அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
கொரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போர் இது. நாம் சோர்வடையவோ, ஓய்வு பெறவோ கூடாது என தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் வித்துள்ளார். பதிவு: ஏப்ரல் 06, 2020 15:07 PM புதுடெல்லி பாரதீய ஜனதா கட்சியின் 40-வது தொடக்க தின விழாவில் இன்று அக்கட்சி தொண்டர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் இந்தியா வேகமாக பணியாற்றுகிறது. கொரோனாவுக்கு எதிரான பணியில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்தியாவில் ஊரடங்கை மக்கள் தீவிரமாக கடைபி…
-
- 0 replies
- 186 views
-
-
கொரோனா சிகிச்சைக்காக 40 ஆயிரம் படுக்கைகளை இந்திய ரெயில்வே முதற்கட்டத்தில் தயார்படுத்தி உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 15:01 PM புதுடெல்லி, கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமுடன் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது. நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து டெல்லி மற்றும் கேரளா இந்த வரிசையில் உள்ளன. இந்த பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில் 690 ஆகவும், தமிழகத்தில் 571 ஆகவும் நேற்று உயர்ந்து உள்ளது. இந்நிலையில், மராட்டியத்தில் கொர…
-
- 0 replies
- 202 views
-
-
கொரோனா வைரஸ்பரவல் மூன்றாம் கட்டத்திற்கு நகருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக கடைபிடிக்க திட்டமிட்டு உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 08:31 AM புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 - ஐ எட்டி விட்டது. மராட்டியத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 748 ஆக உயர , பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். கேரளாவில் 306 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.தெலங்கானாவில் பா…
-
- 0 replies
- 204 views
-
-
தாராவியில் 21 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.எனவே அங்குகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆகி உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 07:55 AM மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் ஆட்கொல்லி கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தாராவி அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் டாக்டா், பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண், முகுந்த் நகரை சேர்ந்த 48 வயது நபர் ஆகியோரை கொரோனா தாக்கி உள்ளது. இவர்கள் தவிர தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பாலிகா நகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைக்காரர் உயிரிழந்துவிட்டார். இதேபோல தாராவியில் துப்புரவு பணியில…
-
- 0 replies
- 236 views
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. பதிவு: ஏப்ரல் 06, 2020 05:15 AM புதுடெல்லி, கொரோனா வைரஸ் பெரும்பாலும் வயதானவர்களையே அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் உலக அளவில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்தியாவில் இது தலைகீழாக இருக்கிறது. இங்கு வயதானவர்கள் குறைவான அளவிலும், குறைந்த வயதினர் அதிக அளவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுபற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வருமாறு:- * இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர் 60 வயதுக்கு உட்…
-
- 0 replies
- 188 views
-
-
டெல்லி: கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் குணடைந்து வீடு திரும்பிவிட்டனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்க…
-
- 0 replies
- 224 views
-
-
கொரோனாவை தடுக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா?: முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 12 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார்.எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத…
-
- 0 replies
- 191 views
-
-
இந்தியாவில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்க தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 04:15 AM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு ரெயில் சேவை தவிர்த்து அனைத்து பயணிகள் ரெயிலும் வருகிற 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 15-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் ரெயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு, செயல்பாடு உள்ளிட்ட துறைகளின் அனைத்து ஊழியர்கள், ரெயில்வே கார்டு…
-
- 0 replies
- 339 views
-
-
இந்தியாவில் தற்போது வேகமெடுத்துள்ள கொரோனா பரவலைத் தடுக்க அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும செப்ரெம்பர் மாதம் வரை நீடிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தற்போது 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் திகதி வரை நீடிக்கும். இந்தநிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம், ‘இந்தியாவில் நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்ரெம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நீக்கப்படலாம். இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத…
-
- 1 reply
- 303 views
-
-
புதுடில்லி: காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்கள், மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த மார்ச், 8 - 10ம் தேதிகளில், டில்லியில், நிஜாமுதீன் பகுதியில், தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை முடித்து அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதால், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஸியாபாத் மருத்துவமனை சார்பில், போலீசுக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.…
-
- 7 replies
- 1k views
-
-
தென்காசியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர். தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதியின்றி ஏராளமானோர் தொழுகைக்காக கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர். பின்னர் ஐமாத் தலைவரை அழைத்து, அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், அங்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தை கலைக்கவும், தாக்கு…
-
- 0 replies
- 230 views
-
-
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் நோய்த்தொற்று வேகமாக பரவினால் நிலைமையை நிர்வகிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பதிவு: ஏப்ரல் 04, 2020 16:48 PM மும்பை மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றில் முத…
-
- 0 replies
- 344 views
-
-
கொரோனா பாதித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் தம்பதிக்கு வைரஸ் பாதிப்பில்லாமல் ஆரோக்கியமுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பதிவு: ஏப்ரல் 04, 2020 16:12 PM புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் புதிய தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவசரகால பணிக்காக, அதே மருத்துவமனையில் மருத்துவரின் 9 மாத கர்ப்பிணி மனைவி பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணிநேரத்தில், மனைவிக்கும…
