Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கேரள இளைஞர் காணாமல் போன இலங்கை மதவழிபாட்டுத் தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது: கேரள இளைஞர் காணாமல் போன இலங்கை மதவழிபாட்டுத் தளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக அண்மைய நாட்களில் இந்திய ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இலங்கையின் ஊடாக ஐ.எஸ் தீவிரவாதிகளை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கேரள இளைஞர் ஒருவர் மதம் பற்றிக் கற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கு சென்றிருந்ததாகவும் அங்கிருந்து அவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இலங்கையில் மதம் பற்றிக் கற்றுக்கொண்ட வழிபாட்டுத்…

  2. Published By: RAJEEBAN 27 FEB, 2025 | 12:31 PM குழந்தைகளிற்கான போர்வையில் போர்த்தப்பட்டு தந்தையின் அரவணைப்புடன் ஷாம் அல் சான்பாரி, இரண்டு கிழமைக்கு முன்னர் மிகவும் கடினமான முயற்சியின் பின்னர் சாத்தியமான யுத்த நிறுத்தம் காரணமாக காசாவில் ஒரளவு அமைதி நிலவிய இரண்டு கிழமைக்கு முன்னர் உலகிற்கு வந்தார். எனினும் காசா யுத்தம் அவளின் உயிரையும் பறித்தது. திங்கட்கிழமை இரவு காசாவில் சமீபத்தில் கடும் குளிரினால் உயிரிழந்த ஏழு குழந்தைகளில் ஒருவராக ஷாம் அல் சான்பாரி மாறினாள். சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அவளது குடும்பம் ஆயிரக்கணக்கான ஏனைய பொதுமக்கள் போல கடும் குளிரில் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களால் அவர்களின் வீடுகள்…

  3. கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட மையமாகப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் இடிந்து வீழ்ந்தது – 4 பேர் உயிரிழப்பு! தென்கிழக்கு சீன துறைமுக நகரமான குவான்ஜோவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது சுமார் 70 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 5 மாடிகள் கொண்ட கட்டடமே இடிந்து வீழ்ந்ததாகவும் இந்நிலையில் இன்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 47 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தற்போது மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்…

  4. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதலென சந்தேகிக்கப்படும் தாக்குதலில்-சிறார்கள் உட்பட குறைந்தது- ஐம்பத்துஎட்டு பேர் பலி; பலர் படுகாயம். * உறைநிலைக் கருக்களைக்கொண்டு குழந்தை பெரும் பெற்றோர்; அறிவியல் துணையோடு அதிகரிக்கும் சீனாவின் குழந்தை பிறப்புகள். * Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்துவது மூளைச்செயற்திறனை நிறுத்திவைப்பதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு; ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை.

  5. அமெரிக்காவை எச்சரிக்கவே சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது – வடகொரியா. அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிம் ஜொங் உன் மேற்பார்வையில் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எங்கும் சென்றடையும் திறன் கொண்ட இந்த இந்த ஏவுகணை பரிசோதனை நேற்று இடம்பெற்றதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்திருந்தது. https://athavannews.com/2023/1363660

  6. சிரியா அகதிகள்: ஆன்லைனில் யாசகம் கேட்பவர்களை சுரண்டுகிறதா டிக்டாக்? பிபிசி புலனாய்வு ஹன்னா கெல்பார்ட், மம்து அக்பீக் மற்றும் ஜியாத் அல்-கத்தான் தவறான தகவல்கள் கண்டறியும் பிரிவு, பிபிசி அரபாபிக், பிபிசி ஐ புலனாய்வு 14 அக்டோபர் 2022 சிரியா நாட்டில் முகாம்களில் அகதிகளாக வசிக்கும் குடும்பங்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிக்டாக் சமூக வலைதளத்தின் மூலம் பண உதவி கோரி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு உதவியாகக் கிடைக்கும் தொகையில் 70 சதவிகிதம் வரை டிக்டாக் நிறுவனம் எடுத்துக் கொள்வது பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் டிக்டாக் ந…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பால் ஆடம்ஸ் பதவி,பிபிசி ராஜ்ஜீய செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 மாதங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸா மக்களுக்கு இது அதிக தூரம் இல்லை, ஏனெனில் காஸா ஒரு சிறிய பகுதிதான். போரால் கடுமையாக சேதமடைந்துள்ள இந்த பகுதியை நோக்கிய இவர்களது பயணம் என்பது ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தின் தொடக்கம் மட்டுமே. இந்தப் பகுதியில் நிலவக்கூடிய மனிதாபிமான நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்வது கடினம். "இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மி…

