Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எங்கெங்கும் இசைவில்லாத சூழல். தலைசுற்றுகிறது. டெக்குவாவில் உள்ள பிரதான சாலை ஒன்றிலிருந்து, தள்ளி அமைந்திருக்கும் ஃபெலாஃபெல் கடை அது (ஃபெலாஃபெல்: உருண்டையாக இருக்கும் ஒரு வகை தின்பண்டம்). கடையிலுள்ள சுவரின் ஒரு மூலையில் மாட்டப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் செய்திகள் அரபி மொழியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் காஸாவைப் பற்றிய செய்திகள். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கும் பெண் ஒருத்தியைக் காட்டுகிறார்கள்; அவள் முகமெல்லாம் சின்னச் சின்னதாக ஏராளமான காயங்கள்; சில காயங்கள் மிகவும் மோசம்; அநேகமாக வெடிகுண்டுச் சிதறலால் ஏற்பட்டிருக்கலாம். அவளால் பேச முடியவில்லை; தூங்கித் தூங்கி விழுவதுபோல் தெரிகிறது (அது தூக்கம்தான் என்றும், மரணம் இல்லை என்றும் நம்புவோம்). அவளுக்கு அருகே, இ…

    • 0 replies
    • 530 views
  2. வடகொரியா உதவியுடன் மியான்மர் (Burma) ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆவணம் தெரிவிக்கிறது. பர்மாவை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவர், தனது நாட்டில் வடகொரியாவின் உதவியோடு ரகசியமாக அடர்ந்த காட்டுப்பகுதியில் அணு ஆயுதம் மற்றும் அணு உலை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளதை தான் நேரில் பார்த்ததாக அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இத்தகவல் அமெரிக்க தூதரக அதிகாரி தனது நாட்டு தலைமைக்கு அனுப்பிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. http://www.newsonews.com/view.php?22cQ0ESc2e2VZBZb2e2cAOJ7acd3eQAA0cde4KMCC0b4edlmA2a4dndnB4202dq86A40

    • 0 replies
    • 510 views
  3. சென்னை: பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1 ஆம் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் அவரது உடல் நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார். இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டத…

  4. மன்மோகன்சிங்கை இறுக வளைத்திருக்கும் தமிழர் எதிர்ப்புக்குழு: சாடுகிறது இந்திய ஆங்கில ஊடகம் இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாமல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கேரளாவைச் சேர்ந்த மலையாளிகள் குழு ஒன்று இறுக்கிப் பிடித்திருப்பதாக பிரபல இந்திய ஆங்கில ஊடகமான தி ஸ்டேட்ஸ்மென் சாடியுள்ளது. த ஸ்டேட்ஸ்மென் நாளிதழில் பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: தெற்காசியாவில் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடாக உருவாகி உள்ளதாக அண்மையில் பெங்களுரைச் சேர்ந்த உத்திகளுக்கான அமைப்பு ஒன்றின் அறிக்கையில் அண்மை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானைவிட 1,000 பேருக்கு 8 இராணுவத்தினர் என்கிற நிலை சிறிலங்காவில் உள்ளது. தனத…

  5. பிலாவல் பூட்டோ| படம்: ராய்டர்ஸ். காஷ்மீரின் ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்க மாட்டோம், இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்வோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பெனாசிர் அலி பூட்டோவின், மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் பகுதியில் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இதனை தெரிவித்தார். பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு வயது 20. அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இளம் தலைவராவார். இந்நிலையில், தங்களது பாகிஸ்தான் மக்கள் கட்சியானது, இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும். காஷ்மீரின், ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்காது என பேசியுள்ளது பரபரப்பை…

  6. 50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் செ‌ன்னை, புதன், 16 பிப்ரவரி 2011( 16:22 IST ) தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சிகளும் முடிவு செய்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டும் இன்னும் யாருடன் கூட்டணி என்பது குறித்து சஸ்பென்ஸாக வைத்துள்ளார். இந்த சஸ்பென்ஸ் குறித்து அ.இ.அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு எடுத்துவிட்டார் என்றாலும், தே.மு.தி.க.வுக்கு 50 இடம், துணை முதலமைச்சர் பதவி - அதுவும் அவரது மனைவி பிரேமல…

