அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு! இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 1 இலட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாகப் உயிரிழந்துள்ளனர். காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் க…
-
- 0 replies
- 431 views
-
-
அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்: தி.மு.க. பலவீனமாக இருக்கிறது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தி.மு.க. பலவீனமாக இருப்பதால் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். பதிவு: அக்டோபர் 22, 2020 04:36 AM சென்னை, தி.மு.க.வை பொறுத்தவரை அக்கட்சி பலவீனமாக இருக்கிறது. எனவே தான் அடிக்கடி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு (நேற்று) கூட ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது அக்கட்சியின் பலவீனத்தைத்தானே உணர்த்துகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். ஆரம்ப கட்டத்தில் இருந்தே மக்களோடு மக்களாக பயணிக்கிறோம். தேர்தல் நேரத்தில் தைரியமாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். த…
-
- 0 replies
- 374 views
-
-
அபாயகரமான நிலையை எட்டியுள்ள இந்தியாவின் காற்றின் தரம் தலைநகர் டெல்லி மற்றும் ஏனைய வடக்கு நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களில் காற்றின் தரம் வேகமாக மோசமடைந்துள்ளமையினால் இந்தியாவில் காற்று மாசுபாடானது அபாயகரமான நிலையினை எட்டியுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு மிகவும் கவலையான செய்தி என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளானர். காரணம் உலகெங்கிலும் பல ஆய்வுகளில் கொவிட்-19 நோயாளர்கள் உயிரிழப்பதற்கு காற்றின் தரக் குறைவும் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கியூபிக் மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றில் ஒரே ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு, மாசை உண்டாக்கும் பி.எம் 2.5 துகள்கள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 8 சதவீதம் அதிக…
-
- 1 reply
- 545 views
-
-
ஒலியை விட வேகமாகச் செல்லும் இந்தியாவின் ஏவுகணை பரிசோதனை வெற்றி! ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணை (BrahMos Missle) சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation) ருவிற்றரில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைத் திட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ரஷ்யாவுடன்…
-
- 3 replies
- 946 views
-
-
இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா? Bharati October 17, 2020 இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா?2020-10-17T06:28:55+05:30அரசியல் களம் FacebookTwitterMore கேணல் ஆர் ஹரிஹரன் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகிய இருவரும், நவம்பர் 17ந் தேதி ரஷ்யாவின் தலைமையில் நடக்கவிருக்கும் ப்ரிக்ஸ் என்ற நான்கு நாடுகள் (பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தெற்கு ஆப்ரிக்கா) கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பின் போது நேரடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அந்த சந்திப்பு, விடியோவில் நிகழும் மெய்நிகர் (virtual) பேச்சுவார்த்தையானாலும், லடாக்கில…
-
- 0 replies
- 429 views
-
-
சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல்: அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. பதிவு: அக்டோபர் 17, 2020 17:46 PM புதுடெல்லி உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் நாடுகள் ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இந்த பட்டியலை வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்டடு உள்ளது. இந்த பட்டியலில் நேபாளம் 73வது இடத்திலும், வங்காள தேசம் 75 மற்றும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 94 வது இடத்தில் உள்ளது, இந்த பட்டியலில், இந்தியாவ…
-
- 0 replies
- 396 views
-
-
இந்தியாவின் இறையாண்மையில் அண்டை நாடுகள் தலையிட கூடாது - ஜெய்சங்கர். இந்தியாவின் இறையாண்மையில் அண்டை நாடுகள் தலையிட கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லைப் பகுதியில் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில், புளூம்பர்க் பொருளாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியா – சீனாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் சீனா இதுவரை ஒப்புக்கொண்டபடி படைகளை விலக்கிக் கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் லடாக் எல்லையில் சீனா படைகளைக் குவிப்பதால் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில…
-
- 0 replies
- 370 views
-
-
பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை: புதிய சட்டத்துக்கு ஒப்புதல்! பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். இதனிடையே பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்கும்படி பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியதாக அமைச்சரவை செயலர் அன்வருல் இஸ்லாம் தெரிவித்தார். இது குறித்து அந்நாட்டின் சட்ட அமைச்சர் அனிஷுல் ஹூக் கூறுகையில், ‘இந்த சட்ட சட்டமூலத்துக்கு பங்களாதேஷ் அப்துல் ஹமித் ஒப்புதல் அளிப்பார். தற்போது கொவிட்-19 கால சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் கூட…
-
- 1 reply
- 1.3k views
-
-
விவசாயிகளை பயங்கரவாதிகளாக பதிவிட்ட நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு.! விவசாயிகளை பயங்கரவாதிகளாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகை கங்களா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட…
