Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புலநாய்வுத்துறை மற்றும் விசேடநடவடிக்கைகள் தளபதி மொகனியா நேற்று சிரியா தலைநகர் டமஸ்கஸ் இல் கார் குண்டினால் படுகொலை செய்யப்பட்டார். http://english.aljazeera.net/NR/exeres/553...AA4F39C99BC.htm

  2. பாக். ஏவுகணை சோதனை Wednesday, 13 February, 2008 04:14 PM . இஸ்லாமாபாத், பிப். 13: பாகிஸ்தான் குறுகிய தூர இலக்கை தாக்கக் கூடிய கஜ்நவீ ஏவுகணையை இன்று சோதனை செய்தது. 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை தாக்கக் கூடியது. . அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் இந்த ஏவுகணையை பெயர் குறிப்பிடப்படாத இடம் ஒன்றில் சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அண்மை காலத்தில் பாகிஸ்தான் இத்தகைய பரிசோதனையில் ஈடுபடுவது இது 3வது முறையாகும். வட இந்திய நகரங்களை தாக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.maalaisudar.com

  3. ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று' [13 - February - 2008] [Font Size - A - A - A] * ரஷ்ய பிரதமர் ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றென ரஷ்ய பிரதமர் விக்டர் ஜுப்கோப் தெரிவித்துள்ளார். விக்டர் ஜுப்கோப் இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் தனது பயணம் தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதில் ஜுப்கோப் மேலும் தெரிவித்துள்ளதாவது; ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் ஒன்று இந்தியா. இரண்டு புதிய நண்பர்களிடமிருந்து கிடைக்கும் நட்பைவிட ஒரு பழைய நண்பரிடமிருந்த கிடைக்கும் நட்புதான் மிகச் சிறந்தது. இந்தியாவை எப்போதும் எங்கள…

  4. சோனியாவுக்கு அழைப்பாணை அனுப்பலாமா? தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து முரண்பாடு 13.02.2008 / நிருபர் எல்லாளன் வெளிநாட்டு விருது பெற்றது தொடர்பாக சோனியா காந்திக்கு அழைப்பாணை அனுப்புவது குறித்து தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பெல்ஜியம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான "ஓர்டர் ஒப் லியோபோல்ட்' என்னும் விருதை அவருக்கு அந்நாட்டு அரசு வழங்கியது. இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், ""சோனியா காந்தி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே அவரை பாரா…

  5. அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு இரகசியங்களை சீனாவுக்கு விற்ற சூத்திரதாரிகள் கைது அமெரிக்க பாதுகாப்பு பிரிவு அதிர்ச்சி இரகசிய பாதுகாப்பு தகவல்களை சீனாவுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவினைப் பிறப்பிடமாகவும் கலிபோர்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட டொங்பான் கிரெக் சுங் என்ற போயிங் விமான நிலைய பொறியியலாளர், விண்கலம் மற்றும் ஏனைய விண்வெளி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் சீனாவுக்கு விபரங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினது தாய்வான் தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கிய பிறிதொரு குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டொங்பான் கிர…

    • 0 replies
    • 766 views
  6. உலக உருண்டையில் பெரிய வல்லரசுகளுக்கு உள்ள பிரச்சனையே தனி. அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய வல்லரசு தனது நலனை நேட்டோ என்ற அமைப்பு விரிவாக்கத்தின் மூலம், ஏனைய நாடுகளை பொருளாதார பலவீனப்படுத்தி பின் உதவுவது போல உதவி தன்னை நோக்கி ஈர்த்து வருகிறது. இதன் தொடர்சியாக மேற்கு ஐரோப்பா எங்கும் நேட்டோவின் விரிவாக்கத்தின் கீழ் அமெரிக்க அதிகாரம் கோலோஞ்சிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முன்னாள் சோவியத் யூனியனின் கூட்டாளிகளையும் தற்போது ரஷ்சியாவுக்கு எதிராக செயற்படுத்த நேட்டோவுக்குள் உள்வாக்கும் செயலை அமெரிக்க செய்ய ஆரம்பித்துள்ளது. அதன் கீழ் போலந்து மற்றும் செக் குடியரசு போன்றவை நேட்டோவுக்குள் உள்வாங்கப்படுவதுடன் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கவசத்திட்டத்தின் கீழ் இடைமறிப்பு ஏவுகணைகளை …

