தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
-
- 0 replies
- 715 views
-
-
புதிதாக வாங்கும் ஸ்மார்ட் டி.விக்கள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவி சைபர் குற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ எச்சரித்துள்ளது. இன்டெர்நெட் பயன்பாடு, முக அடையாள அங்கீகாரம், குரல் மூலம் இயக்குதல் போன்ற பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் அடுத்த தலைமுறைக்கான ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனையாகின்றன. இது போன்ற டிவிக்களை பயன்படுத்துவது சவால் நிறைந்தது என்று எப்பிஐ எச்சரித்துள்ளது. கருவிகள் பாதுகாப்பின்றி இருந்தால் ஹேக்கர்கள் ஊடுருவி, சேனல்களை மாற்றுவது, ஒலி அளவை கூட்டுவது, குழந்தைகளுக்கு தேவையில்லாத வீடியோக்களை காட்டுவது போன்றவற்றை செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி, படுக்கை அறையையும் ஸ்மார்ட் டிவி கேமரா மற்று…
-
- 14 replies
- 1.2k views
-
-
கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ (DuckDuckGo) எனும் இணைய தேடுபொறித்தளத்தையே தான் பயன்படுத்திவருவதாக ட்விட்டர் நிறுவனர் ஜாக் தோர்சி (Jack Dorsey ) தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், டக் டக் கோ எனும் இணைய தேடுபொறித்தளம் பயன்படுத்த சிறப்பாக உள்ளதாகவும், தான் அதை மிகவும் விரும்பி உபயோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டக் டக் கோ செயலியும்கூட பயன்படுத்த சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டக் டக் கோ தளத்தில், ஒருநாளைக்கு சராசரியாக சுமார் 5 கோடி தேடல்கள் வரை நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனமான கூகுளில், இந்த எண்ணிக்கை, சுமார் 350 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/90992/கூகுள…
-
- 1 reply
- 602 views
-
-
தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம் அரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை தடை செய்யவுள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்தலின்போது அதன் விளம்பரக் கொள்கைகள் குறித்து பெருகிய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் புதிய கொள்கை ஒரு வாரத்திற்குள் பிரித்தானியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என கூகிள் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இல்லாத போதிலும், அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மக்களை குறிவைக்கும் விளம்பரங்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் சட்டவிரோதமானதாகும். கூகிளின் புதிய விதிகளின் கீழ், வேட்பாளர்கள்…
-
- 0 replies
- 405 views
-
-
வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் வாட்ஸ் அப் நிறுவனத்தால் புகாரளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டில் புதிய மால்வேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனரின் அனைத்து தகவல்களையும் திருட முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) வாட்ஸ்அப் இல் உள்ள பாதிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளது. தற்பொழுது வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், எம்பி 4 ஃபைல் வடிவத்தில் பயனரின் போனுக்கு அனுப்பப்பட்டுத் தாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனரின் மொபைல் போனிற்கு வரும் வீடியோ ஃபைல்லை ஓபன் செய்ததும், ஹேக்கரின் கட்டுப்பாட்டிற்குள் பயனரின் வாட்ஸ்அப்…
-
- 0 replies
- 441 views
-
-
YAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.! சுமார் இருபது ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்த Yahoo Groups யாஹூ க்ரூப்ஸ் (வலைத்தளம் ) சேவை நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது. யாஹூ க்ரூப்ஸ் சேவை முன்பு உலகின் முன்னணி நிறுவனமாக இருந்த யாஹூ க்ரூப்ஸ் சேவை மிகவும் பிரபலமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும் உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் சேவயை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. புகைப்படங்கள், கோப்புகள் எனவே யாஹூ தளத்தில் சேமித்த…
-
- 0 replies
- 610 views
-
-
Internet of Things == இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ அனைத்து விதமான மின் சாதனங்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்து, அவற்றை இன்டர்நெட் மூலமாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர்தான், ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலுள்ள மின் சாதனங்களை இணைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மின் கசிவைத் தடுக்கலாம். நாம் எங்கிருந்தாலும் வீட்டைக் கண்காணித்துப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் அந்த மின் சாதனங்கள் ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ தொழில்நுட்பத்தில் இயங்கு பவையாக இருத்தல் அவசியம். அதேநேரம் அந்த மின் சாதனங் களின் விலை அதிகம் என்பதால் இந்தத் தொழில்நுட்பம் சாமான்ய மக்களுக்குக் கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து மக்களும் தங்களின் வீ…
-
- 1 reply
- 711 views
-
-
