நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
கல்லீரலில் 3 மாத கரு வளர்ந்ததால் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது? பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, உலகிலேயே மிகவும் அரிதான கர்ப்பம் இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம். கட்டுரை தகவல் பிரேர்னா பிபிசி செய்தியாளர் 12 ஆகஸ்ட் 2025, 09:30 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பெண்ணின் கர்ப்பம் குறித்த செய்தி சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தகவல் மிகவும் வித்தியாசமானது, ஏனென்றால் அந்தப் பெண்ணின் கருப்பையில் இல்லாமல், கல்லீரலில் கரு வளர்ச்சியடைந்தது. புலந்த்சாஹர் மாவட்டத்திலுள்ள தஸ்துரா கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சர்வேஷ், தற்போது பல முக்கிய மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
பூண்டுத் தாவரங்கள் பல மிகப் பழைய காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றன. பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன. பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. பூண்டுத் தாவரங்களிற் பல அழகிய பூக்களையோ, இலைகளையோ அல்லது தோற்றத்தையோ கொண்டிருப்பதனால், அவை அலங்காரத் தாவரங்களாகவும் பயன்படுகின்றன. பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் ம…
-
- 0 replies
- 490 views
-
-
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம். இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இ…
-
- 0 replies
- 597 views
-
-
மலர்களின் மகரந்தங்களை கொண்டு தேனீக்களால் சேகரிக்கப்பட்டு, மனிதர்களால் தேனீக்களிடம் இருந்து பறிக்கப்படும் அருமருந்தே தேன். அதனை அருமருந்து என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பழுப்பு நிற திரவமே தேன் ஆகும். தேனை பரவலாக வயிற்றின் நண்பன் என்று கூட சொல்வார்கள். இதற்கு காரணம் வயிறு, பித்தப்பை சம்மந்தமான நோய்களுக்கெல்லாம் மருந்தாக விளங்குவதே ஆகும். தேனில் நோய் தீர்க்கும் பண்புகள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்து உள்ளதால், தேன் சரும பாதுகாப்பு மற்றும் பல மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. கீழே தேனின் பல்வேறு நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தேனை அதிகம் பயன்படுத்துங்கள். மாய்ஸ்…
-
- 0 replies
- 535 views
-
-
சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் தாங்க முடியாத வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. அதோடு சிறுநீர் பாதையிலும் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பது, தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்கிறார் மதுரை மீனாட்சி மிஷன் சிறுநீரியல் மற்றும் ஆண்மையியல் துறை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியா் முரளி. அவர் கூறியதாவது.. ‘சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் பல்வேறு அளவுள்ள கற்கள் உருவாகக்கூடும். முக்கியமாக கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. யூரேட் அல்லது அபூர்வமாக சிஸ்டீன் கற்கள் தோன்றலாம்.…
-
- 0 replies
- 862 views
-
-
அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும்.... அக்குபங்சர் அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும். வலைதளத்தில் இருந்து உங்களுக்காக தொகுத்து கொடுத்துள்ளேன் அக்குபங்சர் என்றால் என்ன? சித்தர்கள் வளர்த்த வர்ம அறிவியலுக்குச் சீன மக்களின் பங்களிப்பு அக்குபங்சர். சீனாவின் சித்தர்களாகிய தாவோ ஞானிகளின் உண்மைகளை உள்வாங்கிய தமிழர்களின் அறிவியல் அக்குபங்சர். மெல்லிய மயிரிழை போன்ற ஊசிகளைக் கொண்டு அகிலத்தின் ஆற்றல்களை நம் உடலுக்குப் பெற்றுத்தரும் அற்புத அறிவியல் மருத்துவம். அக்குபங்சர் முறையில் நோய்களை கண்டறிவது எப்படி? இது தனக்கே உரித்தான நோயறியும் முறைகளைக் கொண்டது. வர்ம மருத்துவம் போல் தனிச் சிறப்பான நாடி அறிதல் முறைகள் இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
