Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளடக்கம் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளதுடன், ஜூன் முதலாம் திகதி முதல் ரயில் சேவையும் தொடங்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 139,237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4024 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,745 பேர் கொரோனா ப…

  2. கொரோனா வைரஸ்: ‘’பொறுமை இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றனர்’’ - நரேந்திர சிங் தோமர் ஜுகல் புரோஹித் பிபிசி செய்தியாளர் Getty Images இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பொறுமையில்லாததால் சாலைகளில் நடந்தும், கூட்டமான ரயில்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் என மத்திய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முதல் கட்ட பொது முடக்கநிலையை அரசு திட்டமிடும் போது, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு கணித்ததா என கேட்டதற்கு,'' சிறந்த பொருளாதார வாய்ப்புகளுக்காக மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் புலம் பெயர்ந்து செல்கின்றனர். பொது முடக்கம் அறிவிக்கப்படும் போது புலம்பெ…

  3. இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா? 5 Views 1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நி…

  4. மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு! மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடந்த குழப்பத்தின்போது மத்திய துணை இராணுவ வீரர்களே வாக்காளர்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளைய தினம், முதல்வ…

  5. ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி Posted on December 12, 2021 by தென்னவள் 17 0 ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செ…

    • 0 replies
    • 189 views
  6. அமித்ஷாவின்... வருகைக்கு எதிராக, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவித்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரச நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2022/1278247

  7. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் இந்திய விஜயம் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 01:59 PM இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவும் சவுதி அரேபியாவும் வரலாற்று ரீதியான உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளன. எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் நீண்ட காலமாக வலுப்பெற்றுள்ளது. காலனித்துவ காலத்திற்கு முன்பே, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாலியில் நடக்க இருக்கும் ஜீ 20 உச்சிமாநாட்டிற்கு செல்லும் போது, நவம்பர் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு ஒரு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜவஹர்லால…

  8. நிரவ் மோடியின் 56 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம் November 7, 2018 பஞ்சாப் நஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய், பண மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி ஓடிய மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடியின் 56 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நிரவ் மோடியும் இவரும், இவரது உறவினர் மெ{ஹல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றதனையடுத்து இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமுலாக்கதுறையினர் விசாரித்து வருகின்றனர். நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு அமுலாக்க துறை பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவர் முன்னிலையாகாத க…

  9. மனித கடத்தல் ; தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் ; பிரான்ஸில் சிக்கி தவித்த 276 இந்தியர்கள் நாடு திரும்பினர் Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 10:22 AM மனித கடத்தல் முறைப்பாடு காரணமாக விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரான்ஸில் சிக்கித் தவித்த 276 இந்தியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மும்பையைச் சென்றடைந்துள்ளனர். இந்நிலையில், 27 பேர் பிரான்ஸில் தங்க அனுமதி கோரி உள்ளனர். லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 சிறுவர்கள் (தனியாக) உட்பட 303 பேருடன் கடந்த வாரம் நிக்கரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸின் வாட்ரிவிமான நிலையத்தில் தரையிறங்கிஉள்ளது. …

    • 0 replies
    • 132 views
  10. புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு தடைவிதித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய பாடல்களை இந்திய படங்களில் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹிந்தி திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வந்த நிலையில் இனிமேல் …

  11. பீகாரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரிப்பு! பீகார் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த மாநிலத்தில் வெயிலின் தாக்கம் வரலாறு காணாதவகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவத…

  12. ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அரச அலுவலகம் ஒன்றின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேகரிக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மரோப் மாவட்டத்தில் அரச அலுவலகத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்றிரவு கார்குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த அலுவலகத்துக்குள் இருந…

  13. கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன கட்டுரை தகவல் எழுதியவர்,சஞ்சயா தகல் பதவி,பிபிசி நியூஸ் நேபாளி 21 டிசம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,Sanjaya Dhakal/BBC படக்குறிப்பு,காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன இருபத்தி ஐந்து…

  14. Published By: Vishnu 01 Sep, 2025 | 06:21 PM (நா.தனுஜா) பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட திங்கட்கிழமை (1) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அண்மைக்காலத்தில் நடாத்திவரும் சந்திப்புக்களின் ஓரங்கமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனான சந்திப்பு திங்கட்கிழமை (1) புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது சமகாலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்திவரும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றின் விளைவாக எதிர்வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விசேடமாகக் கலந்துரைய…

  15. புதுடில்லி சிறுமியின் மரணத்திற்கு பொறுப்புக்கூறல் கோரும் அடையாளங்களை வைத்தே போராட்டக்காரர்கள் அணிவகுத்தனர். "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர், அதில் "இந்தியாவின் மகளுக்கு நீதி" என்று எழுதப்பட்டிருந்தது. 9 வயது சிறுமியின் பெற்றோர் தங்கள் கிராமத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் தற்காலிக மேடையில் அமர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். சிறுமியின் தாயார் கதறி அழுதார், சில சமயங்களில் தனது மகள் "திரும்பி வா" என்று அழைத்தார். அதிகாலையில், சுமார் 80 எதிர்ப்பாளர்கள் இருந்ததாக போலீசார் மதிப்பிட்டனர். எவ்வாறாயினும், கூட்டம் விரைவில் பெருகியது, சிஎன்என் குழு தரையில் மதிப்பீட்டை 300 க்கு அருகில் வைத்தது. போராட்ட இடத்திற்கு 200 பாதுகாப்புப் படையினர் நியமிக்கப…

