அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3339 topics in this forum
-
இந்தியர் உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு! இந்தியாவினைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொள்கின்றனர். உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காகவே இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. அபிஜித் பேனர்ஜி கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்தியர்-உள்ளிட்ட-மூவருக/
-
- 0 replies
- 263 views
-
-
அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று! உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மேலும் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் 10 ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்,14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தும், தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அரசிய…
-
- 0 replies
- 242 views
-
-
அயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது? அரசின் திட்டம் என்ன? சிறப்பு அதிகாரத்தை நீக்கியதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையை அதிரடி நடவடிக்கை மூலம் முடிவிற்கு கொண்டு வந்த பாஜக அடுத்து அயோத்தி பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு இருக்கிறது . அயோத்தி வழக்கு வரும் அக்டோபர் 17ம் தேதி முடிய உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் தற்போது அங்கு 144 தடையை உத்தரவு போடப்பட்டு உள்ளது. அங்க…
-
- 0 replies
- 241 views
-
-
சீன அதிபர் ஷி ஜின்-பிங் சென்னைக்கு வருவதையொட்டி சென்னையிலும் மாமல்லபுரத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வருகைக்கான ஒத்திகைகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. சீன அதிபர் ஷி ஜின்-பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமையன்று சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 2.10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்குச் செல்லும் ஷி ஜின்-பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாமல்லபுரத்திற்குச் செல்லும் வழியில் 34 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது. மாலை …
-
- 3 replies
- 676 views
-
-
“PM Modi இதை சொல்லியிருக்கலாம்ல..?” - காஷ்மீர் பற்றி China-வின் கருத்துக்கு Congress பதிலடி! Modi - Jinping meet: இந்திய அரசுத் தரப்பு, ‘காஷ்மீர் (Kashmir) எங்கள் உள்நாட்டு விவகாரம். அதில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளது. China அரசிடம் நாம் கேட்க நிறைய இருக்கிறது என்றும் கூறி, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி Manish Tewari. New Delhi: சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping) இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் சீன…
-
- 0 replies
- 425 views
-
-
ரஃபேல் போர் விமானங்களை, ஆயுத பூஜையுடன்... பிரான்சிடம் இருந்து இன்று பெறுகிறார் ராஜ்நாத்சிங்! பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொள்கிறார். ரஃபேல் போர் விமானத்துக்கு 'ஆயுத பூஜை' வழிபாடு நடத்தப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.பிரான்ஸின் பார்டியாக்ஸ் நகருக்கு அருகே உள்ள மெரிக்னாக் விமான படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த …
-
- 5 replies
- 577 views
-
-
இந்தியாவிற்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை! இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் 90 சதவீத நாடுகள், பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகப் பொருளாதாரமானது ஒருங்கிணைந்த மந்தநிலையைச் சந்தித்து வருவதாகவும் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியுள்ளார். பிரெக்ஸிற் மற்றும் அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை தான் இதற்குக் காரணம் எனவும் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவடைய நேரிடும் எனவ…
-
- 2 replies
- 766 views
-
-
இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதென…
-
- 0 replies
- 290 views
-
-
NDTV சேகரித்த விவரங்களின்படி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 111 கும்பல் தாக்குதல் (Lynching) நடந்துள்ளது. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளளனர். இந்த விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. Nagpur: கும்பல் தாக்குதல் (Lynching) என்பது மேற்கத்திய கலாசாரம் என்றும், அதனை இங்கு செய்து இந்தியாவின் பெயரைக் கெடுக்க வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கண்டித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது- இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த எல்லைக்குள் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண…
-
- 3 replies
- 943 views
-
-