'உறக்கம்' இன்று நடைமுறையில் கூடுதலாக sleep என்ற பொருளில் பாவிக்கப்படும் சொல்களான 'தூங்குதல்', 'தூக்கம்', 'நித்திரை' போன்ற சொற்களை சங்க இலக்கிய காலத்தில் காணமுடியவில்லை. அங்கு தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தான் நாம் காண்கிறோம். மேலும் நித்திரை என்பது சம்ஸ்கிருதச் சொல் 'nidra' ['निद्रा'] வில் இருந்து பிறந்த சொல். தமிழில் இதற்கு 'உறக்கம்', 'துயில்', 'துஞ்சுதல்' போன்ற அழகான சொற்களை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மார்ச் 15 - 'உலக உறக்க தினம்" எல்லா நாடுகளிலும் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு நாள் நம்முடைய அவசர வாழ்க்கையில் நாம் ப…
-
- 0 replies
- 726 views
-
-
ஆ.சாந்தி கணேஷ் பழங்கள் ( Image by silviarita from Pixabay ) ``சாம்பாரில் இருக்கிற காய்கறிகளில் ஒரு கரண்டி, பொரியலில் ஒரு கரண்டி என்று சாப்பிடுவதே போதுமானது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.’’ விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter பழங்களும் காய்கறிகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்பது அறிந்ததுதான். ஆனால், அவற்றை தினசரி உணவில் எந்தளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ப…
-
- 0 replies
- 955 views
-
-
மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம் வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம். வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, …
-
- 0 replies
- 1.2k views
-
-
கணுக்கால் பிரச்னைகள் மற்றும் சிகிச்சைமுறை பற்றி கோவை மனு மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் பிரபல ஆர்த்ரோஸ்கோபி, விளையாட்டுக்காயங்கள் மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பாரி செல்வராஜ் விழிப்புணர்வளிக்கிறார். விளையாட்டின்போதோ, வழுக்கி விழுவதாலோ அல்லது நாம் உபயோகிக்கும் காலணி பெரிதாக இருப்பதா லோ சில சமயங்களில் கணுக்கால் பிறழ நேரிடுகிறது. அவ்வாறு பிறழ நேரிடும்போது கணுக்காலில் வீக்கம் காணப்படும். நடக்கமுடியாமல் வலி ஏற்படும். நாம் காலில், சுளுக்கு விழுந்துவிட்டது என்று எண்ணி எண்ணெய் தேய்த்து நீவி விடுவோம். ஆனால் அது தவறான வழிமுறை. ஏனென்றால் கணுக்கால் பிறழும்போது காலில் உள்ள தசைநார்கள் அல்லது சதைபகுதி கிழிய நேரிடும். அதனால் காலில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும்.…
-
- 0 replies
- 401 views
-
-
உலக பக்கவாதம் தினம்: ''தூக்கமின்மையாலும் இந்த பாதிப்பு வரலாம்'' பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கருவில் இருக்கும் குழந்தை முதல், இளம் வயதினர் மற்றும் முதியவர் என பாகுபாடின்றி எல்லா வயதினரையும் 'பக்கவாதம்' தாக்குகிறது என்றும் இந்தியர்கள் மரணிப்பதற்கான ஐந்தாவது முக்கிய காரணமாக பக்கவாதம் மாறியுள்ளது என கூறுகிறார் தமிழக அரசின் ஓமந்தூரார் அரசு பல்நோனோக்கு மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் ஆர் எம் பூபதி. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29ஆம் தேதி பக்கவாத விழிப்புணர்வு தினம் ஆக உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாத பாத…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முக்கிய சாராம்சம் அதிக தண்ணீர் தாகம் வறண்ட தோல் உதடுகளில் பிளவு நாக்கு வறட்சி பேசும்போது உளறல் வலிப்பு வயிறு வலி தலை வலி தலை சுற்றல் நெஞ்சு எரிச்சல் செரிமான கோளாறு படபடப்படப்பு அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 13 …
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தாது உப்புக்கள் வைட்டமின்கள் வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது. வெந்தையக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தையம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு…
-
- 0 replies