  16. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்! இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொரில் சுமார் 26 சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வங்கி சீர்த்திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1251934

  17. பட மூலாதாரம்,TIFR கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1966 ஜனவரி 23 ஆம் தேதி ஹோமி பாபா, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) அலுவலகத்தின் நான்காவது மாடியில் நாள் முழுவதும் வேலை செய்துகொண்டிருந்தார். "அன்று பாபா என்னிடம் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். நான்கு நாட்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்க இருந்த இந்திரா காந்தியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் என்னிடம் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று அவர் பாபாவிடம் கூறினார். அவர் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட…

  18. விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - நெகிழ்ச்சி சம்பவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: 'விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்' சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரிய…

  19. கட்டுரை தகவல் எழுதியவர், ரியாஸ் சோஹைல் பதவி, பிபிசி உருது, கராச்சி 24 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கஸ்பானோ பலூச்சின் வீடு குவாதர் துறைமுகத்தின் பழைய பகுதியில் உள்ளது. அது இப்போது மழையால் முற்றிலும் இடிந்ததுவிட்டது. இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவரது மருமகன் ஒரு தையல்காரரிடம் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். மீன்பிடி துறைமுக சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் கஸ்பனோ. 16 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதாகவும், தண்ணீரின் அளவு மிகவும் அதிகமாக இருந்ததாகவும் கூறுகிறார். கஸ்பானோவின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டில் தாக்கிய புயலை விட இது மிகவும் ம…

  20. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை. இந்தியாவின் நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிபிசியின் ஃபேஸ்புக் நேரலையில் இந்த அறிக்கை குறித்த தனது கருத்துக்களை செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பகிர்ந்துகொண்டார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் க. ஜோதி சிவஞானம். அந்த உரையாடலில் இருந்து: வியாழக்கிழமை வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது இது ஓர் ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கைதான். வருடாவருடம் பொரு…

  21. படக்குறிப்பு, 1990-களில் குழந்தையாக இருக்கும்போது கைவிடப்பட்ட பின்னர் காப்பாற்றப்பட்ட மோனிகாவைச் சந்திக்கும் போது மருத்துவச்சி சீரோ உடைந்து அழுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், அமிதாப் பராசர் பதவி, பிபிசி ஐ புலனாய்வுகள் 11 செப்டெம்பர் 2024, 05:09 GMT புதுப்பிக்கப்பட்டது 11 செப்டெம்பர் 2024, 05:32 GMT மருத்துவச்சியான சீரோ தேவி, மோனிகா தாட்டேவை கட்டிப்பிடித்து அழுகிறார். 20களில் இருக்கும் மோனிகா, தான் பிறந்த இடத்திற்குத் திரும்பியிருக்கிறார். இந்த இந்திய நகரத்தில்தான் சீரோ நூற்றுக்கணக்கான குழந்தைகளை பிரசவிக்க உதவியிருக்கிறார். சீரோ அழுததற்குக் காரணம், பிரசவிக்க தான் உதவிய குழந்தையை மீண்டும் சந்தித்…

  22. படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA / BBC பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பட்டாலாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்புக்கு பின்னர், தொழிற்சாலை கட்டடம் இடிந்தது. பல தொழிலாளர்கள் இதில் சிக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA/BBC இதுவரை 19 பேர் இறந்துள்…

  23. மோடியின் பாதுகாப்பிற்காக 600 கோடி ஒதுக்கீடு! பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்காக வரவு செலவு திட்டத்தில் சுமார் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த வருட நிதியொத்துக்கீட்டிலும் பார்க்க அதிகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் தற்போது 3000 பேர் கொண்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த குழுவிற்கே 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பிடப்படுகிறது. பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு குறித்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 2003இல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, எஸ்.பி.ஜி பாதுகாப்புக் காலத்தை, அச்சுறுத்தலின் அளவைக் கருத்திற்கொண்டு மாற்றம் செய்யலாம் எனத்…

  24. மே 3 வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை என அறிவிப்பு! by : Benitlas எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை என பஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ஆம் திகதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, மளிகை, மற்றும் உணவு பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. …

    • 0 replies
    • 359 views
  25. காஷ்மீர் பள்ளத்தாக்கில்... பயங்கரவாத பயிற்சி முகாம்கள், இயங்கி வருகின்றன – காவல்துறை காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குறித்த முகாம்களில் 60-80 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக்கு அப்பால் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் ஆரம்பித்துள்ளதாகவும், அங்கு 60 முதல் 80 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பயிற்சி பெறுபவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் பங்கேற்று திரும்பியவர்களாக இருக்கலாம் எனத் தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.