நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ யதீந்திரா - –ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலர…
-
- 0 replies
- 776 views
-
-
தமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பல வருடங்களாக போஸ்டர் கட்-அவுட் கோஷங்களுக்காக அடிமட்டத் தொண்டர்களாகவே காலம் கழித்தவர்கள். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள். அரசியல் கட்சியாகாமல் ஒரு தனி ராணுவ படையாக இவர்கள் செயல்படுகிறார்கள். கபிலன் வைரமுத்துவின் "உயிர்ச்சொல்" எனும் புதிய நாவலில் இந்த கற்பனை இடம் பெற்றிருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீட்டை ஒரு சில இலக்கியவாதிகள் "அதீதமான…
-
- 0 replies
- 645 views
-
-
புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வடிவில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் காமிக்ஸ் புத்தகத் தொடராக வெளியிட ஆரம்பித்துள்ளது. விளம்பரம் சென்னையைச் சேர்ந்த நிலா காமிக்ஸ் என்ற நிறுவனம், வெளியிடத் துவங்கியிருக்கும் இந்த காமிக்ஸ் வரிசையில் முதல் நூல் தற்போது வெளியாகியுள்ளது. ஐந்த…
-
- 0 replies
- 657 views
-
-
அனொனிமா – முகம் மறைத்தவள் -இளவேனில் அ.பள்ளிப்பட்டி- வரலாற்றின் அனைத்துப் பக்கங்களிலும் குருதிக் கறைகளாய் உறைந்து கிடக்கும் அத்தனை போர்களுக்கும் ஒருமித்த கருத்தியல்கள் சில இருக்கின்றன. போர் ஆண்களுக்கானது. வெற்றி, தோல்வி பேதமின்றி பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும். ஒவ்வொரு போரும் ஆயிரமாயிரம் அங்கவீனர்களை, அனாதைகளை, விதவைகளை, மனநிலை பாதித்தவர்களை, புலம்பெயர்ந்தோரை பரிசளிக்கும். வீரம், விடுதலை, இனமானம் இப்படி ஏதோ ஒரு காரணியை வைத்துப் போர்கள் ஆண்களால் நடத்தப்படுகின்றன. காலந்தோறும் எல்லா அரசுகளும், அதிகாரமையங்களும் போருக்குத் தயாராகவே காத்துக்கிடக்கின்றன. போர்களுக்கான தயார்நிலை, ஆளுமை, வெற்றி இவைகளைக் கொண்டே தேசங்களின் வளர்ச்சியும், பெருமையும், ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
தினக்குரல்' வாரமலரில் வேதநாயகம் தபேந்திரனினால் 'யாழ்ப்பாண நினைவுகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதப்பட்ட முதல் முப்பது கட்டுரைகளை கைதடி 'சிவகாமி பதிப்பகம்' தொகுத்து நூலாக வெளியிடுகின்றது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் நீராவியடி, கல்லூரி வீதியில் உள்ள இலங்கை வேந்தன் கல்லூரியில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை பண்டாரவளை கல்வி வலய தமிழ் பிரிவு கல்விப் பணிப்பாளர் சி.மதியழகனும் வாழ்த்துரைகளை 'ஞாயிறு தினக்குரலின்' பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம், வட மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களப் பணிப்பாளர் நா.இராசநாயம், வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப்…
-
- 0 replies
- 574 views
-
-
புத்தகம்ன்னா புத்தகம்… அப்படி ஒரு புத்தகம். படிக்கக் கையில் எடுத்ததில் இருந்து முடிக்கும் வரை அவ்வளவு சுவாரசியம். . எல்லாம் நம்ம தலைவர் லாலு பிரசாத்தின் சுயசரிதைதான். . லாலு பிரசாத் என்றாலே ஒரு இளக்காரப்பார்வை எண்ணற்றவர்களிடம் உண்டு. அதுவும் அவரை நம்மூர் பசுநேசர் ராமராஜனோடு ஒப்பிட்டுச் செய்த பகடிகள் ஏராளம். . ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அவர் யார்? எப்படிப்பட்டவர்? எவ்விதம் இவ்வளவு உயரத்துக்கு வந்தார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த நூலில் இருக்கிறது. . அதிலும் தான் எந்த இடத்தில் தடுமாறினேன்…. தவறிழைத்தேன் என்கிற மனம் திறந்த ஒப்புதல் வாக்குமூலங்களும் உண்டு இதில். . அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறது. தமிழிலேயே தடுமாறும் நான் இந்த இங…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