  7. பெனாசிர் புத்தகத்தில் திடுக் தகவல் Tuesday, 12 February, 2008 11:21 AM . கராச்சி,பிப்.12: பெனாசிர் பூட்டோவுக்கு அவரை கொலை செய்யப்போகிறவர்களின் செல்போன் நம்பர்கள் முதலிலேயே தெரியும் என்னும் திடுக்கிடும் தகவல் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் வெளியாகியுள்ளது. . பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் பூட்டோ கடந்த ஆண்டு இறுதியில் படுகொலை செய்யப்பட்டார். அல்கொய்தா தீவிரவாதிகளே அவரது படுகொலைக்கு காரணம் என்று கூறப்பகிறது. இந்நிலையில் படுகொலை செய்வதற்கு முன்பாக பெனாசிர் பூட்டோ எழுதிய புத்தகம் இன்று வெளியாகியுள்ளது. ரி கான்ஸ்சலேஷன் : இஸ்லாம் டமாக்ரசி அண்டு தி வெஸ்ட் என்னும் அந்த புத்தகத்தில் பெனாசிர் பூட்டோ பல திடுக…

  8. பாகிஸ்தான் அணுசக்தி ஆணையக உத்தியோகஸ்தர்கள் மர்ம நபர்களால் கடத்தல் 2/12/2008 6:42:10 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானின் அணுசக்தி பிரிவின் அதிகாரிகள் இருவர் முகமூடியணிந்து வந்த மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள டெரா இஸ்மாயில் கான் நகரிலுள்ள ஷெய்க் பாடினில், வாகனமொன்றில் வந்த மர்ம நபர்கள், பாகிஸ்தான் அணுசக்தி ஆணையகத்தின் அதிகாரிகளையும் அவர்களது சாரதியையும் கடத்திச் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் மலைப்பகுதியில் கனிப்பொருள் தொடர்பான பூகர்பவியல் ஆய்வை மேற்கொள்ள மேற்படி உத்தியோகஸ்தர்கள் சென்ற வேளையிலேயே இக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்த அணுசக்தி உத்தியோகஸ்தர்களை கடத்திச் சென்…

    • 1 reply
    • 787 views
  9. ஒளி ஊடுருவும் தன்மையுடைய மீன்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு [12 - February - 2008] [Font Size - A - A - A] ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடியின் தன்மையை ஒத்த மீன் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மேலும் இம்மீனின் உடல் உள்ளுறுப்புகள் தெளிவாகப் பார்வையிடக் கூடியதாகவும் இரத்த ஓட்டம் உணவு செல்லும் பாதைகள் என்பவற்றையும் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டொக்டர் ரிச்சர்ட் மற்றும் அவரது குழுவினர் பேராசிரியர் லியனோர்ட் ஜோன் என்பவரது பரிசோதனைக் கூடத்தில் இந்த மீன்களை உருவாக்கியுள்ளனர். மனிதர்களின் ஜீன் அமைப்பைக் கொண்ட ஜீப்ரா மீன்கள்தான் தற்போது ஒளி ஊடுருவக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மீன்களின் உடல் உறுப்புகள் …

