அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
மலேசியா மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கோலாலம்பூர் : மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் …
-
- 0 replies
- 181 views
-
-
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்: ஐ.நா.வில். இந்தியா புகார்! பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 463 புகார்கள் அந்நாட்டின் விசாரணை ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர…
-
- 0 replies
- 174 views
-
-
சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி Published By: RAJEEBAN 03 MAR, 2023 | 03:39 PM சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதா ல் அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/149641
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து: சட்டசபை தேர்தல் முடிவுகள் 2023 - நேரலை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய வட கிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் இந்த மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று அதன் முடிவுகள் வெளியாகிறது. திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியிலோ அல்லது ஆட்சிக் கூட்டணியிலோ உள்ளது. …
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் நியமன விவகாரம்: மாநில கட்சிகளின் குரலுக்கும் இடம் வேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்களை இந்தியாவின் மத்திய அரசாங்கம் மட்டுமே முடிவெடுத்து நியமிக்கக் கூடாது, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட குழு முடிவெடுத்து இந்த நியமனத்தை செய்யவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. …
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு ஜார்ஜ் ரைட் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அப்…
-
- 10 replies
- 495 views
- 1 follower
-
-
மனைவி கொலை: பத்து வருடங்களுக்கு பிறகு போலீஸிடம் பிடிபட்ட தலைமறைவான கணவர் பட மூலாதாரம்,BHARGHAV PARIKH 4 மணி நேரங்களுக்கு முன்னர் ’நான் வேறு ஏதேனும் வேலைக்கு சென்றிருந்தால், என்னை யாராவது அடையாளம் கண்டிருப்பார்கள். அதனால் காவல் துறையினரிடம் நான் பிடிபட்டிருக்கலாம். அதனால்தான் நான் வெளியுலகை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ஒரு உணவு விடுதியின் கொல்லைப்புறத்திலேயே தங்கினேன். பத்து ஆண்டுகளாக இப்படிதான் நாட்களை கடத்தி வந்தேன். ஆனால் இப்போது காவல் துறையினர் என்னை பிடித்து விட்டார்கள்’ என்கிறார் பீம்சிங் பட்டேல். பீம்சிங் பட்டேல் தனது குற்றத்தை ஒத்துக்கொண்ட பிறகு, ஆமதாபாத் குற்றப்பிரிவில் ஆஜர்படுத்தப்ப…
-
- 2 replies
- 538 views
- 1 follower
-
-
ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன. சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார். இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் …
-
- 0 replies
- 130 views
-
-
"எனது இன்னிங்ஸ் முடிந்தது" - தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி? கட்டுரை தகவல் எழுதியவர்,ஆலோக் பிரகாஷ் புதுல் பதவி,ராய்ப்பூரில் இருந்து பிபிசி இந்திக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALOK PUTUL/BBC 2017 டிசம்பரில் நடந்த விஷயம் இது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட இருந்தார். ராகுல் காந்தி கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட்டால் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்று ஒரு நாள் முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சோனியா காந்தியிடம் கேட்டனர். நான் ஓய்வு பெறப்போகிறேன் என்று சோனியா ப…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜேர்மனி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியில் தீர்வு காண வேண்டும் என ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் ஜேர்மனிக்கு இடையில் காற்றாலை, சூரிய ஒளி திட்டம் என பல ஒப்பந்தங்கள்…
-
- 0 replies
- 237 views
-
-
சுபாஷ் சந்திர போஸை சிறையில் தாக்கிய பிரிட்டிஷ் ஐஜியை சுட்டுக்கொன்ற மூன்று இந்தியர்களின் தியாக வரலாறு கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,RUPA படக்குறிப்பு, கொல்கத்தாவின் பி.பி.டி. தோட்டத்தில் பினோய்-பாதல்-தினேஷ் நினைவிடம் லெப்டினன்ட் கர்னல் நார்மன் சிம்சன் 1940களில் வங்காளத்தின் ஐஜியாக (சிறை) இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை சித்திரவதை செய்வதில் அவர் பெயர் பெற்றவர். நார்மனின் மேற்பார்வையில் கொடிய குற்றவாளிகள் சுதந்திரப் போர…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
இந்தியா - சீனா கல்வான் மோதலுக்கு பின் முதல் இந்திய ராஜீய அதிகாரி சீனா பயணம்: என்ன ஆகும்? கட்டுரை தகவல் எழுதியவர்,கீர்த்தி துபே பதவி,பிபிசி செய்தியாளர் 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்திய சீன எல்லையில் இழுபறி நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய எல்லைத்தகராறு லடாக்கின் டோக்லாம், கல்வான் பள்ளத்தாக்கில் தொடங்கி இப்போது அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரை அடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மற்றும் எல்லையில் நிலவும் பதற்றம் அனைவரும் அறிந்ததே. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மு…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
பாலியல் உறவுக்கு பேரம்: தடயம் கிடைக்காத இரட்டை பெண்கள் கொலையில் சந்தேக நபரை போலீஸ் பிடித்தது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,பார்கவ் பாரிக் பதவி,பிபிசி குஜராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தின் ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் விறகு வெட்டிய இரு பெண்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். ஆற்றுப் படுகைகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டபோதும், சுற்றியிருந்த புதர்களில் பிறரின் காலடிச் சுவடுகள் தென்படவில்லை. மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆய்விலும் எந்த தடயமும் சிக்கவில்லை. எனவே தொழில்நுட்ப ஆய்வு சாத்தியமற்றுப் போனது. வழக்கமாக குளித்த ஐந்தே நிம…
