நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கண்களைத் தாக்கும் அலர்ஜி அலர்ஜி என்பது சருமத்தில்தான் வரும் என்றில்லை. கண்களிலும் வரலாம். கண்களில் ஏற்படுகிற பல பிரச்னைகளும் ஒவ்வாமையின் அறிகுறிகள் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண்களில் ஏற்படும் பருவ கால ஒவ்வாமைகள் மிகவும் சகஜமானவை. ஏற்கனவே அலர்ஜி இருப்பவர்கள், உதாரணத்துக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாச மண்டலம் தொடர்பான அலர்ஜி இருப்பவர்கள், சரும அலர்ஜி உள்ளவர்கள், கொசு கடித்தால் உடம்பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறுபவர்கள் போன்றவர்களுக்கு கண்களிலும் அலர்ஜி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொதுவாக கண்களில் வரக்கூடிய அலர்ஜிக்கு A…
-
- 0 replies
- 420 views
-
-
வேகமான நடைப்பயிற்சி மற்றும் விரைவான சைக்கிள் ஓட்டம் போன்ற தொடர் பயிற்சிகளின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோய்களைத் தடுக்கலாம் என ஆய்வு ஒன்றின் மூலம் அறியப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த ஆய்வுக்குழுவினர், பல்வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 14 லட்சம் மக்களிடம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவாக வேகமான நடைபயிற்சி மற்றும் விரைவான சைக்கிள் ஓட்டத்தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் ஈரல் புற்றுநோயை 27 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது. exercise மேலும், சிறுநீரகம், நுரையீரல், தலை, கழுத்து, மார்பகம், சிறுநீரகப்பை மற்றும் ஆசனவாய் சார்ந்த சிலவகை புற்றுநோய் தாக்கும் ஆபத்தையும் சுமார் 25 சதவீதம…
-
- 0 replies
- 257 views
-
-
உப்பில்லா பண்டம் குப்பையிலே.. என்பதைப் போல் எம்முடைய உணவில் உப்பு இல்லாமல் இருக்க இயலாது. அதே சமயத்தில் உப்பிற்கு மாற்றும் உப்பு தான். எம்முடைய உடலைப் பாதுகாக்க வேண்டும்என்றால் அயோடின் கலக்காத உப்பை பயன்படுத்தவேண்டும். இவைஇப்போதும் சந்தையில் கிடைக்கத்தான் செய்கிறது. அதை வாங்கலாம் அல்லது இந்துப்பு வாங்கலாம். இந்துப்பு என்பதை ஆங்கிலத்தில் ஹிமாலயன் ராக் சால்ட் என்பார்கள். இது பெருன்பான்மையாக வெள்ளை நிறத்திலும், சிவப்பு மற்றும்ஊத நிறத்திலும் காணப்படும். சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில்மருந்துகள் தயாரிக்கும் போது இவை ஒரு கூட்டுக்கலவையாக பயன்படுத்தப்படுகிறது. இந்துப்பிற்கு உடலை குளிர்விக்கும் தன்மையும் உண்டு. பசியைத்தூண்டும் தன்மையும், மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு.…
-
- 0 replies
- 372 views
-
-
குடல் அழற்சி நோய்க்குரிய சிகிச்சை குழந்தைகளின் வளர்ச்சியில் ஆறாவது மாதம் தொடங்கியதும் அவர்களை பெற்றோர்கள்அதிகளவில் கண்காணிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் புரண்டு படுத்து எழுந்து தவழ்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இந்த சமயத்தில் அவர்களின் வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தத் தொடங்கும். ஒரு சில குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் வயிற்றுப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு குடல் அழற்சி நோய் என்கிற அப்பெண்டிசிட்டிஸ் வரக்கூடும். இது 6 மாத குழந்தைத் தொடங்கி 60 வயது முதியவர்களுக்கு கூட வரலாம். இதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவர்களிடம் காண்பித்து தக்க ஆலோசனையைப் பெறவேண்டும். அலட்சியப்படுத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அடிவயிறு முழுவதும் த…
-
- 0 replies
- 624 views
-
-