இந்த தீபாவளிக்கு அனைத்து மகள்களையும் லட்சுமியாக வணங்கி கொண்டாட வேண்டும்.. மோடி .! டெல்லி: இந்த தீபாவளிக்கு அனைத்து மகள்களையும் லட்சுமியாக வணங்கி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், சிறப்புப் பூஜைகளும் நாடு முழுவதும் நடந்தது.டெல்லி அருகே துவாரகாவில் நடந்த தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராவணன் சிலை மீது அம்புவிட்டார். அதன்பின்னர் அவர் விழாவில் பேசுகையில், இந்த தீபாவளிக்கு அனைத்து பெண் குழந்தைகளையும் லட்சுமியாக பாவித்து வணங்கி கொண்டாட வேண்டும். மான் கி பாத் உரையில் நான் ஏற்கனவே க…
-
- 0 replies
- 296 views
-
-
Automatic Exchange Of Information ஒப்பந்தத்தின் மூலம் இந்த விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ் வங்கி கணக்கில் வைத்திருக்கிறார்கள். எனவே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கும். பாஜக, காங்கிரஸ் என இதில் வித்தியாசம் காண முடியாது. கேட்கும் போதெல்லாம் ஆளும் கட்சியும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி வைப்பார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளில் அனைத்திலிருந்தும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபா…
-
- 1 reply
- 500 views
-
-
பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு : அரசுக்கு சம்பந்தமில்லை என்கிறார் பிரகாஷ் ஜவடேகர்! இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அரசுக்கு சம்பந்தமில்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபான்மையினர் மீதான வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். இதற்கு எதிராக குறித்த 49 பிரபலங்கள் மீதும் தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும்…
-
- 0 replies
- 285 views
-
-
நமது விமானத்தை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு – பதாரியா நமது ஹெலிகொப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு என விமானப்படை தளபதி ரகேஷ் சிங் பதாரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி பதான்கோட் தாக்குதலுக்குப் பின் நமது விமானப்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது வானில் பறந்த நமது எம்ஐ-17 ரக விமானம் நம்முடைய ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் உயிரிழந்தனர். நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவ…
-
- 1 reply
- 825 views
-
-
ரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா? கொலையாளி வாக்குமூலம் தன் பாலின உறவு வைத்துக் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் குமார், அதற்கு பேசிய படி பணம் தராததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவை சேர்ந்தவர் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் குமார் (56). 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர் ஹைதராபாத் அமீர்பேட்டை அன்னப்பூர்ணா குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி இந்திரா சென்னையில் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் பணிக்கு வரவில்லை. இதனால் அவருடன் வேலை செய்பவர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவே இல்லை.இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் கொட…
-
- 0 replies
- 226 views
-
-
கும்பல் கொலைகளுக்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கூட்டு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் நடைபெற்று வரும் கும்பல் கொலைகள் குறித்து கவலை தெரிவித்து, இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட பலர் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அந்த கடிதத்தின் மூலம், 49 பிரபலங்கள் "நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தியதுடன், பிரதமரின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன், பிரிவினைவாத போக்குகளை ஆதரித்ததற்காக" இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார்தாரரான வழக்கறிஞர் ச…
-
- 0 replies
- 212 views
-
-
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் ஒரே வாரத்தில் 12.5 கோடி பேர் பலியாவார்கள் என்று அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ போல்டர் மற்றும் ரட்ஜெர் பல்கலைக் கழகங்கள் இணைந்து `எதிர்பாராத எதிர்க்கால மோதல் மற்றும் உலக பாதிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை `சயின்ஸ் அட்வான்ஸ்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய சூழலில் இந்தியா, பாகிஸ்தானிடம் தலா 150க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 200 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால், 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இரண…
-
- 2 replies
- 387 views
-
-
காந்தியின் உருவப்படத்தில் துரோகி என எழுதிய நபர்கள் அஸ்தியை திருடிச்சென்றனர்- மத்தியபிரதேசத்தில் சம்பவம் காந்தியின் 150 வது பிறந்தநாளை உலகம்கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவரது அஸ்தியை இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தின் ரேவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த பகுதியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் 1948 முதல் வைக்கப்பட்டிருந்த அஸ்தியை இனந்தெரியாதவர்கள் திருடிச்சென்றுள்ளனர். மகாத்மாகாந்தியின் உருவப்படத்தில் பச்சை நிறமையினால் துரோகியெனவும் அவர்கள் எழுதிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தேசத்தின் ஐக்கியத்திற்கு ஆபத்தானது அமைதியை குலைக்ககூடியது என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாப…
