அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3316 topics in this forum
-
சீனாவுடனான மோதல்; டிக்டொக்,யுசி பிரௌசர் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை! இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது டிக்டொக், ஹலோ, கேம் ஸ்கானர், செயார்இட், யு.சி. பிரௌசர் போன்ற பிரபமான செயலிகள் மற்றும் கிளாஸ் ஓப் கிங்ஸ் விளையாட்டு உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட செயலிகள் விபரம்: https://newuthayan.com/சீனாவுடனான-மோதல்-டிக்/
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்தியா, சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய முடிவுகள் சீனாவுடன் உள்ள பொருளாதார தொடர்பை துண்டிக்க இந்தியா வேகமான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முடிவுகளை எடுத்து உள்ளது. பதிவு: ஜூலை 02, 2020 07:36 AM புதுடெல்லி நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியா புதன்கிழமை (ஜூலை 1) சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முடிவுகளை…
-
- 0 replies
- 213 views
-
-
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர். நியூயார்க் : ஐ.நா. அமைப்பான ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில், கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி, 6 கோடியே 10 லட்சம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, நடப்பு 2020…
-
- 0 replies
- 293 views
-
-
நாகாலாந்து மீண்டும் பதற்றப் பகுதியாக பிரகடனம்- ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு - படையினருக்கு சிறப்பு அதிகாரம் டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் மத்திய அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தனி நாடு கோரிக்கை நாகாலாந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்டது முதலே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தனிநாடு கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன. நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக் மூய்வா) பிரிவினர் இந்த தனிநாடு போரா…
-
- 0 replies
- 450 views
-
-
ஒரு தலைக்காதல்: டிக் டாக் பெண் பிரபலம் கொலை டிக் டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் அரியானாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:25 AM புதுடெல்லி இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த கட்டிலின் படுக்கையில் ஷிவானியின் உடல் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்த…
-
- 0 replies
- 336 views
-
-
கொரோனா பாதிப்பு: மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பால் மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 08:34 AM பாட்னா பீகார் மாநில தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை…
-
- 0 replies
- 248 views
-
-
நவம்பர் வரை ஊரடங்கு... கோடிட்டுக் காட்டும் மோடி மின்னம்பலம் மத்திய அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டம், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா ஊரடங்கு முற்று முழுதாக முடிய நவம்பர் மாதம் வரை ஆகிவிடும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் பிரதமர். இன்று (ஜூன் 30) மாலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். கொரோனா காலத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றும் ஆறாவது உரை இது. இந்திமொழியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், நாம் இப்போது அன்லாக் 2 காலகட்டத்துக்குள் நுழைந்திருக்கிறோம். மேலும் சளி, காய்ச்சல் பொதுவாகவே அதிகம் வருகிற காலகட்டம் இது. அதனால் நாம்…
-
- 0 replies
- 463 views
-
-
படகு கவிழ்ந்ததில் 32 பேர் பலி ,பலர் மாயம் - பங்களாதேஷில் பரிதாபம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புரிகங்கா ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது படகை செலுத்தியவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்று சந்தேகிப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். டாக்காவின் ஷியாம்பஜார் பகுதியில் புரிகங்கா ஆற்றில் ஏறக்குறைய 100 பயணிகளுடன் காலை வேளையில் மூழ்கிய படகுக்குள் பல பயணிகள் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். "இதுவரை முப்பத்திரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை மீட்புபு்பணியாளர்கள் தேடி வருகின்றனர் என பங்களாத…
-
- 0 replies
- 367 views
-
-
ஜப்பான்-இந்தியா இணைந்து இந்தியப் பெருங்கடலில் போர் ஒத்திகை! இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இணைந்து இந்தியப் பெருங்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டன. இந்திய கடற்படையைச் சேர்ந்த INS ராணா, INS குலிஷ் ஆகிய போர்க் கப்பல்களுடன் ஜப்பான் கடற்படையின் JS காஷ்மீர் மற்றும் JS ஷிமாயுகி ஆகிய போர்க் கப்பல்கள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன. சீன இராணுவம் ஜப்பானிய கடற்படையுடன் அவ்வப்போது முறுகல் நிலையை ஏற்படுத்திவருகின்ற நிலையில் சீனா உரிமைகோரியுள்ள சில தீவுகளில் தமது உரிமையை நிலைநாட்டும் நடவடிக்கையை ஜப்பான் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், டோக்கியோவிலிருந்து 1931 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டோனோஷிரோ என் தீவுகளின் பெயரை டோனோஷிரோ சென்காகு என ஜப்பானின் இஷிகாகி நகர சபை ம…