யூடியூப் சேவை தனது விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூப்பை பயன்படுத்தும் போது யூடியூப் பக்கதின் மேற்புறத்தில் பேனர் ஒன்றில் ஒரு பயனராக உங்களுக்கு என்ன விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படப்போகின்றதென சரியான விவரங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். புதிய யூடியூப் சேவை விதிமுறைகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம், வெளியிடப்பட்ட உள்ளடக்கம், நீங்கள் வெளியிடும் உள்ளடக்கத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய உரிமைகள் மற்றும் யூடியூப் இன் …
-
- 0 replies
- 624 views
-
-
இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். இத்தகைய பணிகளுக்குவே ரோபோக்களை பயன்படுத்துவது இலங்கை வரலாற்றில் இது முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விமான நிலையத்தில் பயணிகள் நுழைகின்ற வளாகத்தில் ஒரு ரோபோவும், வெளியேறும் வளாகத்தில் இன்னொரு ரோபோவும் வைக்கப்பட்டுள்ளன. Image caption750 மில்லியன் ரூபா மதிப்புள்ள இந்த ரோபோக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் கடந்த செப்டம்பர்…
-
- 1 reply
- 867 views
-
-
இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதற்கு குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும். பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்பனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் மு…
-
- 0 replies
- 445 views
-
-
சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அடுத்த மாதம் முதல் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி((Jack Dorsey)), தவறான தகவல்களுடன் கூடிய அரசியல் பிரச்சாரங்களை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டுவிட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கான தடை நவம்பர் 22 தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/86867/டுவிட்டரில்-அரசியல்விளம்பரங்களுக்கு-அடுத்தமாதம்-முதல்-தடை
-
- 1 reply
- 360 views
-
-
இஸ்ரேல் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1400 பேர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் அடக்கம் என்று உடனடி செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 100 பேர் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், " என்று வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய அரசு வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. "அவர்களின் பெயர்களையும் வாட்ஸ்-ஆப் எண்களையும் வெளியிட முடியாது; சைபர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகமானதில்லை," என்று வாட்ஸ்-ஆப் செய்தித் தொடர்பாளர…
-
- 0 replies
- 496 views
-
-
ஆப்பிள் நிறுவனம், தனது புதிய ஏர்பாட்ஸ் ப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. வளையக்கூடிய சிலிகான்கள் கொண்டு உருவாகியுள்ள இந்த இயர்பாட்ஸ், காதுகளை உறுத்தாமல் மிகவும் மென்மையாக கவ்வி பிடிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. காதுகளில் கச்சிதமாக பொருந்தும்படி உருவாகியுள்ளதால் பயனர்கள் சிறப்பான இசை அனுபவத்தை பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது. வெளிப்புற இரைச்சல்கள் காதுகளுக்குள் புகுவதை தடுக்கும் வகையிலான வசதி, இதிலுள்ள முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் நான்கரை மணி நேரம் வரையும் பயன்படுத்த முடியும். தண்ணீர் மற்றும் வியர்வை உட்புகுந்தாலும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த இயர்பாட்ஸ், அக்டோபர் 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இ…
-
- 0 replies
- 399 views
-
-
பொருளாதார நெருக்கடியால் ஸ்தம்பித்துள்ள விக்கிபீடியா – விரைவில் முடங்கும் அபாயம்! சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. வரலாற்று காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன. ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி ப…
-
- 1 reply
- 845 views
-
-
இந்த கேமின் சுவாஸ்யமே ராணுவ உடையிலிருக்கும் வீரர்கள் உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ள எதிரிகளை சுட்டு வீழ்த்துவதே! இந்த கேம் பப்ஜிக்கெல்லாம் முன்னே வந்த கேம். ஆனாலும், இன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறது. `கால் ஆஃப் ட்யூட்டி’ என்னும் பெயர் நம் எல்லார்க்கும் 2003 -ம் ஆண்டு தான் அறிமுகமானது. அப்போது கம்யூட்டர் வைத்திருந்தவர்களும் , பி எஸ் வைத்திருந்தவர்களும் எந்நேரமும் கால் ஆஃப் ட்யூட்டிலியே மூழ்கிக் கிடந்தனர். அதற்கேற்ப விளையாட்டின் தரமும் அதன் சுவாரஸ்யமும் நன்றாகவே இருந்தது. தொடர்ந்து சீரான இடைவேளையில் கேமின் அப்டேட்கள் வந்த வண்ணம் இருந்தன . தற்போது கால் ஆஃப் ட்யூட்டியின் மாடர்ன் வார்ஃபேரின் ரீபுட் வெர்சன் வெளியாகியுள்ளது . இந்த கேமின் சுவாஸ்யமே ராணுவ உடையி…
-
- 0 replies
- 556 views
-
-
கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..! நீங்களும் ரசிகயமாக வைத்துக்கொள்ளுங்கள் கூகுளின் பிறந்தநாளான இன்று கூகுள் நிறுவனம் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள். Google Facts: கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..... இன்றைய உலகம் தொழிற்நுட்பத்தால் நிறைந்து கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக தொழிற்நுட்பத்தை பயன்படுத்தத் துவங்கிவிட்டால் பெரு நகரங்களில் இருப்பவர் முதல் கிராமத்தில் இருப்பவர் வரை செல்போன் இல்லாமல் இருக்கும் நபரைப் பார்க்கவே ம…
