகுமார் இராஜகுலம் பதவி, பிபிசி தமிழ் 16 ஜூலை 2023, 06:37 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் அன்று 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி... நேரம் சரியாக இரவு 10 மணி இருக்கலாம். இப்போது சென்னை என்றழைக்கப்படும் அப்போதைய மெட்ராஸ் மாநகரை நோக்கி வேகமாக நெருங்கிய அந்தக் கப்பல் கரையில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் நின்றுவிட்டது. அடுத்த கனமே அந்த கப்பலில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள் சென்னையை நோக்கி குண்டுமழை பொழிந்துவிட்ட…

  23. பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் திருநெல்வேலி பெண் 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் லட்சுமி தேவி. இயற்கை விவசாய ஆர்வலரான இவர் கடந்த 13 வருடங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து அழிவின் விளிம்பில் இருந்த 37 வகையான பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து தனது நிலத்தில் பயிரிட்டு வருகிறார். தைராய்டு நோயின் காரணமாக எடை குறைந்து உடல்நிலை மோசமான போது, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகளை தொடர்ந்து உட்கொண்டது இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற உதவியது எனக் கூறுகிறார். இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் எதையும் பயன்படுத்தாமல் பஞ்சகாவியம், அமிர்த கரைசல் போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய இயற்கை விவ…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடல் காற்றின் மாறுபாடு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே பங்குனி ஆமைகள் முட்டையிடும் சீசன் முடிவடைந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 15 ஜூலை 2023 தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் 1.83 லட்சம் பங்குனி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. ஆனால், கடல் காற்றின் மாறுபாடு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பங்குனி ஆமைகள் முட்டையிடும் சீசன் முன்கூட்டியே முடிவடைந்துள்ளது. ஏன் இப்படி நடந்தது? பங்குனி ஆமை முட்டை பொரிப்பக…

  25. பட மூலாதாரம்,STALIN TWITTER 14 ஜூன் 2023, 00:56 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) தலைமைச் செயலக அலுவலகத்தில் நடத்தப்பட்ட நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சுவலிப்பதாக கதறி அழுத அமைச்சர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏ என் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.