  10. பஹ்ரைனில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போரை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம் [11 - February - 2008] [Font Size - A - A - A] பஹ்ரைனில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மீதும் அவர்களை பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் மீதும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. வேலை அனுமதி விசா இன்றி பஹ்ரைனில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெளியேற கடந்த ஆகஸ்ட 1 ஆம் திகதி முதல் 6 மாதங்கள் அவகாசம் அளித்தது பஹ்ரைன் அரசு. இந்தக் காலக்கெடு ஜனவரியுடன் முடிந்துவிட்டதால், சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தேடும் பணியில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வேலை அனுமதி பத்திரம் இல்லாத தொழிலாளர்களை வேலையில் அமர்த்த வேண்டாம் என்று அனைத்து பன்னாட்டு நிறுவனங்களைய…

  11. தைமூர் அதிபர் உயிர் தப்பினார் Monday, 11 February, 2008 10:48 AM . டிலி, பிப்.11: கிழக்கு தைமூர் அதிபர் ஜோஸ் ஹார்டாவுக்கு எதிராக நடைபெற்ற கொலை முயற்சியில் அவர் காயங்களோடு உயிர் தப்பினார். . இந்தோனேஷியா அருகே உள்ள கிழக்கு தைமூர் கடந்த 2002 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற கிழக்கு தைமூர் அதிபராக ஜோஸ் ரமோஸ் ஹார்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிராக போராளிகள் குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்குழுவை சேர்ந்த ரெய்னாடோ என்பவர் இன்று காலை அதிபரை கொல்ல முயன்றார். இரண்டு கார்களில் கூட்டாளிகளோடு வந்த அவர், அதிபரின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிபரின் பாதுகாவலர…

    • 2 replies
    • 1.3k views
  12. விஜய்காந்த்துக்கு தேவை அடக்கம்..ஆணவமல்ல-கருணாநிதி கடும் தாக்கு திங்கள்கிழமை, பிப்ரவரி 11, 2008 சென்னை: நான் தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் விஜயகாந்த் தொடர்ந்து பேசிக் கொண்டு திரிவல் நல்லதல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்த கட்சியின் தலைவர் தான் திருமண விழாவில் அரசியல் பேசக் கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பார்க்கும் போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்?. விருத்தாச்சலம் தொகுதி மக்…

  13. சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் இன்று காலை ஒரு திருமண விழா நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதா வது:- ஒவ்வொரு மனிதருக்கும் தாயே உயிர். அதனால்தான் நாம் மொழியைக்கூட தாய் மொழி என்கிறோம். என்றும் தாயை மதிக்க வேண்டும். பெண்களை யாரும் அடிமை யாக நடத்தக்கூடாது. பேசும் தெய்வம் தாய் தான். தாய் - தந்தையருக்கு என்றும் அன்பு செலுத்த வேண்டும். குடிப்பழக்கம் மோச மானது. மதுவால் நாட்டுக் கும், வீட்டுக்கும், உயிருக் கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டு அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்துகிறது. என் குடும்பத்தில் 2 தம்பிகள் குடிப்பழக்கத்தால் அல்பஆயுசில் போய் சேர்ந்து விட்டார்கள். குடிகாரர்களுக்கு யாரும் பெண் கொடுக்காத…

  14. அமெரிக்காவின் நிïயார்க் வர்த்தக மைய கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்திய அல் கொய்தா இயக்க தலை வன் பின்லேடனை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டு கள் தேடுதல் வேட்டை நடத்தியும் அவனை பிடிக்க முடியவில்லை. ஆனால் அடிக்கடி பின்லேடன் வீடியோவில் தோன்றி அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வருகிறான். இந்த நிலையில் இப்போது ஜெர்மனி நாட்டின் மீதும் பயங்கர தாக்குதல் நடத்துங்கள் என்று பின்லேடன் ஆப்கானிஸ் தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறான். இதை அடுத்து அந்த தளபதிகள் தங்கள் இயக்கத்தினரை ஜெர்மனி மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளனர். ஜெர்மனி உள்துறை இலாகாவுக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. ஜெர்மனி மீது அல்கொய்தா அடுத்த குறிவைத்திருப்பதை அடுத்து நாடு முழ…

