Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகில் முதல் முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளனர். கேப் டவுன் நகரிலுள்ள டைகர்பெர்க் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த அறுவை சிகிச்சை ஒன்பது மணி நேரம் நடந்திருந்தது. ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் முயற்சித்தது அது இரண்டாவது தடவை என்று கூறப்படுகிறது. தொழில்தர்மம் கருதி அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவரின் அடையாள விவரங்களைத் தாம் வெளியில் விடவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட ஆண்குறி முன் தோல் நீக்கத்துக்கு பின்னர் இவருக்கு கோளாறுகள் ஏற்பட அவரது ஆண்குறி அகற்றப்பட வேண்டி …

    • 4 replies
    • 3k views
  2. குளிர்ச்சி உணவான தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவாகவே ஜீரணமாகிவிடும். வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். …

  3. கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் கீரைகள். கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, அவற்றில் ஒரு வகை தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. * வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். * மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னையிலிருந்து விடுபடலாம். * மேலும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைப…

  4. உணவுகளில் வாசனைப் பொருளாக பயன்படுத்தும் ஏலக்காயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஏலக்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது. ஏலக்காயை தேநீர் பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது. ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் இதி…

  5. வாழைப்பழங்களில் ஒரு வகையான செவ்வாழை எண்ணற்ற சத்துக்களும், சுவைப்பதற்கு சுவையாகவும் இருக்கும். வாழைப்பழங்களில் பல வகை உண்டு, சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கின்றன. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையின் மருத்துவ குணங்கள் நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை பேறு தரும் குழந்தை இல…

  6. நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரை…

    • 1 reply
    • 2k views
  7. Started by மீனா,

  8. உலக மாந்தர் நோயின்றி வாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் வகுத்த மருந்தில்லா மருத்துவம் ! பசியின்றி எதையும் உண்ணாதீர். பசித்த பின்பே உணவு உட்கொள்ள வேண்டும். உண்ட உணவு நன்றாக செரித்த பின்பே அடுத்த வேலை உணவு உட்கொள்ள வேண்டும் . இதை மட்டுமே கடைபிடித்தால் இந்த உடலுக்கு மருந்தென்று ஒன்று தேவை இல்லை. ‎எத்தனை‬ பேர் இதை கடைபிடிக்கிறோம் ?

    • 0 replies
    • 618 views
  9. மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து பெரும்பான்மையான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது சிறுநீரகங்கள் ஆகும். உலக சிறுநீரக தினமான இன்று அதனை பாதுகாப்பது எப்படி, என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கால், முகம், கை மட்டுமில்லாமல் உள் உறுப்புகளான நுரையீரல், இதயம் போன்றவற்றை சுற்றியுள்ள சவ்வுகளிலும் தேங்கத் தொடங்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், நடக்க முடியாத நிலை, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் வரும். சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? 1. உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மா…

    • 0 replies
    • 2.6k views
  10. கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே எல்லோரும் பழமுதிர்ச்சோலைகளை நோக்கி படையெடுப்பார்கள். பழ ஜீஸ், குளிர்பானங்கள், தயிர், மோர் என்று குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் போது, கோடையில் சாப்பிடக்கூடாத உணவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் அதிகமாக வெப்படைந்துவிடுகிறது என்பதற்காக, அதிகமான குளிர்ச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை கிளப்பிவிடும். அதனால், கோடையில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். தேங்காய் எண்ணெய் குளிர்காலத்தில் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான சாச்சுரேட்டட் கொழுப்புகள்…

  11. பெரும்பாலான பருவப் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக வாட்டத்தை அதிகரிக்க செய்கின்றன. என்னதான் அழகாக மேக்கப் போட்டாலும், முகப்பருக்கள் உங்களை அசிங்கப்படுத்துகின்றது என்ற கவலையில் இருக்கும் நீங்கள் செயற்கை மருத்துகளை தவிர்த்து, என்னென்ன உணவுகளை சாப்பிடுவதால் பருக்கள் வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பால் பொருட்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செனை பசுக்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதால் பருக்கள் அதிகம் வருகிறது. காபி சிறுநீரகச் சுரப்பியிலிருந்து மன அழுத்த ஹார்மோன்களை விடுவிக…