-
- 0 replies
- 209 views
-
-
ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர். பதிவு: ஏப்ரல் 02, 2020 17:15 PM புதுடெல்லி 800 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் ஏப்ரல் 1 ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டனர், கொரோனா தொற்றுநோயின் முக்கிய அம்சங்கள் குறித்து கவனத்தை ஈர்த்ததுடன், இது தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது. அதில் கையொப்பமிட்டவர்களில் டிஐஎஃப்ஆர், மும்பை, என்சிபிஎஸ், பெங்களூரு, ஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ்சி, பெங்களூரு, மற்றும் அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் அதில் அ…
-
- 1 reply
- 295 views
-
-
செங்கல்பட்டு: செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரில், பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உழவர் சந்தை மற்றும் தூய கொலம்பா பள்ளி ஆகிய பகுதகிளில் சமூக இடைவெளியில் காய்கறி கடைகள் அமைக்க கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.ஆனால், பள்ளி வளாகத்தில் மட்டும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், அருகில் உள்ள வேணுகோபால் கிளப்பில் காய்கறி கடை இயக்கப்படுகிறது. அங்கு கொரோனா பற்றி அச்சமில்லாமல் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு காய்கறி வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக, வியாபாரிகளும், பொதுமக்களும், முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி விடாமல் உள்ளனர்.அதேபோல், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் இட நெருக்கடியாக இர…
-
- 0 replies
- 204 views
-
-
இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஊரடங்குக்கு உத்தரவிடும்போது கோடிக்கணக்கான முறைசாராப் பணியாளர்களையும் நிராதரவான மக்களையும் அரசு நினைத்துப் பார்த்ததா? இவர்களில் பலர் பல்வேறு இடங்களுக்குச் சுற்றிச் சுற்றிப் புலம்பெயர்பவர்கள். இந…
-
- 0 replies
- 489 views
-
-
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்ப…
-
- 0 replies
- 283 views
-
-
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் காணொளி மூலமான உரையொன்றின்போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். அந்த காணொளி உரையில் நரேந்திர மோடி மேலும் கூறுகையில், ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றும…
-
- 8 replies
- 463 views
-
-
கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடல் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் பகுதிகளில் இருந்து நோய் தொற்றுவதற்கான வாய்ப்பில்லை என இந்தியாவின் மேற்குவங்காள அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச அதிகாரிகளிற்கும் பொதுமக்களிற்கும் விடுத்துள்ள அறிவுறுத்தலில் மம்தா பானர்ஜி அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினது அறிவுறுத்தல்களை மேற்கோள்காட்டி மாநில அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் இறந்தவரின் உடல் காரணமாக எவருக்கும் தொற்று ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபரின் உடல் காரணமாக சுகாதார பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் அயலவர்களிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. உடலை எரி…
-
- 0 replies
- 225 views
-
-
கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு எம். காசிநாதன் / 2020 மார்ச் 31 நான்கு பிரிவுகளைக் கொண்ட 1897 ஆம் வருட ‘தொற்று நோய்ச் சட்டம்’ தற்போது இந்தியாவின் ‘பாதுகாப்புக் கவசமாக’ மாறியிருக்கிறது. மனித குலத்துக்கு மாபெரும் பேரிடராக, மறக்க முடியாத பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைரஸால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த இரண்டாவது சுற்றில் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. முதற்சுற்றில், தாக்குதலுக்கு உள்ளான சீனா, மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கையை நோக்கி நகருகின்றது. இந்தியா சகஜ வாழ்க்கையை ஒத்தி வைத்து விட்டு, 21 நாள் ஊரடங்கில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ‘மார்ச் 22 ஆம் திகதி ‘சுய ஊரடங்கு’ ஜனநாயக நாடான இந்தியா என்பதை பறைசாற…
-
- 1 reply
- 297 views
-
-
ஓசூர்: ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து இன்றி, ஓசூர் பகுதியில் விளையும் குடைமிளகாயை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் குப்பையில் கொட்டுகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மலர்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குடை மிளகாயை விவசாயிகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல், குப்பைகளில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு விவசாயி 40 முதல் 50 டன் அளவிலான குடை மிளகாய்களை பறித்து விற்பனைக்கு அனுப்புகிறார். ஓசூர் பகுதிகளில் சாகு…
-
- 0 replies
- 260 views
-
-
கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. முதியவர் திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது. இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88) தம்பதியருக்கும் கொரோனா வைரஸ் பாதித்தது. கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகன், மருமகள், பேரன் மூலம்தான் தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு கொரோனா வைரஸ் ப…
-
- 0 replies
- 361 views
-
-
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு இந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. டெல்லியில் த…
-
- 0 replies
- 206 views
-
-
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மும்பையில் உள்ள தாராவி பகுதியை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். மும்பை தாராவி பகுதி மும்பை: இந்தியாவில் ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 143 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் 335 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, அம்மாநிலத்தின் தாராவி பகுதியை சேர்ந்த நபர்…
-
- 0 replies
- 277 views
-
-
கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலின், தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திருப்பித் தர தயாராக இருப்பதாக' நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனுக்கு, நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில், நான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திரும்பத் தர தயாராக இருக்கிறேன். என் சொத்து முடக்கத்தை அமலாக்கத் துறை நீக்கி, அத்தொகையை பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும்' என, அவர் கேட்டுக் கொண்ட…
-
- 0 replies
- 244 views
-