Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 01 JUL, 2025 | 12:53 PM முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கருத்தோவியங்களிற்கு எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய கலைஞர்களை கைதுசெய்துள்ளனர். அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான இந்த கருத்தோவியத்தில் குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது. வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷ…

  2. 60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்! தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், எனது பிரதிநிதிக…

  3. அமெரிக்காவில் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் பாதையில் ஆபத்து விளைவிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கும் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம்(FAA) கூறியுள்ளது. அந்த அமைப்பின் சில செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாலும் தேசிய விமான போக்குவரத்து கட்டமைப்பின் செயல்பாடுகள் குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே இருப்பதாக எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது- தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு வி…

  4. விகாஸ் பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த பல கூட்டங்களைப் போலவே இந்த ஆண்டின் "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடும் மெய்நிகர் வடிவிலேயே நடந்தது. குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இந்த 4 நாடுகளின் தலைவர்கள் ஆன்லைன் மூலம் இணைந்தார்கள். நூறு கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை ஆசிய நாடுகளுக்கு வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது. …

  5. ஈரானின் அணு ஆயுதம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை! ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) எச்சரித்துள்ளார். நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் முக்கியமான விவாதங்களுக்காக அவர் தெஹ்ரானுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வந்துள்ளது. பிரான்ஸ் செய்திச் சேவையான லு மொண்டேவிடம் பேசும் போது க்ரோஸி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்துடன் அதன் இணக்கத்தை கண்காணிக்கும் பணியை…

  6. தப்பான தீர்மானத்தால் தலைகீழாக மாறிய தென்கொரியா! தென் கொரியாவின் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி, ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்யத் தவறியதால் மற்றொரு திருப்பத்தை வெள்ளிக்கிழமை (03) கண்டது. கடந்த டிசம்பர் தொடக்கத்தில் யூனின் குறுகிய கால இராணுவ சட்ட அறிவிப்பு தொடர்பாக அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர் – ஆனால் அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவுடன் மோதலில் பாதி நாள் செலவிட்டனர். இது முன்னோடியில்லாத சில வாரங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் யூனை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது, பின்னர் அவருக்குப் பிறகு செயல் ஜனாதிபதியாக பதவியேற்க வழிவகுத்தது. கைது…

  7. வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால்... தனது பொறுப்பை செய்ய தவறும் ஐ.நா : ஜி4 நாடுகள் குற்றச்சாட்டு! வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூர்த்தி செய்யவில்லை என இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து ஐ.நா சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் இந்தியா, ஜெர்மனி, பிரேஸில், ஜப்பான் உள்ளிட்ட ஜி4 நாடுகள் சார்பில், ஐ.நாவுக்கான ஜப்பான் தூதா் கிமிஹிரோ இஷிகானே மேற்படி குற்றசாட்டினை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ” வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்…

  8. குவைத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 04:33 PM குவைத்தில் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவந்த நிலையிலும், அரசு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இது குறித்து குவைத் அரசுக்குச் சொந்தமான 'குனா' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, பல்வேறு குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் குவைத் மத்திய சிறைச்சாலையில் நேற்று (16) தூக்கிலிடப்பட்டனா். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவா்கள…

  9. வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் ஒரு முக்கிய ஆளும் கட்சிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின், 8ஆவது மத்திய குழுவின் 4ஆவது முழுமையான கூட்டம் திங்கட்கிழமை கூட்டப்பட்டது. தொற்றுநோய் எதிர்ப்பு முடக்கநிலை, அணு ஆயுதத் திட்டம் மற்றும் இயற்கை பேரழிவுகள் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை வட கொரியா எதிர்கொள்ளும் போது கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டம் நடக்கின்றது. இந்த வார சந்திப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், 2019இல், ஒரு முழுமையான கூட்டம் நான்கு ந…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் எழுதியவர், மேட்லைன் ஹால்பர்ட் பதவி, பிபிசி செய்தி, நியூயார்க் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஆஃப்கானிஸ்தான் நாட்டவர் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது இரானில் உருவான சதித்திட்டம் என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த, 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. டிரம்பைக் கொல்ல 'திட்டமிட்டதாக’ ஃபர்ஹாத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷகேரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இரானில் இரு…

