Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், பிரதமர் மோதி தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யக் கோரிக்கை விடுத்தார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். - இவ்வாறாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், இதனை மறுக்கிறது இந்தியா. அழைக்கவில்லை அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. MEA அதில், "இந்தியாவும் பாகிஸ்தானும் அழைத்தால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் ஊடகங்களிடம் கூறியதாக அறிகிறோம். ஆனால்,…

    • 0 replies
    • 226 views
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 10 டிசம்பர் 2023 இந்தியப் பெருங்கடலில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க, அந்தப் பகுதியின் அனைத்து நாடுகளையும் இணைத்து, கோஷ்டி பூசல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு கூறியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில் (Indian Ocean Region Forum) மாலத்தீவின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப் இதனைத் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்தில் சீனா இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. …

  3. சமீர் அத்மஜ் மிஸ்ரா பிபிசி இந்திக்காக உன்னாவ் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த வாரம் எரித்துக் கொலை செய்யப்பட்டு அவரது இறுதிச் சடங்குகள் நடந்ததைத் தொடர்ந்து, இந்துநகர் கிராமத்தில் நிலவிய பதற்றம் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிப்பதில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மட்டுமே இப்போது அந்தக் கிர…

  4. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் அக்கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது. இதில் குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ம…

  5. பருவநிலை மாற்றம் : சிறிய தீவுகளுக்கு உதவ இந்தியா நடவடிக்கை! பருவநிலை மாற்றம் குறித்த தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு வழங்குவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறிய தீவு நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை கிளாஸ்கோவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த திட்டத்தால் சிறிய தீவு நாடுகளுக்கு நிதியும், தொழில்நுட்பங்களும் எளிதில் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அந்த நாடுகளில் உள்ள மக்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் இந்த திட்டம் பாதுகாக்கும். இந்த திட்டம் வெற்றி பெறுவதற்…

  6. கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடல் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் பகுதிகளில் இருந்து நோய் தொற்றுவதற்கான வாய்ப்பில்லை என இந்தியாவின் மேற்குவங்காள அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச அதிகாரிகளிற்கும் பொதுமக்களிற்கும் விடுத்துள்ள அறிவுறுத்தலில் மம்தா பானர்ஜி அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினது அறிவுறுத்தல்களை மேற்கோள்காட்டி மாநில அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் இறந்தவரின் உடல் காரணமாக எவருக்கும் தொற்று ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபரின் உடல் காரணமாக சுகாதார பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் அயலவர்களிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. உடலை எரி…

    • 0 replies
    • 225 views
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் இந்திய பங்குச் சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பங்குகளை வாங்குவோரைவிட விற்பவர்களின் அளவு மிக அதிகமாக இருந்துள்ளது. இதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டுமே கடும் சரிவைக் கண்டுள்ளது. இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21-ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரி…

  8. Published By: SETHU 10 AUG, 2023 | 09:21 AM பாகிஸ்தான் பாராளுமன்றம் அந்நாட்டு ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பரிந்துரையின்படி, அரசியலமைப்பின் 58(1) ஆவது பிரிவின்படி ஜனாதிபதி ஆரிவ் அல்வி, பாராளுமன்றத்தை கலைத்துள்ளார் என நேற்று நள்ளிரவு ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் 2022 ஏப்ரலில் கவிழ்க்கப்பட்டதையடுத்து, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமயிலான அரசாங்கம் ஆட்சியிலிருந்தது. பாராளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் புதிய பிரதமர் தெரிவாகும் வரை இடைக்கால பிரதமர் ஒருவரை தெரிவுசெய்வதற்காக எதிர்க்கட்சியினருடன் பேச்ச…

  9. காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜக்தர் சிங் பதவி,பிபிசி 24 மார்ச் 2023, 12:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் `நான் என்னை ஒருபோதும் இந்தியனாக கருதியது இல்லை. நான் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன் என்பதற்காக என்னை நீங்கள் இந்தியன் என கூற முடியாது. என்னை பொருத்தவரை அது ஒரு பயண ஆவணம் மட்டுமே` இந்த வார்த்தைகள் அம்ரித்பால் சிங் கூறியது. இவர் காலிஸ்தான் ஆதரவாளர் மற்றும் `வாரிஸ் பஞ்சாப் டி` என்ற பஞ்சாப் இயக்கத்தின் தலைவர். சீக்கியர்களுக்கு …

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையை வேறு நிறுவனத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை, ஜனவரி 3) தீர்ப்பளித்துள்ளது. இதில் அதானி குழுமத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தொகுப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இந்த மனுக்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கோரியிருந்தன. இந்த பிரச்னையை விசாரிக்க கடந்த ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் ஒரு குழுவை நீதிமன்றம் நியமித்திருந்தது. அதே சமயம் இந்த …

  11. காஷ்மீரில் இருந்து வெளிமாநிலத்தவர்கள், வெளியேறி வருவதாக... அறிவிப்பு! காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நீடித்து வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரை 11 பேர் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பதால், வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட காடுகளில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http…

  12. பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES கட்டுரை தகவல் எழுதியவர்,நிதின் ஸ்ரீவாஸ்தவ் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2005ஆம் ஆண்டு அப்போதைய இந்திய கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோகோ தீவுகளில் சீனாவின் இருப்பு இல்லை என்று மியான்மர் அரசு கூறுகிறது. இதை நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறியிருந்தார். அவரது அதிகாரபூர்வ பயணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, மியான்மர் கடற்படை தளபதி சோ தெய்ன் டெல்லிக்கு வந்து அட்மிரல் பிரகாஷுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தினார். 1948இ…

