Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு! இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சினைக் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் உள்ள எல்லை பிரச்சினைக்கு வரலாற்று ஒப்பந்தங்கள், வரைபடங்கள், மற்றும் உண்மை ஆவணங்கள் வாயிலாக தீர்வு காணப்படும். எங்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே தவறான புரிதல்கள் காரணமாக சில பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவற்றுக்கு தீர்வு காணப்பட்டதுடன், எதிர்கால இலக்கை நோக்கி, நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கிறோம். அண்டை நாடுகள், தங்கள…

  2. யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை! முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. இதற்கான உத்தரவை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பிறப்பித்துள்ளார். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேற்படி பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221330

  3. இந்தியாவை தாக்கும் மற்றுமொரு பூஞ்சை தொற்று! இந்தியாவில் முதன் முறையாக தோல்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள ஒருவருக்கு குறித்த நோய் தாக்கம் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முற்றிலுமாக குணமடைந்த அவருக்கு காது பகுதியில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் தோல் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களுக்கு கறுப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்றுக்கள் கண்டறியப்…

  4. இந்திய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்களன்று பிற்பகல் 03.45 (10:15 GMT) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தின்போது சுமார் 37 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தீப் பரவலின் பின்னர் பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணிகளையும் மீட்பு நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர். தொழிற்சாலையில் குளோரின் டை ஆக்சைட் பயன்படுத்திய விதத்தில் தவறு நேர்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் தீ விபத்துக்கான உறுதி…

  5. மாநிலங்களுக்கான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் – மோடி மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக நேற்று (திங்கட்கிழமை) மாலை உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது. அத்துடன் மேலும் மூன்று தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 21 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவை அரவே ஏற்றுக்கொள்ளும். இந்த பணிகளுக்காக ஏற்கனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வரவு செலவு திட்ட…

  6. புதிய நாடாளுமன்ற கட்டடம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு! புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயற்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக இந…

  7. பொதுத்துறை வங்கிகளின்... பங்குகளை விற்க அரசு திட்டம்! மூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க்ஆப் இந்தியா (BANK OF INDIA) ஆகிய நிறுவனங்கள் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1220917

  8. லட்சத்தீவு... குறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம்! லட்சத்தீவில் பிறப்பிக்கப்படுகின்ற புதிய உத்தரவுகள் மனவேதனை அளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 93 ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். குறித்த கடிதத்தில், ‘ நாங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் இல்லை. நடுநிலைமை மற்றும் அரசியலபைபின் உறுதிப்பாடு மீது நம்பிக்கை வைத்துள்ளோம். லட்சத்தீவுகளின் புதிய வரைவு சட்டங்கள், தீவுக்கும் அங்கு வசிக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானதாக உள்ளது. மக்கள் கருத்துக்களை கேட்காமல், புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் அனைத்தும் அன்னிய தன்மையுடனும், தன்னிச்சையான கொள்கை முடிவுகள் உடையதாகவும், உள்ளன. எனவே இந்த புதிய வர…

  9. ஜூன் 21 முதல் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்: பிரதமர் மோடி மின்னம்பலம் வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றும் தடுப்பூசியை ஒன்றிய அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்யும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று ஜூன் 7 மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்....." நாட்டில் நிலவும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் கட்டுப்படுத்தப்படும். தடுப்பூசி முகாம் களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொடிய தொற்று நோய் உலகத்தையே பாதித்து வருகிறது. இந்த நிலையில் நாம் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறோம்.…

    • 6 replies
    • 442 views
  10. ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன? இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை காணாமல்போயுள்ளதாகவும், அவர்களில் 25 சதவீதமானோர் கண்டுப்பிடிக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்படுகிறார்களா? அப்படியானால் சராசரியாக எந்தனை குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள்? அப்படி மீட்கப்படும் குழந்தைகளில் எத்தனைபேர் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்? இப்படி பல கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது. உண்மை நிலைவரங்களின் படி கடத்தப்படுகின்ற குழந்தைகளில…

