யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
80 topics in this forum
-
சிறுவர்களுக்கு என்று யாழ் இணையத்தில், களத்தில் ஒரு பகுதி திறக்கப்பட வேண்டும் என்று பல காலமாக இங்கு வேண்டுகோள்கள் விடப்பட்டு வந்தது. களத்தில் சிறுவர்களை இணைப்பது பல சிக்கல்களைக் கொண்டு வரும் என்ற காரணத்தினால் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு பகுதி இங்கு http://www.yarl.com/kids/ தொடங்கியுள்ளோம். இங்கு சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள், பாடல்கள், புதிர்கள், ஒலி / ஒளிப்பதிவுகள் போன்றவற்றுடன் தமிழ் கற்பதற்கான சில விடயங்களும் இணைக்கத் தீர்மானித்துள்ளோம். ஏற்கனவே சிறுவர்களுக்கான தொகுப்புக்களை வைத்திருப்பவர்கள் தங்கள் விடயங்களை நேரடியாக அப்பகுதியிலோ அல்லது suddi@yarl.com என்னும் முகவரியிற்கு அனுப்புவதன் மூலம் இணைத்துக் கொள்ள முடியும். ஆக்கங்கள் எனும்போது காப்புரிமை…
-
- 0 replies
- 3.1k views
-
-
வணக்கம், நேற்று முதல் இணைய வழங்கி மாற்றத்தையும், அத்துடன் கள மாற்றத்தினையும் மேற்கொண்டிருந்தோம். வழமைபோலவே எதிர்பார்ப்பதை விட வேறு வேறு பிரச்சனைகள் என்று நினைத்ததை விட அதிக நேரம் செலவழிக்க வேண்டி வந்து விட்டது. தற்போது கருத்துக்களத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வந்தாலும் சில செயற்பாடுகள் இன்னும் முழுமையாக்கப்படவில்லை. - converter இன்னும் இணைக்கப்படவில்லை - திண்ணைப் பகுதி செயலிழந்து உள்ளது - இணைப்புகள் சரியாக இல்லை - முதற்பக்கத்தில் விடயங்கள் காண்பிக்கவில்லை ... இவ்வாறு பல பிரச்சனைகள் உள்ளன. எம்மால் முடிந்தவரை மிக விரைவில் இவைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றோம்.
-
- 1 reply
- 1.7k views
-
-
திண்ணை பகுதியில் எழுத குறைந்த பட்சம் கருத்துக்கள உறுப்பினர்கள் உரிமை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உறுப்புரிமை இல்லாதவர்கள் திண்ணை பகுதியில் எதுவும் எழுத முடியாது.
-
- 0 replies
- 2.1k views
-
-
திண்ணை தொடர்பான விதிகள்: யாழ் உறவுகள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணை பகுதியில் இன்றில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் கள விதிகள் யாழ் களத்தின் பொதுவான விதிகள் அனைத்தும் திண்ணைக்கும் பொருந்தும் (உதாரணமாக தனிநபர் தாக்குதல், வா போ போன்ற ஒருமையில் சக உறுப்பினரை அழைப்பது, அநாகரீகமாக உரையாடுவது..), இவற்றுடன் மேலதிகமாக கீழே உள்ள விதிகள் திண்ணை பயன்பாட்டுக்கான பிரத்தியேகமான விதிகள் 1. திண்ணையில் கதைப்பவை வெளியில் கொண்டு செல்லவோ, பரப்புவதோ, பிரதி பண்ணுவதோ தவறு 2. திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுவதும் கூடாது 3. திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம…
-
- 0 replies
- 6.1k views
-
-
படங்களை இணைப்பது எப்படி? அ) முதலில் கீழே உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணைய தளத்திற்கு சென்று இணைக்க வேண்டிய படத்தை தரவேற்றம்(upload) செய்யுங்கள். http://imageshack.us/ ஆ) அதன் பின்பு அங்கே இருக்கும் 8 விதமான இணைப்புகளில் கடைசி இணைப்பாக இருக்கும் Direct link to image எனும் இணைப்பை கொப்பி செய்யுங்கள். இ) கொப்பி செய்யப்பட்ட இணைப்பை யாழில் கருத்து எழுதும் பகுதியில் "" என்பதற்குள் இடுங்கள், இப்போது Preview பார்த்து படம் வருகின்றதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 4.9k views
-
-
வணக்கம், நிகழ்ச்சியில் பங்குபற்றுகின்றவர்களின் அந்தரங்கங்களை எட்டிப் பார்த்து மலினமான ரீதியில் ஒளிபரப்பப்படும் விஜய் ரீவியின் தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்திகளையோ தகவல்களையோ காணொளிகளையோ யாழில் இணைப்பதை முற்றாக தவிர்க்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். எதிர்காலத்திலும் இவ்வாறான வேறு நிகழ்ச்சிகள் (உதாரணமாக நடிகர் ஆர்யா பங்குபற்றிய சுயம்வரம் போன்ற நிகழ்சிகள்) வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் போது அவற்றை தவிர்க்குமாறு எம்மால் கேட்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம். நன்றி
-
- 2 replies
- 3.7k views
-
-
வணக்கம், அண்மைக் காலமாக யாழ் களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு இணையும் உறுப்பினர்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்வதற்காக, இணைந்தவுடன் உடனடியாக பதில் எழுதும் உரிமையை வழங்க உத்தேசித்துள்ளோம். அதாவது புதிதாக இணைந்து கொண்டவர்கள் அரிச்சுவடியில் தம் ஆரம்பப் பதிவுகளை இட்டு பின் அதனை நிர்வாகப் பிரிவினர் பார்த்து அனுமதிக்கும் முறையில் மாற்றத்தினைக் கொண்டுவந்து, இணைந்தவுடன் அவர்களை எல்லாப் பகுதிகளிலும் பதில் எழுத அனுமதிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். இதன்படி புதிதாக இணைந்து கொண்டவர்கள், உடனடியாக திரிகளுக்கு பதில் எழுத முடியும். ஆனால் கள பொறுப்பாளர்களில் ஒருவர் அனுமதிக்கும் வரை புதிதாக திரிகளை திறக்க மு…
-
- 0 replies
