Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல் 13 Feb, 2023 | 12:02 PM விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் தக்க சூழலில் பொதுமக்கள் முன் தோன்றுவார் என்றும் தமிழின உணர்வாளரும், உலக தமிழர் பேரமைப்பு தலைவருமான பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ''விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன் தோன்றுவார். அதற்கான சூழல் விரைவில் கனியும் என எதிர்பார்க்கிறோம். விடுதலைப்புலி புலிகள் தலைவர் பிரபாகர் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. …

  2. இனி அதிக இடங்களில் போட்டி..ஸ்ராலினின் தேசிய அரசியல் நகர்வு.. சென்னை: 2024 நாடாளு்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிடும் திட்டத்தில் திமுக இருப்பதாக திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற குஷியில் இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி 2024 லோக்சபா தேர்தலுக்காக தயாராக தொடங்கி உள்ளது. இந்த வெற்றி தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் திமுகவிற்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்து உள்ளது. இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் போட்டியிடலாம் என்ற ஆலோசனையில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பின் பல்வேறு திட்டங்களை திமுக வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக …

  3. "கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்த பிறகு அதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? கோவில்கள் மற்றும் தனி நபர்கள் வளர்க்கும் யானைகளை அரசின் மறு வாழ்வு முகாம்களுக…

  4. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு என்ன அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மார்ச் 2023, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இது அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? நடந்து முடிந்திருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற…

  5. ஈரோடு கிழக்கு 'எடைத் தேர்தல்' வாக்குப்பதிவு நிலவரம் என்ன? 27 பிப்ரவரி 2023, 04:36 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி பெரியார் நகர் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியின் அருகே சின்னத்தை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக திமுக - அதிமுகவினர் சர்ச்சையாகி வாக்குவாதம் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் துணை ராணுவ படை உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்து அனுமதி இன்றி கூடியிருந்த அரசியல்…

  6. சாப்பாடு போட்டு, கல்வி புகட்டி, அரசு ஊழியர் தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் 'நம்ம தாசில்தார்' கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராக்கேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தாசில்தார் மாரிமுத்து “சிறு வயதில் சாக்கு விரித்துதான் தினமும் படுத்திருப்பேன். கொஞ்சம் கையை நீட்டி படுத்தால் சுவற்றில் இருந்து மண் கொட்டும். மேலே பார்த்தால் 50 வருட பழமையான கூரை.காலை வெளியே நீட்டினால் சாக்கடை ஓடும் . வறுமை தான் எனது மிகப்பெரிய ஆசான். இப்படிபட்ட சூழலில் வாழ்வின் பெரும் நம்பிக்கையாய் என் முன்னே இருந்தது கல்வி மட்டுமே. அந்த கல்வ…

  7. "பாமக, பாஜக உள்ள அணியில் ஒருபோதும் இருக்க மாட்டோம்" - திருமாவளவனின் பேச்சு திமுகவுக்கு எச்சரிக்கையா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது பிறந்த நாளில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத…

  8. 'ஒரே நாடு, ஒரே உறுப்பு தான பதிவேடு' - இந்திய அரசின் முயற்சியால் தமிழ்நாட்டின் உரிமை பறிபோகிறதா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேசிய அளவிலான பதிவேட்டைக் கொண்டு வரும் வகையில் "ஒரே நாடு, ஒரே உறுப்பு தானப் பதிவேடு" திட்டத்தை இந்திய சுகாதாரத் துறை வகுத்து வருகிறது. உறுப்பு மாற்று சிகிச்சையில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் …

  9. குற்றம் ஒன்றுக்கான விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டமையின் அடிப்படையில் ஏற்கனவே 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆயுள் தண்டனை இந்தநிலையில் மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் ஒன்றுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த இலங்கையர்,…

  10. ஆராய்ச்சி படிப்பில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டு பெண்கள் - முந்தைய அரசுகளின் பங்கு காரணமா? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020-21ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலேயே அதிக அளவு பெண்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள தகவல்களைக் கொண்டு பிற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். என்ன அறிக்கை? …

  11. தலித்துகள் முன்னேற்றத்தில் அலட்சியம் காட்டுகிறதா திமுக? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எஸ்சிஎஸ்பி (SCSP) எனச் சொல்லப்படும் ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி இந்த நிதியாண்டில் 63.65 சதவிகிதம் வரை செலவழிக்கப்படாமல் இருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்திருக்கும் நிலையில், இது தலித் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டிற்கு ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியாக ரூ.16,422 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், அதில் ரூ.5,976 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு…

  12. அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை! christopherMar 01, 2023 08:47AM தனது பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பெரியார் உள்ளிட்டோரின் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். …

  13. டெல்லியில் அமைச்சர் உதயநிதி: முதல்வர் போல மரியாதை, 'பிஸி' ஆக நகரும் நிகழ்ச்சி - பிரதமரை நாளை சந்திக்க திட்டம் - என்ன பின்னணி? 6 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு மாநில அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சருக்கு தரப்படும் மரியாதை போல வரவேற்பும் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்ட மாநில அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு வருவது இது முதல் முறை…