யாழ். இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் திருமதி மைதிலி தயாபரன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, யாழ்.திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. திருமதி மைதிலி தயாபரன் எழுதிய சொந்தங்களை வாழ்த்தி (நாவல்), வாழும்காலம் யாவிலும் (நாவல்) மற்றும் விஞ்சிடுமோ விஞ்ஞானம் (கவிதை) ஆகிய நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ். இலக்கியக் குவியத்தின் தலைவர் வேலணையூர் தாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நூல்களுக்கான வாழ்த்துரையை கவிஞர் எஸ்.சத்தியபாலனும் அறிமுக உரையை சு.சிறீக்குமரனும் ஆய்வுரைகளை சி.ரமேஸ், க.குகபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். h…
-
- 0 replies
- 664 views
-
-
கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர்களுடன் துணைக்குச் செல்கிறார். கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
இமிழ் ; கதை மலர் April 20, 2024 — அகரன் — இமிழ் என்றால் ‘இனிதான முழக்கம்’ என்ற பொருள். ‘முழக்கம்’ எப்படி இனிதாகும்? என்ற கேள்வி எழும். ஒருசொல்லை உருவாக்குவது அப்படி ஒன்றும் இலகுவானதல்ல. பழந்தமிழரின் பாடல்களில் எங்கெங்கு‘இழிழ்’ பயன்படுத்தப்பட்டது என்பதில் இருந்து இனிய முழக்கத்தை புரிந்துகொள்ளலாம். கடற்கரையை பலரும் விரும்புவர். நாம் எவ்வளவு சிறியவர் என்று அறிவித்தபடி கடல் இருக்கும். கடலை பார்க்க முதலே அதன் ஓசை காதுக்கு வந்துவிடும். அந்த அலைகளின் இசையை ‘இழிழ்’ என்கிறது ‘பாடு தமிழ் பனி கடல் பருகி…’என்ற பழந்தமிழ்ப் பாடல். உலகமெல்லாம் சூரியனை பூமி தொலைக்கும் நேரத்தில் சில பறவை இனங்கள் கூட்டமாக இருந்து அன்றைய…
-
- 0 replies
- 746 views
-
-
இந்த நூற்றாண்டில் மேற்கொண்ட மிகப் பெரிய வாதை என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் உள்ளத்தில் உள்ள தேசப் பற்றை அழிக்கும் நோக்கில் மேற்கொண்ட வாதையே என்று கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் உரை வருமாறு, ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள் ஓய்வின்றிப் போராடிய, தன் வாழ்வின் பெரும் பகுதியை போராட்டத்துடன் கழித்த முக்கியமான போராளிகளில் ஒருவராக வெற்றிச்செல்வி அக்காவினுடைய ஆறிப்போன காயங்களின் வலி என்ற நூல் வெளியீட்டு …
-
- 0 replies
- 601 views
-
-
இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன. கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து வன்னியின் பெரும்பாலான இடங்களுக்கு நகர்கிறபோது நானும் என்னை அறியாமல் அந்த இடங்களுக்கே சென்று விடும் உணர்வைத் தந்தது. ஒரு தாயின் பாசப் போராட்டமும் மகனின் தாய் மண் பற்றிய ஏக்கமும் கதையெங்கும் இழையோடி நிற்…
-
- 0 replies
- 513 views
-
-
