Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உஷார் மக்களே...நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையாகவும் இருக்கலாம்! #EggAlert முட்டை... குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது. கேரளாவில் ஆரம்பித்தது பிரச்னை... இன்று சென்னை, திருச்சி, சேலம், கோவை... எனத் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக வலைதளத்தில் வெகு வேகமாகப் பரவிவரும் சில வீடியோக்கள், மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கின்றன. செயற்கையான சீன முட்டைகள், இன்று தமிழகத்தின் பல நகரங்களில் நல்ல முட்டைகளோடு கலந்து விற்பனையாகின்றன. இவற்றில் பிளாஸ்டிக் உண்டு. சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும் என்கிறார்கள். ம…

  2. கோதுமை உணவு தடைசெய்யப்பட வேண்டும் ஏன்? எதனால்

  3. எனக்கு வயது 30 அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது. டாக்டர் பரிந்துரையின் படி எல்லா டெஸ்ட் செய்ததில் ஒன்றும் இல்லை. ஆன்னால் எப்பொழுதும் தொண்டை அடைதுகொண்டே இருக்கிறது. பின் மண்டையில் அவ்வப்போது லேசான வலி ஏற்படுகிறது. ப்ளூட் பிரஷர் நார்மல். மூச்சு பிடிப்பாக இருந்தால் அதற்க்கேன விடையை சொல்லுப்ங்க ப்ளீஸ். ஏன் என்றால் அவ்வப்போது இதயத்தில் ஊசி குத்து வது போன்று வலிக்கும். எல்லவற்றிர்க்கும் மேலாக மரண பயம் பயங்கரமாக இருக்கிறது. psychiatrist பார்த்தேன் அவரு anxity என்று tablets கொடுத்தார். இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் என்னே என்னே விளைவுகள் வரும் என்று தெரியவில்லை. இரவு நன்றாக உறக்கம் வருகிறது. காலையில் எழுந்திரிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்ட…

  4. இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள் #HealthTips இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டு…

  5. ஷாம்பு பயன்படுத்தும் பலருக்குள்ளும் இயல்பான சில கேள்விகள் எழுகின்றன. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு பயன் படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பவைதான் அந்த கேள்விகள். அவைகளுக்கு இங்கே விடை தரப்படுகிறது.* எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். பிரச்சினை எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடைந்து வரும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர் களும், முடியை சுருட்டிவிட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.* ஒவ்வொருவரும் தங்கள் முட…

  6. இளம்பெண்களை அச்சுறுத்தும் எலும்பு தேய்மானம்... தீர்வு என்ன? #ArthritisAlert 40 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்னை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை ஊட்டச்சத்து நிபுணர், தாரிணி கிருஷ்ணன் விளக்குகிறார். எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அவ்வளவாக இருந்ததில்லை. ஏனென்றால், அவர்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். வீட்டு வேலைகள், தண்ணீர்க் குடம் சுமத்தல், பக்கெட்டுகளில்…

  7. அதிகம் பொரித்த உணவுகளை உட்கொள்பவரா நீங்கள்? : ஆபத்து கிழங்கு வகைகளை கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துண்ணல் மற்றும் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் கருகவிடப்படும் உணவுகள் உண்ணுதல் என்பன புற்றுநோயை ஏற்படுத்துமென புதிய மருத்துவ ஆய்வியல் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதிகளவான மக்கள் வெப்பத்தில் நீண்ட நேரம் வறுத்த உணவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். அது குறித்து உணவு தர நிர்ணய நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆய்வில் பொன்னிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக…

  8. குறிப்பாக பெண்களுக்கு

    • 0 replies
    • 353 views
  9. Cardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்றைய தினம் கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest) ஏற்பட்டது அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஊடங்கள் மற்றும் சமூக ஊடங்களில் மாரடைப்பு என சிலர் குறிப்பிட்டார்கள். நிஜத்தில் கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்? மாரடைப்பு : - இதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Caronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏ…

