உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26597 topics in this forum
-
மனித மாமிசம் சாப்பிட்ட 4 பேர் கைது வியட்நாமைச் சேர்ந்தவர்களின் கொடூரம் [27 - June - 2007] உடன் பணியாற்றிய நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளியைக் கொன்று அவரது மாமிசத்தை சாப்பிட்டு பசி தீர்த்துக் கொண்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு; அரபு நாடுகளில் ஒன்றான டோகா நாட்டில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் தொழிலாளர்கள் தங்குவதற்கான முகாம்கள் உள்ளன. அதில் ஒன்றில் வியட்நாம் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளியை கடந்த சில தினங…
-
- 10 replies
- 2k views
-
-
கல்யாண ஏக்கம் - அண்ணி மீது எண்ணெய் ஊற்றிக் கொன்ற பெண்! கல்யாணம் நடக்காத கோபத்தில், அண்ணன் மனைவி மீது ஆத்திரமடைந்த பெண், அவர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிக் கொலை செய்தார். அந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுவை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளராக கடமையாற்றி வருகின்றார். இவரது மனைவி விக்கிரவாண்டியைச் சேர்ந்த உமாதேவி. இவர் புதுவை அரசின் மாவட்ட தொழில் மையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு சரத், அஸ்வின் என்ற 2 குழந்தைகள் உள்ளன. ராஜா தனது தாயார் ஜெயலட்சுமி, தங்கை புவனேஸ்வரி ஆகியோருடன் தங்கியுள்ளார். புவனேஸ்வரிக்கு மாப்பிள்ளை அமையாமல் திருமணம் …
-
- 1 reply
- 2.8k views
-
-
வட இங்கிலாந்தில் கடும் மழை: மூவர் பலி. இங்கிலாந்தின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை அடுத்த சில நாட்களிற்கு தொடருமென அநாட்டு வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஐரோப்பாவின் தென் பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வட இங்கிலாந்து தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது இவ் அனர்த்தில் இது வரை மூவர் சிக்கி உயிரிழந்துள்ளனர் அதிகரித்து வரும் நீர் மட்டம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விடும் அபாய முள்ளதால் பிரதேச வாசிகள் பாதுகாப்பு கருதி இடம் பெயர்ந்து வருகின்றனர் . -Virakesari-
-
- 0 replies
- 729 views
-
-
வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள்: இலங்கை அமைச்சரை கொல்ல திட்டம்? ஜூன் 27, 2007 பெரியகுளம்: பெரியகுளம் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். பெரியகுளத்திற்கு வந்த இலங்கை அமைச்சரைக் கொல்ல அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை கரட்டு என்ற இடத்தில் வனப் பகுதியில் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாரிடம் விறகு பொறுக்கச் சென்றவர்கள் தெரிவித்தனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் துப்பாக்கி சகிதம் அந்தப் பகு…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மயங்கி விழுந்த பயணிகள் ஜூன் 27, 2007 கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு மயக்கமும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவுக்கு கிளம்ப இருந்தது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரிப்பேர் வேலைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து 44 பயணிகளுடன் அந்த விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்தது. அப்போது விமானத்தின் உள்ளே கடும் வெப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்க ஆரம…
-
- 0 replies
- 798 views
-
-
