Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லூவா அருங்காட்சியகம் கட்டுரை தகவல் இயன் ஐக்மேன் ரேசல் ஹாகன் 20 அக்டோபர் 2025, 04:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர். சினிமா பாணியில் நடந்தேறியுள்ள இந்த கொள்ளை பிரான்ஸையே உலுக்கியுள்ளத…

  2. ஆப்கானிஸ்தானில் இருந்து... இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை, தனது படைகளை ஆப்கானில் வைத்திருக்க அமெரிக்கா முடிவு ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை அங்கு வைத்திருக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, தனது முடிவு சரியானதுதான் என்றும் குழப்பம் இல்லாமல் படைகளை திரும்பப் பெறும் சூழல் இல்லை என்றும் விளக்கமளித்தார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால்தான் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் யுத்தத்தை கைவிட்டதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார். https://athavannews.com/2021/1235135

  3. ரியாத் மீது ஏவுகணை செலுத்திய படங்களை வெளியிட்டது ஹுதி கிளர்ச்சிக் குழு; இரானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கடத்தப்படும் போலி மருந்துகளைத் தடுக்க இன்டர்போல் உதவியுடன் நைஜீரியா நடவடிக்கை ஸ்விட்சர்லாந்தில் உலகின் செங்குத்தான மலைப் பகுதியில், பரவசப்படுத்தும் ரோப் கார் பயணம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  4. Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 12:41 PM சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் காசாவிற்கு கடல்வழியாக செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இஸ்ரேல் முறியடித்துள்ள அதேவேளை காசா முற்றுகையை உடைக்கும் நோக்கில் சுமார் 1500 பேர் கொண்ட வாகனப்பேரணியொன்று அல்ஜீரியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. அல்ஜீரியா துனிசியாவை சேர்ந்த 1500க்கும் அதிகமான பாலஸ்தீன ஆதரவாளர்கள் வாகனங்களுடன் லிபியா சென்றடைந்துள்ளனர். அல்ஜீரியாவிலிருந்து புறப்பட்ட இவர்கள் துனிசியாவிற்கு சென்ற பின்னர் அங்கிருந்து லிபியாவை சென்றடைந்துள்ளனர். இஸ்ரேலின் மனிதாபிமான முற்றுகைக்கு சவால் விடுக்கும் நோக்கில் காசவை சென்றடைவதே இவர்களது திட்டம். லிபியாவின் ஜவியா நகரை சென்றடைந்துள்ள இவர்கள் எகிப்து ஊடாக ரவா எல்லையை சென்றடைய திட்டமிட…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் …

  6. இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றாா் நெதன்யாகு By DIGITAL DESK 2 30 DEC, 2022 | 09:27 AM இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6ஆவது முறையாக வியாழக்கிழமை (டிச.29) பொறுப்பேற்றாா். 73 வயதாகும் அவா், நாட்டில் மிக நீண்ட காலமாக பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளாா். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் 4-ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான…

  7. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காஸா அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன. காஸாவில் இரண்டு ஆண்டுகளாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் மூலம் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனவும், இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து காஸாவிலும் இஸ்ரேலிலும் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடின…

  8. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிறுவனத்தினை இலக்குவைத்து சைபர் தாக்குதல்-10மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவு பறிபோயிருக்கலாம் என அச்சம் By RAJEEBAN 26 SEP, 2022 | 12:49 PM ஒப்டஸ் நிறுவனத்தின் கணிணி வலையமைப்பை இலக்குவைத்து சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களை இனம் காண்பதற்காக வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாக அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய டெலிகொம் நிறுவனமான ஒப்டஸ் தனது கணிணி வலையமைப்பை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்கள் காரணமாக தற்போதைய முன்னாள் வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகள் களவாடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. எண்ணிக்கை குறி…

  9. இன்றைய நிகழ்ச்சியில்.. *மோசுல் புறநகர்ப்பகுதில் ஐ எஸ் அமைப்பு உருவாக்கிய சுரங்க பதுங்கு குழிகள். *அமெரிக்கத் தேர்தலில் ஆசிய வாக்காளர்களின் நிலைப்பாடு குறித்த காணொளி. *மூன்று நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான விக்டோரியா ஏரி அதே மீனவர்களை பலி கொள்வதன் மர்மத்தை விளக்கும் செய்தித் தொகுப்பு ஆகியவை குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.

