Jump to content

உலக பக்கவாதம் தினம்: ''தூக்கமின்மையாலும் இந்த பாதிப்பு வரலாம்''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக பக்கவாதம் தினம்: ''தூக்கமின்மையாலும் இந்த பாதிப்பு வரலாம்''

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உலக பக்கவாதம் தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருவில் இருக்கும் குழந்தை முதல், இளம் வயதினர் மற்றும் முதியவர் என பாகுபாடின்றி எல்லா வயதினரையும் 'பக்கவாதம்' தாக்குகிறது என்றும் இந்தியர்கள் மரணிப்பதற்கான ஐந்தாவது முக்கிய காரணமாக பக்கவாதம் மாறியுள்ளது என கூறுகிறார் தமிழக அரசின் ஓமந்தூரார் அரசு பல்நோனோக்கு மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் ஆர் எம் பூபதி.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29ஆம் தேதி பக்கவாத விழிப்புணர்வு தினம் ஆக உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாத பாதிப்புஏற்பட்ட மூன்று மணிநேரத்திற்குள் ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால், அவர் முழுமையாகவோ அல்லது 50 சதவீத குணமடைய வாய்ப்புகள் உள்ளதால், பக்கவாதம் மூலம் ஏற்படும் ஊனம் மற்றும் மரணத்தை தடுக்கமுடியும் என்கிறார் மருத்துவர் பூபதி. இந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் நோயாளியாக வேண்டிய சூழல் இந்திய அளவில் இருப்பதாக கூறுகிறார் பூபதி. பேட்டியில் இருந்து:

பக்கவாத பாதிப்பு என்றால் என்ன? அதனை குணப்படுத்த முடியுமா?

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு சிறப்பு இருக்கும். மூளை என்ற உறுப்புக்கு தனிச்சிறப்பு என்னவென்றால், அதுதான் எல்லா உறுப்புகளும் வேலை செய்வதற்கான கட்டளையை உடலுக்கு உணர்த்துகிறது. மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவது தடைபட்டால், மூளையின் செல் தசைகள் பாதிப்படையும். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். உடலின் ஒரு பக்கம்,கை,கால், முகத்தின் ஒரு பகுதி என பாதிப்பை பொறுத்து அந்த பகுதி செயல் இழக்கும்.

பக்கவாத அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே மருத்துவ உதவி கிடைத்தால், பக்கவாத்தின் பாதிப்புகளை 60 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும். ஒரு சில சமயம் பாதிக்கப்பட்ட நபரை முழுமையாக குணப்படுத்தவும் முடியும்.

 

பக்கவாதத்தின் முக்கிய அறிகுறிகள் என்ன?

உடல் சமநிலை இழப்பது, ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழத்தல், முகம் ஒரு புறமாக இழுத்துக் கொள்ளுதல், ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயலற்றுப்போவது, பேச முடியாத அல்லது பேச்சில் குளறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் எந்த வயதினரிடம் தென்பட்டாலும் அதை அவசர நிலையாக கருதி மருத்துவ உதவியை நாட வேண்டும்.

எந்த வயதினருக்கு அதிக தாக்கம் ஏற்படும்?

முந்தைய காலங்களில் பக்கவாதம் முதியவர்களுக்குத்தான் ஏற்படும் என்ற கருத்து நீடித்திருந்தது. தற்போது, மருத்துவ உலகத்தில் அறிமுகம் ஆகியுள்ள மேம்படுத்தப்பட்ட கருவிகள் மூலமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படும்போது அதனை கண்டறியமுடியும். இளம் வயதினர் கூட இதில் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் பலரும் இதில் பாதிக்கப்படுகிறார்கள். இது முதியவர்களின் நோய் அல்ல.

 

ஆர்.எம். பூபதி

 

படக்குறிப்பு,

மருத்துவர் ஆர்.எம். பூபதி, நரம்பியல் நிபுணர்

கருவில் இருக்கும் குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படுவது ஏன்?

கருவில் இருக்கும் குழந்தைக்கு தாயின் ஆரோக்கியம்தான் ஆதார சக்தி. தாய்க்கு ரத்தசோகை, தைராய்டு குறைபாடு இருப்பது, குழந்தையின் இதயக் குழாய் அல்லது இதயத்தின் வடிவமைப்பு சரியாக அமையாமல் போவது, தொப்புள்கொடி குழந்தையின் கழுத்துப் பகுதியை சுற்றி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படும்.