  11. காபூல் விமான நிலையத்தில்... 40 பேர் உயிரிழந்ததாக, தலிபான்கள் அறிவிப்பு காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். விமான சக்கரங்களில் சிக்கியும் விமானத்தில் இருந்து கீழே விழுந்தும் பலர் உயிரிழந்த காணொலி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே, காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தலிபான் தளபதி ஒருவர் தெரிவித்தார். வெளிநாடு செல்வது குறித்த போலி வதந்திகளால் மக்கள் ஏமாறக்கூடாது என்றும், விமான நிலையத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். நாட…

  12. மத்திய கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ நூற்றுக்கணக்கான மக்களை தங்களது வீடுகளில் இருந்து வெளியேறச் செய்தது. லேக் இசபெல்லா என்ற மலை நகரத்தில் இருந்த 50 முதல் 60 கட்டிடங்கள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நெருப்பு பெரிய அளவில் வளர்ந்ததால், ஆயிரக்கணக்காண வீடுகள் ஆபத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது தீயணைப்பு வீரர்கள் தாங்கள் தீயை கட்டுப்படுத்துவதில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் மேற்கு அமெரிக்காவில் சூடான மற்றும் வறண்ட வானிலை தான் இது போன்ற தீ பரவிய பல சம்பவங்களைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=160148&category=WorldNews&language=tamil

  13. தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சிம்கார்டு வழங்க பரிசீலனை தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள், ஒரு சிறப்பு சிம் கார்டை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வர அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் அதிகாரிகள் வெளிநாட்டு பயணிகளின் அலைபேசி, இயக்கத்தில் இல்லாத நேரத்திலும் அதை கண்காணிக்க முடியும். கோப்புப்படம் தாய்லாந்தின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுத் துறை, இந்த நடவடிக்கையை கொள்கையளவில் அங்கீகரித்துள்ளது. இது தனிநபர்களின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்ற கூற்றை அது மறுத்துள்ளது. தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த திட்டம் குற்ற நடவடிக்கையை தடுக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தாய்…

  14. கனடிய அரசாங்கம் இயற்கை பேரழிவு மதிப்பீட்டு குழு ஒன்றை பூகம்பத்தினால் பாதிக்கப்பட் நேபாலிற்கு அனுப்புவதோடு 5-மில்லியன் டொலர்களை நிவாரண நிதியாகவும் வழங்குவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றொப் நிக்கல்சனின் காரியாலயத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 7.8 ரிக்டர் பூகம்பத்தினால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை 2,500ற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் 5-மில்லியன் டொலர்கள் பங்களிப்பு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உணவு, குடி தண்ணீர், தங்குமிடம், உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் போன்றனவற்றை வழங்க உதவும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் கிறிஸ்ரியன் பரடிஸ் கூறினார். மேலும் அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் உயிர்-காக்கும் த…

    • 0 replies
    • 212 views
  15. தாய்வானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் மதியம் 2:44 மணிக்கு (06:44 GMT) டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஒரு கடை இடிந்து விழுந்தது . மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. கிழக்கு தாய்வானில் உள்ள டோங்லி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடி…