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பும்போது துப்பாக்கியால் சுட்டு 3 பேரைக் கொன்ற சம்பவத்தில் கைதான டெலோ போராளிக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவண்ணாமலை விரைவு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை அருகே உள்ளது தனிப்பாடி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கார கவுண்டர். கடந்த 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி இரவு நான்கு மர்ம மனிதர்கள் வந்தனர். துப்பாக்கி முனையில் பிச்சைக்கார கவுண்டர் வீட்டில், ரூ. 21 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். தப்பிய கொள்ளையர்கள், தண்டாரம்பட்டு கூட்டு ரோட்டில் வந்தபோது போலீஸார் குறுக்கிட்டனர். இதையடுத்து போலீஸாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரித்தானியாவின் பிரதமராக நாளை கோர்டன் பிறவுண் பதவியேற்கிறார் வீரகேசரி நாளேடு இங்கிலாந்து தொழிற் கட்சியின் தலைவராக கோர்டன் பிறவுண் கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொழிற் கட்சியின் முன்னாள் தலைவரும் நாளை புதன்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலக விருப்பவருமான ரொனி பிளேயர், பிரதமர் பதவிக்குரிய சகல தகுதிகளுமுடைய ஒருவராக கோர்டன் பிறவுண் விளங்குகிறார் என தெரிவித்தார். ""எமது கட்சியின் தலைவராக கடமைப் பொறுப்பேற்றுள்ள கோர்டன் பிறவுண் கடந்த 20 வருட காலத்திற்கு மேலாக எனது நண்பராக உள்ளார். விரைவில் அவர் இந்த நாட்டின் தலைவராகவும் கடமைப் பொறுப்பேற்கவுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்'' என ரொனி பிளேயர் மேலும் தெரிவித்தார். …
-
- 8 replies
- 1.7k views
-
-
கனடாவில் பாரிய சூறாவளி. கனடாவில் தென் மனிதோபா, எலி, போர்டகே லா பிரெயரி ஆகிய பிரதேசங்களைக் கடந்து சென்ற மூன்று சூறாவளி காரணமாக பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வின்னிபெக்கின் மேற்கே 35 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள எலியில் நேற்று முன்தினம் அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு வீசிய சூறாவளி காரணமாக நான்கு வீடுகளும் ஒரு மாவரைக்கும் ஆலையும் முழுமையாக அழிவுக்குள்ளாகியதுடன் ஏனைய இரு வீடுகள் மிக மோசமான சேதத்திற்குள்ளாகியுள்ளன. அத்துடன் பல கார்களும் சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.எனினும் இச்சூறாவளி காரணமாக ஏற்பட்ட மனித பாதிப்புகள் தொடர்பில் எதுவித தகவலும் தெரியவில்லையென கூறப்படுகிறது. மேலும் வீதியெங்கும் மரங்கள் சரிந்து விழுந்து கிடந…
-
- 0 replies
- 921 views
-
-
[24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துவிட்டார். வெள்ளிக்கிழமை பிற்பகல் தன்னைச் சந்தித்த தலைவர்களிடம் கலாம் இந்த முடிவை அறிவித்தார். அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலாமைச் சந்தித்தனர். இரு நாட்களுக்கு முன் தன்னைச் சந்தித்த கூட்டணித் தலைவர்களிடம் "வெற்றி வாய்ப்பு உறுதியாக இருந்தால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயார்" என்று தெரிவித்தார். போட்டி இருந்தால் களத்தில் நிற்கமாட்டேன். ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்த…
-
- 0 replies
- 693 views
-
-
[24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] -அ.ரஜீவன்- மேற்குலகில் பெரிய நிம்மதிப் பெருமூச்சு காணப்படுகின்றது. ஹமாஸ் காஸாவிற்குள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதே அதற்குக் காரணம். பாலஸ்தீனத்திற்கான புதிய அரசாங்கத்தை (மிதவாதியான) சமாதானத்தை விரும்பும் ஜனாதிபதி மமூட் அப்பாஸ் மேற்குக்கரையில் அமைத்துள்ளார். எனினும், பாலஸ்தீனியர்கள் இதனை ஏற்கவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. ஹமாஸ் அரசாங்கம் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது என்பது முக்கியமானது. மமூட் அப்பாஸினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவர் (சலாம் பயாட்) தேர்தலில் 2% வாக்குகளைப் பெற்றார். பாலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸிற்கும் பிரதமருக்கும் இஸ்ரேலின் ஆதரவுள்ளமை இரகசியமானதொன்றல்ல. ஜனவ…
-
- 0 replies
- 593 views
-
-
59 வயது, 30 ஆண்டுகளாக ரத்ததானம் திருச்சி முதியவரின் லட்சிய சாதனை ஜூன் 15, 2007 திருச்சி: திருச்சியைச் சேர்ந்த 59 வயது சீனிவாச தத்தம், கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து பெரும் சேவை புரிந்து வருகிறார். அத்தோடு பள்ளி, கல்லூரிகளும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார். உலக ரத்த கொடையாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில், திருச்சியைச் சேர்ந்த சீனிவாச தத்தம் குறித்த தகவலைத் தெரிந்து கொள்வது, ரத்ததானம் குறித்த ஆர்வம் கொண்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையும். தமிழ்நாடு ரத்த கொடையாளிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் சீனிவாச தத்தம். கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறார். இ…
