வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5821 topics in this forum
-
கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், வள்ளுவர் பிறந்தநாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு! 'இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
-
சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள். தமிழீழ மக்களின் விடிவுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கும் இந்த உச்சக்கட்ட ஜனநாயகப் போரில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரது பங்கேற்பும் மிக மிக அவசியானது என உணரப்பட்டுள்ளது. அதன் ஒரு பாதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தொடரூந்து நிறுவனத்தின் அதிவேக ரி.ஜி.வி. தொரூந்து ஒன்று இதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டு, பாரிஸ் கார் து லியோனில் இருந்து ஜெனிவா புறப்படுகின்றது. 05 மார்ச் காலை…
-
- 0 replies
- 514 views
-
-
மனுக்குல தர்மம் வெட்கித்தலைகுனியும் வகையிலான கொடூர யுத்தம் மூலம் தமிழ் மக்கள் பாரிய இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எனினும் கடந்தகால போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்களது அரசியல் உரிமைப் பிரச்சினையின் நியாயத்தை சர்வதேச சமூகம் மத்தியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேசுபொருளாக ஆக்கியுள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைத்தீவை மையப்படுத்தி சர்வதேச சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்று நியாயத்தை நிலை நாட்டுவதற்குரிய வாய்ப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளது. அவ்வகையில் எவ்வித சோர்வும் அல்லாமல் உண்மையான தேசிய உணர்வோடு நீங்கள் இன்று ஆரம்பித்திருக்கும் நீதிக்கான நீண்ட நடைபயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துகிறோம் . …
-
- 0 replies
- 649 views
-
-
விடுதலைப் புலிகளது இலட்சிய உறுதியும், அர்ப்பணிப்பும், தமிழீழ மக்களது தொடர் அவலங்களும், அழிவுகளும் சிங்கள ஆட்சியாளாகள் மீதான சர்வதேச அழுத்தங்களாக இறுக்கம் பெற்று வருகின்றது. ஜெனிவாவில் பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் இலங்கை குறித்த விடயம் ஆராயப்படும் என்ற தகவலால் சிங்கள ஆட்சியாளர்கள் மருண்டு போயுள்ளார்கள். இதுவரை காலமும் இந்திய - சீன - பாக்கிஸ்தானிய என்று சற்று நீண்டு செல்லும் கொலைக்கள பங்குதாரரது பாதுகாப்புக் கவசத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பி வந்த சிங்கள அரசு, இந்தத் தடவை சற்று விழி பிதுங்கிய நிலையில்தான் உள்ளது. அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க் கு…
-
- 0 replies
- 566 views
-
-
ர்வே அமைதி முயற்சியின் மீள்பார்வை அறிக்கை மீது உரையாடல் ‘தேடகம்’ அமைப்பினர் ஒழுங்கமைத்த நோர்வேயின் அறிக்கை மீதான கலந்துரையாடல் 29 யனவரி 2012 அன்று கனடா ஸ்காபுரோவில் நடைபெற்றது. கலந்துரையாடலை ரதன் ரகு வழிநடத்தினார். வில்லவராயன் ஆனந்தராம் நோர்வேயின் அறிக்கையை சுருக்கமாக கலந்துரையாடல் தொடங்குவதற்குரிய வகையில் முன்வைத்தார். (Pawns of Peace: Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009) இந்த கலந்துரையாடல் அல்லது பகுப்பாய்வு உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. கருத்து நிலையில் பல முனைகளிலும் உள்ளோர் வந்து கலந்துகொண்டனர். தற்போது கனடாவில் தமிழர்களிடையே இருக்கும் அறிவார்ந்த தளங்களில் சிந்திப்போரிடையே நிலவும் ஓர் மிகவும் உற்சாகம் தர…
-
- 5 replies
- 815 views
-
-
சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் : தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும். உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் …
-
- 0 replies
- 668 views
-
-