-
- 1 reply
- 554 views
-
-
மேற்கு வங்கம்: 8 ஆம் வகுப்பு தகுதிக்கான வன உதவியாளர் பணிக்கு பி.எச்டி மாணவர்கள் விண்ணப்பம் மால்டா மேற்கு வங்கத்தில் 8 ஆம் வகுப்புத் தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட வன உதவியாளர்கள் பணிக்கு பொறியியல், முதுகலை, பி.எச்.டி ஆராய்ச்சி முடித்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மூத்த வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் மனித-விலங்கு மோதலைத் தடுப்பதற்கும் ஒப்பந்த அடிப்படையில் வன உதவியாளர்கள் 2000 பேரைப் பணியமர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்தது. மாநிலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியான உடனே ஏராளமான விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின. இவற்றில் பெரும்பாலும் உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இது…
-
- 0 replies
- 358 views
-
-
காலமானார் ராம்விலாஸ் பாஸ்வான் மின்னம்பலம் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவன தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இன்று அக்டோபர் 8ஆம் தேதி மாலை டெல்லி தனியார் மருத்துவமனையில் காலமானார். 74 வயதான ராம்விலாஸ் பாஸ்வான் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாகவே இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பாஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில்... இன்று மாலை அவர் காலமாகி விட்டதாக பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தலித் தலைவர்களில் குறிப்பிடத்தக்க தலைவராக உருவெடுத்த…
-
- 0 replies
- 607 views
-
-
தற்சார்பு இந்தியா போன்ற கொள்கைகள் கடந்த காலத்தில் பலனளிக்கவில்லையே; மேக் இன் இந்தியாவின் மறுவடிவம்தானே: ரகுராம் ராஜன் கருத்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) வெளிநாட்டு வர்த்தகத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஐசிஆர்ஐஇஆர் நிறுவனம் சார்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்தரங்கு காணொலியில் நேற்று நடந்தது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''கரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட வளர்ந்து வரும் நாடுகள் அதிகமா…
-
- 0 replies
- 260 views
-
-
ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்தை பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்குச் செலுத்த அனுமதி மறுப்பு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/09/923645-russian-coronavirus-vaccine-sputnik-v-720x450.jpg கொரோனாவைக் குணப்படுத்த ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தைப் பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்குச் செலுத்திச் சோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை நடத்தவும் மருந்தை விநியோகிக்கவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது. இதையடுத்துப் பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்கு மருந்தைச் …
-
- 1 reply
- 532 views
-
-
முன்னாள் சிபிஐ தலைமை இயக்குனர் தற்கொலை! மின்னம்பலம் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் நாகாலாந்து ஆளுநருமான அஸ்வனி குமார் நேற்று (அக்டோபர்7) புதன் கிழமை சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது அதிகார மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா போலீஸ் கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா முன்னாள் ஆளுநரான அஸ்வனிகுமார் தூக்கில் தொங்கியிருப்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என்றார் இமாச்சல பிரதேச காவல்துறை வட்டாரங்களின்படி, அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்ப…
-
- 0 replies
- 902 views
-
-
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி?- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஜெகன்மோகன் சந்திப்பு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக் கிறார். அப்போது, பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்தும் அவர் பேசவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பே ரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 151-ல் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். இது போல் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் கட்சி வெற்…
-
- 0 replies
- 241 views
-
-
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள் அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு. சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இது தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் பிபிசியின் சிறப்பு செய்திகளின் இணைப்பை இந்தப் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம். அயோத்தியில் 19…
-
- 6 replies
- 1.2k views
-
-
நாம் வாழ்ந்துகொண்டிருப்பது காந்தியின் தேசத்தில்தானா? மனித குலத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களின், அதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவர்களை நினைவுகூர்வது வெறும் சடங்கல்ல. அது அவர்களின் பங்களிப்புக்காக ஒரு சமூகம் செலுத்தும் நன்றிக்கடன். எனினும், அந்தத் தலைவர்களின் பொருத்தப்பாட்டை என்றும் தக்கவைத்துக்கொள்வதன் வாயிலாகவே அந்த நன்றிக்கடன் உள்ளடக்கம் கொண்டதாக இருக்கும். இந்த காந்தி ஜெயந்தி ஒட்டுமொத்த உலகச் சமூகத்துக்கும் காந்தி எவ்வளவு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது அங்கு இருந்த இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள், சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியதற்…
-
- 1 reply