-
- 6 replies
- 1.5k views
-
-
சீனாவில் பெண் குழந்தைகளை விற்பனை செய்த பெண் கைது [22 - June - 2007] சீனாவில் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளை விற்பனை செய்ததாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த ஒரு பெண்ணை செவ்வாயன்று பொலிஸார் கைது செய்தனர். சீனாவில் ஹேனன் மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரைச் சேர்ந்தவர் ஜி சியூலன் என்ற பெண். இவர் தனது கணவர், மகன் லியூ யூஜி மற்றும் மருமகள் உதவியுடன் இதுவரை 118 பெண் குழந்தைகளை விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சியில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து பெண் குழந்தைகளை வாங்கி, அந்தக் குழந்தைகளை ஹேனன், ஹூபேய் மற்றும் அன்ஹூய் மாகாணங்களில் ஜி சியூலன் விற்று விடுவார். கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச்சில், ஜி சியூலன் குடும்பத்தினர…
-
- 4 replies
- 1.2k views
-
-
10வது தேறினால் "டும்டும்' சபதம் போட்டது "73' "பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் திருமணம் செய்வேன்' என்று, "மெகா' பிடிவாதத்தில் இருக்கிறார், 38வது தடவையாக, "படையெடுத்து' இந்த ஆண்டும் தோற்றவர். இவருக்கு என்ன வயது தெரியுமா? அதிகமில்லை; 73 தான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவ சரண்; இளம் வயதில், நண்பர்களிடம் பேசும் போது, "பத்தாவது வகுப்புத் தேர்ச்சி பெற்றவுடன் தான் திருமணம் செய்வேன்' என்று, சபதம் போட்டார். நாலைந்து ஆண்டுகள் தொடர்ந்து தோல்வி அடைந்ததும், குடும்பத்தினரும், நண்பர்களும், "இந்த சபதம் வேண்டாம்; விட்டு விடு' என்று கூறிப்பார்த்தனர். ஆனால், இவரோ, விடுவதாக இல்லை! சபதத்தை மட்டுமல்ல; ஆண்டுக்கு ஆண்டு, பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதுவதையும் தான்! இப்பட…
-
- 26 replies
- 4.4k views
-
-
இராமர் பாலம் என்பது கட்டுக் கதை - மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்) அறிவியல் பார்வைக்கு முன் உடைந்து நொறுங்கும் கற்பனைக் கதைகள் ஆற்று முகத்துவாரத்தில் நீர்வரத்து குறைந்த காலங்களில் திட்டுகள் ஏற்படுவதுண்டு. இது போன்று திட்டு, ஆழம் குறைந்த கடலிலும் உருவாகின்றது. அந்த மாதிரியான ஒரு திட்டைத்தான் இராமர் பாலம் என்றும் மனிதன் கட்டினான் என்றும் கூறுகின்றனர். இந்தியாவையும் இலங்கையும் சந்திக்கும் மணல் திட்டுகள் தெற்கு, வடக்கு என இரண்டு இடத்தில் உள்ளன. தெற்கே உள்ள மணல் திட்டுகளை இராமர் கட்டினார் என்றால், வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது? ஆனாலும், இந்தச் சிக்கலை மேலோட்டமாகச் சொல்வது நன்றாக இருக்காது. அறிவியல் பூர்வமாகவும் புவியி…
-
- 4 replies
- 2.4k views
-
-
மன நலம் பாதித்தவருக்கு அவமரியாதை: விமான நிலையம் முன்பு மனித சங்கிலி ஜூன் 20, 2007 சென்னை: செரபரல் பால்சி என்கிற மூளை வளர்ச்சி குன்றிய இளைஞரை தனியாக விமானத்தில் பயணம் செய்ய விடாமல் அவமரியாதை செய்து அவரை விமான நிலையத்தை விட்டு விரட்டிய தனியார் விமான நிறுவனத்தின் அநாகரீக செயலைக் கண்டித்து சென்னை விமான நிலையம் முன்பு உடல் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். சென்னையைச் சேர்ந்த ராஜீவ் ராஜன் மூளை வளர்ச்சி குன்றியவர் ஆவார். டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இவர் ஏர் சஹாரா விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். சம்பவத்தன்று விமான நிலையத்திற்கு தனியாக சக்கர நாற்காலியில் வந்திருந்தார் ராஜீவ் …
-
- 2 replies
- 1.1k views
-
-