  10. தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய்க்கு வழிவகுக்கிறது : மருத்துவர்கள் கண்டுபிடிப்பு தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு மிகவும் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். கோப்புப்படம் மூளையில் பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு எதிர்வினையாற்றும் பகுதியில் அதிக செயல்பாடு இருக்கும் பட்சத்தில் அது எலும்பு மஜ்ஜை பகுதியில் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்புகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது. அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாள்ரகள்…

  11. வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்குரிய சிகிச்சை எம்மில் ஒரு சிலருக்கு கால் பகுதியில் நரம்புகள் முடிச்சு போட்டு புடைத்து இருப்பதைக் கண்டிருக்கிறோம். என்ன? என்று அவரிடம் வினவினால் ‘நரம்பு சுருண்டுவிட்டது’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் அவ்வப்போது கால் வலியினால் துடிப்பதைப் பற்றி பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். கால் வலி அதிகமாகும் போது மட்டும் மருத்துவர்களிடம் காட்டி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வர். ஆனால் இதனை அலட்சியப்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் வெரிகோஸ்வெயின் என்ற இந்த நரம்பு சுருள் பாதிப்பு என்பது ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடியவை. கை கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகளிலிருந்து அசுத்தமான இரத்தத்தை இதயத்தி…

  12. கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் ரீனியம் மருத்துவ சிகிச்சை கல்லீரல் என்பது எம்முடைய உடலில் சுரக்கும் இரண்டாவது பெரிய சுரப்பி. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கல்லீரலின் செயல்பாடு இன்றியமையாதது. இதன் செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது கல்லீரல் புற்றுநோய். தற்போது கல்லீரலில் புற்று நோய் வந்துவிட்டால் ரீனியம் மருத்துவம் மூலம் அதனை குணப்படுத்த இயலும். அதற்கு முன் கல்லீரலில் புற்று நோய் பாதிப்பினை தொடக்க நிலையிலேயே கண்டறியவேண்டும். அதற்கு தற்போது லீனியர் ஓக்ஸிலேரேற்றர் என்ற கருவிமூலம் துல்லியமாக கண்டறிய இயலும். அத்துடன் இத்தகைய புற்று நோய் பாதிப்பின் அறிகுறியையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின்நிறம் …

  13. அலர்ச்சியை விரட்ட அசத்தல் குறிப்புகள்

    • 0 replies
    • 447 views
  14. தித்திக்கும் தாம்பத்தியத்துக்கு 7 உணவுகள் ! `அமுதூற்றினை ஒத்த இதழ்களும்...’ என பாரதி தொடங்கி எத்தனையோ பேர் காதல் களிப்பில் கிறங்கிக் கிடந்த அற்புதமான காலம் ஒன்று இருந்தது. தாம்பத்தியம், ஆண்-பெண் இருபாலருக்குமே ஏற்படும் பொதுவான வேட்கை. தம்பதியரிடையே வெறுப்பு வளர்வதற்கும், பிணக்கு முற்றுவதற்கும், பிரிவு எண்ணத்தை மேலோங்கச் செய்வதற்கும் தாம்பத்தியத்துக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாலும் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பது தாம்பத்திய உறவு வேட்கைதான். இல்லறம் இனிக்க, தாம்பத்திய வாழ்க்கை முழுமை பெற, இறுதி வரை தம்பதிகள் சேர்ந்து வாழ,புரிதல், உடல்நலம், மனநலம் ஆகியவை கைகொடுக்கும். இதனுடன், தாம்பத்தியம் தித்திக்க சில உணவுகளும் உதவும். புதிதா…

  15. நின்று கொல்லும் சோடா – Dr.சி.சிவன்சுதன் “அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” என்பதன் உண்மையை நாம் எம் முன்னோர்களிடமிருந்தும், அனுபவரீதியாகவும் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், நஞ்சு அன்று கொல்லும். சோடா நின்று கொல்லும் என்ற விடயம் எம்மில் பலருக்குத் தெரியாது. சோடா சக்தி தரும் ஓர் ஆரோக்கிய பானம் என்று நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றோம். பெருகிவரும் சோடா குடிக்கும் பழக்கம் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகப் பல சுகதேகிகள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். சோடா குடிப்பதால் முக்கியமாகப் பற்ச…