- 963 views
-
-
இங்கு ஏற்கனவே கீழே குறிக்கப்பட்டுள்ள பெயர்களில் பதிவுகள் இருப்பதால் பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்க பின்னவரும் பெயர்களில் பதிவு செய்தவர்கள் தாங்கள் இங்கு பதிவு செய்து கொண்ட பெயர்களில் மாற்றங்களை வேண்டி நிற்கின்றோம். கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட "Madhivadhanan" கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட மதிவதனன். கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட Mathivadhanan இவர்கள் உடனடியாக இப்பகுதியில் அல்லது தனிமடல் மூலம் தாங்கள் விரும்பும் பெயரினைக் குறிப்பிடுவதன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும். பெயர்கள் ஆங்கில எழுத்துக்களில் அமைவது நன்று. ஏனெனில் சில பெயர்களை தமிழில் எழுதுவதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றது. மேலும் புதிதாகப் பதிந்து கொண்ட அன்புநண்பன் பனம்கொட்டை …
-
- 0 replies
- 2.6k views
-
-
வணக்கம். அன்பிற்கினிய அனைத்து கள உறவுகளுக்கும் யாழ் இணையத்தின் இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள். இந்த தமிழர் திருநாளில், தாயக மக்கள் மண்ணில் சுதந்திரத்துடனும் மதிப்புடனும் வாழ்வதற்கும், தம்மை தாமே நிர்வகிக்கும் உரிமைகளை அடைவதற்கும் எம்மால் முடிந்தவற்றை செய்வோம் என உறுதி எடுப்போம். யாழ் இணையம் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன் வடிவமைப்பில் மாற்றங்களைக் செய்து கொண்டு வந்துள்ளது. அதே வழியில் இந்த பொங்கலுடன் பொங்கல்2013 எனும் புதிய வடிவமைப்பினை சனிக்கிழமை, சனவரி 12, 2013 அன்று வெளியிட இருக்கின்றோம். புதிய வடிவத்தினை வெளியிட்டவுடன் ஒரு சில தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பதனால் கள உறவுகள் அடுத்த சில தினங்களுக்கு சில பிரச்சனைகளை எதிர்க…
-
- 0 replies
- 2.3k views
-
-
அன்பான யாழ் இணைய உறவுகளுக்கு, தாயகத்தின் இன்றைய அவலச் சூழலை யாவரும் அறிவீர்கள். அவசரமும் - மிக அவசியமானதுமான செயற்பாடுகளை முன்னெடுத்து எமது மக்களின் அவலங்களை சர்வதேசத்துக்கு எடுத்தியம்பி, சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டியதும் எமது கடமையாகும். எனவே, இதனைக் கருத்திற் கொண்டு கருத்துக்களத்திலும் சில விடயங்களை நாம் அறிவுறுத்த விரும்புகிறோம். அவசிமற்ற + பொழுதுபோக்கு விடயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து - தாயக நிலைமை தொடர்பாக வெளியுலகின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுகிறோம். இன்றைய தொழில்நுட்ப உலகின் வளங்களை - குறிப்பாப இணையத்தை - எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்ச…
-
- 0 replies
- 2.3k views
-
-
கருத்துக்கள விதிமுறைகளை மீறுவதாகக் கருதும் கருத்துக்களை கருத்துக்கள நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரல் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களும் ஆக்கங்களும் மட்டுறுத்தினர்களால் கவனிக்கப்பட்டு, அவை கருத்துக்கள விதிமுறைகளை மீறுவதாயின் தணிக்கை செய்யப்படுகின்றன. நீண்ட நேரம் மட்டுறுத்தினர் இணைப்பில் இல்லாதிருக்கும்போது எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வாசித்தே இவ்வாறான கருத்துக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். சில வேளைகளில் விதிமுறைகளை மீறும் கருத்துக்கள் மட்டுறுத்தினர்களின் கவனத்திலிருந்து விலகியிருக்கலாம். இப்படியான சந்தர்ப்பங்களில், அதாவது தலைப்புக்கு பொருத்தமில்லாத வலிந்த திணிப்புகள் இடம்பெறுவதாகவோ அல்லது கருத்துக்கள விதிமுறைகள் மீற…
-
- 0 replies
- 2.5k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 19 ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2018) 20 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தளங்களுக்கு மத்தியில் இருபது ஆண்டுகளாகத் தமிழர்களுக்கென ஒரு இணையத்தளம் தொடர்ந்து இயங்குவது என்பது சாதாரண விடயமல்ல. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னைத் தொடர்ந்தும் புதுப்…
-
- 0 replies
- 3.9k views
-
-
மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 20ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2019) 21ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளி…
-
- 0 replies
- 70.3k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 21ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2020) 22ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. இன்று முழு உலகமுமே ஒரு நெருக்கடியான காலத்திலும் பதட்டத்திலும் இருக்கின்ற இவ்வேளையில் எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவக் குறிப்புகளினைக் கவனத்தில் கொண்டு அவைகள் இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான செய்திகள் பணம் உழைக்கும் நோக்கில் பரபரப்பிலேயே வைத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 22ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2021) 23ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து முழு உலகமுமே ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னர் குறிப்பிட்ட விடயத்தினையே மீண்டும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவ…