சிட்னி முருகன் ஆலயம் கட்டி 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.எதிர் வரும் 29 ஆம் திகதி (நாளை) கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.27ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் அடுத்த நாள்பகல் 2மணி வரை எண்ணை காப்பு வைக்கும் வைபவம் நடை பெற்றது.மக்கள் திரள் திரளாக வந்து எண்ணை காப்பு வைத்தார்கள்.சிட்னியில் வாழும் 90% வீதமான சைவர்கள் நிச்சமாக கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.முதியோர் நடக்கமுடியாத சூழ்நிலையிலும் பிள்ளைகளின் உதவியுடன் வந்திருந்தார்கள்.அந்த மூலஸ்தானத்துக்கு உள் சென்று முருகனை தொட வேண்டும் என்றால் இன்னுமொரு 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை மக்கள் பயன் படுத்தி கொண்டார்கள் . முருகனை தொடார்தீர்கள் பாதத்தில் சிறு துளி எண்ணையை இட்டால் போதுமானது என ஆலய…
-
- 39 replies
- 3.3k views
-
-
கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர். http://youtu.be/4hF-_JFN1Y8 இன்று 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர். பிரித்தானியாவில் வடகிழக்கு லண்டன் பகுதியில் இருந்து 7 தமிழ் உணர…
-
- 0 replies
- 596 views
-
-
இது பற்றி எழுதுவதா இல்லையா என்று நான் பல நாட்கள் யோசித்த பின்பே இங்கு இணைக்கின்றேன். எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம். ஆனால் பொது வேலை என்று வருகின்ற போது பொதுஇடத்தில் வைத்து பேசுவது தப்பாக இருக்காது என்று எண்ணுகின்றேன். சரி விடயத்திற்க்கு வருவோம். பல வாரங்களிற்க்கு முன்பு நான் யாழ் கழத்தில் ஒரு அறிவித்தல் ஒன்றை பார்த்தேன். நாட்டில் உள்ளவர்களிற்க்கு (அதாவது போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்க்கு) உதவி தேவையென்று. சரி என்னால் முடிந்ததை நான் செய்யலாம் என்று நினைத்து தொடர்பு கொண்டேன். அந்த நபர் இந்த இணையத்தளத்தை தந்தார். இதை பார்த்ததும் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருந்தது. இங்கு ஆரம்பக்கல்வி கற்பவர்கள் இதைவிட வடிவான இணையத்தளம் வடிவமைப்பார்கள். சரி அதை விடுவோம்.…
-
- 28 replies
- 3.3k views
-
-
பிரிட்டனுக்குள் குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் பற்றி அது கோடிகாட்டியுள்ளது. பிரிட்டனில் வசிக்க விரும்பும் குடியேறிகளுக்கும், அல்லது வெளிநாட்டிலிருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச வருமான வரம்பு ஒன்றை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்துவருவதை அரசாங்கம் தற்போது உறுதிசெய்துள்ளது. குறைந்தபட்சமாக 31 ஆயிரம் பவுண்டுகள் வருட வருமானம் இருப்பவர்களால்தான் பிரிட்டனில் தமது மனைவி மக்களுடன் குடியேற முடியும், இந்த வருமானம் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் பிறந்த தனது வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்குள் கொண்டுவர முடி…
-
- 1 reply
- 770 views
-
-
இன்னொரு கறுப்பு நாளாக... ஈழத் தமிழர்களுக்கு எரிச்சலை ஊட்டும் கரி நாளாக... இன்னொரு பெப்ரவரி 04... ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தொலைத்த நாள்... ஈழ மண் தனது சுயத்தை இழந்த நாள்... 64 வருடங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட கொடிய நிகழ்வின் காரணமாக வேதனைச் சிலுவைகளை இப்போதும் சுமக்கிறார்கள். 64 வருடங்களுக்கு முன்னர் சிங்களர்கள் ஏமாற்றமாட்டார்கள் என்று நம்பிய தமிழர்களால் நாங்கள் புதை குழிக்குள் செல்லக் காரணமான துயர நாளான பெப்ரவரி 04 மீண்டும் வருகின்றது. இலங்கைத் தீவின் சுதந்திரத்தை பிரித்தானியா 1948 பெப்ரவரி 04 இல் சிங்களத்திடம் கையளித்தபோது எங்கள் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு என்ற காந்தியின் கைத்தடியின் பின்னே அணிவகுத்து நின்றிருந்த காரணத்தால் எங்கள் இனம் புதைகு…
-
- 0 replies
