Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிலிந்த மொரகொட - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு By NANTHINI 12 NOV, 2022 | 08:29 PM இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் இன்று சனிக்கிழமை (நவ 12) புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/139830

  2. மாதம் ரூ.66,660 சம்பாதிப்பவர் ஏழையா? - மு.க.ஸ்டாலின் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 10 சதவிகித இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறினார். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் த…

  3. மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – என்.ஐ.ஏ தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான நவீன் என்கிற எம். சக்கரவர்த்தி, ஜே சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் வாகனச் சோதனையின் போது, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் பொடிகள் மீட்கப்பட்டது தொடர்பாக…

  4. நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம், மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இது அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நீண்ட காலம் சிறையில் இருந்த 6 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம்…

  5. கேரளாவில் வைரலான ஆட்சியரின் செயல்: குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு மேடையில் பேசியது ஏன்? பட மூலாதாரம்,COURTESY: DIVYA S IYER 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம், கேரளாவில் பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது 3 வயது மகனை தனது கைகளில் வைத்துக்கொண்டு ஒரு நிகழ்வில் உரையாற்றிய காணொளி வைரலாகப் பரவியதோடு, சமூக ஊடகங்களில் கலவையான விவாதத்தையும் தொடக்கி வைத்தது. டெல்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே இது குறித்து அலசுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் குழந்தையாக இருந்தபோது, நான் சில நேரங்களில் அவனை வேலைக்குச் செல்லும்போது, குறிப்பாக வார இறுதி அல்லது விடுமுறை நாட்களின்போது உடன் அழைத்துச் செல்வேன். …

  6. வேலூரில் அரை நிர்வாண ராகிங்: சஸ்பெண்ட் ஆன ஏழு பேர் மீது போலீஸில் புகார் - முழு விவரம் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, ஏற்கெனவே இருந்த மாணவர்கள் 'ராகிங்' செய்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலான நிலையில், ஏழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் படித்துவருகின்றனர். இவர்களில் பலர் இங்குள்ள விடுதியில் …

  7. புதிய விண்வெளி - பாதுகாப்பு தொழிற்கொள்கை: சாதிக்குமா தமிழ்நாடு? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்நாதன் பதவி,மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 23 நிமிடங்களுக்கு முன்னர் வானூர்தித் துறையிலும் பாதுகாப்புத் தளவாடத் துறையிலும் முதலீடுகளை ஈர்ப்பதையும் உற்பத்தியைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் துறைகளுக்கான பிரத்யேகமான தொழிற்கொள்கையை இரண்டாவது முறையாக வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் கொள்கைகள் எப்படிப் பலனளிக்கும்? தமிழ்நாடு அரசு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறைக்கான கொள்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் இந்தத் …

  8. தமிழ்நாட்டு பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,சுசீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு NFHS-5 தெரிவிக்கிறது. NFHS-5 மற்றும் NFHS-4 தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது தெரியவருகிறது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கவுன்சில் ஃபார் சோஷியல் டெவலப்மென்ட் அமைப…

  9. மலேசியாவுக்கு மருது சகோதரர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு - அதிர்ச்சிக்குறிப்புகள் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மருது சகோதரர்கள் மருது சகோதரர்களின் வாரிசுகளில் ஒருவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், அவர் அந்நாட்டிலேயே பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் நீண்ட காலமாக உலவி வருகிறது. காலஞ்சென்ற தமிழக முதல்வர் கருணாநிதிகூட மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இது குறித்துப் பேசியுள்ளார். அதன் பிறகுதான் மலேசிய தமிழர்கள் பலருக்கும் மருது சகோதரர்கள்…

  10. தமிழ்நாடு டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நீதிமன்றத்துடன் மோதுகிறதா நிர்வாகம்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NATHAN G படக்குறிப்பு, குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய பாட்டில்களை மதுவை காலி செய்த பின்னர் திரும்ப கொடுக்கும் விவகாரத்தில், நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் 70 சதவீத பாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சோதனையாக பாட்டில்களை திரும்பப் பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்…

  11. நவம்பர் 6ம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நீதிமன்றம் அனுமதி 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ். பேரணி - கோப்புப்படம் நவம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற…

  12. காசி - தமிழ் சங்கமம் நடத்தப்படுவது அரசியலுக்காகவா அரசு நிகழ்வுக்காகவா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 3 நவம்பர் 2022, 02:38 GMT பட மூலாதாரம்,LEA GOODMAN/GETTY IMAGES படக்குறிப்பு, காசி தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்பை உறுதிப்படுத்தவும், அதை மீண்டும் கண்டந்து புதிய தலைமுறையிடம் சேர்க்கவும் 'காசி தமிழ் சங்கமம்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளதாக இந்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதன் உண்மையான நோக்கம் குறித்து பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் அதை புரிந்து கொள்ள முற்படுகிறது இந்த கட்டுரை. …

  13. தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைத் திரும்பப் பெற வேண்டுமென ஒரு மனுவைத் தயாரித்து அதில் தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கையெழுத்தையும் பெற்று குடியரசுத் தலைவரிடம் அளிக்க தி.மு.க. முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் ஆளுநரை மாற்ற முடியுமா? தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்கவிருக்கும் மனுவில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட வேண்டுமென தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவரா…

  14. சென்னை கனமழை: கடந்த 72 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை 1 நவம்பர் 2022, 07:17 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் ஒன்றாம் தேதியன்று மூன்றாவது முறையாக கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று மாலை முதல் தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னை நுங்கம்பாக்கத…

