Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவின் இரண்டாவது பிரமாண்ட ஆதியோகி திருவுருவம் திறந்துவைப்பு! பெங்களூர் அருகே உள்ள சிக்கபல்லாபூரில் இந்தியாவின் இரண்டாவது ஆதியோகி திருவுருவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்துள்ளார். இதன் திறப்பு விழா ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் முன்னிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதியோகிக்கு முன்பாக, யோகேஸ்வர லிங்கத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பிரதிஷ்டை செய்து வைத்தார். ஆதியோகி திருவுருவம் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி, சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும், ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ நிகழ்ச்சியும் நடைபெற்றது.…

  2. விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் – முக்கிய ஆவணங்கள் சிபிஐ வசம்… January 1, 2019 விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் 431 கோடி ரூபா லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி ரூபாவுக்கு 12 நவீன ஹெலிகொப்டர்கள் வாங்கியதில் இடைத்தரகர்கள் மூலம் இந்தியர்களுக்கு லஞ்சம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பிரித்தானியாவினைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரை அண்மையில் கைது செய்துள்ள சிபிஐ தற்போது காவலில் வைத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இடைத்தரகர்கள் கிறி…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இலங்கை புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாலத்தீவு அதிபர் முய்சு கட்டுரை தகவல் எழுதியவர், இஷாத்ரிதா லஹரி பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நியூயார்க்கில் ஐநா பேரவை கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே காணப்படும் நட்புறவை சுட்டிக்காட்டியுள்ளது. வங்கதேசத்தின் மறுசீரமைப்புக்கு யூனுஸ் 'அதிக முயற்சிகளை' மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. …

  4. இந்த கிராமத்தில் அனைத்து ஆண்களும் கட்டாயம் 2 திருமணங்களைச் செய்து கொள்ள வேண்டும். எந்த கிராமம்? இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்சால்மரில் உள்ள ராம்தேயோ-கி-பஸ்தி கிராமத்தில் வினோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் கட்டாயம் இரண்டு திருமணங்களை செய்து கொள்வார்களாம். இதனை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னால் அதிர வைக்கும் காரணம் ஒன்றும் உள்ளது. நமது நாட்டில் இந்து திருமண சட்டத்தின்படி பலதர மணம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த கிராமத்தில் ஆண்கள் பல திருமணங்களை செய்கின்றனர். அதாவது…

  5. தாய்லாந்து, இலங்கைக்கான பயணத்திற்கு முன் மோடியின் அறிக்கை! இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்துக்கு முன்னதாக பாங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) தாய்லாந்து புறப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 26% தள்ளுபடி பரஸ்பர வரிகளை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் மோடி இந்த விஜயம் அமைந்திருந்தது. மோடிக்கும் வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் மொஹமட் யூனுஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அல்லது சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்து தாய்லாந்து பயணத்தின் போது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இந்தப் பயணத்தைத் திட்டமிடுவது குறித்து நன்கு அறிந்தவர்கள், ம…

  6. FATF இன் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்: 150 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு காலக்கெடு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு 150 கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரான்சின் பரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும், FATF என்ற நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு, சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கப்படுவதை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது. இந்தப் பட்டியலில் இருந்து விடுபட, ஏற்கனவே 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதில் 22 நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. வரும் 2020 பெப்ரவரிக்குள் இவற்றை நிறைவேற்றாவிட்டால் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும். இந…

  7. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி?- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஜெகன்மோகன் சந்திப்பு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக் கிறார். அப்போது, பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்தும் அவர் பேசவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பே ரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 151-ல் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். இது போல் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் கட்சி வெற்…

  8. தலிபான்களின் தாக்குதலில் பிரபல இந்திய புகைப்பட செய்தியாளர் பலி ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்குவதற்காக இராணுவம் தாக்குதல் நடத்துவதும், இராணுவத்தினர் மீது தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார்…