    • 0 replies
    • 915 views
  15. சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் காலனியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவர் தலைமை செயலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உஷா (வயது 39). இவர்களுக்கு சுமித்ரா (21) என்ற மகளும், ராமச்சந்திரன் (17) என்ற மகனும் உள்ளனர். சுமித்ராவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணதாகி 22 ஆண்டுகளாகியும், சுப்பிரமணி மனைவி உஷாவை சந்தேக கண்ணுடனே பார்த்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தாய்- தந்தைக்கிடையே ஏற்படும் இந்த தகராறை ராமச்சந்திரன் விலக்கி விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குடித்து விட்டு வந்த சுப்பிரமணியன், மனைவியை அடித்து உதைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ராமச்ச…

    • 0 replies
    • 886 views
  16. குஜராத் மாநிலம் படானில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பயிற்சி கல்லுõரியில், தலித் மாணவியை ஆசிரியர்கள் பலர், பல முறை கற்பழித்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த ஆசிரியரில் ஒருவர் நல்லாசிரியர் விருது பெற்றது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. படானில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் செக்ஸ் சில்மிஷங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறைகளிலேயே மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷங்கள் செய்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அருவெறுப்பான வகையில் ஜோக் சொல்வது, ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஆசிரியர்கள் பலரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.ஆசிரியர்களின் செயல்பாடுகள் பற்றி வெளியில் சொன்னால், மாணவிகளின் செயல்முறை தேர்வு மதிப்பெண்கள் குறைக்கப்படு…

    • 0 replies
    • 1.1k views
  17. மாநாடு தொடங்கியது Sunday, 10 February, 2008 01:54 PM . மதுரை, பிப்.10: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது அரசியல் மாநாடு மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் திரண்ட மாநாட்டில், கட்சியின் தலைவர் சரத்குமார் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. . அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முதலாவது அரசியல் மாநாடு மதுரை விரகனூரில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்காக 50 ஏக்கர் பரப்பளவில் பல்லாயிரக்கணக் கானோர் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமரும் அலங்கார மேடையானது நூறடி நீளத்திலும், 60 அட…

  18. பெங்களூரில் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு முகத்தில் கவசம் அணிந்தபடி வாக்கிங் செல்லும் மக்கள். 10.02.2008 / நிருபர் எல்லாளன் பெங்களூர் நகரில் சுற்றுச்சூழல் மாசு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கப்பன் பூங்கா, லால்பாக் பகுதியில் காலையில் வாக்கிங் செல்பவர்கள்கூட முகத்தில் கவசம் அணிந்து செல்லும் நிலை உள்ளது. ஆண்டு முழுவதும் இதமான தட்ப வெப்பநிலை, மாசுபடாத காற்று, கோடையில்கூட சுட்டெரிக்காத வெயில் கொண்ட நகரம் பெங்களூர். இதனால், பெங்களூரில் வசிக்க விரும்புபவர்கள் ஏராளம். ஆனால், மாசற்ற நகரம் என்ற அடைமொழி இன்றைய பெங்களூருக்கு பொருந்தாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெங்களூர் மக்கள்தொகை பலமடங்கு அதிகமாகிவிட்டது. இதனால், வ…

  19. அரசியலில் ரஜினிகாந்த் Saturday, 09 February, 2008 02:32 PM . சென்னை, பிப்.9: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் குதிக்கிறார். அவரது அரசியல் பிரவேசத்திற்கு ஏற்கனவே அச்சாரமிடப்பட்டுள்ளது என்றும், அண்மையில் ராமர் பாலத்திற்கு ஆதரவாக நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார் என்றும், அண்மைக் கால அரசியல் நிலவரத்தை ரஜினி கூர்ந்து கவனித்து வருகிறார் என்றும், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் பெண் டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். . தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும், பல நாடுகளிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். திரையுலகத்தின் மூலம் …