  16. பாரட்ஸ் உணவுக் குழாய் (Barrett’s Esophagus) சிக்கலை தடுக்க இயலுமா? எம்மில் பலரும் தற்போது ஓய்வில்லாமலும், எப்போது வேண்டுமானாலும் பணியாற்றுவதால் அவர்களின் உணவு பழக்க வழக்கம் என்பது முறையாக இருப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய கேடு ஏற்பட்டு, அதன் காரணமாக நெஞ்செரிச்சல் வந்துவிடுகிறது. காரமான மற்றும் சூடான உணவுகள், துரித வகை உணவுகள், அளவுக்கு அதிகமாக ஒரே வேளையில் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் செல்வது என பல காரணங்களால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இவை ஏற்படுவதற்கு எம்முடைய இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் காரணம். உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவி…

  17. அமெரிக்கன் மா... இங்கிருந்து நம்மூருக்கு வந்தது. இப்போது அங்கிருந்து புரோசன் (Frozen) பரோட்டாவாக வருகின்றது. அது தரும் நோயை பாருங்கள்.

  18. தண்டுவட மரப்பு நோய்க்கு புதிய மருந்து: மூளை தாக்குதலைத் தடுக்கும் மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய மருந்தை மைல்கல் வளர்ச்சி என்று மருத்துவர்களும், தொண்டு நிறுவனங்களும் வர்ணித்துள்ளன. மூளையின் சில பகுதிகளை நோய் எதிர்ப்பு அமைப்பு தாக்கி, ஒரு விரோத ஆக்கிரமைப்பை எதிர்கொள்வது போல மூளையை குழப்பிவிடுகிறது. இதனால், மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாக, மூளையிலிருந்து வரும் சமிக்கைஞகள் உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைய விடாமல் தடுக்கிறது. நடப்பதற்கு சிரமப்படுவது இதன் முக்கிய அறிகுறியாகக் கூறப்படுகிறது. புதிய மருந்தான ஓக்ரீலிஸ்மப், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நரம்பு வழியாக செலுத்தப்படுகி…

  19. ட்ரக்கியோஸ்டோமி ஏன்? எப்படி? யாருக்கு? ஓர் அலசல்! #Tracheostomy கடந்த சில நாட்களாக 'ட்ரக்கியோஸ்டோமி' என்ற சொல் பரவலாக அடிபடுகிறது. ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் கவனம் பெறத்தொடங்கியது இந்த சொல். தற்போது, கருணாநிதிக்கும் இதே சிகிச்சை செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். உண்மையில் எம்.ஜி.ஆரோடு சேர்த்து இதுவரை மூன்று முதல்வர்களுக்கும், பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ட்ரக்கியோஸ்டோமி என்றால் என்ன? எதற்காக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது? யாருக்கு இந்த சிகிச்சை தேவைப்படும் என்று பார்ப்போம். ட்ரக்கியோஸ்டோமி (Tracheostomy) என்பது ஒரு அறுவைசிகிச்சை முறையாகும். மூச்சுக்குழலில், நுரையீரலில் …

  20. கணுக்காலில் வலி... நிவாரணம் என்ன? அடிக்கடி கணுக்காலில் வலி, குதிகாலில் வலி ஏற்படுகிறதா? `நீங்க அதிக எடையோட இருக்கீங்க. அதுனாலதான் வலி ஏற்படுது’ என்று நெருங்கியவர்கள் சொல்கிறார்களா? இது முழுக்க உண்மை இல்லை. உடல் எடை அதிகமாக இருப்பதால்தான் கணுக்கால் வலி ஏற்படும் என்று இல்லை. கால்வலி ஏற்பட நாம் நடக்கும் தரைகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரமேஷ் குமார். மேலும் என்னென்ன காரணங்களால் கணுக்காலில் வலி ஏற்படும், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்குகிறார். காலை நேரத்தில், நீண்ட நேரப் பயணத்தில், அதிக நேரம் அமர்ந்து இருந்து பின் எழுந்திருக்கும்போது... என வெவ்வேறு சமயங்களில் குதிகால் தசைநார் (Achilles Tendon) பகுதியில் வலியும…