பயங்கரவாத்திற்கு எதிரான போர், இறுதி யுத்தம் என்றெல்லாம் இராசபக்சேக்களால் சித்தரிக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு முடிவடைந்துவிட, அதன் பின்நிகழ்வுகள் நீடித்துவரும் ஒன்றாக, நேற்றுவரை போராளிகளாகவும், மாவீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் இருந்து வந்தவர் மீதான போற்றிப்பாடல்கள் இன்று வசைகளாக மாறிவிட்டன. விடுதலையின் மீட்பர்களான தமிழ் ஆயுத தாரிகள் குறிப்பாக பெண் விடுதலைப் போராளிகள் களச்சாவடைந்தது பற்றியல்ல அவர்கள் சோதனை சாவடிகளில் வைத்து காட்டிக் கொடுத்தவர்களால் கைது செய்யப்பட்டதோ, சிங்களப்படையிடம் சரணடைந்த பின்னர் தடுப்பு முகாமுக்குள் வைக்கப்பட்டதன் பின்னரானவையே முக்கியத்துவம் பெறுவதாய் இருக்கின்றன. இவை ஒருபடித்தான அல்லது நிலைத்த பார்வை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தந்த…
-
- 0 replies
- 694 views
-
-
புலம்பெயர் இலக்கியம் முனைவர் க.பூரணச்சந்திரன் பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித்தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வதுகூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதாவது அந்த நகர…
-
- 0 replies
- 3.7k views
-
-
“தியாகமும் வீரமும் மலையென குவிந்தது தோல்வி அதளபாதாளத்திற்கு சென்றது” ஏன் கேட்டுப்பாருங்கள்..... தமிழாய்வு மைய வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற நூல் அண்மையில் அவுஸ்திரேலியா வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அவ் அறிமுக விழாவின் போது நூலாசிரியர் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய ஏற்புரை.நன்றிவெளியீடு தமிழாய்வு மையம் லண்டன்.
-
- 0 replies
- 623 views
-
-
ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் ‘கொழும்பு வானொலி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின. வானொலி ஒலிபரப்புகள் கேட்பவர்களை வந்தடைய மூல காரணமாக விளங்குபவர்கள் வானொலி அறிவிப்பாளர்கள். அறிவிப்பாளர் என்பதை விட ஒலிபரப்பாளர் என்ற சொல் இவர்க ளின் பணியை முழுமையாக எடுத்துக் கூறும். ‘இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்’ என்ற நூல் இலங்கை வானொலியின் பல ஒலிபரப்பாளர்கள் பற்றிய விவரங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இலங்கை வானொலிய…
-
- 0 replies
- 492 views
-
-
கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள். என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ…
-
- 0 replies
- 3.9k views
-
-
The Road of Lost Innocence எனது பெயர் சோமாலி மாம்..சோமாலி என்றால் “ கன்னி வனத்தில் தொலைந்த பூச்சரம்” பெயரின் அர்த்ததைப்போலவே எனது வாழ்க்கையும் என்று ஆரம்பிக்கிறது இந்த புத்தகம். கடும் போக்ககுடைய கம்னீயூஸ்ட கட்சி ஆட்சியிலிருந்த (Khmer Rouge) சமயத்தில் பிறந்த சோமாலி(1971?), பெற்றோர்களை தெரிந்திருக்கவில்லை, தாய்வழிப்பாட்டியும் இவரை காட்டில் விட்டுவிட்டு மாயமாகிவிட, Taman எனும் முஸ்லீம் வீட்டில் வளர்க்கப்படுகிறார். 9 வயதாகும் சமயத்தில் திடீரென பாட்டனார் எனக்கூறி வந்த ஒருவரால் கூட்டி செல்லப்படுகிறார், பின்பு பாட்டனாரினாலும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு சீன வியாபாரியால் பலாத்காரப்படுத்தபடுகிறார். அப்போது இருந்த கம்போடியாவில் பெண்களை சிறுவர்களை(பெரும்பாலும் சி…
-
- 0 replies
- 612 views
-
-
கிளிநொச்சியில் இனிதே அரங்கேறிய செந்தூரனின் ’மனப்பாரம்’ சிறுகதை நூல்.! ஈழத்தின் இளம் எழுத்தாளர் கனகபாரதி செந்தூரன் எழுதிய மனப்பாரம் சிறுகதை நூல் வெளியீடு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.12.2019) சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சி கண்ணகைநகர் இந்து வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கனகபாரதி செந்தூரன் கொட்டகல ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் கல்வியை பயின்று வருகிறார். கிளிநொச்சி பரந்தனை பூர்வீகமாகக் கொண்ட இவர் கனகரத்தினம் செந்தூரன் என்ற இயற்பெயரை கொண்டவர். இவர் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுதியே மனப்பாரம். இந் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறிதரனும் சிறப்பு …