  9. இந்தியாவில்... கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால், ஆசிய நாடுகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது – WHO இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில், ”தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த வாரம் சுமார் 7 இலட்சத்து 99 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது முந்தைய வாரத்தை விட 5 சதவீதம் குறைவாகும். அந்தப் பிராந்தியத்தில் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில், கடந்த வாரம் இலங்கையில், 26 வீதமும் தாய்ல…

  10. இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு இருப்பது ஒமிக்ரான் திரிபு என்பது ஜெனோம் சீக்வன்சீங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது. கொரோனா வைரசில் ஏற்படும் மரபணுத் திரிபுகளை ஆராய்வதற்காக இந்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்திய இன்சாகாக் கன்சார்ட்டியம் (INSACOG consortium) மூலம் செயல்படுத்தப்படும் ஆய்வகம் இந்த ஜெனோம் சீக்வன்சீங் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெனோம் சீக்வன்சிங் என்பது ஓர் உயிரியின் மரபணுக் குறிப்புகள் முழு…

  11. பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பிய சரக்குகளை இந்தியா தடுத்து நிறுத்தியது ஏன்? என்ன நடந்தது? பட மூலாதாரம்,PTI 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் உள்ள சுங்கத் துறையினர், பாகிஸ்தானின் கராச்சிக்கு அனுப்பப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களைக் கைப்பற்றினர். அந்தப் பொருள் சீனாவில் இருந்து அனுப்பப்பட்டது. இத்தாலியின் ஜிகேடி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு நவீன கணினி எண் கட்டுப்பாடு (CNC) இயந்திரங்கள் அதில் அடங்கும். பாகிஸ்தான் தனது அணுசக்தித் திட்டத்தில் இந்த மீண்டும் பயன்படுத்தக்கூரிய பொருளைப் பயன்படுத்தலாம் என்று தி இந்து செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. ஓர் ஆதாரத்தை மே…

  12. இந்தியாவுடனான பிரச்சினை: விமானங்கள் பறக்க நேரகட்டுப்பாட்டை விதித்தது பாகிஸ்தான்! இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக பாகிஸ்தான் தீர்மானித்துள்ள நிலையில், தங்கள் நாட்டு வான் பகுதியில் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் நேர கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடைமுறை கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் அடுத்த மாதம் 5ஆம் திகதிவரை ‌பின்பற்றப்படும் என‌வும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை தவிர ஏனைய அனைத்து நாட்களும் அதிகாலை 2.45 ம‌ணி முதல், முற்பகல் 11 மணிவரை ‌விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. லாகூர் பகுதியின் அனைத்து வழித்தடங்களையும் பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை மா…

  13. மோடிக்கு எதிராகப் பேசினால்.... உயிருடன் எரிக்கப்படுவீர்கள் - உபி அமைச்சர் சர்ச்சை பேச்சு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசியசர்களை உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள், பல்கலை, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மோடிக்கு எதிராகப் பேசியவர்கள் உயிருடம் எரிக்க வேண்டும் என பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தர…

    • 0 replies
    • 265 views
  14. அஸ்ஸாமில் எரிவாயு கிணறு தீ பிடித்து எரிவது ஏன்?- ஆயில் இந்தியா நிறுவனம் விளக்கம் அஸ்ஸாமில் தீன்சசுக்கியா மாவட்டத்தில் பக்ஜானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு கிணறு வெடி விபத்து பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆயில் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸாமில் தீன்சுக்கியா மாவட்டத்தில் உள்ள பக்ஜான் எண்ணெய் வயலின் கீழ் உள்ள வாயு உற்பத்தி கிணறு பக்ஜான்- 5, பணி மாற்று இயக்க வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது 27 மே 2020 அன்று திடீரென்று செயல்படத் துவங்கி, வெடி விபத்து நேரிட்டது என்று, பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தக் கிணற்றிலிருந்து கட்டுப்படுத்த …