  11. பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- பலர் காயம்! தெற்கு பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சிந்து மாகாணத்தில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் விபத்து நடந்ததிலிருந்து பல மணிநேரங்கள் கடந்தும் அணுக முடியாத ரயில் பெட்டிகளில் சிலர் இருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தான் …

    • 1 reply
    • 363 views
  12. கொரோனாவால் மே மாத்தில் 17 இந்திய விமானிகள் பலி கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தை நாடு கண்ட மே மாதத்தில் ஏயர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்டாரா ஆகியவற்றின் 17 விமானிகள் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர். இண்டிகோ 10 விமானிகளையும் விஸ்டாரா இருவரையும் இழந்தது என்று இந்திய விமானத் துறை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. அதேநேரம் தேசிய விமான சேவையான ஏயர் இந்தியாவில் ஐந்து சிரேஷ்ட விமானிகளும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்தியாவில் வியாழனன்று 1,32,364 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த கொவிட்-19 நோயளர்களது எண்ணிக்கை 2,85,74,350 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை, 2,65,97,655 பேர் தொற்றுநோயிலிருந்து குணமட…

  13. உத்தரப்பிரதேசத்தில்... கங்கையில், மிதக்கும் உடல்கள் : தொடரும் அவலம்! உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியில் மிதந்த வந்த ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கங்கை நதியில் எறியும் கொடூரம் தொடர்ச்சியாக வட மாநிலங்களில் நடத்து வருகின்றன. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் பதேப்பூர் மாவட்டத்தில் மேலும் 6 உடல்கள் கங்கையில் மிதந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாவட்ட ஆட்சியருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த உடல்கள் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இவ்வாறான சம்பவங்கள் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காரணத்தினால் சூழல் மாசடையும் தன்மை காணப்படுவதுடன், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என ந…

  14. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இராணுவ தளவாடங்களுக்கு தடை! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 108 இராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (திங்கட்கிழமை) ஒப்புதல் அளித்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறிய ரக போர் கப்பல்கள், பீரங்கி என்ஜின், ரேடார்கள் உள்ளிட்ட 108 இராணுவ தளவாடங்களுக்கான இரண்டாவது இறக்குமதி தடை பட்டியலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபாட்டுடன் பங…

  15. கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை லேகியத்தை மருந்தாக வழங்க ஆந்திர அரசு அனுமதி 14 Views ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரின் கிருஷ்ணபட்டிண் கிராமத்தைச் சேர்ந்த போனஜி அனந்தய்யா என்வர் கொரோனா நோயாளிகளுக்காக தயாரித்த கத்திரிக்காய் மூலிகை லேகியத்தை பயன்படுத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம், அவர் தயாரித்த லேகியத்தை மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அவர் குறிப்பிட்ட ஒரு வகை கத்திரிக்காய் கூழ் சேர்த்து தயாரித்த கண் சொட்டு மருந்தை நோயாளிகளுக்கு வழங்க அரசு ஒப்புதல் வழங்கவில்லை. முன்னதாக, அனந்தய்யாவின் தயாரிப்புகளை அரசு நியமித்த மருத்துவ குழு ஆய்வு செய்தது. பிறகு இந்திய ஆயுஷ் அமைச…

  16. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு புதிய பெயரை அறிவித்தது WHO! இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிவித்துள்ளது. அந்த வகையிலேயே இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸிற்கு மேற்படி பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரொனா தொற்றுக்கு ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் இனங்காணப்பட்ட வைரஸிற்கு பீட்டா எனவும், பிரேசில் கொரோனா தொற்றுக்கு காமா எனவும் அமெரிக்க கொரோனா தொற்றுக்கு எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. h…

  17. இந்தியாவில் இருந்து... டுபாய்க்கு, செல்லும் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது, ‘நாடு முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக ஏப்ரல் 24 முதல் பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 14 நாட்களாக இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், தூதரக பணி உறுப்பினர்கள் கொவிட் நெறிமுறைகளுக்கு இணங்க பயணிக்கலாம…

