Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல் எதிர்வரும் 5 மாநிலங்களுக்குமான சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ள நிலையிலெயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் திகதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதற்கமைய சத்தீஸ்கரில் முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 12…

  2. 7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி அரசு; தூதருக்கு இந்திய அரசு சம்மன் ஜெர்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து 20 மாதங்களுக்கு மேலாக பிரித்து வைக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு வேலை விசாவில் சென்ற அகமதாபாத்தைச் சேர்ந்த பாவேஷ் மற்றும் அவரது மனைவி தாரா அவரது பெண் குழந்தை அரிஹாவின் பிறப்புறுப்பில் காயம் இருந்ததைத் தொடர்ந்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதன் பிறகு அரிஹாவை ஜெர்மன் நிர்வாகம் வ…

  3. போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் வரவேற்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் மற்றும் கண்ணியம் நாளாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9 அன்று, ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்சு தெரிவித்துள்ளது. போர்க்குற்றவாளி 2019 ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மி…

    • 15 replies
    • 1.4k views
  4. படத்தின் காப்புரிமை NARINDER NANU Image caption (கோப்புப்படம்) இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்க்லானா பகுதியில் இன்று (திங்கள்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த தீவிரவாதிகள் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், வியாழனன்று புல்வாமாவில் நடந்த தாக்குதலை திட்டமிட்டவர் என்று கருதப்படும் அப்துல் ரஷீத் காஸி இன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்று ராணுவ தகவல்கள் கருதுகின்றன. …

  5. ‘ஐ.என்.எஸ் விராட்’ கப்பலை உடைப்பதற்கு எதிர்ப்பு! இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ் விராட்’ என்ற கப்பலை உடைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெச்.எம்.எஸ் ஹெர்ம்ஸ் என்ற கப்பல், கடந்த 1959ஆம் ஆண்டு பிரித்தானிய ரோயல் நேவியில் பணியில் சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1982ஆம் ஆண்டு பாக்லாந்து தீவுகளுக்காக ஆர்ஜெண்டினாவுடன் பிரித்தானியா போரிட்டபோது, இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது. பிரித்தானிய இளவரசர் சார்லஸ் இந்த கப்பலில் ஹெலிகாப்டர் விமானியாக பணியற்றியுள்ளார். பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலாக இருந்த இந்தக் கப்பல், கடந்த 1985ஆம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றது. அதன் பின்னர், 1987ஆம் ஆண்டு பழுதுகள் நீக்கப்பட்டு இந்தியாவிற்கு விற்பனை செய்ய…

  6. த்வாங் ரிக்ஸின், லேவில் இருந்து, பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கி மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. …

    • 2 replies
    • 661 views
  7. பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்- அமித்‌ஷா பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாதென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம்- ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமித்ஷா மேலும் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை உங்களால் முடிந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் ம…

  8. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 10:30 AM இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5:20 மணியளவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே, கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக தெளிவற்ற நிலையில் கௌரிகுண்ட் காட்டு பகுதியில் விழுந்து விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாண்ட் மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217490

  9. இந்தியா, பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 27 ஆம் திகதி இருவரும் சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், குறித்த கர்ப்பிணிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததால் உடனே அவரை வைத்தியசாலையில் உள்ள தனியறையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ள நிலையில், பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். வீடு திரும்பிய 3 ஆவது நாளில் அந்த பெண்ண…

    • 1 reply
    • 336 views
  10. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு திட்டம் – ராஜ்நாத் சிங் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக நடத்திய ஜம்மு ஜன் சம்வாத் பொதுக்கூட்ட உரையில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும் நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து பேசிய ராஜ்நாத் சிங் “இந்த…

  11. மாநிலங்களவையில் நரேந்திர மோதி: "எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சியை கலைத்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV RAJYA SABHA ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து எவ்வளவு அதிகமாக சேற்றை வாரி வீசினாலும் அதை விட அதிகமாக தாமரை சிறப்பாக மலரும் என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இன்றைய உரையின்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுகவினரை பார்த்துப் பேசிய மோதி, "தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் அரசை காங்கிரஸ் கலைத்…

  12. விரைவில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு – உச்ச நீதிமன்றம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின் போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சம்பந்தப்பட்ட அமைச்சின் மனுதாரர் கோரிக்கை வைக்க முடியும் எனவும் நான்கு வாரத்தில் உரிய பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை அணு…