    • 0 replies
    • 1.1k views
  7. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கடந்த வாரம் திடீரென கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்து இறங்கினார். பிறகு அவர் ஒரு காரில் ஏறி சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது.கடந்த ஒரு வாரமாக ராகுல்காந்தி பற்றி எந்த தகவல்களும் வெளியிடப் படவில்லை. தனிப்பட்ட பயணத்தில் அவர் உள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்கள் அவர் தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மலை பிரதேசங்களில் அவர் அரசியல் தொல்லை, பத்திரிகையாளர்கள் பரபரப்பு எதுவும் இல்லாமல் சுற்றி வந்தார்.நெவர்லேண்ட் ரிசார்ட் என்ற ஓட்டலில் தங்…

  8. மாநாட்டில் பேசும் அதிபர் ஒபாமா | படம்: ஏஎப்பி ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள தங்கள் நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச மாட்டார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. 7,8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் உட்பட ஜப்பான், தென்கொரியா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பெய்ஜிங் வந்தடைந்தார். விமான நிலையத்தில் …

  9. சித்தி’ ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க ராதிகா செல்வி யைக் களமிறக்கி விட்டி ருக்கிறது தி.மு.க. இதனால் தென்காசி தொகுதி சூடாகி யிருக்கிறது. நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில்தான் அரசியல் அனல் அக்னியாகக் கொதிக்கிறது. தி.மு.க. வேட் பாளராக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நடிகர் சரத்குமாரும் போட்டியிடுவதே இதற்குக் காரணம். கருப்பசாமியின் தேர்தல் அனுபவமா? சரத்குமாரின் ஸ்டார் வேல்யுவா? எது ஜெயிக்கும்? என்பதுதான் இப்போதைய கேள்வி. சரத்குமாரும், அவருக்குத் துணையாக நடிகை ராதிகாவும் கலக்கி வருகிறார்கள். ராதிகாவின் பிரசாரம் பெண்களை சுண்டி இழுக்கிறது. இரண்டு ஸ்டார்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது, தி.மு.க. எனவே, சித்தி ராதிகாவை கவ…

    • 0 replies
    • 1.5k views
  10. காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட காயம். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வரும் 9ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 வது கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு இன்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி பேசுகையில்; பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்கள் தியாகம் போற்றுதலுக்குரியது. இவர்களது தியாகம் எப்போதும் மறக்க முடியாது. இது எதிர்கால சந்ததியினர் வரை நினைவில் கொள்ளப்படும். இந்த தாக்குதலில் ஜார்கண்ட் புதல்வன் இறந்துள்ளார். இவரது வீர தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன். மாநிலத்தின் வளர்ச்சியே எனது நோக்கம் : நான் கடந்த லோக்சபா தேர்தலில் இங்கு வந்து ஓட்டு கேட்டேன். நீங்கள் அள்ளி வழங்கினீர்கள். பா.ஜ…

  11. நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு! ஏமனில் நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். ரமலான் மாதத்தை முன்னிட்டு அந்நாட்டு தலைநகர் சனாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனுடன் பணம், உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்தனர். இந்த நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழந்ததாக ஹவுதி தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனவும் கூறப…

  12. பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல் பயங்கரவாதத்துக்கு குழந்தைகளை பலிகொடுத்த அண்டை நாடான பாகிஸ்தானின் மக்களுக்கு, ட்விட்டர் மூலம் இந்தியர்கள் தெரிவித்த ஆறுதல் நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியாகினர். தாக்குதல் தொடங்கியது முதலே ட்விட்டரில் #PeshawarAttack என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. இந்தக் கொடூரத் தாக்குதலின் தன்மை தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், ட்விட்டரில் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் இட்ட …