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 11:21 AM இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியைமத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும்உயர்கல்விக்கான திட்டமிடப்பட்டசெலவினம் சுமார் 8.3 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த …
-
- 0 replies
- 504 views
- 1 follower
-
-
இந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கை Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 02:32 PM எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், அந்நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 45,000- கடந்துள்ளது. தொடர்ந்து இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், அசாம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் நிலநடுக்…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜேர்மனி அதிபர் இந்தியா வருகை! ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும், ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் 26ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது ஜேர்மனி – இந்திய தொழில்துறையினர் இடையே ஆலோசனைகளும் நடைபெறவுள்ளது. இதன்பிறகு…
-
- 3 replies
- 239 views
-
-
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு முறையீடு Published By: RAJEEBAN 21 FEB, 2023 | 11:07 AM குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் கருகி உயிரிழந்தனர். குஜராத்தில் மதக் கலவரம் ஏற்பட இந்த சம்பவம் வழிகோலியது. ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனை யும் விதிக்கப்பட்டது. மேல்முறை யீட்டு வழக்கில் 31 பேர் தண்டிக் கப்பட்டதை குஜராத் உயர் நீதி மன்றம் உறுதி செய்தது. எனினும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. …
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
'இந்தியாவின் ரஸ்புடின்' தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய சாமியார் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DHIRENDRA MEMORIAL FOUNDATION சக்தி வாய்ந்த பிரதமரின் யோகா குரு என்பதால், தீரேந்திர பிரம்மச்சாரி மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை வரிசையில் காத்திருப்பார்கள். நீல நிற டொயோட்டா காரை அவர் தானே …
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
அதானி மின்சார ஒப்பந்தத்தை வங்கதேசம் மறுபரிசீலனை செய்ய முயல்வது ஏன்? முன்னி அக்தர் பிபிசி வங்கமொழி சேவை 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார மேம்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்துவருவதாக நம்பப்படுகிறது. அதானி குழும பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதிக்குள் வங்கதேசம் வந்து இந்தப் பிரச்னை குறித்து விவாதி…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
சத்ரபதி சிவாஜி: ஔரங்கசீப்பின் சிறையில் இருந்து தப்பியவர், முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DR. KAMAL GOKHALE படக்குறிப்பு, சத்ரபதி சிவாஜி ஒரு நபர் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்துடன் மோதுவது மட்டுமல்லாமல், அதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பேரரசு, அந்தக் காலத்தில் அனேகமாக உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்தது. …
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
விரைவில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு – உச்ச நீதிமன்றம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின் போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சம்பந்தப்பட்ட அமைச்சின் மனுதாரர் கோரிக்கை வைக்க முடியும் எனவும் நான்கு வாரத்தில் உரிய பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை அணு…
-
- 0 replies
- 125 views
-
-
இந்தியாவில் கேள்விக்குறியாகும் வீட்டுப்பணியாளர்களின் பாதுகாப்பு - செய்ய வேண்டியது என்ன? கீதா பாண்டே பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் டெல்லியில் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த 14 வயது சிறுமியை உடலில் காயங்களுடன் கடந்த வாரம் போலீஸாரும் சமூக ஆர்வலர்களும் மீட்டனர். இத்தகைய வீட்டுப் பணியாளர்கள் 'உழைப்பு சுரண்டலுக்கு' எளிதாக உள்ளாகின்றனர் என்றும் அவர்களுக்கு போதிய சட…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
ஏர் இந்தியா - ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தால் மீண்டெழுமா? நிகில் இனாம்தார் பிபிசி வணிக செய்தியாளர், மும்பை 15 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES சாதனை நிகழ்வாக, ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா நிறுவனம் இறுதி செய்துள்ளது. "உலகத்தரத்திலான கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கி வருகிறோம்" என இது குறித்து டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்த ஒப…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையால் பீதியில் மக்கள் - களச் செய்தி ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DEBALIN ROY/BBC படக்குறிப்பு, பரிஜான் பேகம் "என் மகன் தினக்கூலியாக வேலை செய்து ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பாதிக்கிறான். என் கணவர் கை வண்டி ஓட்டுகிறார். சில சமயம் வருமானம் கிடைக்கும் சில சமயம் கிடைக்காது. இப்போது மகனே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது, வழக்கை நடத்த எங்கிருந்து பணத்திற்க…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்ததாக ஒருவர் கைது - டெல்லியில் இன்னொரு கொடூரம் 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CASPAR BENSON / GETTY IMAGES 'லிவ் - இன்' உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாக, உணவக (தாபா) உரிமையாளர் ஒருவரை நேற்று, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14, 2023) காவல்துறையினர் கைது செய்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. டெல்லி ஒட்டிய நஜஃப்கர், மித்ரோன் கிராமம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக வழ…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-