Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளியேற ஆர்வம் உள்ளவர்கள் வணிக விமானங்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளது. https:…

  2. கரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகள் வழங்க அனுமதி- புதிய நெறிமுறைகள் வெளியீடு கரோனா வைரஸ் தொற்றை குணப் படுத்த ஹைட்ராக்ஸி குளோரோ குவின் மாத்திரைகளை பயன் படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள் ளது. இதற்கான புதிய நெறிமுறை களை வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை எந்த நாட்டிலும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு மருந்தும் இதுவரை தயாராக வில்லை. உலகம் முழுவதும் 78 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட் சத்துக்கும் அதிகமானோர் உயி ரிழந்துள்ளனர். இந்நிலையில், மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின், அசித்ரோ மைசின் மாத்திரைகள் கொடுத்தால் …

  3. புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 25 வயதான பெண் ஒருவர் கடந்த 9 ஆண்டுகளில் தன்னை 139 பேர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஹைதராபாதின் புஞ்ஜகுட்டா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காட் பவர் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் நல்கொண்டா பகுதியை சேர்ந்த அந்த பெண் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண் மற்றும் காட் பவர் பவுண்டேஷனை சேர்ந்த ராஜசேகர ரெட்டியுடன் பிபிசி தெலுங்கு சேவை செய்தியாளர் தீப்தி பத்தினி தொலைபேசியில் பேசினார். புகார் அளித்த பெண்ணிற்கு 15 வயதில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. அவர…

  4. எல்லைப் பிரச்சினை : படைகளை திரும்பப் பெற இந்தியா – சீனா இணக்கம்! கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற இணக்கம் ஏற்பட்டுள்ளது. படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இந்திய – சீன இராணுவ அதிகாரிகள் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகயில் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் கோக்ரா இராணுவ ரோந்து பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாடுகள் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப்பெற உடன்பாடு…

  5. குஜராத் பாலம்: நரேந்திர மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு - அறியப்படாத தகவல்கள் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SONDEEP SHANKAR படக்குறிப்பு, 1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர் மோர்பி, மச்சு நதி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையேயான உறவு மிகவும் பழமையானது. நரேந்திர மோதி பொது வாழ்வில் முத்திரை பதிக்கத் தொடங்கிய இடம் மோர்பி. அந்த நகரில் மோதி என்ன செய்தார்? அது அவரது வளர்ச்சிக்கு எப்படி உதவியது? இவை பற்றி விவரிப்பதற்கு முன், சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு மோர்பியில் என்ன நடந்தத…

  6. 23 SEP, 2023 | 09:42 AM (ஆர்.சேதுராமன்) சீனாவில் இன்று ஆரம்­ப­மாகும் 19 ஆவது ஆசிய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­ற­வி­ருந்த இந்­திய வீராங்­க­னைகள் மூவ­ருக்கு, அனு­மதி அட்­டையை வழங்க சீனா மறுத்­துள்­ளது. இதற்கு கடும் ஆட்­சேபம் தெரி­வித்­துள்ள இந்­திய அரசு, தனது விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரின் சீன விஜ­யத்தை இரத்துச் செய்­துள்­ளது. அரு­ணாச்­சலப் பிர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த, 'வூசு' தற்­காப்புக் கலை வீராங்­க­னைகள் மூவ­ருக்கே அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் தமது அனு­மதி அட்­டையை தர­வி­றக்கம் செய்­து­கொள்ள முடி­ய­வில்லை. இந்த அனு­மதி அட்­டையே ஆசிய விளை­யாட்டு விழா­வுக்­காக சீனா­வுக்குச் செல்­வ­தற்­கான விசா­வாக…

  7. பட மூலாதாரம்,RSS(RASHTRIYA SAMACHAR SAMITI/NEWS AGENCY) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் ஆகும். அதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியவில் உள்ள மாநிலங்களிலும் உணரப்பட்டது. பிபிசி நேபாளி சேவையின்படி, வெள்ளிக்கிழமை இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் மேற்குப் பகுதியில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள க…

