Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம். தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள் பயனர்களை குறிவைத்துள்ளது. அதாவது அப்பிள் சாதனங்களை பயன்படுத்தும்போது அவற்றிற்கு தனியான Apple ID உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் குறித்த சாதனத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும். இதை நன்கு அறிந்து கொண்ட ஹேக்கர்கள் நூதனமான முறையில் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புகின்றனர். அதில்“உங்கள் Apple I…

  2. கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு பதிவு இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் தோல்வியடையுமானால் பெருமளவு இழப்பீடு செலுத்தவும் அதன் வணிக நடைமுறைகளை மாற்றிக்கொள்ளவும் நேரிடும் கூகுள் நிறுவனம், அதன் ஆண்ட்ராய்டு கணினி இயங்குதளத்தை (ஆபரெட்டிங் சிஸ்டம்) சந்தைப்படுத்தும் நடைமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, அந்த நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் 'போட்டி வணிகத்துக்கு எதிரான செயற்பாடுகளின்' கீழ் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது. உலகின் ஸ்மார்ட் ஃபோன்களில் 80 வீதமானவற்றில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் பாவனையில் உள்ளது. அந்த ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக, கூகுள் நிறுவனம் அதன் சொந்த செயலிகளையும் சேவைகளையும் நிலையான ஏற்பாடுகளாக முன்கூட…

  3. பயணத்தை ஈஸியாக்கும் ஐந்து ஆப்ஸ்! நாம் வாழும் இந்த பரபரப்பான 21-ம் நூற்றாண்டில், யாருக்கும் பயணத்திற்கான ரயில்/பஸ் டிக்கெட்டையோ, நண்பர்களுடன் செல்லும் சினிமாவிற்கான டிக்கெட்டையோ நீண்ட வரிசையில் நின்று வாங்குவதற்கான நேரமும், பொறுமையும் இல்லாமல் போய் விட்டது. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஆபிஸ்/வீடு என நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமக்குத் தேவையான அனைத்தையும் கையடக்க மொபைல் வாயிலாக, அவசரமான நிமிடங்களில் கூட நாம் வசதியாக செய்து கொள்ள முடிகிறது. அத்தகைய திறன் படைத்த அப்ளிகேஷன்களில், மக்களிடையே அதிகம் பிரபலமானவற்றின் தொகுப்பை இப்போது நாம் பார்க்கலாம். கூகுள் மேப்ஸ் (GOOGLE MAPS) கூகுள் ஆண்டவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான கூகு…

  4. கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் ஷங்கர் அருணாச்சலம் மேகக்கணிமை (Cloud Computing) க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா? சரி, நாம் பயன்படுத்தும் இச்ச…

  5. Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம் Internet தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய Mobile கருவிகள் துவங்கி இதர கருவிகளும் Internet இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வகையில் Internet தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இந்த தேவையை எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் Bracelet Computer. ஓஎல்இடி திரையை பயன்படுத்தி Sony நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வருகின்றது. இன்று Concept வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும் இந்த Computer வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகி…

  6. பிரபல சமூக வலைதளமான டுவிட்டர், தனது சேவையை ஆரம்பித்து 10 வருடங்களை நிறைவு செய்து, தனது 11ஆவது வருடத்தில் கால் பதித்துள்ளது. இதனால் டுவிட்டர் பாவனையாளர்கள் இது குறித்தும் சிறப்பு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். டுவிட்டர் வலைதளமானது, 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி, ஜாக் டோர்சி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு வுறவவச என்று பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அதன் பெயர் டுவிட்டர் என மாற்றப்பட்டது. இவ்வாறான ஒரு நிலையில், டுவிட்டர் கடந்த 21ஆம் திகதி தனது 10 வருட பூர்த்தியைக் கொண்டாடியது. டுவிட்டர் ஏனைய சமூகவலைதளங்களை விடவும் பல விதத்தில் வேறுபட்டது. இதில் வெறும் 140 எழுத்துகளால் மாத்திரமே தமது கருத்தை பதிவு செய்ய முடியும். எனினும் இந்த வலைத்தளத்திற்கு 30 கோடி…