முதுகு வலியைக் குணப்படுத்தும் ரேடியோ ப்ரீகொன்சி நியுரோடமி சிகிச்சை எம்மில் பலருக்கும் முதுகிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் வலி இருக்கிறது என்பதை உணரமுடியும். ஆனால் வலி எவ்வளவு இருக்கிறது என்பதை எம்மால் சொல்ல இயலாது. அதனால் நோயாளிகளிடம் மருத்துவர்கள் உங்களுக்கான வலி எவ்வளவு என்பதை 0 முதல் 10 என்ற எண்ணிற்குள் சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். மருத்துவர்கள், வலியை குறித்து, நோயாளி கூறும் எண்ணை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவது தான் நோக்கம். வலியை மூளைக்கு கடத்தும் நரம்புகளை, துல்லியமாக கண்டறிந்து, வலிகளை கடத்தாமல் இருப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் வலியை உணராமல் கட்டுப்படுத்தி, சிகிச்சையளிக்கிறோம். இதற்கு வேதியல் ப…
-
- 0 replies
- 319 views
-
-
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சூப்பர் உணவுகள்! நொறுக்குத்தீனிகளை விரும்பாதவர்கள் யார்? ஒருகாலத்தில் சுண்டல், வேர்க்கடலை, முறுக்கு... என நீண்ட நொறுக்குத்தீனிப் பட்டியல், இன்றைக்கு வேறு ஒரு வடிவம் கொண்டிருக்கிறது. பானிபூரி, பேல்பூரி, பாவ்பாஜி, சிக்கன் பக்கோடா என நீளும் அந்தப் பட்டியலில் பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் போன்ற மேற்கத்திய உணவுகளும் அடக்கம். இவை கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. இளம் வயதில் சாப்பிடும் கொழுப்புகள் உடலில் அப்படியே தங்கி, உடல்பருமனை ஏற்படுத்தும். அப்படித் தங்கும் கெட்ட கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் படிந்துவிடும். இது ரத்தஅழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்கு வழிவகுக்கும். சரி.. அது என்ன கொலஸ்ட்ரால்? …
-
- 1 reply
- 472 views
-
-
சுயஇன்பம் காண்பதால் தலைமுடி உதிருமா? தலைமுடி உதிர்வதற்கு சுயஇன்பம் ஓர் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா? இது உண்மை தானா என்று பலமுறை கேட்பீர்கள். ஆனால் அது உண்மை தான். ஆண்கள் தங்களுக்கு சுயஇன்பம் பற்றி அனைத்து விஷயமும் தெரியும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் சுயஇன்பம் குறித்து ஏராளமான அதிர வைக்கும் விஷயங்கள் உள்ளன. நல்ல சுகமான உணர்வை அனுபவிக்க உதவும் இச்செயலால் நன்மைகளையும், அதே சமயம் தீமைகளையும் பெறக்கூடும். ஆனால் அதுவெல்லாம் எவ்வளவு முறை செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. அதில் சுய இன்பத்தால் பெறும் ஓர் பக்கவிளைவு தான் தலைமுடி உதிர்வது. பொதுவாக ஆண்கள் தங்களது தலைமுடி மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். சமீப காலமாக உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறது என…
-
- 12 replies
- 3.4k views
- 1 follower
-
-
பார்வையிழப்பை தடுக்கும் கிரீன் லேசர் சிகிச்சை.! எம்மில் பலருக்கும் தற்போது இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகிறோம். இதனை சரியான முறையில் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால் பார்வையிழப்பு, காலிழப்பு, இதய பாதிப்பு, ஆண்மை குறைபாடு என எண்ணற்ற உடலியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதிலும் சர்க்கரையின் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் கண்ணின் உள்விழித்திரையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கி பார்வையிழப்பைத் தோற்றவித்துவிடும். இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிசிக்சை பெறவேண்டும் இதற்காக தற்போது கிரீன் லேசர் என்ற சிகிச்சை முறை பலனை அளித்து வருகிறது. அதிலும் ஐந்தாண்டுகளாகவோ அல்லது பத்தாண்டுகளாகவோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கி…
-
- 0 replies
- 326 views
-
-
பார்வையை இழந்தவர்களுக்கு மீளவும் பார்வை ஆற்றலைப் பெற்றுத் தரும் புரட்சிகர சிகிச்சை பார்வை ஆற்றலைத் தூண்டும் கணினி சிப் உபகரணத்தை மூளையில் உள்ளீடு செய்வதன் மூலம் பார்வையை இழந்தவர்களுக்கு பார்வை ஆற்றலை மீளப் பெற்றுத் தரும் புரட்சிகர சிகிச்சையை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். தனிப்பட்ட இரகசியம் பேணும் காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத 30 வயது பெண்ணொருவருக்கு அந்தக் கணினி சிப் அந்த நிபுணர் களால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி சிகிச்சை மேற்கொள்ளப்படுவது உலகில் இதுவே முதல் தடவையாகும். 7 வருட காலமாக முழுமையாக பார்வை ஆற்றலை இழந்து வாழ்ந்த அந்தப் பெண…
