Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடக்குமா? தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோப்புப்படம் புதுடெல்லி உலகப்புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடத்துவதற்கு தடைவிதித்து பிறப்பித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் ெசய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவிந்திர பாட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின்…

  2. பாகிஸ்தானின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா – ஆயுதங்களும் மீட்பு! பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் குறித்த விமானம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இந்த விமானத்தில் இருத்து M4-கார்பின் மெசின் துப்பாக்கி, M4-தோட்டாக்கள் இரண்டு, 5.56-எம்எம் வகை தோட்டாக்கள் 60, கைக் குண்டுகள் 7 என்பன மீட்கப்பட்டுள்ளன. …

  3. தாகா; நேபாளத்தை தொடர்ந்து, வங்கதேசத்தையும் தன் வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி யில் சீனா இறங்கியுள்ளது. வர்த்தக துறையில், வங்க தேசத்துக்கு பல வரிச்சலுகைகளை சீனா அறிவித்து உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்துக்கு, சில சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்த சீனா, அந்த நாட்டை, சிறிது சிறிதாக தங்களுக்கு ஆதரவாக திருப்பியுள்ளது. இதையடுத்து, சீனாவின் பார்வை, மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி திரும்பி உள்ளது.வங்கதேசத்திலிருந்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும், 97 சதவீத பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக, சீன அரசு தெரிவித்து உள்ளது. இதன்படி, வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும், 8,526 பொருட்களுக்கு சீனாவில் வரி விதிக்கப்படாது.இது குறித்து, சீன வரி ஆணைய…

    • 2 replies
    • 673 views
  4. "எல்லைக்கு அப்பால் சீனா கட்டுமானம் செய்ய முயன்றது, தடுத்ததால் தாக்கியது" - இந்திய அரசு பதில் Getty Images மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலேயே தங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றும், ஒப்பந்தத்தை மீறும் இந்த முயற்சியை முறியடித்ததால் சீனத் தரப்பு வன்முறைத் தாக்குதலைக் கையில் எடுத்தது என்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்திய - சீன எல்லைப்புறத்தில் இருநாட்டுப் படையினர் இடையே நடந்த கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பு சேதாரம் பற்றி அதிகாரபூர்வத் தகவல் இல்லை. இந்த மோதல் சம்பவத்தில் நடந்தது என்ன என்ப…

    • 1 reply
    • 521 views
  5. இந்திய இளைஞர்களை குறி வைக்கும் கொரோனா! மின்னம்பலம் இளம் நோயாளிகளைக் கொண்டிருப்பதால் இந்தியா மற்ற நாடுகளை விட நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், எதிர்பார்த்ததை விட மிக அதிகமான விகிதத்தில் இளம் நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவான கருத்து என்னவென்றால், இந்தியாவில் கோவிட் -19 இறப்பு விகிதம் அநேகமாக உலகிலேயே மிகக் குறைவு என்பதே. இந்தியாவின் இறப்பு விகிதம் 2.8 சதவிகிதம், இது இத்தாலியுடன் ஒப்பிடும் போது (இத்தாலி 14.3சதவிகிதம்) மிகக் குறைவு. முதல் பார்வையில், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் (concurrent cumulative case fatality rate- CCCFR) நிச்சயமாக பலரையும் விட மிகக் குறைவாக இருப்ப…

  6. இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா? சீனாவைச் சுற்றியுள்ள மங்கோலியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது இந்தியா. பிரீமியம் ஸ்டோரி இந்திய - நேபாள எல்லையில், இந்திய நிலப்பரப்புக்குள் 335 சதுர கிலோமீட்டர் பரப்புக்குச் சொந்தம் கோரும் வரைபடத்துக்கான சட்டத்திருத்தத்துக்கு ஜூன் 13-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது நேபாள நாடாளுமன்றம். அடுத்த இரு நாள்களில் இந்திய - சீன எல்லையில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்குள் கலவரம் வெடித்து, உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், `நேபாளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரிவரச் செய்…

  7. கொரோனா பாதிப்பு தீவிரம்; டெல்லி சுகாதார மந்திரிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு டெல்லி சுகாதார மந்திரிக்கு கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 16:47 PM புதுடெல்லி, டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். டெல்லி முத…