  7. ஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்? தகவல் தொடர்புக்கு புறாவில் தொடங்கி கடிதம், தந்தி, தற்போது இ-மெயில் எனும் நவீன முறைக்கு வந்திருக்கும் மனிதனின் தொலைத்தொடர்பு சாதனங்கள், மேலும் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கின்றன. அதற்குச் சான்றாக ஆப்பிளின் ஐ-ஓ.எஸ் சில் வெளியாகியிருக்கும் வாட்ஸ்-அப் அப்டேட்கள், ஜி-மெயிலையே தேவை இல்லாத ஒன்றாக மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றன. இன்று ஒவ்வொரு இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு மொபைல் ஆப் வாட்ஸ்-அப். மெயில், ஃபேஸ்புக் உரையாடல்களை இன்னும் எளிமையாக்கியதில் இதற்கு பெரும் பங்குண்டு. டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ,சிறிய வீடியோ என சிலவற்றை மட்டுமே அனுப்பப் பயன்பட்ட வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல்வேற…

  8. வாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்! வாட்ஸ் அப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் புதிய வெர்சன் - v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும், v 2.12.14 ஆப்பிள் ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்குமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில் வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது. …

  9. ஆப்பிள் நிறுவன காப்புரிமை வழக்கில் சாம்சங் வெற்றி கொரியாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மீது அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழங்கில் சாம்சங் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் (வெள்ளிக் கிழமை) அமெரிக்க உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆப்பிள் நிறுவனம் கூறும் காப்புரிமை தொடர்பான புகார் கள் ஆதாரமற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் நிறுவனம் செலுத்த வேண்டிய 11 கோட…

  10. ஃபேஸ்புக் வாசிகளுக்கு புதிய வசதி: ரீ-ஆக்சன் பட்டன்ஸ் அறிமுகம்! பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,தனது உறுப்பினர்களைக் கவர லைக் பண்ண பிடிக்காத போஸ்ட்களுக்கு ரீ-ஆக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். உலக அளவில், பல மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு முன்னணி சமூக வலைத்தளமாக உள்ளது ஃபேஸ்புக். இதன் உறுப்பினர்கள் தங்களின் நட்பு வட்டத்தில் உள்ள போஸ்ட்களுக்கு லைக் போடும் கமெண்ட் போட்டும் பழகியுள்ள ஃபேஸ்புக் வாசிகள் மத்தியில் ,dislike பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இந்தக் கோரிக்கை ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஏற்கப்பட்டு கடந்த 11 மணி நேரத்திற்கு முன்பு ரீ-ஆக்சன்ஸ் பட்டன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளத…

  11. கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள் தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது. கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகளில் இருந்து வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் (மின்சாதன சமிக்ஞை) மூலம் மனித மூளையில் நினைப்பவற்றை கணப்பொழுதில் கணிக்க முடியும…

  12. வணக்கம் உறவுகளே தற்பொழுது இணையம் என்பது செய்தி ஊடகம் என்றில்லாமல் வர்த்தகம், கல்வி, செய்திப்பரிமாற்றம், இணைய தொலைப்பேசி என்று வளர்ந்துள்ளது.. ஆனால் நம்மில் பலர் இணையம் வழியாக வருமானம் பெறுவது பற்றி தெரியாமல் உள்ளோம். இணையம் eshopping மூலம் பொருட்களை வாங்கி விற்கலாம், ebay, amazon போன்றவற்றில் விற்பனை செய்யும் பலர் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குறைவே... பலர் நம்மைப்போல வீட்டிருந்தே ebay, amazon மூலம் பொருட்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். அதில் தங்களுக்கு தேவையான விலையையும் சேர்த்தே விற்கின்றர்.. நாம் ebay, amazon இல் பணம் கட்டிய பின்னர் தங்களுடைய commission எடுத்துவிட்டு பின்னர் அவர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் கட்டி நமக்கு அனுப்புகின்றனர். …

  13. இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல் மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும் நிகழ்கால விவகாரங்களை தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்டபோது 1.7% பதிலளிப்பவர்கள் மட்டும் ‘ஒரு போதும் இல்லை” எனக் கூறினர். 55.1% பதிலளிப்பவர்கள் அதனை அதிகளவு விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், 42.3% ஓரளவு விரும்புவதாகக் கூறின…

  14. சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம் கோப்புப் படம் கோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன. மக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் க…

  15. முப்பரிமாணத்தில் பேஸ்புக் டைம்லைன் சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ கில் முப்பரிமாணத்தில் ‘டைம் லைன்’களை கண்டுகளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளத்தில் முன்னணி யில் இருக்கும் ‘பேஸ்புக்’ நிறுவனம் அவ்வப்போது பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த முறை ‘டைம்லைனில்’ பதிவாகும் புகைப்படங்கள், தகவல்களை தத்ரூபமாக கண்டு களிப்பதற்காக முப்பரிமாண (3 டி) தொடு திரை தொழில்நுட்பத்தை விரைவில் புகுத்த முடிவு செய் துள்ளது. முதல்கட்டமாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் நுகர்வோர்களுக்கு இ…