- 445 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சுர்பி குப்தா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மே 2025-இல், ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் மெடிசின் இந்தியாவில் வைட்டமின் பி -12 குறைபாடு குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. வைட்டமின் பி -12 குறைபாடு குறித்த பல ஆய்வு தரவுகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்ட 20 ஆய்வுகளில் மொத்தம் 18,750 பங்கேற்பாளர்கள் இருந்தனர். பங்கேற்பாளர்களில் 51 சதவீதம் பேருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு கண்டறியப்பட்டது. ஆய்வுக் கட்டுரையின்படி, ஆய்வில் பங்கேற்ற சைவ உணவு உண்பவர்களில் 65 சதவீதம் பேர் குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர். வைட்டமின் பி -12 என்றால் என்ன? அதன் குறைபாடு என்ன பிரச்னைகள…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம் பூச்சித் தொல்லை "அங்கை பொடியளுக்கு பூச்சி மருந்தே குடுக்கிறாங்கள் இல்லையாம். அதுதான் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வந்தனான்" பெர்பியூம் வாசனை அறை முழுவதையும் நிறைந்;தது. தாய் மகளையும் இரண்டு பேரப் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். விடுமுறைக்கு தாய்நாடு வந்திருந்தார்கள். பொதுவாகக் பூச்சி என்று சொல்லப்படும் குடற் புழுக்கள் அங்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அதனால் பூச்சி மருந்து வழமையாக கொடுக்க வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை. "போன மாதம்தான் பூச்சி மருந்து குடுத்தனீங்கள். இப்ப இரவிலை பல்லை நெறுமுறான் திருப்பி ஒருக்கால் குடுப்பம் " என்றார் மகனோடு வந்த இளம் தந்தை. பல் நொறுமுவதற…
-
- 0 replies
- 1.4k views
-
-
நம் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு முக்கியத் தேவை கால்சியம். பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் தான் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆனால் சிலருக்குப் பாலே பிடிக்காது. அவர்களுக்குக் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது. என்ன செய்வது? கால்சியம் சத்து அதிகம் உள்ள மாற்று உணவுகளை நாட வேண்டியது தான், வேறு என்ன செய்ய? மீன், நட்ஸ் வகை உணவுகள், உலர்ந்த பீன்ஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களில் கால்சியம் சத்து நிறைய உள்ளது. ஆகவே பால் பிடிக்காதவர்கள் இதுபோன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம். குறிப்பாக, மீன் சாப்பிடும் போது, அதன் எலும்புகளை நன்றாக மென்று தின்றால் தான் அதிக கால்சியம் கிடைக்கும். மேலும் இதுபோன்ற பொருட்களை உணவில் சேர்த்துச்…
-
- 0 replies
- 767 views
-
-
தைராய்டு குறைபாடு என்றால் என்ன? கருச்சிதைவு உள்பட பெண்கள் உடல் நலனில் இதனால் என்ன பிரச்சனை ஏற்படும்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்? பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்டால், தைராய்டு சுரப்பி வேலை செய்வதில் கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என சென்னையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் மாதங்கி ராஜகோபால் கூறுகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ள பெண்கள், தங்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதை உணர்ந்தால் உடனே தை…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
ஞாபக மறதிக்கு சாக்லேட் மருந்தாகுமா? பகிர்க எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு வரி வரும், "சொர்க்கத்தில் சாக்லேட் இல்லையென்றால் நான் அங்கு செல்லமாட்டேன்" என்று. ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு சிலரே. பல்வேறு இசங்களை பின்பற்றுவோர் இணையும் ஒரு புள்ளி சாக்லேட்தான். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பால்யகால நினைவுகளை நாம் அசைபோட்டால், ஏதோவொரு ஒரு சாக்லெட்டின் வாசனை நம் நாசியில் வந்து செல்லும். பால்யத்தில் சாக்லெட்டை கடந்து வராதவர்கள் யாரும் இலர். நாளை உலக சாக்லேட் தினம். அதனால், சாக்லேட் குறித்து ஐந்து தகவல்களை இங்கு பகிர்கிறோம். சாக்ல…
-
- 0 replies
