அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3313 topics in this forum
-
இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையிலும் நேபாளத்திலும் எங்களது கட்சி…
-
- 0 replies
- 328 views
-
-
08 AUG, 2023 | 04:43 PM இலங்கையில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இந்திய மத்திய அரசாங்கம் தவறவிட்டது என திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் அதில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதில் இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர்…
-
- 1 reply
- 239 views
- 1 follower
-
-
இலங்கையில் இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக டில்லியில் போராட்டம் - இனப்படுகொலை என சாடல் Published By: T. Saranya 07 Apr, 2023 | 12:12 PM இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம் ஒன்றினை நேற்று முன்தினம் (05) முன்னெடுத்திருந்தன. இதில் ஆலயங்கள் இடிக்கப்படுவது மற்றும் இந்துக்களுக்கு தீங்கு இழைக்கப்படுவது ஒரு கலாச்சார இனப்படுகொலை எனவும் இந்து அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் கட்டுமானப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் பழங்கால கோயில்கள் அரசால் தொடர்ந்து இடித்துத் தள்ளப்பட்டு வருகின்றன. பழங்கால வரல…
-
- 2 replies
- 586 views
-
-
இலங்கையில் உயிரிழந்த மக்களுக்கு புத்தகாயாவில் பிரார்த்தனைகள் இந்தியாவின் புத்தகாயாவில் பௌத்த குருமார்களினால் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியை வேண்டியே குறித்த பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கொழும்பு உட்பட எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையிலேயே புத்தகாயாவில் சிறப்பு பிரார்த்தனை நடந்துள்ளது. இதேவேளை மகாபோதி சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய பானேட்டி பி.ஷிவலை கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தாக்குதல் மனிதத்திற்கு எதிராக நடத்தப்…
-
- 0 replies
- 748 views
-
-
இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை என தெரிவித்து மோசடி – ஹைதராபாத்தில் இளைஞன் கைது July 19, 2020 இலங்கையுடன் தொடர்புபட்ட சிறுநீரக மாற்றுசத்திர சிகிச்சை மோடிசடிகும்பலொன்றை சேர்ந்தவரை கைதுசெய்துள்ளதாக இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்து குடும்பமொன்றிடமிருந்து 34 இலட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய இளைஞர் ஒருவரை கைதுசெய்ததன் மூலம் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை கைதுசெய்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆந்திரபிரதேசத்தின் குண்டுரை சேர்ந்த பவன்ஸ்ரீனிவாஸ் என் 25 வயது இளைஞனை இந்த மோசடி தொடர்பில் முதலில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த…
-
- 0 replies
- 280 views
-
-
இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் – காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் கருத்து மோதல்! இலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீர்மானித்திருந்தது. இந்நிலையில், சீதை இலங்கைக்கு உண்மையிலேயே கடத்திச் செல்லப்பட்டாரா என்பது குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலகறிந்த நம்பிக்கைகளை சிதைக்கும் வக…
-
- 0 replies
- 282 views
-
-
இலங்கையில் பாஜக கட்சி ஆரம்பிக்கிறதா? - அண்ணாமலை கூறியது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கு இந்தியர்களுக்கு இலவச விசா நடைமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, கொழும்பில் நேற்று (மே 03) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை இலவச விசா நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் – இந்திய அமைச்சரவை அனுமதி இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தங்களுக்கு இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் 2013 ஜனவரியில் கையெழுத்திடப்பட்டு அதே ஆண்டு ஒக்டோபரில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும், வருமான வரி மீதான நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் நெறிமுறையில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கையை எவ்வாறு கையாள்வது? அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்கிறது டில்லி 20 Views இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக புதுடில்லி வட்டாரங்களை ஆதாரங்காட்டி இந்தியாவின் பிரபல தினசரியான ‘தி பிரின்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ‘தி பிரின்ட்’ மேலும் தெரிவித்துள்ளதாவது; “ராஜபக்க்ஷ அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின…
-
- 5 replies
- 721 views
-
-
இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் ISIS தாக்குதல் – உளவுத்துறையின் முக்கிய எச்சரிக்கை! இந்தியாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களை நடத்த ஜெய்ஸ் இ முகமது மற்றும் ISIS அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அஸார் திட்டமிட்டிருப்பதாகவும், சிரியாவின் ISIS அமைப்புடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகள் குறித்து தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது பாதுகாப்பு பலப்பட…
-
- 0 replies
- 194 views
-
-
இலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம் ? ரெல்லி: தெற்காசியாவில் விஸ்வரூபமெடுத்து நிற்க விரும்பும் சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் அந்நாட்டின் விஞ்ஞானிகள்,. பொருளாதார வல்லுநர்களை இலக்கு வைத்து தீவிரவாத குழுக்கள் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. தெற்காசியாவில் சீனாவின் அடுத்த கட்ட நகர்வுகளைத் தடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளின் திட்டமிடலுடன் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இலங்கையில் ஈஸ்டர் நாளன்று தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 359 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பா…
-
- 0 replies
- 618 views
-
-
இலவச தடுப்பூசி திட்டம் ஆரம்பம்! நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் போட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் தடுப்பூசி போட CoWin தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்து போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1223971
-
- 0 replies
- 214 views
-
-
இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கை நிலைதான் நமக்கும்.! மோடியிடம் நேரடியாக முறையிட்ட செயலர்கள்.! டெல்லி: தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் ஜனரஞ்சக மற்றும் இலவசத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாகத் தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகளும் பல வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்யும். தேர்தலில் மக்கள் வாக்குகளைப் பெற பல்வேறு கட்சிகளும் இலவசத் திட்டங்கள் அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்த இலவச திட்டங்கள் குறித்து இரு வேறான கருத்துகள் உள்ளன. தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்கள் குறித்து நீதிமன்றங்களில் கூட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முக்கிய சந்த…
-
- 2 replies
- 238 views
- 1 follower
-
-
இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது – பிரதமர் மோடி மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தங்கள் பணம் நலத்திட்டங்களுக்குச் செல்லும் என எண்ணியே கடுமையான உழைப்பின் மூலம் மக்கள் வரி செலுத்துகின்றார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் மாநில அரசுகளால், வரிப்பணம்வீணடிக்கப் படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக வரி செலுத்துவோர் உள்ளங்களில் வலி ஏற்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். https://athavannews.com/2022/1306586
-
- 0 replies
- 111 views
-
-
இளந்தலைமுறை வாக்காளர்களிடம் மோடி முக்கிய வேண்டுகோள்! இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை தவறாது ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடெங்கெலும் மக்கள் மும்முரமாக வாக்களித்து வருகின்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) டுவிட்டரில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலுள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வருகைத்தந்து வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளந்தலைமுறையினர் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று காலை ஏழு மணிக்கு …
-
- 0 replies
- 365 views
-
-
இழப்புகளை சந்திப்பீர்கள்.. அதிர்ச்சியை தாங்க முடியாது.. இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.! பெய்ஜிங்: இந்தியா பெரிய இழப்புகளை சந்திக்கும், இந்தியாவால் இதற்கு மேலும் அதிர்ச்சியை தாங்க முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள். இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள். முதல் முறையாக சீனா எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக பேசி இருக்கிறது.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனை மோசம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இதனால் போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மத்தியஸ்தம் இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் பேச விருப்பப்படுவதா…
-
- 1 reply
- 438 views
-
-
இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை ! கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி விற்பனையில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் இவ்வூழல் புதைந்திருக்கும். கொரோனா முடக்கத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கும் சூழலில் இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் பார்த்திருக்கின்றன தனியார் நிறுவனங்கள். கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி ஏற்றுமதி – இறக்குமதியில் …