  15. சீன அத்துமீறலைக் கண்காணிக்க இந்திய இராணுவத்திற்கு அதிநவீன ஆளில்லா விமானங்கள்! இந்தியா – சீனாவுக்கு இடையிலான எல்லையை துல்லியமாகக் கண்காணிக்க இந்திய இராணுவத்திற்கு நவீன ஆளில்லா விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘பாரத்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தயாரித்து வழங்கியுள்ளது. இந்தியா – சீனா இடையே நீண்ட நிலப்பரப்பு எல்லை காணப்படுகிறது. அதில் முக்கியமாக இமயமலை, லடாக் போன்ற கடும் பனிப்பொழிவான இடங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில், பனி காலநிலையைப் பயன்படுத்தி சீன இராணுவம் இந்திய எல்லையைத் தாண்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை அவ்வப்போது முன்னெடுத்து…

  16. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் யோசனை நிராகரிப்பு: “போராட்டம் நீடிக்கும்” என்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு புதுடெல்லி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லி சிங்கு எல்லையில், விவசாய …

  17. ஜி.எஸ்.எல்.வி எப் -10 விண்கலத்தின் பயணம் தோல்வி! பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி எப் -10 விண்கலத்தின் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈஓஎஸ்-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப் 10 என்ற ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்பட்டது. இருப்பினும் எதிர்பாராத விதமாக கியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக ரொக்கெட்டின் பயணத் திட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக இஸ்ரோ தலைமை விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார். http…

  18. தாயின் 100ஆவது பிறந்தநாள் ; பாதபூஜை செய்து ஆசி பெற்ற இந்திய பிரதமர் மோடி தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை ஒட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாயாரின் பாதங்களைக் கழுவி ஆசி பெற்றுள்ளார். நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (17) 100-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்று அவரிடம் ஆசி வாங்கினார். இதனைத் தொடர்ந்து, தனது தாயார் குறித்து டுவிட்டரில் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், இந்த நாளில் எனது தாயார் ஹீராபென் மோடி 100-வது ஆண்டில் நுழைந்திருக்கிறார். இந்த சிறப்புமிக்க நாளில் மகிழ்ச்சியும், உணர்ச்சியும் மிகுந்த …

  19. 'ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு' - CUET நுழைவுத் தேர்வு விவாதம் ஆவதன் பின்னணி என்ன? மோகன் பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொதுவான நுழைவுத் தேர்வு (கியூட்) நடத்தப்படும் என இந்திய கல்வித் துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. அதுவே இப்போது விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. இந்திய கல்வித்துறையின் அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்பட மாநில கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் கீழ் வரும் பல்கல…

  20. 26 OCT, 2023 | 11:09 AM இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டது. அதன்பின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், பாடசாலை பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இக்குழுவின் தலைவரும், …

  21. நாடாளுமன்ற தொகுதியில் பிரதமரை எதிர்த்து விவசாயிகள் போட்டி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகின்றார்கள். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றார். இந்நிலையில், இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, மோடியை எதிர்த்து விவசாயிகள் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தற்போது, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரத…

  22. படத்தின் காப்புரிமை AFP இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிட…

  23. இந்தியாவை அறிவோம்: மகாராஷ்டிரம் வெ.சந்திரமோகன் இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலம். தலைநகர் மும்பை. மெளரியப் பேரரசர்கள், சாதவாகனர்கள், வாகாடகப் பேரரசர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், தேவகிரி யாதவப் பேரரசர்கள், முகலாயர்கள், மராத்தாக்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்த மாநிலம். கி.பி.7-ம் நூற்றண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்பில் மகாராஷ்டிரம் எனும் பெயர் முதலில் பதிவானது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி, பம்பாய் மாநிலம் உருவாக்கப்பட்டது. எனினும் மராத்தி, குஜராத்தி, கட்சி, கொங்கணி என்று பல்வேறு மொழிகள் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது. சம்யுக்தா மகாராஷ்டிர சமிதி…

  24. கடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை இரான் பிடித்துவைத்துள்ளது. இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, தாய் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், "இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இரான் அரசுடன் தொடர்ந்து தொட…

    • 0 replies
    • 533 views
  25. விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய மத்திய அமைச்சர். 1987 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ருவிற்றர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் 1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இளம் அதிகாரியாக கடமையாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்துக் கூறி, டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் என மேலும் ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Hardeep Singh P…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.