- 394 views
-
-
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
-
- 3 replies
- 691 views
-
-
நோர்வே - தமிழ் திரைப்பட விழா - 2012 முழுக்க முழுக்க தமிழர் படைப்புகளுக்காகவே உலகில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா. சிறந்த படைப்பாளிக்கு தமிழர் விருது என்ற பெருமைக்குரிய விருதினை வழங்கும் இந்த விழாவுக்கு தங்கள் படங்களை அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சின்னப் படம், பெரிய படம், கலைப் படம், கமர்ஷியல் படம் என்ற பேதமின்றி, நல்ல படம், மக்கள் ரசனையை உயர்த்தும் படம் என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கான 15 படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. Norway Tamil Film Festival - 2012 Date: 2012-04-25 at 12:00 pm Address: -, Oslo, - Norway- Norway Tamil Film Festival - 2012 Tamilar Awards Tamil cinema today is a benchmark for…
-
- 1 reply
- 577 views
-
-
மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது. பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது. கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். …
-
- 0 replies
- 424 views
-
-
நீதிக்கான நடைப் பயணம்! - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா. வரைக்கும். © Copyright 2004-2012 - Pathivu.com தொடர்புகளுக்கு: pathivumedia@gmail.com
-
- 2 replies
- 803 views
-
-
-
-
- 10 replies
- 1k views
-
-
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்க…
-
- 0 replies
- 388 views
-
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர். இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்ப…
-
- 2 replies
- 482 views
-
-
வாரத்திற்கு ஒரு டொலர் நாடு கடந்த தமிழீழ அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் செல்வநாதன் அவர்களும் கலந்துகொண்டு இவ்வாறான திட்டங்களின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன் நாடுகடந்த தமிழீழ அரசின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தார்.
-
- 2 replies
- 974 views
-
-
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவ…
-
- 0 replies
- 491 views
-
-
-
- 2 replies
- 636 views
-
-
அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து, இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக, சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதனை கடந்த வருடம் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருந்தது. ஐ.நா.வின் இந்த அறிக்கையானது ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ரஷியா, சீனா போன்ற நாடுகள் தடையாக இருப்பதன் காரணமாக, தற்போது இந்த அறிக்கையானது ஐ.நா.பொதுச்-செயலரினால் ஐ.நா.மனித உரிமைகள் …
-
- 0 replies
- 582 views
-
-
கனடாவின் ஓன்றாரியோ மாகாண அரசும் தமிழர் மரபுரிமை மாதமாக தை மாதத்தை பிரகடப்படுத்துகிறது கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோவும் ஜனவரி மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகிறது. கனடாவின் மார்க்கம், அஜெக்ஸ், பிக்கறிங் நகரசபைகள் மற்றும் ரொறன்ரோ மாநகரசபை ஆகியவற்றின் தமிழ்மொழி மாதப் பிரகடனத்தைத் தொடர்ந்து, இம்மாகாணமும் தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகின்றது. மாநகர, நகரசபைகள் போலல்லாது ஒன்ராறியோ அரசானது இதனைச் சட்டமூலமாக்கினாலேயே இது சாத்தியப்படும் என்பதால் இதனை தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரேரணை மூலமாக உள்வாங்கி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் சட்டத்தை இயற்றும் உறுதிமொழியை நாளை மாகாண அரசு வழங்கவுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலா…
-
- 4 replies
- 815 views
-