  13. உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்கொட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது . இந்த பேருந்து ஸ்கொட்லாந்தின் ஃபோர்த் ரோட் பாலத்தின் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக இன்வெர்கீதிங், ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்ரி டால் வரை பேருந்து சேவை இயக்கப்படுகிறது. ஸ்கொட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் இந்த பேருந்தில் முதல் பயணியாக பயணம் செய்தார். மேலும் 2025ஆம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுனர் இல்லாத ஐந்து தானியங்கி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் வாகனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பு ஓட்டுநர் மற்றும் ட…

  14. காங்கிரஸால் முட்டிக் கொள்ளும் மாறன்களும், கோபாலபுரத்தார்களும்..! கடந்த சில நாட்களாக தயாநிதி மாறன் பற்றிய செய்திகள் வெளியாகிய நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் மந்திரி சபை மாற்றத்தில் தயாநிதி நீக்கப்படுவார் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. கனிமொழி கைது, கலைஞர் டெல்லி சென்று தனது அன்பு மகளை பார்த்த நாள் வரையிலும் தயாநிதி பற்றிய செய்திகளும், அவர் மீதான விசாரணைகளும் வேகமெடுக்காத நிலையில் திடீரென்று இந்தச் செய்திகள் பறந்து வந்ததற்கான காரணங்கள் என்ன..? இதற்குப் பின்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்று நான் நினைக்கிறேன். இப்போது ஜன்பத் வீட்டுக் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசு, தயாநிதி மாறன் செய்த முறைகேடுகள் பற்றிய சி.ப…

  15. புவனேஸ்வர்: சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் சக்திவாய்ந்த அக்னி 5 ஏவுகணை ஒடிஷாவின் வீலர் தீவில் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் சார்பில் அதிநவீன ஏவுகணையாக அக்னி 5 வடிவமைக்கப்பட்டது. 50 டன் எடை கொண்ட அக்னி 5 ஏவுகணை, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.09 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக கேனிஸ்டர் எனும் எளிதில் ஏவக்கூடிய சாதனம் மூலம் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எல்லையில் இருந்து இந்த…

  16. குடியேற்றக்காரர்களை ஏற்றிவந்த படகு ஒன்று லிபிய கடலோரமாக மூழ்கியதில் குறைந்தபட்சம் 650 பேராவது நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. குடியேற்றக்காரர்கள் ஐரோப்பாவுக்கு கடல் கடக்கும் நடவடிக்கையில் மிக அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் இது என்று ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் உறுதி செய்துள்ளது. 20 கப்பல்களும், ஒரு விமானமும் பங்கெடுக்கும் மீட்பு நடவடிக்கையை இத்தாலில் ஒருங்கிணைக்கின்றது. இதுவரை 50 பேர் மாத்திரம் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மீன்பிடிப் படகில் இருந்து இன்னுமொரு சரக்கு கப்பலுக்கு ஏறுவதற்காக, அனைவரும் முண்டியடித்துக்கொண்டு படகின் ஒரு புறத்துக்கு நகர்ந்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் கூறுகின்றன. http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150419_li…

    • 0 replies
    • 273 views
  17. பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கிரிசெல்டா பிளாங்கோவாக சோஃபியா வெர்கரா நடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி." இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாகச் சொல்லப்படும் சொற்றொடர். தன்னை மற்றவர்கள் பார்க்கும் விதம் பிடிக்கவில்லை என்பதற்காக, மக்களைக் கொன்ற இரக்கமற்ற ஒருவராக கிரிசெல்டா பிளாங்கோ அறியப்படுகிறார். 1970கள் மற்றும் 80களில் மியாமியில் மிகவும் அஞ்சப்படும் பெயர்களில் ஒருவராக பிளாங்கோ விளங்கினார். புக…

  18. லண்டனில் வீட்டு வன்செயல், உளவியல் பாதிப்பு மற்றும் போதைஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பிறக்கும் குறைந்தது 2 லட்சம் குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் ஆபத்து காணப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஏனைய வயதினரிலும் பார்க்க ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இவ்வாபத்து எட்டு மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக என்.எஸ்.பி.சி.சி என்ற நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இவ்வாறான வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்கூட்டியே அரசினால் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட ஒரு இலட்சத்து 44,000 குழந்தைகள் உளவியல் பாதிப்புக்குள்ளான பெற்றோருடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஒரு இலட்சத்து 10ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளி…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குவாங்சி மாகாணத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், மேட் மெக்ராத் பதவி, சுற்றுசூழல் செய்தியாளர் 20 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் பெரிய முக்கியமான நகரங்களில் பாதி, பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் பெரியளவில் சுரண்டப்படுவதும், வேகமாக நகரமயமாக்கம் செய்யப்பட்டு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதும் பூமியின் நிலைத்தன்மையை பாதிப்பதால், நிலப்புதைவு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். சில நகரங்கள் வேகமாக பூமிக்குள் புதைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது…