-
- 0 replies
- 228 views
-
-
குடலிறக்கத்தை குணப்படுத்தும் சத்திர சிகிச்சை எம்மில் பலருக்கும் அவர்களின் வயிற்று தசைகள் மேல் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதால் இது மெதுவாக அந்த தசைகளை பலவீனப்படுத்தும். இவ்வாறு தசைகள் பலவீனமடைவதால் தான் ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதே சமயத்தில் ஒரு சிலருக்கு தசை பலவீனம் என்பது பாரம்பரியமாகக் கூட வரக்கூடியது தான். அதேபோல் யாருக்கேனும் நீண்ட நாளாக மலச்சிக்கல் இருந்து வந்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது கஷ்டப்பட்டு கழித்தாலோ இதன் காரணமாகக்கூட கடுமையான அழுத்தம் ஏற்பட்டு மென்மையான வயிற்றுத் திசுக்கள் பலவீனமடைவதற்கும், கிழிந்து போவதற்கும் வாய்ப்பு உண்டு. இதன் காரணமாகவும் குடலிறக்கம் ஏற்படலாம். அதே…
-
- 0 replies
- 360 views
-
-
உச்சி குளிரச்செய்யும் மூலிகை செருப்பு...வெட்டிவேர் மகத்துவம்! #GoGreen மக்கள் மத்தியில் எப்போதுமே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது வெட்டிவேர் செருப்பு. கடந்த வாரம், விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெட்டிவேர் கொண்டு தயாரிக்கப்பட்ட செருப்பின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தோம். அதனைப் பார்த்த வாசகர்களில் பலர், அதீத ஆர்வத்துடன் அதுகுறித்த விவரங்களை கேட்க துவங்கினர். இதனை அந்த வெட்டிவேர் செருப்பு தயாரிக்கும் ஆனந்திடம் தெரிவிக்க மகிழ்ச்சியில் அதுபற்றி விரிவாக கூறத் தொடங்கினார். …
-
- 0 replies
- 850 views
-
-
இது மருத்துவ முறை அல்ல... வாழ்க்கைமுறை! 'வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும்' என்று ஆரோக்கியமான வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கும் 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மருத்துவ முறை ஆயுர்வேதம். வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உடல்நலம், ஆரோக்கியம். இவை இரண்டுக்கும் அடிப்படை வாழ்க்கைமுறை. எனவே, ஆயுர்வேதம் என்பது மருத்துவம், சிகிச்சையோடு நின்றுவிடாமல், வாழ்க்கைமுறையும் கற்றுத் தந்தது. ஓர் ஆயுர்வேத வைத்தியர், இன்னொரு வைத்தியருக்கு கற்றுத்தரும் விஷயமாக அல்லாமல், மக்கள் மருத்துவமாக இருந்தது ஆயுர்வேதம். `பாட்டி வைத்தியம்’ என்ற பெயரில் நம்முடைய மூதாட்டிகள் சர்வசாதாரணமாகச் சொல்லும் மருத்துவக் குறிப்புகள்கூட ஆயுர்வேதத்தின் ஓர் அங்கமே. இயற்கைய…
-
- 0 replies
- 528 views
-
-
உடல் பருமனைக் குறைக்கும் நவீன அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் சிகிச்சை தெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பருமன் மன அழுத்தத்தை தோற்றவிப்பதுடன், மனித வளத்தை முற்றாக அழிக்கும் காரணியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன. அதே சமயத்தில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க தீர்மானிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எளிய சிகிச்சை முறையை எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் உடற்பருமனை குறைக்க நவீன சிகிச்சையாக அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் என்ற சி…
-
- 0 replies
- 313 views
-
-
புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினைக்கு தீர்வு.! வயதானவர்கள் சந்திக்கும் சிக்கலான சிறுநீரக பிரச்சனை புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினை. இதன்போது வயதான ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பது தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். பலரும் இந்த நோயை அலட்சியம் செய்துவிடுகிறார்கள். இந்த நோய்க்கும் சிறுநீரகத்தில் ஏற்படும் புற்றுநோய்க்கும் ஒரேவிதமான அறிகுறிகள்தான். வயதான ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்நோயை 80 சதவீதம் சாதாரண மருந்துகளால் குணப்படுத்திவிடலாம். சிறுநீர் கழிக்கவே முடியவில்லை என்ற நிலை தோன்றினால் மட்டும் எண்டாஸ்கோப்பி சிகிச்சையை மேற்கொள்ளலாம். சில ஆண்களுக்கு விதைப்பையில் வீக்கம் தோன்றலாம். …