-
- 0 replies
- 224 views
-
-
பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் வழக்கம்போல் இன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு பயங்கரவாதிகள், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.ta…
-
- 0 replies
- 375 views
-
-
சீனாவுடன் போர் நடக்குமா.? | சுப்ரமணியன் சுவாமியுடன் பாண்டே நேர்காணல்
-
- 0 replies
- 375 views
-
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 39 நாளில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன?மருத்துவ நிபுணர்கள் அம்பலம் இந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். பதிவு: ஜூன் 28, 2020 07:20 AM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி மாதம் வெளிப்படத்தொடங்கியது. ஆனால் இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் எடுத்து மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தொற்று பாதித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 100 எ…
-
- 0 replies
- 797 views
-
-
லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும்’- ராணுவ நிபுணர்கள் கருத்து லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பதிவு: ஜூன் 28, 2020 04:15 AM புதுடெல்லி, லடாக்கின் கிழக்கில் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவிய சீன ராணுவம் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதில் கடந்த 15-ந்தேதி நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழ்ந்த இந்த மோதல் சம்பவம் சர்வ…
-
- 0 replies
- 833 views
-
-
Fari and lovely பெயர் மாற்றம் - சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? கீதா பாண்டே பிபிசி செய்தியாளர் Getty Images யூனிலீவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் `முகப் பொலிவு` க்ரீமான `ஃபேர் அண்ட் லவ்லி`யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தை நீக்கப்படும் என அந்நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவுப்பைப் பலர் வரவேற்றாலும், ஆர்வலர்கள் இது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்கின்றனர். `வெள்ளையாக இருப்பதே அழகு` என்றும் இதனால் நிறம் குறைவாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பற்றத்தன்மையுடன் உணருவதற்கும் இந்த ஃபேர் அண்ட லவ்லி க்ரீம் துணை புரிகிறது என யூனிலீவர் மற்றும் அதன் இந்தியத் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடட் மீது ஏற்கனவே பலர் கடுமையான விமர்சனங்…
-
- 0 replies
- 510 views
-
-
இந்தியாவில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 107 பேர் பலி! இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு அறிவிவித்துள்ளது. https://newuthayan.com/இந்தியாவில்-ஒரே-நாளில்-ம/
-
- 0 replies
- 406 views
-
-
சீனாவை வம்பிழுத்து அவமானப்பட்டது இந்தியா..!! பாகிஸ்தான் அமைச்சர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தியா, பாகிஸ்தான் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லை பிரச்சினையை பாகிஸ்தானை நோக்கி திசை திருப்ப இந்தியா முயற்சித்து வருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினரு…
-
- 1 reply
- 819 views
-
-
டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளை பாதியாக குறைக்க இந்தியா பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது 7 நாட்களில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை பாதியாக குறைக்க இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு உள்ளது. பதிவு: ஜூன் 24, 2020 06:47 AM புதுடெல்லி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ‘விசா‘ பிரிவில் அதிகாரிகளாக பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் உளவு பார்த்ததாககைது செய்யப்பட்டனர். இந்திய பாதுகாப்பு நிலைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை இந்தியர் ஒருவரிடம் இருந்து வாங்கியதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்காக அவர்கள் அந்த நபருக்கு இந்திய பணமும், ஒரு ஐபோனும் கொடுத்தனர். பிடிபட்டதும் அபித் உசேனும், …
-
- 1 reply
- 356 views
-
-
கொரோனா மருந்து: பதஞ்சலிக்கு மத்திய அரசு தடை! மின்னம்பலம் கொரோனாவுக்கு ஆயுர்வேத முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அது ஆதாரங்களுடன் வெளியிடப்படும் என்றும், பாபா ராம்தேவால் அறியப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஆச்சாரிய பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா கிட் எனப்படும் மருந்தை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா மருந்து தொடர்பான விளம்பரங்களையும், அறிவிப்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு பதஞ்சலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று (ஜூன் 23) மாலை 5.39 மணிக்கு மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சில நாட்களாகவே பதஞ்சலி நிறுவனம் …