  8. பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்- அ.தி.மு.க., தி.மு.க. பங்கேற்பு by : Litharsan பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளார். அதேபோல், தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்துவரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் …

    • 0 replies
    • 271 views
  9. ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். பதிவு: ஜூன் 19, 2020 13:42 PM லக்னோ உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க புறப்பட்டு உள்ளார். நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர். இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு …

  10. ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினரானது இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள். மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் பாதுகாப்பு சபையின் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான த…

  11. ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி by : Dhackshala சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீன எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பு படைகளுக்கு …

  12. நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் - பிரதமர் மோடி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் என பிரதமர் மோடி கூறினார். பதிவு: ஜூன் 18, 2020 12:30 PM புதுடெல்லி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- எரிசக்தியில் தன்னம்பிக்கை அடைய இந்தியா இன்று "ஒரு பெரிய நடவடிக்கை" எடுத்துள்ளது.வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களின் தொடக்கமானது "ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றி வெற்றி என்ற நிலையை கொடுக்கும். நிலக்கரிக்கான சந்தை இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறைகளுக்கும் உதவ…

  13. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது: பிரதமர் மோடி இந்தியாவில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த உதவியதாகபிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பும் 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “ஊரடங்கு தளர்த்த தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை …

  14. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி தாராவி எப்படி முன்னுதாரணமாக மாறியது; குடிசை குடிசையாக சென்று கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினர்: மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாநகராட்சி அதிகாரிகள் மும்பை ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான தாராவி, கரோனா வைரஸ் பரவலின் முக்கிய கேந்திரமாக இருந்து, வைரஸைக் கட்டுப்படுத்தியதில் தற்போது முன்னுதாரணமான பகுதியாக மாறி உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பு இரண்டுமே முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக மும்பையில்தான் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெய…

  15. காங்கிரஸ் கட்சியை ‘பழைய கட்டில்’ என்று வர்ணித்து சிவசேனா கிண்டல் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மகாவிகாஸ் கூட்டணியில் பிளவு இருப்பதை உறுதி செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியையே கிண்டலடித்துள்ளது ஆளும் சிவசேனாக் கட்சி. காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், மற்றும் அசோக் சவான் இருவரும் மகாராஷ்ட்ரா மூன்று கட்சி கூட்டணியில் விவகாரங்கள் எழுவதற்கு அதிகாரிகளே காரணம் என்று குற்றம்சாட்டினர் இது தொடர்பாக சிவசேனா தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் இந்த மாநிலத்தில் நன்றாகத்தான் விளங்குகிறது, ஆனால் பழைய கட்டில் சப்தம் எழுப்புவதுபோல் அவ்வப்போது தன் இருப்பைக் காட்ட பழைய கட்டிலான காங்கிரஸ் கட்சி சப்தம் எழுப்பி வர…

  16. இந்தியா குறைந்தளவான அணுவாயுதங்களை கொண்டுள்ளது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்! இந்தியா குறைந்தளவிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக ஸ்வீடனை சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் இந்தியா, சீனா இரு நாடுகளும் 2019-ஆம் ஆண்டில் கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. 320 அதன் மூலம் சீனாவிடம் இப்போது அணு ஆயுதங்களும், இந்தியாவின் கையிருப்பில் 150 அணு ஆயுதங்கள் உள்ள அதேவேளை பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிறுவனத்தின் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிக்கையின்படி சீனாவிடம் 290 அணு ஆயுதங்களும் இந்தியாவிடம் 130 முதல் 140 எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களும் இருக்க …

  17. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு திட்டம் – ராஜ்நாத் சிங் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக நடத்திய ஜம்மு ஜன் சம்வாத் பொதுக்கூட்ட உரையில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும் நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து பேசிய ராஜ்நாத் சிங் “இந்த…

  18. சீனா, பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம்கூட இந்தியாவுக்கு தேவையில்லை: அமைதியும், நட்பும்தான் தேவை: நிதின் கட்கரி பேச்சு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : கோப்புப்படம் அகமதாபாத் சீனாவின், பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம் கூட இந்தியாவுக்குத் தேவையில்லை, அதற்கு ஆசைப்படவும்இல்லை. இந்தியாவுக்கு அண்டை நாடுகளிடம் அமைதியும், நட்புறவும் மட்டுமே தேவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார் இந்தியா, சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல்நிலவி, அது தொடர்பாக பேச்சு நடந்து வரும்போது, இந்த கருத்தை மத்திய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது குறிபப்பிடத்தக்கது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக பதவி ஏற்று ஓர் ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து பாஜ…