  20. சாலையில் வாகனங்கள் இனி சிவப்பு விளக்கிற்காக காத்திருக்க தேவையில்லை: பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவு[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 06:51.00 மு.ப GMT ] பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸ் சாலைகளில் சைக்கிள்களில் வரும் நபர்கள் சிக்னலில் உள்ள சிவப்பு விளக்கிற்காக காத்திருக்காமல் தொடர்ந்து பயணக்கலாம் என பாரீஸ் அரசு நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.இரண்டு சக்கர மோட்டார் சைக்கள்கள் மற்றும் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையில் உள்ள சிக்னலை மீறினால், போக்குவரத்து பொலிசாருக்கு அபராதம் செலுத்துவது கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வந்தது. வாகனம் நெருக்கம் அதிகம் உள்ள பாரீஸ் சாலைகளில் இரண்டு சக்கர சைக்கிள்களில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. சைக்கிள்…

    • 0 replies
    • 644 views
  21. மிதமான சூரியப் புயல் இன்று (11) பூமியைத் தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டுக்கு பின் பூமியில் ஏற்பட்ட மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/303535

  22. உலகின் அதிவேக ரயில் சோதனை வெற்றி! உலகின் அதிவேக ரயில் சேவையை தனது தலையாய குறிக்கோளாக வைத்துள்ள ஜப்பான், மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜப்பான் பரிசோதித்துள்ளது. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மைபாரா மற்றும் கியோட்டோ நகரங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த ரயில் சோதனை மூலம் மணிக்கு 360 கிலோமீட்டர் வேகம் என்ற இலக்கை அடைய முடிந்ததாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ரயில், வரும் ஜூலை மாதத்தில் இருந்து டோக்கியோ முதல் ஒசாகா வரையான வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் மாற்றங…

  23. பட மூலாதாரம்,TAIWANESE COAST GUARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜாய் சியாங், கெல்லி என்ஜி பதவி, தைபே மற்றும் சிங்கப்பூரிலிருந்து பிபிசி செய்தியாளர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அந்த கப்பல் மூழ்கி கொண்டிருந்தது… உள்ளே இருந்தே 9 பேரும் உயிரைக் காத்துக் கொள்ள கடலில் குதித்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். அதனால், இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடி அவர்கள் கடலில் குதித்தனர். வியாழக்கிழமை மதியம், தைவானின் கடலோரப் படையினர் ஒரு குழுவை சேர்ந்த 4 பேர் மியன்மார் நாட்டு எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தனர். கப்பலின் கேப்டன் வெள்ளிக்கிழமை அன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மீதமுள்ள ந…

  24. சீன பெருஞ்சுவர், தாஜ்மஹால், அங்கோர்வாட்: 13 உலகப் பாரம்பரிய சின்னங்களின் கண்கவர் படங்கள் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் கண்கவர் படங்கள் இதோ. இந்தக் காட்சிகள் உங்கள் காலைப் பொழுதை அழகாக்கட்டும். மேலே உள்ள புக…

  25. மாநாடு தொடங்கியது Sunday, 10 February, 2008 01:54 PM . மதுரை, பிப்.10: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது அரசியல் மாநாடு மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் திரண்ட மாநாட்டில், கட்சியின் தலைவர் சரத்குமார் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. . அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முதலாவது அரசியல் மாநாடு மதுரை விரகனூரில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்காக 50 ஏக்கர் பரப்பளவில் பல்லாயிரக்கணக் கானோர் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமரும் அலங்கார மேடையானது நூறடி நீளத்திலும், 60 அட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.