  10. லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் பலி கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும். இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந் நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால், லிபியாவிலிருந்து ஐரோப்பிய நடுகள…

  11. 02 MAY, 2025 | 06:21 PM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிவந்த மைக் வோல்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். யேமனில் ஹௌத்தி கிளா்ச்சியாளர்களின் தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடா்பாக அவரும், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னா் மேற்கொண்ட தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனா். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டாா். இதனால் மிகுந்த ரக…

  12. நாளிதழ்களில் இன்று: ஆதார் ரகசியங்களை பாதுகாக்க வருகிறது புதிய 16 இலக்க எண் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதார் எண்களின் ரகசியம் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை எனும் செய்தி வெளியாகிவரும் நிலையில், ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கும் நோக்கில் மெய்நிகர் பாதுகாப்பு அம்சம் ஒன்றை யுஐடிஏஐ அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி, ஆதார் எண் தேவைப்படும் இடங்களில், ஆதார் பயன்பாட்டாளர்கள் ஒரு 16 இலக்க தற்காலிக, எண்ணை ஆதார் இணையதளம், சேவை மையங்கள் அல்லது செல்பேசி செயலி ஆகியவற்றின்மூலம் உருவாக்கி, ஆதார் எண்களுக்கு…

  13. தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு. “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி என்று அழைக்கப்படும் சர்ச்சைக் குறிய உயிரியல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் நிதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உத்தரவொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று (05) பிறப்பித்தார். குறித்த ஆராய்ச்சியானது தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொற்றுக் கிருமிகள் எவ்வாறு அதிகமாக பரவக்கூடும் அல்லது மக்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்பதை இந்த ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய…

  14. 500 பில்லியன் டொலர் மதிப்பிலான... சேதத்தை, ரஷ்யா விளைவித்துள்ளது – உக்ரைன் ரஷ்யாவின்படையெலுப்பை தொடர்ந்து தாம் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் போருக்குப் பின்னர் உக்ரைனை மீட்டெடுப்பதற்கு ரஷ்யா பணம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனும் நட்பு நாடுகளிடம் இருந்து நிதி கிடைக்கும் என்றும் வெளிநாட்டில் ரஷ்யாவின் சொத்துக்களை கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கியூவ் நகருக்கு விஜயம் செய்த செக் குடியரசு, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று அண்டை நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை நான்காவது சுற்று சமாதானப் பேச்சுவார்த…

  15. இத்தாலியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 20 பேர் பலி தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பாரியின் வடமேற்கு நகரான ஆண்டிரியாவில் அருகில் உள்ள ஒற்றை தண்டவாளத்தில் இந்த இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டன. மீட்பு பணியாளர்கள், சிக்கியுள்ள பயணிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என கொரோட்டோ நகரின் மேயர் மாசிமோ மாசிலி தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் மருத்துவமனைகள் ரத்த தானம் செய்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, முன் பெட்டிகள் முழுமையாக அழிந்துள்ளதாகவும், குறைந்தது…

  16. சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ் சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மனிஷ் திவாரி, இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், “ நேபாளத்தின் புதிய அரசாங்கம் இந்தியாவைச் சார்ந்ததாக இல்லை. சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு கவலையளிக்கின்ற விடயமாக உள்ளது. இந்தியாவுக்குத் தெரியாமல், சீனாவுடன் மாலைதீவு சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொண்டுள்ளது. டோக்லமில், சீனா நிரந்தரமான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நரேந்திர மோடி அர…

  17. தப்பான தீர்மானத்தால் தலைகீழாக மாறிய தென்கொரியா! தென் கொரியாவின் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி, ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்யத் தவறியதால் மற்றொரு திருப்பத்தை வெள்ளிக்கிழமை (03) கண்டது. கடந்த டிசம்பர் தொடக்கத்தில் யூனின் குறுகிய கால இராணுவ சட்ட அறிவிப்பு தொடர்பாக அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர் – ஆனால் அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவுடன் மோதலில் பாதி நாள் செலவிட்டனர். இது முன்னோடியில்லாத சில வாரங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் யூனை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது, பின்னர் அவருக்குப் பிறகு செயல் ஜனாதிபதியாக பதவியேற்க வழிவகுத்தது. கைது…

  18. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, சர்வதேச ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தாம் கைது வாரண்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற செய்திக்கு, ஒரு காணொளி மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. “இது வரலாறு காணாத தார்மீக மீறல்" என்று கூறிய அவர், “இரண்டாம் உலகப்போர் காலத்து யூத இனஅழிப்பிற்கு பிறகு யூத மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை அரங்கேற்றிய, இனப் படுகொலைகளை ச…