  8. நடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்.! தூத்துக்குடி: மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் இந்திய சரக்கு கப்பலில் தஞ்சமடைந்தது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.மாலத்தீவில் கருங்கல் இறக்கிவிட்டு இந்திய சரக்கு கப்பல் நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென படகில் வந்த நபர் ஒருவர் சரக்கு கப்பலை நடுக்கடலில் வழிமறித்திருக்கிறார்.படகில் இருந்தபடியே தம்மை காப்பாற்றி அழைத்து செல்லுங்கள் என கூச்சலிட்டிருக்கிறார். இதனால் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் படகில் இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் என்றும் இந்த நாட்டில் இருந்தால் என்னை கொலை செய்துவிடுவார்கள்…

  9. அயோத்தி நில உரிமை வழக்கு: நவ.13-ல் தீர்ப்பு வழங்குகிறார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்? அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 13-ந் தேதி தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லா, நிர்மோனி அகாடா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்…

  10. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்! ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 48 மணி நேரத்திற்குள் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தொ…

  11. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக தகவல்! சீனாவிலிருந்து கொரானா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியா 17ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா விமான நிலையங்கள் வாயிலாக கொரானா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுத் தகவல் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெர்மனியின் பெர்லினை சேர்ந்த ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், விமானப் போக்குவரத்தை மாதிரியாக கொண்டு, சீனாவை தவிர்த்து கொரானா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ள 30 நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ…

  12. 2 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 743 பேரில் 402 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் 338 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஏனைய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோயிலில் 2 இலட்சத்து 38ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் 16 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருப்…

  13. குடிசை வீடு, அரசு பேருந்தில் பயணம் – 4 முறை எம்எல்ஏவின் எளிய வாழ்க்கை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகபூப் ஆலம் என்பவர் 4 முறை எம்எல்ஏவாக இருந்தும், இன்னும் குடிசை வீட்டில் வசிப்பதோடு, அரசு பேருந்து, ரயில் பயணம் என எளிய வாழ்க்கை வாழ்ந்து வருவதால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சி வேட்பாளராக பல்ராம்பூர் தொகுதியில் 53000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆலம் பெற்ற மொத்த வாக்குகள் 1, 03,000. சிபிஐ எம்.எல் விடுதலை கட்சி தலைமறைவு இயக்கமாக இருந்த காலத்திலேயே அதில் 14 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்துள்ளார். இதற்முன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 12 ஆம் வக…

  14. 5 மாத குழந்தை டீராவின் சிகிச்சைக்குக் கிடைத்த ரூ.17 கோடி... ஒரு லட்சம் பேர் அளித்த நிதியுதவி! மு.ஐயம்பெருமாள் டீரா ( instagram.com/teera_fights_sma/ ) அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த 5 மாத குழந்தையை காப்பாற்ற இந்தியா உட்பட உலகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் 17 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர். மும்பையில் ஐடி கம்பெனியில் பணியாற்றும் மிஹிர் காமத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. டீரா என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை பிறந்து சில மாதங்களில் குழந்தையின் உடலில் ஏதோ மிகப்பெரிய கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது குழந்தையால் தலையைத் தூக்க முடியவி…

  15. சுதந்திர தினம்: 'காந்தி பாகிஸ்தானின் பாபு' என்று கோட்சே அளித்த வாக்குமூலத்தின் பின்னணி என்ன? வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், லாகூர் 12 ஆகஸ்ட் 2022, 01:10 GMT பட மூலாதாரம்,HULTON ARCHIVE சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய துணைக் கண்டம், பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாகப் பிரிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. ரத்தம் தோய்ந்த இந்தப் பிரிவினையால் இரு நாடுகளும் புண்பட்டிருந்தன. இருப்பினும் இரு நாட்டு தலைவர்களின் பேச்சில் கசப்பு இருக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளின் சுதந்திர வரலாற்றில் தவிர்க்க முடியாமல் பேசப்படும் பிரிவினை மற்றும் ஜின்னா, கா…