கியூப முதற் பெண்மணி. முதலாளித்துவ வல்லாதிக்கத்துக்கு எதிரான.. புரட்சிகர விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கும் கியூபாவின்.. முதற் பெண்மணி Vilma Espin தனது 77வது வயதில் இனங்காணப்படாத நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி காலமானார். இப்பெண்மணி கியூப அதிபர் பிடல் காஸ்ரோவின் சகோதரும், கியூபாவின் தற்காலிக அதிபராகவும் உள்ள Raul Castro துணைவியுமாவார். கியூபப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பெண்மணி மட்டுமன்றி இவர் கியூபப் பெண்களில் இரசாயனப் பொறியியல் பட்டம் பெற்ற முதற் பெண்மணியுமாவார். கியூப விடுதலைப் போராட்டத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக கியூபாவின் முதற் பெண்மணி தனது தேசத்தின் விடுதலைக்காக களத்தில் களமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கியூப முதற் பெ…
-
- 7 replies
- 1.6k views
-
-
நண்பர்களே! இந்தியாவில் 100 கோடி மக்கள், அங்கே ஒரு சிறு கிராமத்தில் இப்படி நடைபெறுகின்றது. நம்ப முடிகிறதா?? முதலில் இதை பாருங்கள்! யஸ்ட் 6 கோடி தமிழ் கதைக்கும் மாநிலத்திலேயே இப்படியெண்டால், 60 கோடி மக்கள் பேசும் ஹிந்தியில் எத்தனை அகோரங்கள், நினைத்து பார்க்க முடியாத அசிங்கள் நடைபெற்று இருக்கின்றன, நடைபெறுகின்றன என்பதை சிந்தித்துப்பாருங்கள். இப்பொழுதாவது புரிகிறதா? எதற்காக இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் (இலங்கை அரசாங்கம் குண்டு போட்டு கொல்லும் பொழுதும், கொழும்பில் இருந்து இரவோடு இரவாக தமிழர்களை வெளியேற்றும் பொழுதும்) கண்டனங்களையோ, எதிர்ப்புகளையோ வெளியிடுவதில்லை என்று? முற்று முழுதாக சுதந்திரம் அடைந்த தங்கள் நாட்டில் நடைபெறுவதைவிடவா வேறு நாட்டில் நடைபெ…
-
- 14 replies
- 3.1k views
-
-
பகல் சாப்பாடு பாத்ரும் அருகில் - ஒரு விபரீத பள்ளியின் விசித்திர தண்டணை அந்தப் பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் தண்டனை என்ன தெரியுமா? கழிப்பறைக்குப் பக்கத்தில் பந்தி போட்டது போல உட்கார்ந்து அங்குதான் பகலுணவைச் சாப்பிட வேண்டும் சென்னை வியாசர்பாடியில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி மீதுதான் இப்படி ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி ஒரு தண்டனையா? அதிர்ந்துபோன நாம் இந்த வித்தியாசமான புகார் பற்றி விசாரிக்க வியாசர்பாடிக்கு விரைந்தோம். பள்ளி மீது விபரீத குற்றச்சாட்டை வீசியிருக்கும் ரவியைச் சந்தித்தோம். இது பற்றி மனித உரிமை ஆணையம், மாநகராட்சி போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் ஆகியோரிடம் புகார் கொடுத்திருப்பதாகக் கூறிய ரவி, நம்மிடம் பேசத் தொடங்கினார். ‘‘என் மகன…
-
- 2 replies
- 2.7k views
-
-
.சென்னையில் நடந்த "குறள்' வழி திருமணம் அமைச்சர்கள், அறிஞர்கள் வாழ்த்து சென்னை :சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் தனது மகன் திருமணத்தை திருக்குறள் வழியில் நடத்தினார். அறிஞர் பெருமக்கள் கூடி திருக்குறள் வாசிக்க, மணமக்களும் திருக்குறள் வாசித்து இல்லற வாழ்வைத் துவக்கினர்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராக இருப்பவர் மோகனராசு. இவரது மகன் இளங்கோ. டாக்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் டாக்டர் அனிதாவுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ஆறு அறிஞர்கள், எந்தவித நுõலும் குறிப்பும் கையில் இன்றி ஆயிரத்து 330 குறள்களையும் ஒப்புவித்து அதற்கு விளக்கமும் அளித்தனர். வரவேற்புரை ஆற்றியவர் முதல் நன்றியுரை தெரி…
-
- 2 replies
- 6.1k views
-
-
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாம் நிறுத்தப்பட வேண்டும். அவருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான 3வது அணி கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லி சென்று அவரை சந்தித்து மீண்டும் போட்டியிடுமாறு கோரப் போவதாகவும், அவரையே ஆதரிக்கப் போவதாகவும் இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. தேசிய அளவில் உருவாகியுள்ள 3வது கூட்டணியின் 2வது கூட்டம் இன்று சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதில், உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாப…