-
- 2 replies
- 907 views
-
-
குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, 'வட்ஸ்ஆப்' சமூக வலைத் தளம் திட்டமிட்டுள்ளது. 'வட்ஸ்அப்' சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். அதே நேரத்தில், செய்தியை அனுப்பி, பெறுபவர் பார்ப்பதற்கு முன், அந்த செய்தியை இரத்து செய்யும் வசதி உள்ளது. அவ்வாறு இல்லாமல், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி, தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்ய, வட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகவும் முக்கியமான செய்திகளை அனுப்பும்போது, பாதுகாப்பு கருதி, அது நீண்ட நாட்கள் மற்றவர்களிடம் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த வசதி உதவும…
-
- 0 replies
- 370 views
-
-
வாட்ஸ்அப்பில் வந்திருக்கும் புதிய அப்டேட்டில், ஸ்டேட்டஸ் பதிவுகளை நேரடியாகவே மற்ற தளங்களில் பகிர்ந்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், தற்போது மக்களின் முக்கியத் தகவல்தொடர்புத் தளமாக இயங்கிவருகிறது. அதனாலேயே இந்த ஆப், தேவைகளுக்கேற்ப பல வகையில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. பிரைவசி மற்றும் பயனாளர்களுக்கு உதவும் வசதிகள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, வாட்ஸ்அப் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. Share to Facebook story option கடந்த செப்டம்பர் 3-ம் தேதி, வாட்ஸ்அப்பின் வெர்ஷன் 2.19.244 வெளியானது. அப்டேட் அவ்வ…
-
- 0 replies
- 513 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், இரண்டு தசாப்தங்களுக்கு முன் நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்து இறந்தவரின் உடல் எச்சங்களை கூகுள் மேப் செயலி கண்டறிய உதவியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதியன்று புளோரிடாவின் லான்டனாவில் வில்லியம் மோல்ட் என்ற இந்நபர் காணாமல் போனார். அந்த காலகட்டத்தில் 40 வயதான இவர், ஓர் இரவு விடுதிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வில்லியம் காணவில்லை என பொலிஸில் புகார் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. ஆனால், அதற்கு பிறகு இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு (2019) ஆகஸ்ட் 28ஆம் திகதியன்று வெலிங்டன் பகுதியில் ஓர் ஏரி அருகே நீரில் மூழ்கிய கார் ஒன்று கண்ட…
-
- 0 replies
- 492 views
-
-
ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்! ஆப்பிளின் ஆன்லைன் கேமிங் சேவையான 'ஆர்கேட்' செப்டம்பர் 19 முதல் மக்களுக்கு கிடைக்கத்தொடங்கும். நூற்றுக்கணக்கான கேம் ஸ்டூடியோக்கள் தயாரித்த கேம்கள் மொத்தமாக மாதம் 4.99 டாலர் சந்தாவுக்கு கிடைக்கும். முதல் மாதம் ஃப்ரீ ட்ரையலாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆப்பிளின் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை நவம்பர் 1 முதல் கிடைக்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேசன் மமூவா நடிப்பில் இருக்கும் ஆப்பிள் ஒரிஜினல் தொடரான 'சீ' ட்ரைலர் திரையிடப்பட்டது. இதற்கு பின் வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் சாதனத்துடனும் ஒரு வருட சந்தா இலவசமாகவு…
-
- 1 reply
- 791 views
-
-
சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யூடியூப் பயன்படுத்தும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தகவல்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்தி கொள்வதாக, அமெரிக்காவை சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. அந்த தகவல்கள் மூலம் சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம், (U.S. Federal Trade Commission) விதிகளை மீறியதற்காக யூடியூப்பின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்துக்கு 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை அபராதம்…
-
- 1 reply
- 530 views
-
-
'இந்தி திணிப்பு' என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன? அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா? உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிபிசி தமிழ், அதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனத்திடமிருந்து பிரத்யேகமாக பெற்றுள்ள…
-
- 0 replies
- 815 views
-
-
Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன? #TechBlog சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவை மட்டுமல்ல, உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது தொலைத்தொடர்புத்துறை நிறு…
-
- 0 replies
- 788 views
- 1 follower
-
-
கணனி பயில்வோம் August 09, 2019 அன்பானஉள்ளங்களே ! இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது. அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்ததொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு, விழிப்புலன் உடைய ஒருவரின் உ…
-
- 2 replies
- 657 views
-
-
கணனி பயில்வோம் August 09, 2019 அன்பானஉள்ளங்களே ! இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது. அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்ததொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு, விழிப்புலன் உடைய ஒருவரின் உ…
-
- 0 replies
- 381 views
-