  13. படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA / BBC பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பட்டாலாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்புக்கு பின்னர், தொழிற்சாலை கட்டடம் இடிந்தது. பல தொழிலாளர்கள் இதில் சிக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA/BBC இதுவரை 19 பேர் இறந்துள்…

  14. டெல்லி: கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் குணடைந்து வீடு திரும்பிவிட்டனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்க…

  15. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தீவிர திட்டங்களை அறிவித்தது மத்திய அரசு! கொரோனா தொற்று உள்ளவர்கள் இதுவரை 274 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு மேலும் தீவிரமாகாமல் தடுப்பதற்கு மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது. H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலோடு ஒப்பிடும்போது கொரோனா தொற்று அதிகம்பேரை பாதித்திருந்தாலும், பரவிய பகுதிகள் இரண்டிற்கும் ஒரேமாதிரியாக இருப்பதாகவும், எனவே கொரோனா நாடு முழுவதும் சீராகப் பரவ வாய்ப்பில்லை என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த …

  16. கர்நாடகாவில் கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஜிபிஎஸ் இணைப்புடன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு செல்பி எடுத்த அரசுக்கு அனுப்ப வேண்டும் என மாநில மருத்துவ கல்வி மந்திரி தெரிவித்துள்ளார். கோப்பு படம் பெங்களூரு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் கட்டாயம் தங்கள் வீடுகளில் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும், சிலர் ஊ…

  17. பாரதியைப் புகழ்ந்து தமிழில் ருவிட் செய்த மோடி மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரை புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டரில் தமிழில் கருத்து வெளியிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாரதியாரை புகழ்ந்தும் அவரது வரிகளை குறிப்பிட்டும் பிரதமர் மோடி ருவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன” என பதிவிட்டு…

  18. "நேரு மிகப்பெரியவர் என்றால் குடும்பப் பெயரில் சேர்க்க அஞ்சுவது ஏன்?" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV RAJYA SABHA "நேரு மற்றும் காந்தி" என்ற பெயரில் காங்கிரஸ் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்திய போதிலும், அவர்களில் யாரும் நேரு குடும்பப்பெயரை ஏன் பயன்படுத்தவில்லை என்று காந்தி குடும்பத்தினரை கடுமையாகச் சாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோதி பேசினார். மாநிலங்களவையில் வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோதி பதிலளித்தார். அப்போது அவர், நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க காங்கிரஸ் டோக்கனிசத்தை மட்டுமே கடைப்…

  19. மகாராஷ்டிரா நெருக்கடி: சொகுசு விடுதிகளில் நடக்கும் 'ரகசிய பேர அரசியல்' இந்திய மக்களாட்சியின் அங்கமாகிவிட்டதா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC MARATHI நம் நாட்டின் அரசியல் மீண்டும் சட்டமன்றங்களில் இருந்து ஆடம்பர விடுதிகளுக்கு மாறியுள்ளது. இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் இத்தகைய நிகழ்வு சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. அம்மாநிலத்தில் செல்வாக்குமிக்க அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் - வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கெளஹாத்தி நகரில், தங்கள் வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஓர் உயர்தர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

  20. படக்குறிப்பு, பகிடெரு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், கர்க்கிபட்டி உமாகண்ட் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீரானது கிணறுகள், கடல் நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகின்றது. தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. மோட்டார்களோ, வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "இந்த பகுதியில் அதிக நிலக்கரி இருக்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி வளங்களை பற்றி தெர…

  21. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்’ என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு ‘அடல் சேது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்…

  22. கடவுள் மறுப்பாளரான ஆசிரியரை வலுக்கட்டாயமாக கோவிலில் பூஜை செய்ய வைத்த இந்துத்துவா அமைப்புகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரவின் சுபம் பதவி,பிபிசி தெலுங்கு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, தெலங்கானாவில் நாத்திகவாதியான தலித் ஆசிரியரை கோவிலுக்கு இழுத்துச் சென்று மன்னிப்பு கேட்க வைத்த இந்துத்துவா அமைப்புகள். தெலங்கானாவில் நாத்திகவாதியான தலித் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரை இந்துத்துவா அமைப்புகளும் பாஜக அமைப்பினரும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்தது சர்ச்சையாகியுள்ளது. …

  23. பட மூலாதாரம்,ALI KHAN MAHMUDABAD/FB படக்குறிப்பு,பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் 49 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்ட பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார். யோகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியாணாவின் சோனிபட் காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி, பேராசிரியர் அலி கான் மீது ஹரியாணா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பேராசிரியர் அலி கான், ஹரியாணாவின் அ…

  24. அமுலுக்கு வந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம்! தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி மோதல்கள் பதற்றங்களை அதிகரித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் புதன்கிழமை (15) தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அதன்படி, எல்லைப் பதற்றங்களைத் தணிக்க ஆப்கானிஸ்தான் தரப்பு வேண்டுகோளின் பேரில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இஸ்லாமபாத் வெளிவிவகார அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அதே நாளில் சமூக ஊடகங்களில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார். பாக…

  25. தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் வொஷிங்டன் பயணத்தின் போது, புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் சிறப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரியாக நியமிக்கப்பட்ட எலோன் மஸ்க்கை வியாழக்கிழமை (13) சந்தித்தார். வொஷிங்டனில் அமைந்துள்ள பிளேர் ஹவுஸில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார். சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள மோடி, “இந்தியாவின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ பற்றி தொழில்நுட்ப பில்லியனருடன் விவாதித்ததாக பதவிட்டார். அத்துடன், விண்வெளி, இயக்கம், தொழில்நுட்பம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.