Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "மேகதாது அணை" திட்ட அறிக்கை குறித்து... விவாதிக்க கூடாது – முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை! மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு; இன்று கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது என அவர் த…

  2. பூவா, தலையா சொல்லி கரு பாலினத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி மையங்கள் - சிறப்புச் செய்தி பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கருவில் இருப்பது பூவா தலையா? பூ என்றால் பெண் குழந்தை, தலை என்றால் ஆண் குழந்தை. இதுபோன்ற குறியீட்டுச் சொற்களை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஸ்கேன் மையங்களில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சொல்வதற்கு பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை 'பெண் குழந்தை' என தெரிய வந்தால் போலி மருத்துவர்கள் மூலமாக கருக்கலைப்பும் நடைபெறுகிறது என்று தெரியவந்துள்ளது. கடந…

  3. தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் - காரணம் என்ன? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@CHENNAIPOLICE_ சென்னை கொடுங்கையூரில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்திருப்பது, மாநிலத்தில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்புவை ஜூன் 11ஆம் தேதி இரவு நகை திருட்டு தொடர்பான ஒரு வழக்கின் விசாரணைக்காக காவல் துறையினர் அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்றனர். அவரை பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். …

  4. ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழப்பு 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@SHOBHABJP (இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (13/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) பந்திப்பூர் காட்டுப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்ததாக, 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த யானையின் உடல் கபினி அணை அருகே குழித்தோண்டி புதைக்கப்பட்டது. அச்செய்தியில், "கபினி அணையின் பின்புறம் உள்ள நாகரஒலே, பந்திப்பூர் வனப்பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அந்த யானை 'போகேஸ்வர…

  5. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 30 வயது விசாரணைக் கைதி மரணம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BOONCHAI WEDMAKAWAND / GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை செங்குன…

  6. ஆன்லைன் ரம்மி திறன்களை வளர்க்கிறதா? நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வுக்குழு அமைத்த தமிழ்நாடு அரசு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம் ஆன்லைன் ரம்மியில் பணத்தை ஏமாந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு உண்மையில…

  7. சத்குரு ஜக்கி வாசுதேவ் மண் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி பிபிசிக்கு சிறப்பு பேட்டி க.சுபகுணம் பிபிசி தமிழ் 9 ஜூன் 2022, 13:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'சேவ் சாயில்' இயக்கத்துக்காக 100 நாள்கள் 27 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஈஷா ஃபவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழுக்கு அளித்த ஒரு பிரத்யேக பேட்டியில், மண் வளப் பாதுகாப்புக்கான அவரது இயக்கம் பற்றியும் சர்ச்சைக்குரிய பிற பிரச்னைகள் பற்றியும் பேசினார். ஒரு கேள்வி கேட்டபோது, பிபிசியின் கேமராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யும்படி தனது தன்னார்வலர்களுக்கு …

  8. சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் எதிர்ப்பு 1 ஜூன் 2022 படக்குறிப்பு, சிதம்பரம் நடராஜர் கோயில். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை வரும் 7, 8 தேதிகளில் ஆய்வு செய்ய‌ இருப்பதாக அறிவித்துள்ளது. கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம…

  9. ஸ்ராலினை சந்தித்தார் மிலிந்த! June 4, 2022 இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் விடயங்களை பரிமாறிக்கொள்ள உரிய பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு இதன்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், தமிழ் தத…

  10. கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கண்ணகி முருகேசன். கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஒருவருக்கு தூக்க…

  11. தமிழகத்தில் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி - அரசாணை வெளியீடு Getty ImagesCopyright: Getty Images தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், குறைந்தபட்சம் 10 பேர் கொண்டு கடைகள், ஆண்டில் அனைத்து நாட்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அரசாணை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில், கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும், இரவு 8…

  12. முள்ளம்பன்றி தாக்கிய புலிக்குட்டி சிகிச்சைக்குப் பின் பாதுகாக்கப்பட்ட உறைவிடத்தில் விடுவிப்பு மோகன் பிபிசி தமிழுக்காக 5 ஜூன் 2022, 14:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு, புலிக்குப் பிறந்தது... முள்ளம்பன்றியால் தாக்கப்பட்டு வனத் துறையால் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காட்டில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உறைவிடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக வேட்டையாட புலிக்குப் பயிற்சி அளிப்பதே தங்கள் இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமல…

  13. தமிழ்நாடு அரசு மீது பாஜகவின் அண்ணாமலை ஊழல் புகார்: 'தனியார் கொள்முதலால் ரூ.77 கோடி இழப்பு' - மா. சுப்பிரமணியன் எதிர்வினை 5 ஜூன் 2022, 07:56 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ANNAMALAI_K TWITTER தமிழ்நாடு அரசின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் ஹெல்த் மிக்ஸ் பவுடர் மற்றும் ஐயன் சிரப் உள்ளிட்ட பொருட்களை தனியாரிடம் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். டெண்டர் விட இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அதற்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறுவது சரியல்ல என்கிறார் மக்க…