  14. நிதி நிறுவனங்களையே திகைக்க வைக்கும் கடன் செயலிகள்: என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தங்களுடைய பெயரைப் பயன்படுத்தி, Wonder Loan என்ற செயலி ஒன்று அதீத வட்டிக்கு பணம் கொடுத்து, தங்கள் பெயரைக் கெடுப்பதாக தனியார் நிதி நிறுவனம் வழக்குத் தொடுத்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் குறித்த விவரங்களைத் தர கூகுள் மறுப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கிறது காவல்துறை. செயலி மூலம் கடன் பெறும்போது, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது? திண்…

  15. விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியை தாக்கி பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மணி நேரங்களுக்கு முன்னர் . விழுப்புரம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி மற்றும் மாணவனைத் தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்த செல்பேசி மற்றும் நகைகளை பறித்துச் சென்றதாக, மூன்று இளைஞர்களை விழுப்புரம் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். இந்த மூவரில் ஒருவர் அம்மாணவியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாகவும் அவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை எனவும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? இச்சம்பவம் தொடர்பாக, விழுப்ப…

  16. தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை கைது செய்த சிபிஐ - என்ன குற்றச்சாட்டு? படக்குறிப்பு, ஆசிரியர் ராமச்சந்திரன் 22 நிமிடங்களுக்கு முன்னர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளது சிபிஐ. வருமான வரித்துறை கணக்குத் தாக்கல் செய்து, பணம் திரும்பப் பெறும் விவகாரத்தில் பலருக்கும் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்ததாக சிபிஐ இவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரன் தினமும் மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது,…

  17. “டயர் சைஸ் கூட இல்லை, உனக்கு பஸ் வேணுமான்னு கேப்பாங்க” - பேருந்து ஓட்டுநராக துடிக்கும் ஷர்மிளாவின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான ஷர்மிளா பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார். தற்போது முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்டுள்ளார். பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அதற்கான உரிமமும் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே அ…

  18. 109 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை: பாதுகாப்பு கருதி ரயில் சேவை நிறுத்தம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் அருகே கடலின் குறுக்கே அமைந்துள்ள 109 வயதான பாம்பன் பழைய தூக்கு பாலத்தில் ரயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மீனவ மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை துவக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம்…

  19. ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், அதிமுகவிற்கு முழுமையாகச் செல்லாமல், நாம் தமிழர் கட்சிக்கும் பிரிந்து செல்வதை திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்ததாக, வாக்காளர்களின் கவனம் பெற்ற வேட்பாளராக மாறி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன். ஒவ்வொரு தேர்தலிலும், பிரதான கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிர்ணயம் செய்யும் நடைமுறை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நடைமுறையை மேடைதோறும் சாடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கில் பெரும்ப…

  20. மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு Published By: RAJEEBAN 24 FEB, 2023 | 11:16 AM மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக மூன்று பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண், குமார், மாதவன் ,கார்த்தி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்ற…

  21. 'பட்டினி இல்லா தேசம்': பசி போக்கும் சென்னையின் அன்னதான சேவை அமைப்பு கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராக்கேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட்டினி இல்லா சென்னையை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். இது தான் எங்களின் தொலைநோக்கு சிந்தனை என கூறுகிறார் அருண் குமார். இவர் சென்னையில் இயங்கி வரும் No Food Waste என்ற அமைப்பின் சென்னை நிர்வாக இயக்குநர். No Food Waste என்ற அமைப்பு சென்னையில் உள்ள ஆதரவற்றவர்கள், காப்பகங்களில் வசிப்பவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும…

  22. கைமாற்று அறுவை சிகிச்சையும், கைவிடாத காதலும்: திண்டுக்கல் நாராயணசாமி இப்போது எப்படி இருக்கிறார்? கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”இரண்டு கைகள் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்ந்துவிடப்போகிறான் என சுற்றி இருந்த அனைவரும் பேசத் துவங்கினர். அவர்கள் அனைவரின் முன்னால் வாழ்ந்து காட்டி விட வேண்டும் என்ற வைராக்கியமே என்னை நம்பிக்கையுடன் போராட வைத்தது. இப்போது நானும் அனைவரை போலவும் சராசரியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறேன்” என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நாராயணசாமி. கட்டட …

  23. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் முன் இருக்கும் அரசியல் வாய்ப்புகள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்பு படம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதிமுகவை தீர்மானகரமாக எடப்பாடி முகாமின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது என்பது பொதுவான பார்வையாக உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி அணியால் நீக்கப்பட…

  24. ‘உள்ளே வச்சுப் பாருங்க’ சீமான் சவாலும் நாம் தமிழர் - திமுக மோதலும் பட மூலாதாரம்,NAAM TAMILZHAR 4 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் மேனகா நவநீதன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கட்சிகளிடையே மோதல் போக்கு உருவாகியது. கட…

  25. தமிழ்நாட்டில் புலிகளை வேட்டையாடிய பவாரியா கும்பல் சிக்கியது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் புலி வேட்டையில் ஈடுபட்ட வட இந்திய பவாரிய கும்பல் வனத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலுக்கு பின்னணியில் சர்வதேச வலைப்பின்னல் உள்ளதா என்பது தொடர்பாகவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் அரசூர் என்கிற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் வனப்பகுதிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.