  15. ராம்குமார் தற்கொலை: மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம் - முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, உயிரிழந்த ராம்குமார் சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்தபோது தற்கொலைசெய்து கொண்டதாகக் கூறப்படும் ராம்குமாரின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கவும் அந்த மரணம் குறித்து விசாரணை நடத்தவும் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராம்குமாரின் மரணம் குறித்து தானாக முன்வந்து விசாரித்துவந்த மாநில மனித உரிமை ஆணையம் இன்று தனது பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, உயிரிழந்த ராம்குமாரின் தந்தைக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடாக அளிக…

  16. பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்வது ஏன்? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARULAGAM படக்குறிப்பு, கருங் கழுத்துப் பாறுக் கழுகு இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? பாறு கழுகுகளை முன்னர் பிணந்தின்னி கழுகுகள் என்று அழைத்து வந்தார்கள். அந்தப் பெயர் ஓர் எதிர்ம…

  17. 52 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டார் ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன். By RAJEEBAN 30 OCT, 2022 | 01:17 PM 52 நாட்களுக்கு பிறகு வேலூர் ஜெயிலில் ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார…

  18. ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக கூட்டணி கட்சிகள்! Oct 30, 2022 11:34AM IST தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசுவதாக இருந்தால் அவர்‌ தனது பதவியை விட்டு விலகி கருத்துகளைச்‌ சொல்லட்டும்‌ என்று திமுக கூட்டணி கட்சிகள் இன்று (அக்டோபர் 30) அறிக்கை வெளியிட்டுள்ளனர். கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பேசினார். அப்போது இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்றும், வழக்கு விசாரணை தாமதமாக என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அ…

  19. உலர் ஷாம்பூவில் புற்றுநோய் கூறுகள்: உலர் ஷாம்பூவுக்கும், சாதாரண ஷாம்பூவுக்கும் என்ன வேறுபாடு? கௌதமி கான் பிபிசி தெலுங்கு செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UNILEVERUSA.COM படக்குறிப்பு, ஷாம்புகள் உலர் ஷாம்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதால் அமெரிக்க சந்தையில் இருந்து அவற்றைத் திரும்பப் பெறுவதாக முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான யுனிலீவர் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த உலர் ஷாம்பூகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படியும், அவற்றை தங்கள் கடைகளின் அலமாரிகளில் இருந்து வெளியே எடுக்கும்படியும் சில்லறை விற்பனையா…

  20. திமுக Vs பாஜக: தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தந்து தமிழ் பின்னுக்குத் தள்ளப்படுகிறதா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தந்து தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக திமுக மீது குற்றம் சுமத்தியிருந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தமிழ்மொழியை வளர்ப்பது யார், அழிக்க நினைப்பது யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும் என்று அவருக்கு பதில் தந்திருந்தார் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. உண்மையில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறதா? அது தமிழை அழித்து விட்டதா? …

  21. ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் – அண்ணாமலை ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை கைவிட்டு, தமிழை வளர்க்க தி.மு.க. அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தி.மு.க.வின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை எதிர்த்து, தமிழகத்தில் பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன் என தமிழக அரசிடம் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் செய்வதறியாது சிக்கித் தவிக்கும் தமிழக முதல்வர், எதிர்வரும் 4 ஆம் திகதி ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவ…

  22. கேரள ஆளுநர் கோரிக்கையை மறுக்கும் முதல்வர் - அமைச்சரை நீக்கக் கோரும் விவகாரத்தின் முழு பின்னணி முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI கேரளாவில் மாநில நிதியமைச்சர் பேசிய பேச்சு ஒன்றுக்காக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கேரளாவின் நிதியமைச்சர் கே.என். பாலகோபால் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து பிராந்தியவாதத்தைத் தூண்டுவதாகவும் இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாகவும் கேரள…

  23. தமிழ்நாட்டில் சுடுகாட்டுப் பிரச்னைகள் தொடர்வது ஏன்? இது சமூக சிக்கலா? உள்கட்டமைப்பு சிக்கலா? என்ன தீர்வு? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கழுத்தளவு தண்ணீரில் இறுதிப் பயணம். சுடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லை, கழுத்தளவு தண்ணீரில் பிணத்தை தூக்கிச் சென்ற கிராமவாசிகள், பட்டியல் சாதியினர் சடலங்களை பொதுப்பாதையில் கொண்டு செல்ல எதிர்ப்பு என்ற செய்திகள் வந்தபடியே உள்ளன. நூறாண்டு கடந்த சமூக சீர்திருத்த மரபினையும், முற்போக்கான பார்வை கொண்ட அரசாங்கங்கள் அமைந்த வரலாற்றையும் கொண்ட தமிழ்நாட்டில், உள்கட்டமைப்பு வசதி, மனித மேம்பாட…

  24. குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்பு - திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடந்தது என்ன? 27 அக்டோபர் 2022 படக்குறிப்பு, கனிமொழி-குஷ்பு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குறிப்பிட்டு, நடிகை குஷ்பு வெளியிட்ட ட்வீட்டுக்கு, ட்விட்டரிலேயே மன்னிப்பு கேட்டுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? 'பாஜகவில் கட்சி வளர்க்கும் நான்கு நடிகைகள்' என்று பெயர்களைக் குறிப்பிட்டு பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், சர்ச்சைக்குரிய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.