-
- 0 replies
- 304 views
-
-
இவந்தாய்யா யோக்கியன் . . . அபிநந்தன் பாதுகாப்பாக திரும்பி வந்தது குறித்த ஒரு சங்கியின் ட்விட்டர் பதிவு இது. அபிநந்தனை வைத்து போருக்குப் போகலாம் என்று உசுப்பேத்திக் கொண்டிருந்த மாலன் உள்ளிட்ட பலர் அவர் திரும்பி வந்ததும் கள்ள மௌனம் சாதித்தார்கள். அவர்கள் மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசிய இந்த சங்கியின் நேர்மை பாராட்டுக்குரியது. அந்தாள் சொன்னதை தமிழில் சொல்கிறேன். "அபிநந்தனின் இடத்தில் நான் இருந்திருந்தால் என் துப்பாக்கியால் நானே என்னை சுட்டுக் கொண்டு இறந்திருப்பேன். எதிரியின் கருணையால் உயிரோடு திரும்புவதைக் காட்டிலும் இறந்து போவதே மேல். வருந்துகிறேன…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வாக இருக்கும் என்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைத்தான் இந்தியா நீண்டகாலமாக எடுத்துவந்திருக்கிறது. 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுடன் மோடி அரசு நெருக்கம் காட்டிவருகிறது. மோடி கடந்த வாரம் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு இந்…
-
- 0 replies
- 184 views
-
-
இஸ்ரோ எல்விஎம்3 ராக்கெட்: 36 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் - ஏவும் இடம், நேரம் - முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஏவுதளத்தில் எல்.வி.எம்.3 பிரிட்டனின் ஒன்வெப் செயற்கைக்கோள் நிறுவனத்துக்காக ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவிலிருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் ஏவப்பட உள்ளது. வணிக ரீதியில் ராக்கெட் ஏவும் உலகளாவிய சந்தையில் இந்த முயற்சி இந்தியாவுக்கு ஒரு மைல்கல் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது. புவியின் தாழ் வட்டப்பாதையில் ஏவப்படும் (LEO) செயற்கைக்கோள்களை தயாரிக்கும் நிறுவனமான 'ஒன்வெப்', இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இந்திய விண்வெள…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல் ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டது - முன்னாள் விஞ்ஞானி பரபரப்பு தகவல் இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவி உள்ளது ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு கொடிய விஷம் கொடுக்கபட்டது என முன்னாள் இந்திய விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா கூறி உள்ளார். பதிவு: ஜனவரி 06, 2021 15:52 PM மாற்றம்: ஜனவரி 06, 2021 16:12 PM பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடிய ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மே 23, 2017 அன்று பெங்க…
-
- 0 replies
- 315 views
-
-
இஸ்லாமிய பயங்கரவாதமே உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் – ட்ரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதம்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதில் இருந்து நாடுகளை பாதுகாக்க இணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தந்துள்ள ட்ரம்ப் அகமதாபாத் கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவிற்கு எப்போதும் உண்மையான நட்பு நாடாக அமெரிக்க விளங்கும் என உறுதியளித்தார். இந்தியாவை அமெரிக்க நேசிக்கிறது எனவும், இந்தியா மீது அமெரிக்க மதிப்புகொள்வதாகவும் தெரிவித்த ட…
-
- 0 replies
- 523 views
-
-
இஸ்லாமிய வெறுப்பு: “முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறோமா? - விஷ்வ இந்து பரிஷத் நிர்வாக தலைவர் அலோக் குமார் நேர்காணல் Getty Images கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. 'முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்' என்பது போன்ற வதந்திகளு…
-
- 0 replies
- 349 views
-
-
இஸ்லாமுக்கு ஆபத்து என்பதால் நாளந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதா? பட மூலாதாரம்,IMAGEBROKER/ALIYAH கட்டுரை தகவல் எழுதியவர்,சுகத் முகர்ஜி பதவி,பி பி சி ட்ராவல்ஸுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு குளிர்காலக் காலையில் அடர்ந்த பனிமூட்டம் படர்ந்திருந்தது. குதிரை வண்டிகளை முந்திக்கொண்டு எங்கள் கார் மெதுவாக முன்னேறியது. பிஹாரில் இன்னும் குதிரை வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. வண்டியை இழுக்கும் குதிரையும் அதன் பின்னால் தலைப்பாகை அணிந்த வண்டிக்காரரும் மூடுபனியில் நிழல்கள் போல் தெரிகிறது. இருப்பினும், புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் ஒரு இரவைக் கழித்துவிட்டு, அதிக…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளியேற ஆர்வம் உள்ளவர்கள் வணிக விமானங்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளது. https:…
-
- 0 replies
- 172 views
-