  21. பூப்பெய்வதற்கு முன் அகற்றப்பட்ட சினைப்பை மூலம் மாதவிடாய் நின்றபின் குழந்தை லண்டனில் பெண் ஒருவர், குழந்தை பருவத்தில் நீக்கப்பட்ட சினைப்பையிலிருந்து எடுத்து உறையவைக்கப்பட்ட திசுவால் கருவுற்று குழந்தை பெற்றெடுத்துள்ளார். புதிய தொழில்நுட்பத்தில் பிறந்த குழந்தை 24 வயதாகும் மோசா அல் மட்ருஷி என்னும் அந்த பெண்மணி, பூப்படைதலுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட சினைப்பை மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் பெண் ஆவார். லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையான போர்ட்லாந்து மருத்துவமனையில் அந்த பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்; "அது ஒரு அற்புதமான நிகழ்வு" என்று அவர் அதனை விவரித்துள்ளார். "ஆரோக்கியமான குழந்த…

    • 2 replies
    • 566 views
  22. பக்கவிளைவுகளற்ற பேஸ்மேக்கர் மாரடைப்பு ஏற்பட்ட சிலருக்கு பேஸ்மேக்கர்கள் பொருத்தப்படும். அவ்வாறான சந் தர்ப்பங்களில், அவர்கள் அதீத கதிர்வீச்சு நிறைந்த இடங்களுக்கு அருகாமையில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள். ஏனென்றால், அந்தக் கதிர்வீச்சானது, அவரில் பொருத்தப்பட்டிருக்கும் பேஸ்மேக்கரின் இயக்கத்தைக் குழப்பிவிடக் கூடும். இதனால், கைதொலைபேசியைக்கூட 6 செ.மீ அளவிற்கு தள்ளி வைத்தே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் முன்னைய காலங்களில் கதிர்வீச்சு அபாயம் இருந்ததால் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் செய்துகொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, அறிமுகப்படுத்தப்பட்…

  23. மெனோபாஸின் பின்னரும் மாதவிடாய் ஏற்படலாமா? பெண்­களின் மாத­விடாயானது நிரந்­த­ர­மாக நிற்கும் பருவம் மெனோபாஸ் என அழைக்­கப்­படும். இவ்­வா­றான மெனோபாஸ் பருவம் ஏற்­படும் வய­தா­னது 45 வயதிலி­ருந்து 55 வயது வரை மாறு­படும். அதா­வது சிலரில் 45 வயதில் மாத­விடாய் நிரந்­த­ர­மாக நிற்கும். சிலரில் 50 வயதில் நிற்கும். சிலரில் 55 வயதில் நிற்கும். இவ்­வாறு பாரிய வேறு­பா­டுகள் உள்­ளது. எந்த வய­தா­னாலும் மெனோபாஸ் பருவமடைந்து மாத­விடாய் நிரந்­த­ர­மாக நின்று போன பெண்­களில் பல மாதங்­களின் பின்னர் சரி அல்­லது பல வரு­டங்­களின் பின்னர் சரி மீண்டும் மாத­விடாய் போன்ற இரத்தப் போக்கு ஏற்­பட்டால் அதன் அர்த்தம் என்ன? இது ஒரு பயப்­ப­டக்­கூ­டிய அல்­லது அச்­சப்­ப­டக்­கூ­…

  24. சிறியாநங்கை நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு. சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு… நிலவ…

  25. பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.