  16. டுவிட்டர் இயங்கவில்லை! டுவிட்டர் இணையத்தளம் சற்று நேரத்துக்கு முன்பிருந்து இயங்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பு ஒன்று மட்டும் டுவிட்டர் இணையத்தளத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள டுவிட்டர் பாவனையாளர்கள் தமது தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அலைபேசி அப்ளிகேஷனில் டுவிட்டர் வழமைபோல இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று மாலையும் இந்த கோளாறு ஏற்பட்டிருந்ததுடன் இரவு 7.15 மணியளவில் வழமைக்கு திரும்பியது. http://onlineuthayan.com/news/7220

  17. இரு அளவுகளில் Galaxy S7? சம்சுங்கினுடைய Galaxy S7 திறன்பேசியானது இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வகையானது தட்டையானதாகவும் 5.2 அங்குல திரையைக் கொண்டதாக அமையவுள்ளதுடன் இரண்டாவது Edge வகையிலான திறன்பேசிகளின் முனைகளில் வளைந்ததாக 5.5 அங்குலம் திரையைக் கொண்டதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. முன்னர், Galaxy S7 ஆனது S6 Edge+ இன் திரை அளவான 5.7 அங்குலமாகவே இருக்கும் என முன்னர் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. S7 திறன்பேசியை இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடுவது சம்சுங்கின் உத்தியின் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் வெளியிட்ட S6 திறன்பேசியை தட்டையான திரை, வ…

  18. இந்த 10 சர்ச்சைகளுக்குப் பதில் சொல்லுமா ஃபேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ்? ஃபேஸ்புக், தனது இலவச இணைய சேவையான ஃ ப்ரீ பேசிக்ஸை இந்தியாவில் ஏன் கொண்டு வர வேண்டும் என்பதற்கு 10 காரணங்களை அடுக்கியுள்ளது. இது நெட் நியுட்ராலிட்டிக்கு எதிரானது. இதனை இந்தியாவில் தடை செய்ய வெண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கான விளக்கத்தோடு 10 காரணங்களை ஃ பேஸ்புக் வெளியிட்டுள்ளது. அவை என்ன? அவற்றில் கூறியிருக்கும் விஷயங்களில் உள்ள பின்னணி என்ன என்பதை பார்ப்போம்... 1. ஃபேஸ்புக் சொன்னது: ஃப்ரீ பேசிக்ஸ் அனைவருக்குமான சேவை, எந்த மொபைல் நிறுவனமும் அதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்! சந்தேகம் இதன் நோக்கமே இந்தியாவில் உள்ள அனைவரையும் இணைப்பில் வைத்…

  19. 2015ல் அறிவியல் தந்த வரவுகள்! தொழில்நுட்பம் எல்லைகள் கடந்து அசாத்திய வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆராய்ச்சிகள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை ஈன்று வருகின்றன. ‘அறிவியல் வளர்ச்சி ஆக்கமா தாக்கமா’ என்று இன்னும் பள்ளிகளும் கல்லூரிகளும் பட்டிமன்றம் நிகழ்த்தி வந்தாலும், மனிதனின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்களை இக்கண்டுபிடுப்புகள் நிகழ்த்தி வருகின்றனர். தொலைபேசி, விமானம்,மின்சாரம் போன்று மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் அருபெரும் கண்டுபிடிப்புகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத போதும், சமைக்கக் கற்றுக் கொடுக்கும் பேன் முதல் முன்வரும் வாகனத்தை படம் பிடித்துக் காட்டும் டிரான்ஸ்பரன்ட் டிரக் வரை நம் வாழ்க்கையை சற்று எளிமையாக மாற்றும் பல கண்டுபிடிப்ப…

  20. உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள் அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு : *மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத டாக்குமெண்ட்டுகளை நீக்குவதும் மிக அவசியமே . நூற்றுக்கணக்கான அளவு புகைப்படங்கள் இருப்பின் அவற்றை கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது. *அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வே…

  21. புகைப்படத்தில் உள்ள நபரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம் புகைப்படம் ஒன்றில் இருக்கக்கூடிய ஒரு நபரின் "வயது என்ன?" என்பதை அறிந்து கொள்வதற்காக மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருந்த இணையதளம் பற்றி நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். உணர்வுகளை அடையாளப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம். தற்பொழுது புகைப்படத்தில் உள்ள ஒருவரின் உணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியவகையில் Emotion Recognition எனும் இணையதளத்தை வடிவமைத்துள்ளதுமைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த தளத்துக்குச் சென்று புகைப்படங்களை உள்ளிடுவதன் மூலம் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்களின் உணர்வுகள், அதாவது "கோபம்", "பயம்", "அவமதிப்பு", "அருவருப்பு", "…