  16. தாயகம் திரும்பும் ஷியா பிரிவு இளைஞர்கள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து மாயம்,யுக்ரேனில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷிய நிருபர் உயிருடன் வந்ததால் கொண்டாட்டம் - போலி நாடகத்தை நடத்தியதாக ஆளும் அரசு மீது அதிருப்தியாளர்கள் விமர்சனம்,வங்கதேச எல்லை முகாம்களில் ரோஹிஞ்சா சிறார்களுடன் பழகிய அனுபவங்கள் குறித்து பிபிசியிடம் நடிகை ப்ரியங்கா சோப்ரா பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. Published By: RAJEEBAN 15 MAY, 2023 | 03:05 PM ரஸ்யாவிற்கு எதிராக உக்ரைன் பதில் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் பிரிட்டன் ஸ்டோர்ம் சடோ என்ற அதிநவீன ஏவுகணையை உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. பிரிட்டன் உக்ரைனிற்கு ஸ்டோர்ம் சடோ அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பதில் தாக்குதலிற்கு முன்னதாக உக்ரைனின் நீண்ட தூரம் தாக்கும் திறனை அதிகரித்துள்ளது. ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மைக்கு எதிராக உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஏவுகணை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் பென்வலெஸ் தெரிவித்துள்ளார். துல்லியமாக தாக்கும் திறன் உள்ள நீண்டதூர குறுஸ…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், அலெக்ஸ் பாய்ட் பதவி, பிபிசி செய்தி அமெரிக்காவில், ஈ.கோலை (E. Coli.) தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள உணவுப் பொருள் விற்பனையகங்களில் விற்கப்படும் ஆர்கானிக் மற்றும் பேபி கேரட்டுகளை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈ.கோலை தொற்று பாதிப்பால் இதுவரை, 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 18 மாகாணங்களில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. டிரேடர் ஜோஸ், ஹோல் ஃபுட்ஸ் 365, டார்கெட்ஸ் குட் & கேதர், வால்மார்ட், வெக்மேன்ஸ் …

  19. ட்ரம்ப் நிர்வாக வெளிநாட்டு உதவி; கூட்டாட்சி நீதிவானின் உத்தரவை இடைநிறுத்தும் உயர் நீதிமன்றின் தீர்ப்பு! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், வெளிநாட்டு உதவி நிதியை ஒப்பந்ததாரர்களுக்கும் மானியம் பெறுபவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற கூட்டாட்சி நீதிபதியின் உத்தரவை இடைநிறுத்தும் அறிவிப்பை அமெரிக்க உயர் நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் புதன்கிழமை (26) வெளியிட்டார். புதன்கிழமை இரவு 11:59 வரை காலக்கெடு விதித்த வொஷிங்டனை தளமாகக் கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி அமீர் அலியின் உத்தரவை நிறுத்தி வைத்து ராபர்ட்ஸ் இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். நிர்வாகத் தடை என அழைக்கப்படும் இந்த உத்தரவுக்கு ராபர்ட்ஸ் எந்த காரணத்தையும் வழங்கவில்லை. இது அமீர் அலியின் தீர்ப்பைத் தடுக்க நிர்வ…

  20. பட மூலாதாரம்,INSTAGRAM/REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர். ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும் இவான்கோ டிரம்ப் ஆகியோர் வியாழன் மற்றும் வெள்ளியன்று வெனிஸின் தெருக்களிலும் படகுகளிலும் காணப்பட்ட பிரபலங்களில் ஒரு சிலர் ஆவர். இந்த நிகழ்வுக்கு எதிராக சுற்றுலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் தொடங்கி காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. திர…

  21. மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:- பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்றலிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன், மற…

  22. ஜேம்ஸ் கல்லஹர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. கானா, கென்யா மற்றும் மலாவி ஆகி…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி நியூஸ் அரபிக் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன. தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உதாரணமாக, மொசாட் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப…

  24. இன்றைய (21/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு; பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஞாயிறன்று திட்டமிட்டபடி நடக்குமென பிரதமர் அறிவிப்பு. * அல்சைமர்ஸ் உள்ளிட்ட மூளையைத் தாக்கும் மோசமான நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு; மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற முடியுமென நம்பிக்கை. * கனடா கடலோரம் கரையொதுங்கியிருக்கும் மிகப்பெரிய பனிப்பாறையால் சுற்றுலாப் பயணிகள் குதூகலம்; ஆனால் மீனவர்களோ நெருக்கடியில். என்ன காரணம்?

  25. ஆப்கானில் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும் - தலிபான் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறை முடிவடைந்து விட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அதன்படி "இஸ்லாமிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கான ஆயத்தங்கள் முடிந்துவிட்டன, எனினும் தொழில்நுட்ப சிக்கல்கள் எஞ்சியுள்ளதாக" முஜாஹித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும். இருப்பினும் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் அப்துல் கனி பரதர் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவாரா என்பதை அந்த செய்தியில் தலிபான் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு, தலிபான்கள் அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.