  8. சீனா - தைவான் விவகாரம்: தைவானைச் சுற்றி சீனாவின் போர்ப்பயிற்சி சொல்லும் செய்தி என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, சீனாவின் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து தைவான் முன்னெச்சரிக்கையுடன் படைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளது. அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றது, சுயாதீன ஆட்சி நாடாக இருக்கும் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது. நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தைவானை சுற்றி சீனா போர் ஒத…

  9. கனடா- பிரான்ஸ் நாட்டு கொடி ரொறொன்ரோ நகரசபைக்கு வெளியே வெள்ளிக் கிழமை பறக்க விடப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொலையுண்ட 12-பேர்களின் நினைவாகவும் இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரொறொன்ரோ மக்கள் பேச்சு சுதந்திரம் மீதான தங்கள் நம்பிக்கை மற்றும் உலகம் பூராகவும் அதற்காக போராடுபவர்களிற்கு ஆதரவாகவும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கூறியுள்ளார். பிரதம மந்திரி Stephen Harper சார்ளி ஹெப்டு தாக்குதல் சம்பந்தமாக வியாழக்கிழமை பேசுகையில் இந்த பத்திரிகை தாக்குதல் ஒரு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என தெரிவித்திருந்தார். பரிசிலுள்ள கனடிய தூதுவராலயம் தனது கொடியை அ…

  10. இன்றைய நிகழ்ச்சியில்… - ஜிம்பாப்வேயில் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டு, ஏராளமானோர் பட்டினியால் வாட, நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. - சிரியாவின் மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்க, அண்டை நாடான லெபனானில் தஞ்சமடைந்த அகதிச் சிறார்கள் பகுதி நேர வேலைகளை செய்யும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். - விரும்பிய நேரத்தில் விரும்பிய நிகழ்ச்சியை எங்கிருந்தபடியும் பார்க்க புதிய தொழில்நுட்பம் வழிவிட, சிறு பிள்ளைகளிடையே டிவி பார்க்கும் பழக்கம் குறைந்துவருகிறது.

  11. குடியேற்றவாசிகளிடமிருந்து பெறுமதியானவற்றை பறிமுதல் செய்யும் சட்டம் முதல் தடவையாக அமுல் டென்மார்க் அர­சாங்­க­மா­னது அந்­நாட்­டுக்கு வரும் குடி­யேற்­ற­வா­சி­களின் வரவைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மொன்றை முதல் தட­வை­யாக அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது. மேற்­படி சட்­ட­மா­னது அந்­நாட்டுப் பொலிஸார் குடி­யேற்­ற­வா­சி­க­ளி­ட­மி­ருந்து பெறு­ம­தி­யா­ன­வற்றை பறி­முதல் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கி­றது. இது தொடர்பில் அந்­நாட்டு தேசிய பொலிஸ் சேவையின் பேச்­சாளர் பெர் பிக் தெரி­விக்­கையில், கொபென்ஹேகன் விமான நிலை­யத்தில் போலி­யான கட­வுச்­சீட்டைப் பயன்­ப­டுத்தி பய­ணத்தை மேற்­கொண்டு வந்­தி­றங்­கிய இரு ஆண்கள் மற்றும் …

  12. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின்... திடீர் மரணம் காரணமாக, 12ஆம் திகதியை... தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்! இலங்கையில் எதிர்வரும் 12ஆம் திகதி அதாவது நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அன்றைய தினம் பொது விடுமுறை அல்ல எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் திடீர் மரணம் காரணமாக இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1290581

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கெய்வன் ஹொசைனி பதவி, பிபிசி பாரசீகம் 7 ஜூலை 2024 50 நாட்களில் இரானில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு கடுமையான, மேற்கத்திய எதிர்ப்பு ஆட்சி மாறி, ஒரு சீர்திருத்தவாதியின் ஆட்சி அமையப்போகிறது. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சனிக்கிழமையன்று இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் 19 ஆண்டுகளுக்கு முன்பு இரானின் கடைசி சீர்திருத்தவாத அதிபரின் ஆட்சியின் போது சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போதிருந்து, சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தல் போட்டிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். அவர்களது செல்வாக்கை ஒப்பிடுகையில் …

  14. பாலியல் வழக்கு: ஒஸ்கர் விருது வென்ற இயக்குநருக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு By NANTHINI 12 NOV, 2022 | 02:01 PM ஒஸ்கர் விருதை வென்ற பிரபல ஹொலிவுட் இயக்குநர் போல் ஹகிஸ் (69) கனடாவில் பிறந்தவர். இவர் திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது பல பாலியல் புகார்கள் எழுந்தன. போல் ஹகிஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பெண்கள் தனித்தனியாக அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டு போல் ஹகிஸ் அவரது வீட்டில் வைத்து தன்னை வன்கொ…