- 385 views
-
-
3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள்: கேரள மாணவி உலக சாதனை திருவனந்தபுரம் ஊரடங்கு காலகட்டத்தில் 90 நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளைப் படித்து உலக சாதனை படைத்துள்ளார் கேரள கல்லூரி மாணவி ஆரத்தி ரகுநாத். கேரள மாநிலம் கொச்சி அருகே எலமக்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஆரத்தி ரகுநாத். இவர் கொச்சியில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் எம்.எஸ்சி. உயிர் வேதியியல் (இரண்டாம் ஆண்டு) படிப்புப் படித்து வருகிறார். கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் ஆரத்தி, கோர்ஸ் எரா மூலம் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளார். குறிப்பாக ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம், டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வெர்ஜீனியா பல்கலைக்கழ…
-
- 0 replies
- 193 views
-
-
10 இலட்சம் கையெறி குண்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து! இந்திய இராணுவத்திற்கு சுமார் 10 இலட்சம் கையெறி குண்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதத்தில் சுமார் 409 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாக்பூரை சேர்ந்த எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தற்காப்பு மற்றும் தாக்குதல் என பலவித பயன்பாட்டுக்கு ஏற்ற விதமாக கையெறி குண்டுகள் தயாரிக்கப்படுவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/10-இ…
-
- 0 replies
- 451 views
-
-
ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் எனும் இடத்தில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்ராம்பூர் போலீஸார் ட்விட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "22 வயதான அந்தப் பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். செவ்வாய்க்கிழமை மாலை நேரம் ஆகியும் இவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் அந்தப்பெண்ணை தொலைப்பேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், முடியவில்லை. சிறிது நேரம் கழித்து ரிக்ஷாவில் வந்திறங்கிய பெண்ணின் கைகளில் ஊசியில் ஏதோ ஏற்றிய தழும்பு இருந்தது. அந்தப் பெண் மோசமான நிலையில் இர…
-
- 0 replies
- 447 views
-
-
தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர் கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார். டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவரது இறப்பை அவரது உடன் பிறந்த சகோதரர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். கடந்த திங்கட்கிழமை அலிகார் முஸ்லிம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அந்த பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். என்ன நடந்தது? கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளிய…
-
- 12 replies
- 967 views
-
-
துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா! இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணைக் குடியரசு தலைவரான வெங்கையா நாயுடு வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வைரஸ் அறிகுறியே இல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். http://athavannews.com/துணைக்-குடியரசு-தலைவர்-வ/
-
- 0 replies
- 320 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து இந்தியாவில் புதிதாக பரவும் வைரஸ்! கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் தற்போது புதியவகை வைரஸ் தொற்றும் இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி கேட் கியூ வைரஸ் (cat que virus) என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் இருந்து பெறப்பட்ட 833 இரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு பேரின் மாதிரியில் இந்த வைரசுக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் சீனா மற்றும் வியட்நாமில் பெருமளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பன்றிகளிடமும் மைனா போன்ற பறவைகளிடமும் இது காணப்படுவதால் சமூக பரவல் ஏற்படலாம் எனக் க…
-
- 0 replies
- 505 views
-
-
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங் “நான் இறந்தால், என் உடலை வாங்காதே… அப்படி வாங்கினால், நீ அழுவாய்… அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே” என்று தன் தாயிடமே கூறியவர் இந்திய விடுதலையின் புரட்சி நாயகன் பகத்சிங்! “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் அவர். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று வேண்டிக்கொண்டார். இந்த புரட்சியின் நாயகனை இந்திய வரலாறு மறப்பதற்கில்லை…. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது அது அகிம்சை வழி ஏற்பட்டதென்பது உண்மை தான். ஆனால் வெள்ளைய…
-
- 0 replies
- 748 views
-
-
சீன இராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய இராணுவம் – ராஜ்நாத் சிங் சீன இராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய இராணுவம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பா.ஜ.க. சித்தாந்தவாதி தீனதயாள் உபாத்யாய பிறந்ததினத்தையொட்டி, ராஜஸ்தான் மாநில கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய அவர், 2020ம் ஆண்டில் சமபலத்துடன், சீன இராணுவத்தை இந்திய இராணுவம் எதிர்கொண்டுள்ளதாக கூறினார். அதேபோல், சீன இராணுவத்தின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் இந்திய இராணுவத்தால் தகுந்த பதிலடி கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். லடாக் எல்லையில் பல்வேறு மலைபகுதிகளை இந்திய இராணுவம் பிடித்து வருவதோடு, முன்னேறி வந்தால் சுடத் தயங்க ம…
-
- 0 replies
- 249 views
-