-
- 0 replies
- 407 views
-
-
எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம். *பால் மற்றும் பழங்கள் பழங்கள் சாப்பிடால் அது விரைவாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் பால் உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இந்த இரண்டு பொருட்களாயும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும். *பால் மற்றும் முள்ளங்கி பால் வகை உணவுகள் குளிர்ச்சியானவை, முள்ளங்கி சூடான உணவு வக…
-
- 3 replies
- 963 views
-
-
இஸ்கிமிக் கார்டியோமயோபதி ( Ischemic Cardiomyopathy)க்குரிய சிகிச்சை இதயத்தில் எந்த கோளாறுகள் ஏற்பட்டாலும் எமக்கு பயம் வருவது இயற்கையே. அது என்னவென்று தெரியவரும் போது தான் நாம் அதனை எதிர்கொள்வதற்குரிய மனதிடத்தை பெறுகிறோம் என்பதும் உண்மை. இந்நிலையில் இதய தசைப் பகுதியில் ஏற்படும் சில பாதிப்புகளைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இதயப்பகுதியில் உள்ள தசைகள் தங்களின் இயல்பான வலுவினை இழ்ந்திருந்தாலோ அல்லது இதய தசை மெலிந்திருந்தாலோ அல்லது ஓரிடத்தில் மெலிந்து பிறகு வேறொரு இடத்தில் பெரிதாக இருந்தாலோ இதயத்திற்கு இரத்தம் சீராக பம்ப் செய்ய இயலாத நிலை உருவாகும். அத்துடன் உடலுக்கு போதிய அளவில் இரத்தம் அனுப்பப்படுவதிலும் சிக்கல்கள் எழக்கூடும். …
-
- 0 replies
- 377 views
-
-
பைப்றோ மையால்ஜியாக்குரிய சிகிச்சை நீண்ட நாள்களுக்கு தலை முதல் கால் வரையில் பகுதிகளில் வலி இருந்தாலும், அந்த வலி நாளுக்கு நாள் புதிய புதிய இடங்களில் தோன்றினாலும், சோர்வு, தலைவலி, ஞாபக மறதி, தூக்கமின்மை, காலையில் எழும்போதே உற்சாகமேயில்லாமல் எழுவது ஆகியவை தோன்றினாலும் உங்களுக்கு பைப்றோ மையால்ஜியா பாதித்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். உடனே சிலர் அது என்ன பைப்றோ மையால்ஜியா? என கேட்பர். மருத்துவத்துறையினர் இதற்கு முன்பு பைப்றோ சைட்டீஸ் என குறிக்கப்பட்ட தசை வலி நோய் தான் இந்த பைப்றோ மையால்ஜியா. இது வாழ்க்கை முழுவதற்கும் எம்மோடு பின்னி பிணைந்து வதைக்கும் ஒரு நோயாகவே உலகம் முழுவதும் உள்ளது. இதன் முக்கிய பாதிப்பு தூக்கம் என்பதால், இதனால் …
-
- 0 replies
- 279 views
-
-
இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர்: எனக்குத் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. எனக்குக் குழந்தை இல்லை. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் கரு முட்டை வளர்ச்சி நன்றாக இருக்கிறது. ஆனால், எண்டோமெட்ரிகல் லைன் (கருப்பையின் உட்சுவர்) 6-7 மி.மீ. தான் இருக்கிறது. அதுதான் பிரச்சினை என்கிறார்கள். என்னுடைய கருப்பையின் உட்சுவர் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? - துர்கா, ஊர் குறிப்பிடவில்லை தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை. உங்களுடைய மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இயல்பான முடிவுகளையே தருகிற நிலையில், நீங்கள் சந்தித்துவரும் பிரச்சினை விரைவில் குணமடைய…
-
- 0 replies
- 570 views
-
-
பதின்ம வயது இளைஞரின் வாலை ஒட்ட நறுக்கிய மருத்துவர் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் 20 சென்டி மீட்டர் நீளத்தில் வால் வளர்ந்திருந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர், அதனை அகற்றிவிட அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அழகியல் மற்றும் உளவியல் ரீதியாக அவனை தொந்தரவு கொடுப்பதாக இந்த வால் அமைந்து விட்டது தற்போது 18 வயதாகியிருக்கும் இவருக்கு, 14-வது பிறந்த நாளுக்கு பின்னர் தான் இந்த வால் வளர தொடங்கியதாம். நாக்பூரை சேர்ந்த இந்த இளைஞரும், அவரது குடும்பத்தினரும், இவருக்கு வால் இருப்பதை பிறர் அறிந்தால், அனைவரின் கேலி கிண்டலுக்கு ஆளாகலாம் என்று கவலையடைந்ததால், இந்த வால் வளர்வதை ரகசியமாக வைத்துள்ளனர். மிகவும் நீளமாக வளர்ந்த பின்னர், அதில் எல…
-
- 0 replies
- 405 views
-
-