  15. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மின் அஞ்சல்களை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் படித்ததாக தெரியவந்துள்ளது. மிகவும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட நாட்டின் அதிபர் எழுதிய மின் அஞ்சல்கள் ஹேக்கர்களால் படிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் எழுதிய மின் அஞ்சல்கள் படிக்கப்பட்டதாக நியூயார் டையம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மின்னஞ்சல்களில் தூதுவர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுடன் முக்கிய வேலைகள் பற்றி நடத்தபட்ட விவாதங்கள், நிகழ்ச்சிகளுக்கான கால அட்டவணைகள் போன்ற பல முக்கிய தகவல்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒபாமாவின் தனிப்…

    • 0 replies
    • 219 views
  16. பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்! ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும், அனைத்து பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு …

  17. ஐரோப்பா: இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு நாட்டிற்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மாம்பழங்களில் பூச்சிகள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி அந்நாடு தடை விதித்தது. இந்நிலையில், இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றியம் இன்று உத்தரவிட்டுள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=37597

  18. எம்.எச்.370 விமானத்தின் மர்மம் நீங்குமா ? 10 ஆண்டுகளின் பின் மீண்டும் விமானத்தை தேடும் பணி விமான வரலாற்றில் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றான 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பயணிகள் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மலேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசியன் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 என்ற விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை மர்மமான முறையில் காணாமல் போனது. பயணத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்ததுடன், விமானம் வழமையான பாதையில் இருந்து விலகி சென்றமை பதிவாகி இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போன வி…

  19. ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்து 27 பேர் பலி!!! இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதியில் உள்ள மலைப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக சுமார் 40 பேர் கொண்ட ஒரு குழுவினர் பஸ்ஸில் சென்றுள்ளனர். அந்த பஸ் மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த பஸ் பலமுறை உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/article/30509

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் அதிபர் போரிஸ் யெல்ட்சன், தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து, 1999 டிசம்பர் 31 அன்று புதினிடம் அதிபர் அதிகாரங்களை ஒப்படைப்பதார். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் என்னால் 1999-ஆம் ஆண்டு புத்தாண்டை மறக்கவே முடியாது. பிபிசியின் மாஸ்கோ அலுவலகத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத ஒரு அவசர செய்தி வந்தது. 'ரஷ்ய அதிபர் போரிஸ்யெல்ட்சன் பதவி விலகினார்' என்னும் செய்திதான் அது. அவரது ராஜினாமா முடிவு மாஸ்கோவில் இயங்கி வந்த பிரிட…

  21. ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி! எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதேவேளை, டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலலிக்காத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433062

  22. இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி நாட்டில் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்நாட்டின் பிரதமராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி நாட்டின் பொருளாதார நிலை மோசம் அடைந்ததை அடுத்து அந்நாட்டின் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீரென பதவி விலகினார் இதனை அடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நேற்று இத்தாலியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ப…

  23. இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில்.. • இன்றோடு முடியும் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சாரம்; அடுத்த அதிபர் முன்னாள் வங்கி அதிகாரியா? அதிதீவிர வலதுசாரியா? • விண்ணில் பறந்தது சீனாவின் முதல் உள்ளூர் தயாரிப்பு வர்த்தக விமானம்; ஆனால் சர்வதேச சந்தையில் இவை எடுபடுமா? • கேமெரா பொறுத்தப்பட்ட செயற்கைக்கை; பார்க்கும் பொருட்களை எடுக்கவல்ல கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

  24. “என் மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான்” - ஒப்புக்கொண்ட டிரம்ப் கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிரம்பின் மகன் - ரஷ்ய வழக்குரைஞர் சந்திப்பு தன் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் சந்தித்தார் என்பதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தகவல் பெறுவதற்காக நிகழ்ந்த சந்திப்பு அது என்றும், அது சட்டப்பூர்வமானதுதான் என்றும் தான் பகிர்ந்த ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளர் டிரம்ப். படத்தின் காப்புரிமைAFP அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறித்து விசாரணை நடைபெற்…

  25. நைஜீரியாவில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் 40 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த படையினர், சம்பவ பிரதேசத்திற்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அக்குழுவினரை விரட்டியுள்ளனர். இதன் பின்னர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளில் தீயணைக்கப்பட்டதுடன், அவ்வீடுகளிலிருந்து 6 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.