  18. காற்றில் வேகமாக பரவும்.. 2 மோசமான கொரோனா வகை இணைந்து உருவான புது "வேரியண்ட்".. வியட்நாமில் கலக்கம்.! ஹனோய்: வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 2019 டிசம்பரில் உருவானதில் இருந்தே பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா ஒருவரின் உடலில் இருந்து இன்னொருவரின் உடலுக்கு செல்லும் போது ஏற்படும் மாற்றம் ஆகும். கொரோனாவின் ஸ்பைக் புரோட்டீன், அதன் ஆர்என்ஏ என்று ஒவ்வொரு விஷயமும் மியூட்டேஷனில் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அதாவது கொரோனா வைரஸ் அப்…

  19. கொரோனா நோயாளிகளுக்கு அறிமுகமாகும் கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கொரோனா நோயாளிகளுக்கு அவசர காலத்தில் தேவைப்படும் கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகப்படுத்தப்ப்ட்டு உள்ளது. பதிவு: மே 29, 2021 14:35 PM கொல்லம் கொரோனா நோயாளிகள் அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முதலுதவி சிகிச்சையாக செயல்படுகிறது மற்றும் அவசரகால நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. தீவிர கொரோனாவால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அவசியமாகியுள்ளது. இந்த நிலையில், அவர்களின் அவசர தேவைக்கு உதவும் வகையில் கேரளாவில் செயல்படும் தனியார் நிறுவனம், கையடக்க ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 லிட்டர்…

  20. உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை: நாக்பூர் விஞ்ஞானிகள் சாதனை நாக்பூர் உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானதுமான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை எளிதாகவும், விரைவாகவ…

    • 3 replies
    • 611 views
  21. லட்ச தீவுகளை... அழிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது – ராகுல்காந்தி மத்தியில் ஆட்சி செய்பவர்கள் லட்ச தீவுகளை அழிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுலாவிற்கு பெயர்போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ லட்சத்தீவுகள் இந்தியக் கடலின் ஆபரணம். மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் அதனை அழிக்க முயற்சிக்கின்றனர். நாம் லட்சத்தீவுளின் மக்களுடன் உடன் நிற்கிறோம்’ எனக் குறிப…

  22. கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள்... செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்! வட இந்தியாவில் ஏறக்குறைய 20 பேருக்கு இருவேறுப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் (கலப்பு தடுப்பூசிகள்) செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியாக கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக கொவாக்ஷின் (Covaxin) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் கலப்பு தடுப்பூசிகளுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்ற நிலையில், இந்த விடயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் குறித்த 20 பேரும் உடல்நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு …

  23. கொரோனா தொற்றால்... இறந்தவரின் உடல் மூலம், தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் சுதீர் குப்தா மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் உடல்களை வைத்து ஆய்வு நடத்தி வந்தோம். ஏறக்குறைய 100 உடல்களை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்தோம். உயிர் பிரிந்த 12 – 24 மணி நேரத்தில் இதைச்செய்தோம். இதன் முடிவுகளின்படி இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் ஒருவரது உடலில் க…

  24. கொரோனா வைரஸ் ‘இந்தியத் திரிபு’ என்பதை உடனே நீக்குங்கள்: சமூக ஊடகங்களுக்கு இந்திய அரசு உத்தரவு 16 Views இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபை ‘இந்தியத் திரிபு’ (Indian variant) என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பால் இந்த திரிபுக்கு ‘B.1.617’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை ‘இந்தியத் திரிபு’ என்று குறிப்பிடுவது தவறானது என்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது. பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட திரிபுகளுக்கு அந்தந்த நாடுகளின் பெயர்களே வைக்கப்பட்டு அவை பிரிட்ட…

  25. ஸ்புட்னிக் வி.... தடுப்பூசியின், உற்பத்தி நடவடிக்கைகள் இந்தியாவில் ஆரம்பம்! ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஆர்.டி.ஐ.எப் எனப்படும் ரஷ்ய நேரடி முதலீடு நிதியமும், பனேசியா பயோடேக் என்ற இந்திய நிறுவனமும் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்கவுள்ளன. ஹிமாச்சல பிரதேசத்தின் பாத்தி பகுதியில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவுனத்தில் தயாரிக்கப்படும் முதற்கட்ட தடுப்பூசிகள், ரஷ்யாவின் கமலேயே ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத…

    • 1 reply
    • 402 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.