  12. சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். ----- இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம். ------ மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம். ------- நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் ------ மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது! -------- இந்…

    • 2 replies
    • 923 views
  13. சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆந்தோசயானின், லைகோபீன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. லைகோபீன் ஊட்டச்சத்து புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது, ஆந்தோசயானின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆகவே இந்த காய்கறிகளை தினமும் இந்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதுளை மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்களின் பட்டியல் இதில் அடங்கும். கொழுப்பைக் குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் காக்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யும். ரத்த சோகை உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம். சர…

  14. ஆயுர்வேத மருத்துவங்களில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூபெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும். நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ள…

  15. ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உடல் எடை குறைப்பு போன்றவற்றிற்கு பழங்களைத்தான் நாம் முதலில் எடுத்துக்கொள்கிறோம். பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகம் இருக்கிறது. இத்தகைய சர்க்கரையை சரியாக கவனிக்காமல் இருந்தால், சர்க்கரையானது கொழுப்புக்களாக மாறிவிடும். பழங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாகவும் மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதனால் தான் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பழங்களை சாப்பிட சொல்கின்றனர். மேலும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும். பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை தான் புருக்டோஸ். இது உடலினுள் செல்லும் போது, சுக்ரோஸ் மற்றும் கிளைகோஜெனாக மாற்றப்படும். சுக்ரோஸ் என்பது பதப்படுத்த…

  16. உங்கள் நவீன கைத்தொலைபேசிகளை காற்சட்டை பொக்கட்டுக்குள் பதுக்கி வைக்கிறீர்களா.. பெரும்பாலன ஆண்கள் செய்வது இதையே.. என்பதால்.. இதனை தொடர்ந்து படியுங்கள். மொபைல் போன்களில் இருந்தான கதிர்ப்புக்களின் தாக்கம் காரணமாக விந்தணுக்களின் இயங்கும் ஆற்றல் குறைவடைவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும்.. இந்த ஆய்வுகள் இன்னும் கூடிய திருத்தமாக செய்யப்பட்ட வேண்டும் என்று பிற விஞ்ஞானிகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி மறுதலித்துள்ளனர். It analysed 10 separate studies on sperm quality involving 1,492 men. These included laboratory tests on sperm exposed to mobile phone radiation and questionnaires of men at fertility clinics. Lead res…

  17. வெட்கத்தை விட்டு பேச வேண்டிய ஒரு விடயம், ஆனாலும் பலர் முகம் சுழிப்பார்கள் என்று நினைகிறேன். நான் UKல் படிக்கும் போது, ஒரு நாள் ஒரே கடி. ஊரில் வைத்தியரிடம் போனால் மருந்து தருவார். அப்படித்தான் இங்கயும் என்று நினைத்துகொண்டு வெளிகிட்டு போனன். டாக்டர் கேட்டார், கையாலயோ கழுவினனிர் என்று. நானும் வெக்கபடாமல் சொன்னன் வடிவாக துடைச்சு போட்டு குளிக்கேக்கை சோப்பு போட்டு கழுவினனன் என்று. அவர் சொன்னார் தொடுறதை நிப்பாட்டும், கடி தானால் நிக்கும் என்று. அன்று பேப்பர் பாவிக்க தொடங்கின எனக்கு இன்னும் கடி வரவுமில்லை, மருந்து பாவிக்கிறதும் இல்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு வளமாக இருக்கும்.