  20. "பசுபிக் தீர்வு திட்டம்' குடிவரவுகொள்கைக்கு முற்றுப்புள்ளி 21 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து 2/8/2008 8:29:38 PM வீரகேசரி நாளேடு - சிட்னி, நௌறு தீவில் கடந்த 10 மாதகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 21 பேர் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டு அவுஸ்திரேலிய பெரு நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அவுஸ்திரேலியா அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய பசுபிக் தீர்வு திட்டம் எனும் குடிவரவுக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நௌறு தீவிலிருந்து 21 இலங்கையர்களும் விமான மூலம் அவுஸ்திரேலிய பெரு நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நௌறு தடுப்பு முகாமில் தடு…

  21. நியூசிலாந்து நாட்டில் விமானிகளை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார் ஒரு பெண். அவரை பிற பயணிகள் மடக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நியூசிலாந்திந் பிளன்ஹீன் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நகருக்கு 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து விமானியின் அருகே சென்றார். தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானத்தை தான் சொல்லும் திசையில் செலுத்தாவிட்டால் விமானத்தை தகர்க்க போவதாகவும் அந்த பெண் மிரட்டினார். ஆனால் மிரட்டலுக்கு விமானி பணியாததால் அந்த பெண் இரு விமானிகளையும் கத்தியால் குத்தினார். விமானி அலறிய சத்தம் கேட்டு ஓடிய பயணிகள் பெண் மீது பாய்ந்து அவரை மடக்கினர். ரத்தம் சொட்டிய நி…

    • 3 replies
    • 1.5k views
  22. சிங்கப்பூர் விமானத்தை தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான ஹெராயின் பறிமுதல் 2/7/2008 8:28:36 PM வீரகேசரி நாளேடு - கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தை நள்ளிரவில் மீண்டும் கோவையில் தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான மதிப்புள்ள ஹெரோயினை அதிகாரிகள் கைப்பற்றினர். கோவையில் இருந்து முன்தினம் நள்ளிரவு சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் எயார் வேய்ஸ் விமானத்தில் கோடிக் கணக்கான மதிப்புய்ய போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவ…

  23. யுஎஸ் சூறாவளி: 52 பேர் பலி 07.02.2008 / நிருபர் எல்லாளன் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வீசிய கடும் சூறாவளி காற்றில் சிக்கி 52 பேர் உயிரிழந்தனர். டென்னசி மாகாணத்தில் 28 பேரும், அர்கன்சாசில் 13 பேரும், கென்டக்கியில் 7 பேரும், அலபாமாவில் 4 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூறாவளி காற்றில் சிக்கி ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சூறாவளி காற்றின் தாக்குதல் இருந்ததாக டென்னசி மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த காற்று தமது வீட்…

  24. இங்கிலாந்து உருவாக்கும் புதிய சூப்பர் விமானம் மணிக்கு 6100 கி.மீ வேகம் ! February 7, 2008 கொன்கோட் விமானங்களின் வரிசையில் அவற்றைவிட சிறந்த தரமுள்ள புதிய இரக சூப்பர் விமானத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளார்கள். இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்திற்கு ஐந்தே ஐந்து மணி நேரத்தில் பயணிக்கக் கூடிய அசுர வேகம் கொண்டதாக இந்த விமானம் இருக்கும். இதனுடைய வேகம் மணிக்கு 6100 கி.மீ என்றும் இது ஒலியை விட ஐந்து மடங்கு அதிகமான வேகம் என்றும் விஞ்ஞானிகள் தகவல் தந்துள்ளனர். கடுமையான தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கொன்கோட் விமானங்கள் நூதனசாலைக்கு போனாலும் கவலைப்பட வேண்டாம் இதோ அந்த இடத்திற்கு புதிதாக வருகிறது சூப்பர் விமானம் என்றும் அறிவித்துள்ளனர். தற்போது விண்வெளிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.