  19. கரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகள் வழங்க அனுமதி- புதிய நெறிமுறைகள் வெளியீடு கரோனா வைரஸ் தொற்றை குணப் படுத்த ஹைட்ராக்ஸி குளோரோ குவின் மாத்திரைகளை பயன் படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள் ளது. இதற்கான புதிய நெறிமுறை களை வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை எந்த நாட்டிலும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு மருந்தும் இதுவரை தயாராக வில்லை. உலகம் முழுவதும் 78 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட் சத்துக்கும் அதிகமானோர் உயி ரிழந்துள்ளனர். இந்நிலையில், மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின், அசித்ரோ மைசின் மாத்திரைகள் கொடுத்தால் …

  20. கொரோனா வைரஸ் ஊரடங்கால் அதிகரிக்கும் குற்றங்கள்: புதிய நெருக்கடியை சமாளிக்குமா இந்தியா? எம் ஏ பரணிதரன் பிபிசி தமிழ் Getty Images கொரோனா வைரஸ் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், அதன் விளைவாக பல மாநிலங்களில் சில வகை குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றன. இந்தியாவில் பொது முடக்க கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது தொழில்கள் முடக்கம், நிறுவனங்கள் மூடல், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் நீங்கலாக, பெரும்பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் திருட்டு, வழிப்பறி கொள்ளை போன்ற செயல்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையை நாடு எதிர்கொண்டது. த…

  21. இந்தியாவில் கொரோனாவால் பெண்களே அதிகளவில் உயிரிழக்கக்கூடும் – ஆய்வு தகவல் தெரிவிப்பு! கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவினால் பலியாவதற்கான அபாயம் ஆண்களுக்கே அதிகம் இருப்பதாக உலக அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அறிவியல் என்ற ஆராய்ச்சி இதழில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் வீதத்தை வயது மற்றும் பாலின அடிப்படையில் வகைப்படுத்தி ஆராய்ச்சியாளா்கள் குழு ஒன்று இதனை மதிப்பீடு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது உறுதி செய்ய…

  22. எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது நேபாள அரசு! by : Krushnamoorthy Dushanthini எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இந்தியா பதில் தரும் என நம்புவதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ எனத் தெர…

  23. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச்சில் பாக். அத்துமீறலில் இந்திய வீரர் பலி: இந்த மாதத்தில் 3வது வீரர் பலி ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். பூஞ்ச், ரஜவ்ரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்த மாதத்தில் 3வது வீரர் பலியாகியுள்ளார். சனிக்கிழமை இரவு ஷாபூர்-கெர்னி செக்டாரில் பாக்.ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடும் ஷெல் தாக்குதலும் நடத்தினர். இதனையடுத்து இந்திய ராணுவமும் வலுவான பதிலடி கொடுத்தது. இந்தத் …

  24. பீகார் எல்லையில் நேபாள போலீசார் சுட்டதில் இந்திய வாலிபர் பலி பீகார் எல்லையில் நேபாள போலீசார் சுட்டதில் இந்திய வாலிபர் பலியானார். பதிவு: ஜூன் 13, 2020 03:15 AM பாட்னா, தங்கள் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் லிபுலேக், காலாபனி, லிம்பியதூரா ஆகிய பகுதிகளை நேபாள அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இந்த சூழலில் உத்தரகாண்ட் மாநிலம் தார்சுலாவில் இருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ. சாலையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த மாதம் திறந்துவைத்தார். இதற்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா புதிதாக அமைத்துள்ள சாலை தங்கள் எல்லைக்குள் வருவதாக நேபாள அரசு குற்…

  25. இறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்; கவர்னர் கண்டனம் மேற்குவங்காள மாநிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அலட்சியமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவர்னர் கண்டனம் தெரிவித்து உள்ளார். பதிவு: ஜூன் 13, 2020 08:34 AM கொல்கத்தா: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்காள மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் 13 சடலங்களுடன் ஒரு நகராட்சி வேனுக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடல்கள் வேனில் இருந்து தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது. அப்போது துர்நாற்றம் வந்ததாக கூறப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.