  14. கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி சிறுமி உட்பட 7 பெண்கள் பலி 5 ஜூன் 2022, 10:22 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்த 6 இளம் பெண்கள், ஒரு சிறுமி ஆகிய அனைவருமே உறவினர்கள். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இவர்கள் குளித்தார்கள். அப்போது இவர்கள் அனைவருமே நீரின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டு நினைவிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் த…

  15. நெல்லை மாவட்டத்தில் காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சு திணறி பலி - முழு விவரங்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கபட்டிருந்த காருக்குள் விளையாடச் சென்ற 3 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் நிதிஷ் (7), மகள் நிதிஷா (5) பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கபிஷன் (4) ஆகியோர் சனிக்கிழமை வீட்டின் எதிரே பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் கதவு பூட…

  16. தமிழ்நாட்டில் மூடப்படும் ஃபோர்டு ஆலை: கலங்கும் தொழிலாளர் குடும்பங்கள் பிரசன்னா வெங்கடேஷ், பிபிசி தமிழுக்காக பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த ஃபோர்டு தொழிற்சாலை விரைவில் மூடப்படவுள்ள நிலையில், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆலை மூடப்படுவதற்கு எதிராக, கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்கள் இதுவரை எந்த சுமூகமான நிலையும் எட்டப்படவில்லை எனக் கொந்தளிக்கிறார்கள். ஃபோர்டு நிர்வாகம் இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தை நட…

  17. கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்க…

  18. தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்களா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 1 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், தங்களால் பணியமர்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரது விவரங்களையும் பதிவுசெய்ய வேண்டுமென உள்ளாட்சி அமைப்புகள் கோரிவருகின்றன. இது குறித்து பல்வேறு வதந்திகள் வலம் வருகின்றன. என்ன நடக்கிறது? கடந்த மே 28ஆம் தேதியன்று ராமேஸ்வரம் நகராட்சியின…

  19. திருச்சி அகதிகள் முகாமிலிருந்து உலக தமிழர்களை நோக்கி வேதனை கலந்த வணக்கம் -காணொளி வணக்கம் மதிப்புக்குரிய எங்கள் உலக வாழ் தமிழர்களே... மிகமிக எங்கள் நெருக்கமானவர்களும் எப்பொழுதெல்லாம் நாங்கள் சோர்ந்து போகும் போது தோல்வி அடையும் போது எங்கள் அருகில் இருந்து எங்களுக்கு உதவும் நிறைந்த இரக்கமுள்ள எங்கள் உலக தமிழர்களுக்கு வேதனையோடு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஈழத் தமிழரது வாழ்க்கை போராட்டம் என்பதற்காகவே தொடங்கப்பட்டது இல்லையென்றால் போராடுவதற்கு பிறந்தவர்கள் என்று அறியாமல்.. இல்லை கடவுள் எழுதப்பட்ட விதி என்று தெரியாமல் தொடர்ந்து எங்கள் வாழ்க்கைக்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறோம். இன்று 10வது நாளாக நாங்கள் உண்ணாவிரத ப…

  20. பெண்கள் உடல்நலம்: சிசேரியன் பிரசவங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆம் இடம் - தேசிய குடும்பநல கணக்கெடுப்பு மோகன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒன்று சிசேரியன் முறையில் தான் நடைபெறுகிறது தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒன்று சிசேரியன் முறையில்தான் நடைபெறுகிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 11% வரை அதிகரித்துள்ளது மத்திய அரசின் தேசிய குடும்பநல கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பத…

  21. யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் 30 மே 2022, 06:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KARTHIK GOPINATH-ILAYA BHARATHAM கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ' கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மதுரகாளியம்மன் என்ற கோயிலில் நடக்கும் சித்தி…

  22. கச்சத்தீவை மீட்க நரேந்திர மோதியிடம் கோரிக்கை: மு.க. ஸ்டாலினுக்கு இலங்கையில் எதிர்ப்பு: தமிழ்நாடு அரசின் பதில் என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, கொழும்பில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@MKSTALIN இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழகத்திற்கு மே 26ம் தேதி பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இலங்கையில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியிடம…

  23. தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவரை தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்த பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் - முதல்வர் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி. இது அனைவரையும் உள்ளடக்கிய …

  24. பா.ம.கவின் தலைவராக அன்புமணி ராமதாஸ்: கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DRRAMADOSS/TWITTER பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இது அக்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா? சென்னை திருவேற்காட்டில் சனிக்கிழமையன்று நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பா.ம.கவின் இளைஞரணித் தலைவராக…

  25. தருமபுரியில் நவீன ஸ்கேன் மூலம் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு: 7 பேர் கைது - சிக்கியது எப்படி? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தருமபுரி மாவட்டத்தில் நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக, மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.