  19. சிரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயன குண்டுகள் வீசப்பட்டு பொதுமக்கள் 1400 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமானது. பின்னர் ரஷ்யா-அமெரிக்க கூட்டு உடன்படிக்கைபடி, சிரியாவிலுள்ள இரசாயன ஆயுதங்களை அகற்றும் பணியை ஐ.நா. சர்வதேச இரசாயண தடுப்பு அமைப்பு மேற்கொண்டது. இதன், முதல் கட்டமாக சிரியாவின் ரசாயன ஆயுதங்களை ஏற்றிய டேனிஷ் நாட்டு கப்பல், நேற்று லடாக்கிய துறைமுகத்தில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டு சென்றது. அக்கப்பலுக்கு ரஷ்ய மற்றும் சீனா கப்பல்கள் பாதுகாப்பாக செல்கின்றன. இந்த மிகமோசமான இரசாயன ஆயுதங்கள் இத்தாலியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலுக்கு மாற்றப்படும். அங்கு, டைட்டேனியம் தொட்டியில் வைத்து ப…

  20. இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் நகரில் திங்களன்று தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்டார். * பல்லாயிரக்கணக்கான பார்வை இழந்தவர்களுக்கு ஒளி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இயந்திரக் கண்கள். * கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களால் பிரிட்டனின் அஞ்சல் சேவையில் வேலைப்பளு அதிகரித்துள்ளது.

  21. ஈராக் தலைநகர் பாக்தாதிலும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் இன்று 17 கார் குண்டுகள் வெடித்ததில் 55 பேர் கொல்லப்பட்டனர். 168 பேர் காயமடைந்தனர். பாக்தாதிலும், ஷியா பிரிவு மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இன்று 17 கார் குண்டுகள் வெடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு மணிநேரத்துக்குள் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இவற்றில் மிகவும் சக்திவாய்ந்த 2 குண்டுகள் பாக்தாதின் கிழக்குப்பகுதி புறநகரான சதர் நகரில் வெடித்தன. இத்தாக்குதலில் 9 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் 33 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, ஹரியா புறநகர்ப் பகுதியில் 2 தனித்தனி கார் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.…

  22. மனூஸ் தீவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகள் முகாம் இன்று மூடப்படுகிறது! அதிலிருக்கும் அறுநூற்றுக்கும் அதிகமான அகதிகள் வெளியேற மறுத்து உள்ளிருப்பு போராட்டம்!! சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடும் உணவுத்தட்டுப்பாடு! மோசமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்!! மற்றும் கலையலங்காரமாகும் தலையலங்காரம்! வித்தியாசமான சிகையலங்காரத்தால் உலகை கவர்ந்த ஐவரி கோஸ்ட் இளம்பெண்ணின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி

  23. அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா! வட கொரியாவில் இருந்து அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு திறன் உள்ள ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை அந்நாட்டின் வடகிழக்கு பகுதி முழுவதையும் கடந்து ஜப்பானின் ஹகாய்டோ தீவின் வடக்குப் பகுதியில் விழுந்தது என்றும் இந்த ஏவுகணை நிலப்பரப்பில் இருந்து அதிகபட்சமாக 1,000 கி.மீ. மேல்நோக்கி சுமார் 6,000 முதல் 6,100 கி.மீ. தொலைவுக்கு பறந்துள்ளது என்றும் தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை உயரமான பகுதியில் இருந்து ஏவப்ப…

  24. தன்னை அவமதித்தாக தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக எர்துவான் அறிவிப்பு அதிபரை அவமதித்தாக தனிநபர்கள் பலர் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழங்குகளையும் நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெறுவதாக துருக்கி அதிபர் அறிவிப்பு தன்னை அவமதித்ததாக தனிநபர்கள் பலருக்கு எதிராக தொடுக்கப்பட்ட எல்லா வழக்குகளையும் நல்லெண்ண அடிப்படையில், வாபஸ் பெற்றுகொள்ளவதாக துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் அறிவித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிபரை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஏறக்குறைய 2000 குற்றச்சாட்டுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்றன. தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்பட்டதாக அவர் கூறிய 200-க்கும் மேலானோருக்கு, அங்காராவில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பேசி…

  25. ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு ஜெட்விமானங்கள் துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஹெய்ட்டியில் அதிகரிக்கும் காடையர் குழுக்களின் வன்முறைகளின் மத்தியில் அந்த நாடு விமானப்போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஹெய்ட்டி தலைநகர் போட் ஒவ் பிரின்சில் தரையிறங்கிக்கொண்டிருந்த ஸ்பிரிட் எயர்லைன்ஸ் விமானத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது, அதன் பணியாளர் ஒருவர் சிறியகாயங்களிற்குள்ளானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த விமானம் அங்கு தரையிறங்காமல் டொமினிக் குடியரசின் சான்டியாகோவில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை சோதனையிட்டவேளை துப்பாக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.