-
- 0 replies
- 440 views
-
-
சீன ராணுவம் நடத்தும் இணைய தாக்குதல்: மத்திய உள்துறை எச்சரிக்கை இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனி நபர்களை குறிவைத்து தகவலை திருடும் ஃபிஷிங் தாக்குதல் நடத்தவும், இலவச கோவிட் 19 சோதனை பெயரில் வலை விரிக்கும் சீன இணையதளங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர கால பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய சீன உறவு லடாக் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன பொருட்களை புறக்கணிப்போம், சீன இணையதளங்கள், செயலிகளை புறக்கணிப்போம் என்கிற கோஷம் வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களை முடக்கும் வகையிலும், பொதுமக்களை கவர்ந்திழுக்க…
-
- 2 replies
- 538 views
-
-
மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை; அதிர்ச்சி தகவல் மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 23, 2020 16:51 PM மும்பை, நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 61 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர். மராட்டியத்தில் 6 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தின் மும்பை மாநகரில் மலாட் பகுதியில் வடக்கு வார்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த…
-
- 0 replies
- 437 views
-
-
சீனா கேள்விக் குறியாக்கிய ‘வூஹான் உணர்வு’; ‘சென்னைத் தொடர்பு’ எம். காசிநாதன் / 2020 ஜூன் 23 அமைதியை நிலைநாட்டும் ஒப்பந்தம், 1993ஆம் ஆண்டில் கையெழுத்தான பின்னர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சுமூகமான உறவில், எந்த விதமான துப்பாக்கிச் சூடும் நடக்கவில்லை. ஆனால், தற்போது முதற்கல்லை வீசி, தெளிந்த நீரோடையைக் குழப்பியிருக்கிறது சீனா. அமைதியாக இருந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக நல்லுறவில், ‘அலை’களை சீனா ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டினுடைய பாதுகாப்புக் கொள்கையில், பிரச்சினைகளை ஏற்படுத்தும் நாட்டுடன், வர்த்தக உறவைத் தொடர்ந்திட முடியுமா என்ற கேள்வி, முழுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் இந்திய மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. இந்தியாவுக்கும் அண்டை நாடுக…
-
- 0 replies
- 457 views
-
-
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 500 பொருட்களை புறக்கணிக்க முடிவு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 500 பொருட்களை புறக்கணிக்க அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 10:57 AM புதுடெல்லி இந்திய- சீனா எல்லையில் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டனர், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சீனாவுடன் வர்த்தக உறவுகளை துண்டிக்க கோரியுள்ளனர். இந்தியா - சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், 500 வகையான சீனப் பொருட்களை பட்…
-
- 11 replies
- 1.9k views
-
-
சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்... கொல்கத்தா: லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன. அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், லடாக்கில் இந்திய படையினர் வீரமரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கண்டனக்க…
-
- 0 replies
- 437 views
-
-
அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்த படை தளபதிகளுக்கு அனுமதி! லடாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 1996 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இந்தியா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்குள் துப்பாக்கிகள் அல்லது வெடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்த விதிகளில் இந்திய இராணுவம் மாற்றம் செய்துள்ளது. இதன்படி அசாதரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய ரா…
-
- 0 replies
- 165 views
-
-
சிக்கிமின் பனி மலைச்சிகரத்தில் சீனா- இந்திய வீரர்களிடையே மீண்டும் மோதல் சிக்கிமின் மலைச்சிகரத்தில் சீனா- இந்திய வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 23, 2020 06:25 AM புதுடெல்லி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 ம் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மற்றும் 76 பேர் காயமடைந்தனர். சீனர்கள் ஒரு கூடாரத்தை அகற்ற மறுத்ததால் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் இருதரப்பிலும் ராணுவ குவிப்பு நடந்து வந்தாலும், பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண பேச்சுவார்த்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராணுவ கமாண்டர…
-
- 2 replies
- 417 views
-