-
- 11 replies
- 1.7k views
-
-
காதலர்கள் பிரிந்தால் ஜீவனாம்சம் புதிய சட்டம் கொண்டு வர பிரிட்டன் முடிவு லண்டன் : திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வருபவர்கள் பிரிந்து செல்ல நேரிட்டால், ஜீவனாம்சம் தர வேண்டும்; வீட்டின் உரிமையை பங்கு போட்டு கொள்ள வேண்டும் ஆகிய விஷயங்கள் அடங்கிய புதிய சட்டத்தை கொண்டு வர பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், கணவன் மனைவி என்ற பாரம்பரியமே அடிபட்டு போய் விடும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல வாழும் காதலர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிரிட்டனில் இது போல் 20 லட்சம் ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர். கணவன், மனைவி விவாகரத்து செய்து கொண்டால், மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது …
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் குண்டுவீச்சு; ஒருவர் காயம்-படகு சேதம் ஜூன் 17, 2007 ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். ஒரு விசைப் படகு சேதமடைந்தது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நிலவி வந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சமீப காலமாக இந்த தாக்குதல் குறைந்துள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 784 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் …
-
- 3 replies
- 1.2k views
-
-
மணப்பெண்ணை தேடித்தேடி அலுத்துப் போன சென்னை மாப்பிள்ளையும் திருமண கனவோடு காத்திருந்த திருவாரூர் பெண்ணும் தடைகளை மீறி ஒன்று சேர்ந்தனர். சென்னையை அடுத்த நங்கநல்லுõர், தில்லைகங்கா நகரை சேர்ந்த ராமநாதனின் மகன் பாலாஜி(38). வடபழனியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக உள்ளார். பத்து ஆண்டுகளாக இவருக்கு பெண் பார்த்து வந்தனர். பெண் அமைந்தபாடில்லை.வெறுத்துப் போன பாலாஜி, தானே மணமகளை தேடினார். திருவாரூரை சேர்ந்த பத்மநாதனின் மகள் ஹேமலதா (37)க்கு வரன் பார்ப்பது அறிந்து அங்கு சென்றார். பாலாஜி போலவே ஹேமலதாவுக்கும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைத்து போட வேண்டும் என்பதற்காகவே ஹேமலதாவின் திருமணத்தை அவரின் சகோதரர்கள் தள்ளிக் கொண்டே போனதாக கூறப்ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
மகாத்மா காந்தியின் பேரன் மர்ம மரணம் தேசப் பிதா மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் ராமச்சந்திர காந்தி(70) டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகாத்மாவின் பேரன் ராமச்சந்திரா காந்தி, தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார். தத்துவவியல் பேராசிரியரான காந்தி, சிறந்த எழுத்தாளரும் ஆவார். தனது இல்லத்தில் வசித்ததை விட டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில்தான் தனது நாட்களை அதிகம் கழித்துள்ளார் காந்தி. அந்த மையத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டு வந்தார். மையத்தின் ஏதாவது ஒரு பகுதியில் காந்தியைத் தவறாமல் காண முடியும். ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எழுதுவதையோ அல்லது ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருப்ப…
-
- 6 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள் [10 - June - 2007] நியூயோர்க், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரித்ததாக கட்டுரை வெளியாகி இருந்தது அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஸ்டப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரைக்காக வரையப்பட்ட சித்திரத்தில் இந்து மத கடவுளான பிள்ளையார் ஒரு மதுபான போத்தலை ஒவ்வொரு கையிலும் வைத்து இருப்பதுபோல வரையப்பட்டு இருந்தது. இன்னொரு படத்தில் அனுமானை ஆபாசமாக வரைந்து இருந்தனர். இந்தப் படங்களை அந்த பத்திரிகைக்காக ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியர் என்பவர் வரைந்திருந்தார். இதை பார்த்ததும் அமெரிக்காவ…
-
- 31 replies
- 6.7k views
-