- 428 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முதியோர்களுக்கு மட்டுமே ஆஸ்டியோபோரோசிஸ் நிலை ஏற்படும் என்று பரவலாக கருதப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. நமது உணவு , வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக, எந்த வயதிலும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்படக்கூடும். ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன? எலும்புகள் அதன் வலுவை இழப்பதும், தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு வலு இழப்பு ஆகும். இது ஆங்கிலத்தில் 'ஆஸ்டியோபோரோசிஸ்' என்று அழைக்கப்படுகிறது. எலும்பு வலிமை இழப்பதால் ஏற்படும் எலும்பு முறிவுகள் 'பிளேகிலிட்டி ஃபிராக்சர்ஸ்' என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த எலும…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
துணையுடன் தூங்குவதைத் தவிர்க்கும் இளைய தலைமுறை - நன்மைகள் கிடைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபெர்னாண்டா பால் பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு 34 நிமிடங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு இந்த பிரச்னை தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் கணவரின் குறட்டையை சிசிலியாவால் தாங்க முடியவில்லை. அவர் தூங்க முடியாமல் தவித்தார். எவ்வளவோ முயற்சிகள் எடுத்துப் பார்த்தும், கணவரின் குறட்டையை அவரால் நிறுத்த முடியவில்லை. 35 வயதான சிசிலியாவால் இதை மேலும் தாங்க முடியவில்லை. எனவே கணவன் மனைவி இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இனி ஒரே அறையில் ஒன்றாக தூங்க முடியாது என்ற…
-
- 0 replies
- 603 views
- 1 follower
-
-
40 வயதிலும் நலமான தாம்பத்ய வாழ்க்கைக்கு ….. நலமான தாம்பத்ய வாழ்க்கை மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் தாம்பத்ய வாழ்க்கை இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று பெண்கள் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடையும், சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து. மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அந்த சோர்வை விரட்டுவதற்கு தாம்பத்ய உறவானது அருமருந்தாக பயன்படு…
-
- 0 replies
- 759 views
-
-
நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர். இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம். தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய சூழ்நிலையி…
-
- 0 replies
- 620 views
-
-
January 18 இளமையும் அழகும் வேண்டுமா? கலர் கலரான மரக்கறி பழவகைகளை உண்ணுங்கள்! உணவுகளின் வர்ணங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை. ஓரஞ்ஸ், சிவப்பு, பச்சை, வயலட் என பல்வேறு நிறங்கள் உணவுப்பொருட்களில் நிறைந்திருக்கின்றன. இந்த நிறங்கள் நம் ஆரோக்கியத்தோடும் அழகோடும் தொடர்புடையவை. எனவே எந்த கலர் காய்கறிகளை சாப்பிட்டால் என்ன மாதிரியான சத்து கிடைக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர் தெரிந்து கொள்ளுங்களேன். சிவப்பு காய்கறிகள் காலையில் சாப்பிடப்படும் ஒரஞ்ஸ், மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன்தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தால் சிவப்பு நிறமுள்ள தக்காளிச் சாறு அருந்தவும். ஏனெனில் இது குடலை அபாரமாகச் சுத்தப்படுத்திவிடும். க…
-
- 0 replies
- 694 views
-
-
கேன்சர் பற்றி தெரியுமா உங்களுக்கு?? நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரியவராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். …
-
- 0 replies
- 398 views
-
-
புதிய முறையின் மூலம் லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியுமென சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக லுகேமியா நோயினால் அவதியுறும் சிறுவர் சிறுமியருக்கு சிகிச்சை அளிக்கும் நவீன முறையொன்றை சுவிஸ் விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். வழமையான சிகிச்சை முறைமையின் மூலம் நன்மை அடையாத சிறுவர், சிறுமியர் இந்த நவீன முறையின் மூலம் நன்மை அடையக் கூடிய அதிக சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சிகிச்சை முறைமை குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 776 views
-