  18. கடல் வகை உணவுகள் என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். இறால் குழம்பு, மீன் குழம்பு, நண்டு குழம்பு என்று அடுக்கி கொண்டே போகலாம். நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமானது. நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம். நண்டில் உள்ள புரோட்டீன் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்ப…

    • 4 replies
    • 1.2k views
  19. கொள்ளும்,பப்பாளியும் கொழுத்தவனுக்கு கொள்ளு....................! கொள்ளு என்றும், காணம் என்றும் அழைக்கப்படும் பயறு . ஒரு காலத்தில் நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமங்களில் கூட ஒதுக்கப்பட்ட பயறாகும். குதிரை தின்பதை மனிதன் தின்பதா என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் ஏராளம். ஆனால் இன்று ஊட்டச்சத்து நுண்ணுயிர்ச்சத்து ஆகியவை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், நகர்களில் உள்ள பெரும் அங்காடிகளில் (மால்கள்) கூட இவை கட்டம் கட்டி விற்கப்படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பைக் கரைப்பதில் இதற்கு ஈடிணையான பயிறு எதுவும் இல்லை. இளைத்தவன் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் அவன் உடல் பெருக்கும் என்றும், ஊளை…

    • 3 replies
    • 1.2k views
  20. அறிவுத்திறன் வீழ்ச்சி டிமென்ஷியா என்னும் அறிவுத்திறன் வீழ்ச்சி. வயதாக வயதாக ஞாபக சக்தி குறைந்துகொண்டே போகுமோ? கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களைக் கூட மறந்து தொலைத்து விடுவோமோ? என்று ஒரு பயம்நடுத்தரவயதை எட்டிய அனைவருக்குமே மனதுக்குள் படபடத்துக் கொண்டிருக்கும். ஒருவேளை அதுதான் அறிவுத் திறன் வீழ்ச்சியோ? முதலில் பொதுவான ஞாபக மறதிக்கும், அறிவுத் திறன் வீழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஞாபக மறதி அதிகமாக ஏற்பட்டுள்ள ஒருவர் அறிவுத் திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை. அதேசமயம், அறிவுத்திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் ஞாபக மறதி இருக்கும். ஒருவருக்கு அதிக அளவில் ஞாபக மற…

  21. பரம்பரை அமைவுகளையும் சூழ்நிலைகளையும் காரணிகளாகக் கொண்டு, வழக்கத்திற்கு அதிகமான அளவில் மிகவும் இலகுவாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை, தமிழ் சமூகத்தின் மத்தியில் பொதுவானதாகவுள்ளது. மரபு வழித் தோற்றங்கள் இருப்பினும், கலாச்சார வழிமுறைகளின் தரமும் நம் மத்தியில் பெருகிவரும் இந்த ஆபத்தான நிலைக்குப் பகுதிக் காரணமெனக் குறை கூற வேண்டியுள்ளதென, சில ஆரோக்கியம் சம்பந்தமான நிபுணர் கருதுகின்றனர். தெற்கு ஆசிய மக்களை நீரழிவு நோயானது UK இன் மிகுதிப் பிரஜைகளிலும் பார்க்க ஆறு மடங்கு அதிகமாகப் பாதிப்பதும், இருதய நோய் நான்கு மடங்கு அதிகமாகத் தாக்குவதோடு, பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் முன்பாகவே ஏற்படுவதாகவும் உதாரணம் காட்டப்படுகிறது. கேடயச் சுரப்பி நோய், மார்பகப் புற்றுநோய், வைட்டமின்…

    • 0 replies
    • 704 views
  22. ப்ராக்கோலி நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது. ப்ரக்கோலியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க Sulfophane என்ற கலவை உள்ளது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு ப்ரக்கோலியில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். ப்ராக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. ப்ராக்கோல…

  23. அன்றாடம் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றான கேரட்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. கண் பார்வை அதிகரிக்கும் கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது. என்றும் இளமையாக கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் ம…

  24. நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும். அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என கூறுவார்கள். சில நேரங்களில் புரதம், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பல பயனுள்ள பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இது ஒரு இயல்பான நிலை தான். உங்கள் சிறுநீரின் நிறம் உங்களது உடல் ஆரோக்கியத்தை தெளிவாக காட்டி விடும். அதை வைத்து கிட்னி நோய்கள் அல்லது பிற நோய்கள் உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம். கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்!!! அதனால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை உங்கள் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.