  16. Published By: SETHU 03 SEP, 2023 | 04:53 PM இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்தின் காக்­ராபர் அணு மின் நிலை­யம் முற்­றிலும் உள்­நாட்டில் மேம்­ப­டுத்­தப்­பட்ட 3 ஆவது அலகு மின் உலை முழு உற்­பத்தித் திறனை எட்­டி­யமை தொடர்பில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பாராட்டு தெரி­வித்­துள்ளார். 'எக்ஸ்' வலை­தள (முன்னர் டுவிட்டர்) பக்­கத்தில் பிர­தமர் மோடி வெளி­யிட்ட பதிவில், 'இந்­தியா மற்­று­மொரு மைல்­கல்லை எட்­டி­யுள்­ளது. முதல் உள்­நாட்டு அணு மின் உலை­யான 700 மெகாவாட் மின் உற்­பத்தித் திறன் கொண்ட காக்­ராபர் அணு மின் நிலை­யத்தின் 3ஆவது அலகு முழு உற்­பத்தித் திறனை எட்­டி­யுள்­ளது. அதற்­காக விஞ்­ஞா­னிகள் மற்றும் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு பாராட்­ட…

  17. உலகில் மத ரீதியாக தாக்குதல் நடக்கும் நாடுகளின் பட்டியல்.. டாப்பில் வந்த இந்தியா.. அதிர்ச்சி ஆய்வு ! டெல்லி உலகிலேயே மதம் சார்ந்த தாக்குதல்களும், துன்புறுத்தல்களும் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 நாடுகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் மார்க் ப்ரோமகர் என்பவர் தலைமையில் உலகம் முழுக்க பத்திரிக்கையாளர்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மதம் சார்ந்த பிரச்சனைகள் என்ன நடக்கிறது, சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. …

  18. ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் விண்ணுக்கு வெற்றிகரமாக சென்றடைந்தது ‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.இந்த செயற்கை கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும். ‘ஜிசாட்-31’ செயற்கை கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி …

  19. 28 JUL, 2024 | 12:56 PM புதுடெல்லி: ‘‘ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பயிற்சியில் ‘எதிரி’ விமானங்களை துல்லியமாக தாக்கின’’ என விமானப்படை கூறியுள்ளது. ரஷ்யாவிடம் எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. இது எதிரி நாட்டு போர் விமானங்களை நடுவானிலே சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை. இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காக 5 எஸ்-400 படைப்பிரிவுகளை ரூ.35இ000 கோடிக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 எஸ்-400 படைப்பிரிவுகளை ரஷ்யா இதுவரை விநியோகம் செய்துள்ளது. மீதமுள்ள 2 எஸ்-400 படைப்பிரிவு 2026-ம் ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விரைந்து விநியோகம் செய்ய இந்தியா வேண…

  20. ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து. ரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். இந்திய பிரதமர் மோடியின் ரஷ்யா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புடின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார். இரு நாட்டு தலைவர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது. இந்நிலையில், ஜெர்மனியில் நட…

  21. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது? ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிக்கப்பட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். ஐஎன்எக்…

  22. மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் எலி – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாலை 81 மாணவர்களுக்கு விநியோகம் செய்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி விலகும் முன்னர் மதிய உணவில் எலி கிடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹபூரைச் சேர்ந்த ஜன்கல்யான் சன்ஸ்தா கமிட்டி என்ற அரசுசாரா அமைப்பால் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டது. அந்த உணவானது, இன்று (புதன்கிழமை) மதியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மதிய உணவை வாங்க…

  23. தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண் பட மூலாதாரம்,Puneet Barnala படக்குறிப்பு,55 வயதான அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், குழந்தைகளைக் காப்பாற்ற தேனீக்களோடு போராடினார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த திவாரி பிபிசி செய்தியாளர் 7 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்." மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள். மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரி…

  24. இந்தியா - பாகிஸ்தான் எல்லை மோதல்: படையினர், பொதுமக்கள் உள்பட இரு தரப்பிலும் 14 பேர் பலி 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INDIAN ARMY ஜம்மு காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென மூண்ட சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த படையினர், பொதுமக்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டதாக இரு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் பக்கத்தில் மூன்று படையினரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பு கூறுகிறது. தங்கள் பக்கத்தில் நான்கு படையினரும், நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு குற்றம்சாட்டு…

  25. ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/1607923973130864-720x430.jpg அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாடுகளில் அவசரகால அனுமதிக்கான ஒப்புதலை பெற்றுள்ள இந்த தடுப்பூசியை இந்தியா வாங்க வேண்டுமானால் ஊசி ஒன்றுக்கு 2 ஆயிரத்து 728 ரூபாய் கொடுக்க வேண்டும். அதேநேரம் இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 737 ரூபாய் மட்டுமே ஆகும். அரசுகள் வாயிலாக மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு தடுப்பூசியை விற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.