  22. கூகுளின் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் குறுந்தகவல் பயன்பாடு : மீனாட்சி தமயந்தி POSTED: JUST NOW IN: குறிப்புகள், செய்திகள், SOCIAL NETWORKING கூகுளில் குறுந்தகவலுகென்று பயன்பாடுகள் இருப்பினும் தற்போது புதிதான செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் குறுந்தகவல் பயன்பாட்டினை கூகுல் தயாராக்கி கொண்டு வருகிறது. மற்ற பயன்பாடுகளில் இல்லாத சிறப்பாக குறுந்தகவலில் நண்பர்களுடனான கலந்துரையாடல் சமயங்களில் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி பதில்களை தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. கூகுளில் ஹேங் அவுட்டுகள் போன்ற குறுந்தகவல் பயன்பாடுகள் இருந்தாலும் அதனை அதிகமாக மக்கள் பயன்படுத்தாமல் போனதே இதற்கு காரணமாகும். மேலும் ஒரு சாதரணமான குறுந்தகவல் ப…

  23. கடவுச் சொல்லே இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழைவது எப்படி ? மீனாட்சி தமயந்தி POSTED: 2 HOURS AGO IN: குறிப்புகள், INTERNET TIPS, செய்திகள் பொதுவாக கடவுச் சொற்கள் இருப்பது பாதுகாப்பு கருதி நல்லது என்றாலும் ,கடினமான கடவுச் சொற்களை அடிக்கடி ஞாபகம் வைத்துக் கொளவதும் அதனை சில சமயங்களில் மாற்றி எழுதுவதாலும் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படலாம். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்பதற்காகவே கடவுச் சொல்லே இல்லாத திட்டத்தினை கூகுள் மேற்கொண்டுள்ளது. மேலும் ஒருமுறை கூகுள் கணக்கில் id-யை பயன்படுத்தி நுழைந்த பின்பு நீங்கள் எந்த சாதனத்தில் இருந்து பயன்படுத்துகுறீர்கள் என்ற ஸ்மார்ட் போன் கேட்கும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட சாதனத்திலிருந்து உள்நுழைகின்ற சாதனத்தை பதிலளித்து …

  24. பிக் டேட்டா: தகவல்களின் விஸ்வரூபம் எஸ்.ராமநாதன் இன்று ஐ.டி கம்பெனிகளில் பெரிதாகப் பேசப் படுவது Big Data. இது என்ன Big Data? தகவல்கள் எப்படி திடீரென்று பெரிதாயின? தகவல்கள் அதிகமாக ஆயிருகின்றனவா இல்லையா என்று தெரிந்து கொள்ள இந்த graphஐப் பாருங்கள் கடந்த எட்டு வருடங்களில் கம்பெனிகளும் தனியாரும் பயன்படுத்திய தகவல்கள் நாற்பது மடங்கு அதிகரித்திருக்கின்றன. அம்மாடி இவ்வளவு விஷயங்கள் எங்கிருந்து வந்தன? பறக்கும்ஒரு பெரிய விமானம் பத்து நிமிடங்களில் பத்து டெராபைட் தகவல்களைச் சேகரித்து விடும். ஒரு டெராபைட் என்றால் எவ்வளவு? கிலோபைட், மெகாபைட், கிகாபைட் வரைக்கும் நமக்கெல்லாம் தெரியும். அதுக்கும் மேலே. நாம் பேசப் போவதோ மஹா பெரிய தகவல்களைப் பற்றி. அதற்…

  25. ஃபேஸ்புக்கின் விலையில்லா ஃபார்முலா சரியா? சமீபத்தில் மோடி அமெரிக்கா சென்ற போதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஆதரவு கேட்டபோதும், ஃபேஸ்புக் டிபியை கேள்வி கேட்பாரின்றி மாற்றினார்கள் பலர். அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்தவுடன், ’ஓ.கே நான் செய்தது சரிதான்’ என்று ஆதரவு தெரிவித்தார்கள் பலர். இவை அனைத்துமே தனிமனித உரிமை தொடர்பான விஷயம். அதனை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் பின்னணி என்னவென்றே தெரியாமல் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகும் விஷயத்தில் தானும் இடம்பெற வேண்டும் என நினைத்து அதன் அனைத்து கோரிக்கைகளுக்கும் ‘ஓ.கே’ சொல்பவர்கள்... இதை ஒரு நிமிடம் படிக்கவும். இன்று ஃபேஸ்புக்கை திறந்தவுடன் உங்கள் அனைவருக்குமே ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.