  13. Published By: DIGITAL DESK 3 16 DEC, 2023 | 10:54 AM இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது. கேரளாவில் நேற்று 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கேரளாவில் தற்போது பர…

  14. படத்தின் காப்புரிமை Getty Images பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு ஒப்பந்தங்களில் சௌதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது. சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தனது நாட்டில் நிலவும் நிலையற்ற பொருளாதாரத்தை சரிகட்டுவதற்கு சர்வதேச உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த முதலீடுகளின் மூலம் சௌதி அரேபியா கைக்க…

  15. இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய இருப்பதாக பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்திருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அஜய் குமார் மேலும் கூறியுள்ளதாவது, “விமானப்படை திறனை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது. அந்தவகையில் 200 போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதேவேளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தேஜாஸ் மார்க்-1 என்ற 83 இலகுரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறு…

  16. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பினராயி விஜயன் சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு. முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப…

  17. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையைப் பயன்படுத்தி பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான செய்தியை வழங்கினார். அதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு “சில நாடுகள்” வழங்கும் வெளிப்படையான ஆதரவை இனியும் பொறுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் 25 ஆவது SCO உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இதன்போது தனது உரையினை உறுதியாக வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “ப…

  18. ஊரடங்கால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றுநீரின் தரம் மேம்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 12:09 PM லக்னோ வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, மார்ச் 25 ந்தேதி முதல் மத்திய, மாநில அரசுகள், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.இதனால், பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படு கின்றன.இதையடுத்து, காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது.வாகன போக்குவரத்து இல்லாமல், டில்லி உள்ளிட்ட, 90 நகரங்களில் காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூட…

  19. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா தொற்று அதிகரிப்பு! மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனாவால் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மும்பையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக தாராவி காணப்படுகின்ற நிலையில் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 733ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமன்றி நேற்று அங்கு ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் தாராவியில் மரணித்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/மும்பையில்-தமிழர்கள்-அதி/

  20. "ஏர் இந்தியா" நிறுவனத்தின்... வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன. ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் இணையத்தின் வாயிலாக திருடப்பட்டுள்ளமையினால் சுமார் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை அதிகளவு பயணம் மேற்கொண்டவர்களின் பெயர், பிறந்த திகதி, கிரடிட் அட்டைகளின் விபரங்கள், தொலைபேசி இலக்கம் மற்றும் இரகசிய இலக்கங்கள் ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு ஏர் இந்தியா விமான நிறுவனம் மாத்திரமன்றி சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ், மலேசியா ஏயார்லைன்ஸ், கேத்தே பசிபிக், லூஃப்தன்ஸா, ஃபின் ஆகிய விமான நிறுவனங்களுடைய வாடிக்கையாளர்களின் விபரங்களும் திருடப்பட்டுள்ளம…

  21. சட்டவிரோதமாக... இந்தியாவில் தங்கியிருந்த, 30இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது! கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர் சென்ற நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் 6 முதல் 7 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…

  22. கொவிட் -19 க்கு இடையில் காஷ்மீரில் வருடாந்த 'கீர் பவானி மேளா' அனுஸ்டிப்பு மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தின் துல்முல்லா பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறம் 'கீர் பவானி மேளா' இடம்பெற்றது. கொவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் பெருந்தொகை மக்கள் கூட்டங்கள் இன்றி இந்த அனுஸ்டிப்புகள் இடம்பெற்றன. இருப்பினும், சிலர் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். துல்லமுல்லா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவியின் கோவிலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் சுகாதார முறைகளை பின்பற்றி திரண்டனர். தெய்வத்தின் புனித சடங்குகள் மற்றும் ஆரத்தி ஆகியவை கோவிலில் குருக்கள் பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டன. இந்த மத சடங்கினை சமூக ஊடகங்கள் மூலம் கோவிலுக்கு வரமுடியாமல…

  23. ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி தேவி புகைபடம் வேண்டும்… அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் ரூபாய்களில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், அதுபோல் இந்திய ரூபாயில் மாற்றம் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்தப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்த…

  24. அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும்: அமித்ஷா தகவல்! அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள சப்ரூம் என்ற இடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் 5ஆம் திகதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுவதற…

    • 3 replies
    • 247 views
  25. கொவிட்-19 ஐ ஒத்த வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பரவுகிறது! கொவிட்-19 வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர் இருமல் ஆகியவை இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக இந்திய சுகாதாரத் துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குழுவைச் சேர்ந்த H3N2 உப பிறழ்வு வகை என அடையாளம் காணப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/243387

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.