-
- 0 replies
- 860 views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 23ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2022) 24ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கோவிட்-19ல் இருந்து உலகம் முற்று முழுதாக மீள முடியாது தொடர்ச்சியாக ஒரு நெருக்கடிக்குள் இன்றும் உள்ள நிலையில் உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் யுத்தமானது மொத்த உலகத்தினையும் புதியதொரு நெருக்கடியில் தள்ளியுள்ளது. சில நாடுகளின் அவரசமான முடிவுகள் இந்த நெருக்கடியை பொருளாதார ரீதியில் உலக மக்கள் ஒவ்வொரின் மேலும் நேரடியாகவே மறைமுகமாகவே திணிக்கின்றது. குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இன்னமும் நெருக்கடியினைச் சந்திக்கின்றார்கள் சந்திக்கப் போகின்றார…
-
- 0 replies
- 2.8k views
-
-
மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு இன்று (30.03.2023) யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. முதலாவது கருத்துக்களம் பாமினி எழுத்துருவில் அமைந்திருந்தது. அதனால் பாமினி எழுத்துருவில் பரிச்சயமானவர்கள் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில…
-
- 0 replies
- 476 views
-
-
யாழ் இணையத்தில் ஏற்படும்/செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக இங்கு தொடர்ந்து பதியப்படும்.
-
- 11 replies
- 2.8k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ் இணையம் தற்போது அகவை 25 இல் நடைபோடுகின்றது. எனினும்: யாழ் இணையத்தில் கருத்தாடும் கருத்தாளர்களின் எண்ணிக்கையிலும், திரிகளைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கையிலும் பாரிய சரிவு நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அண்மைய தரவுகள் காட்டுகின்றன. தாயகத்தில் வசிப்போர் அதிகளவு பிற சமூகவலைத் தளங்களைப் பாவித்தபோதிலும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணைந்து கருத்தாடல்களில் ஈடுபடுகின்றனர். இது யாழ் இணையம் தாயக மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், யாழ் இணையம் தாய…
-
- 0 replies
- 725 views
-
-
யாழ் களத்தின் இணைய வழங்கியில் சில தொழில்நுட்ப வேலைகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறியத் தந்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரவும் (14-May-2013) நாளையும் (15-May-2013) யாழ் இணையத்தில் சில தடங்கல்கள் ஏற்படலாம் என கள உறவுகளுக்கு அறியத் தருகின்றோம். நன்றி.
-
- 0 replies
- 2.5k views
-
-
அனைத்து யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் இணையம் தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று 11ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் - பல மேடு பள்ளங்களைக் கடந்து - தடைகளைத் தாண்டி - இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் - தமிழர்களின் விடுதலை உணர்வையும், தேசிய எழுச்சியையும் வெளிப்படுத்தும் களமாய் - உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாய் - யாழ் இணையம் உள்ளது. தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது - பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தள…
-
- 0 replies
- 339.3k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - கடந்த ஆண்டின் துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 11ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2010) 12ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
- 0 replies
- 2.8k views
-
-
யாழ் இணையம் - 8 ஆவது அகவை யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்... வருகிற 30ம் நாள் மார்ச் மாதம் அன்று யாழ் இணையம் தனது 8 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அன்று யாழ் இணையம் தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து ஒரு பெரும் தளமாக - பல பார்வையாளர்களைக் கொண்ட தளமாக உயர்ந்து நிற்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னை வளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முயற்சிகளை யாழ் இணையம் முன்னெடுத்தது: யாழ் முற்றம் இணைய சஞ்சிகை, விம்பகம், மின்னஞ்சல் சேவை, வாழ்த்து அட்டை, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, கருத்துக்களம், அரட்டை அறை, வலை…
-
- 0 replies
- 2.3k views
-
-
மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 17ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2016) 18ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். கூட்டுமுயற்சியினால் கடந்த காலத்தில் ஒரு சில விடயங்களை தாயக ம…
-
- 0 replies
- 4.7k views
-