-
- 0 replies
- 854 views
-
-
வவுனியாவில் தாலம் ஓலை- 03 நூல் வெளியீட்டு நிகழ்வு.! வவுனியா மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் “தாலம்” ஓலை- 3 வெளியீட்டு விழா நிகழ்வு வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (15) இடம்பெற்றது. கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.கலிஸ்ரஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திராசுபசிங்க கலந்து கொண்டார். நூலின் முதற்பிரதியை வவுனியா மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பிரேமதாஸ் வெளியிட்டு வைக்க மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன பெற்றுக்கொண்டார். நூலிற்கான …
-
- 0 replies
- 611 views
-
-
இலண்டன் புத்தகக் கண்காட்சி ! - தகவல்: பெளசர் - நிகழ்வுகள் 23 ஜூன் 2022 BOOK EXHIBITION - WEMBLEY 26TH JUNE 22- SUNDAY Time: 10am to 8pm We cordially invite you to a book exhibition with 500 titles. London Tamil Centre 253, East Lane, Wembley, Middlesex, HAO 3NN Available train service on Sunday: Jubilee line - Wembley Park, bus 483 towards Harrow then bus 245 Alperton. Bakerloo line - North Wembley Station, walk 3mins On Sunday, there is free parking at the by-roads. நூல் கண்காட்சி அரங்கில் புதிய நூல்களின் அறிமுகங…
-
- 0 replies
- 293 views
-
-
-
- 0 replies
- 427 views
-
-
கிளிநொச்சி போர் தின்ற நகரம்: அறிமுகம்: யமுனா ராஜேந்திரன்
-
- 0 replies
- 668 views
-
-
பூக்கள் பறப்பதில்லை – அ.முத்துலிங்கம் அ முத்துலிங்கம் அமெரிக்கப் பெண் ஒருவர் சிறுவயதில் இருந்தே நிறைய வாசிப்பார். எத்தனைப் பெரிய புத்தகமாயிருந்தாலும் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவார். இவர் மணமுடித்த பின்னர் கணவர் இவருக்குத் தினமும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார். அவர் முடித்து விட்டு அடுத்த நாளே கணவரிடம் கொடுப்பார். கணவர் மாலை திரும்பும்போது புதுப் புத்தகங்கள் கொண்டுவரவேண்டும். மனைவிக்குப் புத்தகங்களில் திருப்தியே கிடையாது. கணவரிடம் தினமும் சொல்வார், ’இந்தப் புத்தகம் சரியில்லை. வேறு நல்ல புத்தகங்கள் கொண்டுவாருங்கள்.’ ஒருநாள் கணவர் வெறுத்துப்போய் சொன்னார், ‘உனக்குத்தான் நான் கொண்டு வரும் புத்தகங்கள் பிடிப்பதில்லையே. நீயே உனக்குப் பிடித்த …
-
- 0 replies
- 531 views
-
-
எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரையாற்றுவர். ஏற்புரையை நூலாசிரியர் வெற்றிச்செல்வி வழங்க உள்ளனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்க்கை பற்றிய வரலாற்றுப் பதிவாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூல் அண்மையி…
-
- 0 replies
- 590 views
-
-
தரவிறக்கம் https://noolaham.org/wiki/index.php/ஈழத்தமிழர்_இறைமை சில நூல்கள் அவசரத்துக்கு தேடினால் கிடைக்காது யாராவது இரவல் வாங்கி மறந்து விட்டு விடுவார்கள் அல்லது சேமிப்பு பகுதியில் எங்கு என்ன பெயரில் வைத்தோம் என்று தேட வேண்டி வந்திடும் இங்கு பதிவது இலகுவாக குறிப்புக்கள் எடுக்க உதவும் என எண்ணுகிறேன் நன்றி .
-
- 0 replies
- 636 views
-