கொழுப்பை அகற்றும் நவீன சிகிச்சை எம்மில் பலரும் சுவைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு பதார்த்தத்திற்கோ அடிமையாகி மூன்று வேளையும் அதையே சாப்பிட்டிருப்போம். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தானே அதனால் நாம் உடற்பருமனுக்கு ஆளாகி வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். இந்நிலையில் எம்மைப் போன்றவர்களுக்காகவே ஒரு நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. BTL Vanquish MEஎன்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிகிச்சையைப் பற்றி காண்போம். இது சத்திர சிகிச்சையற்ற வலியற்ற ஒரு சிகிச்சை ஆகும். இதன் போது, உடலில் எங்கு அதிகப்படியான கொழுப்பு உள்ளதோ அப்பகுதியில் உள்ள சதையை 42 டிகிரி செல்ஷியஸ் வரை சூடு படுத்தியும், அதன் அடியில் இருக்கும் கொழுப்பை 46 டிகிரி வரையிலும் வெப்பமா…
-
- 0 replies
- 407 views
-
-
உலக இதய நாள் செப்டம்பர் 29, 2016 உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்! நமது உடலை இயக்கச் சக்தி தரும் இதயத்துக்கு சக்தி தருவதன் மூலம் நம் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ‘உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்’ (Power your life) என்பதை, இந்த ஆண்டுக்கான உலக இதய நாளின் மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இதய நோய்களாலும், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகளாலும் மட்டுமே 17.3 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை, மதுப்பழக்கம் ஆகியவை இந்தப் பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிப்பதை, மதுவைத் தவிர்ப்பது என்பன போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் இ…
-
- 1 reply
- 2.1k views
-
-
பெண்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்கள் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதல் இடத்தைப் பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல்புற்றுநோய் உள்ளது. வெளிநாடுகளில் இக்கர்ப்பப்பை வாசல்புற்று நோயின் தீவிரம் ஒழுங்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்புமுறைகளால் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் இந் நோயின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதற்குப் பிரதான காரணம் மக்கள் மத்தியில் இப்புற்றுநோய் தொடர்பான பொது அறிவும் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான ஆலோசனைகள் ஏனைய வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளமையே ஆகும். எனவே இப்புற்றுநோய்…
-
- 0 replies
- 520 views
-
-
அளப்பரிய பலன்களை தரும் மிளகு மிளகு விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கிறது. திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது. * கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. * மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது. * மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி …
-
- 27 replies
- 7.7k views
-
-
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயுவும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர். 90 சதவீதம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ேஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல் போன்றன ஏற்படும். கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்களாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழு…
-
- 0 replies
- 293 views
-
-
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால், அசதி நீங்கும். 2. முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் அதிகம் வேகவிடாத பொறியலாக சமைத்து உண்ண கழுத்து வலி படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். 4. முருங்கைப் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி, அதை 250 மி.லி. பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து, ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். 5. …
-
- 3 replies
- 987 views
-