ஒருசில சமயங்களில், கருவுற்ற தாய் ஒருவேளை விபத்தை சந்தித்தாலோ காயமடைந்தாலோ அவை கூட காரணமாக அமையும். ஒருவேளை தாய்க்கு ஏற்கெனவே இதய குழாய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கும். கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பை கண்டறியலாம்,அதனை முழுமையாக குணப்படுத்துவது என்பது தற்போது சாத்தியமில்லை. ஒரு சில நேரங்களில், குழ்நதை பிறந்த சில மாதங்கள் கழித்துதான் பக்கவாதம் இருப்பதை அறியமுடியும். பேறுகால கவனிப்புதான் கருவில் இருக்கும் குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் வழி.

 

உலக பக்கவாதம் தினம்

பட மூலாதாரம்,SCIEPRO

இளம்வயதினர் பக்கவாத தாக்குதலுக்கு ஆளாவது எப்படி?

தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம். இயற்கை விதிப்படி, நாம் இரவு உறங்கவேண்டும். எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். அதனை நீண்ட காலத்திற்கு ஒத்திவைப்பது, உடற்பயிற்சி இல்லாமல் உட்கார்ந்த நிலையில் பலமணிநேரம் வேலை செய்வது, ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாமல் ஜங் உணவுகளை எடுப்பதால், உடல்எடை அதிகரிக்கும், இதன் விளைவாக சிறிதளவு இதயதுடிப்பு, ரத்த அழுத்தம் என எல்லா காரணிகளும் உயரும்.

எடை குறைப்பு செய்யாவிட்டால், இயற்கைக்கு மாறான வாழ்வியலில் நீண்ட காலம் இருந்தால், அது விரைவில் பக்கவாதத்திற்கு கொண்டு செல்லும். இந்தியாவில் ஒரு லட்சத்தில் 40 -50 நபர்களுக்கு பக்கவாதத்தால் மரணம் ஏற்படும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த எண்ணிக்கையில் கணிசமானவர்கள் இளைஞர்களாக இருப்பதுதான் நமக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

ரத்த கொதிப்பு அதிகமாக இருந்தால், அது பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக அமையும். மது மற்றும் புகை பழக்கம் காரணமாக ஏற்படும் உடல் நல குறைபாடுகள் காலப்போக்கில் பக்கவாதத்தை ஏற்படுத்தும். உங்கள் உடல்நலனை நீங்கள் சீர்படுத்த முயற்சி எடுக்கவில்லை எனில், பக்கவாதம் என்ற விளைவை நீங்கள் சந்திக்கவேண்டும். அதிக கொழுப்புச் சத்து இருந்தால், அது ரத்த நாளங்களில் படிந்து, அவற்றின் அளவை (விட்டத்தை) குறைக்கும். இதனால் மூளைக்கு செல்ல வேண்டி ரத்த அளவு குறைந்து பக்கவாதம் ஏற்படும். கொழுப்பு இல்லாத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது.

பக்கவாதத்தால் மரணம் ஏற்படுமா?

பக்கவாதத்தின் தாக்கத்தை பொறுத்து மரணம் நிகழும் வாய்ப்பும் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் உடனடி சிகிச்சை கிடைத்தால், உடலில் ஊனத்துடன் அந்த பாதிப்பை தடுக்கமுடியும். சரியான சிகிச்சை இல்லாத பட்சத்தில் மரணம் ஏற்படும். பக்கவாதத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக மாறும் வாய்ப்பும் உள்ளது. உடலில் ஒருபக்கம் முழுவதும் செயல் இழந்த படுக்கையில் இருக்கும் நிலை வரலாம். அது முதியவர்களுக்கு மட்டும் ஏற்படும் என்று சொல்லமுடியாது.

தற்போது, ஓமந்தூரார் மருத்துவமனையில்கடந்த நான்கு ஆண்டுகளில் பல இளம் ஆண்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துவருகிறோம். அவர்களில் பலருக்கு, ஒழுங்கற்ற வாழ்வியல் பழக்கங்களால், பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் ஒரு நபர் பக்கவாதம் ஏற்பட்ட நபராக இருந்தால், அவருக்கு மட்டுமே சிகிச்சை என அல்லாமல், அவர்கள் எல்லோருக்கும் மனநல ஆலோசனை தேவைப்படும். ஒரு சிலருக்கு குணமாகும் வாய்ப்பு இருக்கும். குணம் பெற வாய்ப்பில்லாதவருக்கு காலம் முழுவதும் சிகிச்சை தேவைப்படும்.

https://www.bbc.com/tamil/science-63427204

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.