-
- 0 replies
- 578 views
-
-
நிஜாமின் சொத்துக்கள் இந்தியாவுக்கே சொந்தம் – இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு! லண்டன் வங்கியில் உள்ள ஹைதராபாத் நிஜாமின் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்தியாவுக்கே சொந்தம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நீதிமன்றம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. ஹைதராபாத்தை ஆண்டு வந்த நிஜாம் உஸ்மான் அலி கான் 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்ஸ் பணத்தை பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் முதலீடு செய்தார். இந்தப் பணத்தை பாகிஸ்தானுக்கான அப்போதைய இங்கிலாந்து தூதர் ஹபிப் இப்ராகிம் ரகிம்தூலா லண்டனில் உள்ள நற்வெஸ்ற் வங்கியில் வைப்பு செய்தார். 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த பணம் தற்போது 300 கோடி …
-
- 0 replies
- 194 views
-
-
அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி. அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகமாக வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சென்னை கிண்டியில் ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை வந்தார். அப்போது அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது பாஜக சார்பிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில் சென்னைக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஐஐடி நிகழ்ச்சியில் பங்கே…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஹிந்து, சீக்கியர், புத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் – அமித் ஷா சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறிய ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என உறுதியளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை பா.ஜ.க. அரசு கொண்டுவந்தே தீரும் என கூறினார். தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொய் பிரசாரம் செய்து வருவதாக கூறிய அவர், ஹிந்து, சீக்கியர்கள், புத்த மற்றும் கிறிஸ்தவ அகத…
-
- 1 reply
- 437 views
-
-
ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியில், பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்… October 2, 2019 ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். அதன்போது, காஷ்மீரில் தற்போது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டும் முயற்ச…
-
- 0 replies
- 366 views
-
-
இந்தியாவில் தொடரும் அடை மழையால் 110 பேர் உயிரிழப்பு! இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்து வரும் அடை மழையினால் உண்டான வெள்ளப் பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களில் சிக்கி மொத்தமாக 110 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி பீகாரில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 23 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 35 பேரும் உயிரிழந்துள்ளளதுடன் மொத்தமாக நாடு முழுவதும் 4 நாட்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் தலைநகர் பாட்னா, பாகல்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தது, சுவர் இடிந்து விழுந்தது உட்பட மழை தொடர்பான …
-
- 0 replies
- 311 views
-
-
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" புறநானூறு பாடலை பாடி அசத்திய மோடி !! ஐ.நா. அவையில் அதிரடி உரை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 130 கோடி இந்தியர்களின் சார்பாக பேசுவதாகக் கூறிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தம்மை தேர்ந்தெடுத்ததால், ஐ.நா.சபையில் பேச வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். அப்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களுக்கான மிகப்பெரிய மருத்துவ திட்டங்களை, தமது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், 2025ம் ஆண்டுக்குள், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ளத…
-
- 2 replies
- 474 views
-
-
காஷ்மீர் விவகாரம் : இம்ரான்கானின் கருத்தால் போர்கப்பலை நிறுத்தியுள்ளது இந்தியா! காஷ்மீர் விவகாரம் போருக்குத்தான் இட்டுச்செல்லும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள நிலையில், அரபிக்கடல் பகுதியில் இந்தியா தனது போர்கப்பலை தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பல்வேறு முறைகளில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் தோல்வியை தழுவவே பயங்கரவாதிகளை கொண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தி…
-
- 0 replies
- 382 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 2 replies
- 400 views
-