Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐரோப்பாவை பிளவுபடுத்த வேண்டாம் அமெரிக்காவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சிக்கக்கூடாது என்று ஜேர்மனி எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டெய்ன் மெய்ர் நிருபர்களிடம் கூறி யிருப்பதாவது: பனிப்போர் முடிந்து போய் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது ஐரோப்பாவில் புதிய ஆயுதப் போட்டியை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஆயுத குறைப்பு தான் இப்போது நம் முன்னால் உள்ள முன்னுரிமை திட்டம் ஆகும். ஆயுதக் குவிப்பு நமது முன்னுரிமை திட்டம் அல்ல. ஐரோப்பாவில் ஆயுதப் போட்டி நடக்கக்கூடாது. ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு திட்டத்தை ஐரோப்பாவில் சில இடங்களில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐரோப்…

  2. ராஞ்சி: வங்கதேசத்திடம் இந்திய அணி கேவலமாக ஆடி தோல்வியுற்றதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணியின் வீட்டை 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தாக்கி சேதப்படுத்தினர். உலகக் கோப்பைப் போட்டியில் சாதாரண வங்கதேச அணியிடம் இந்தியா தோற்றுப் போனதால் இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. ஷேவாக், டிராவிட், சச்சின், டோணி உள்ளிட்ட முன்னணி வீரர்களின் போஸ்டர்களையும், கொடும்பாவிகளையும் எரித்து ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள விக்கெட் கீப்பர் டோணியின் வீட்டை ரசிகர் கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தியது. டோனி தனது பெற்றோருடன் …

  3. .சுற்றுலாப் பயணிகளை கவர மெழுகில் "மெகா' சிற்பம் ஊட்டி: ஊட்டியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், மெழுகில் தத்ரூபமாக பல்வேறு சிலைகளை வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.ஊட்டி குன்னுõர் சாலையில் "வேக்ஸ் மியூசியம்' என்ற பெயரில் மெழுகு சிற்பங்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீஜி பாஸ்கரன் மெழுகு சிலை கண்காட்சியை துவக்கியுள்ளார்.இங்கு ஜனாதிபதி அப்துல் கலாம், மகாத்மா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா, இயேசு கிறிஸ்து, மராட்டிய சிவாஜி, சந்தன வீரப்பன் ஆகியோரின் ஆளுயர மெழுகு சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைத்துள்ளார். ஒவ்வொரு சிலையையு…

  4. சீனா: நடுக்கடலில் கப்பல்கள் மோதல் - 23 பேர் பலி 19 மார்ச் 2007 Blog this story சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதில் 23 பேர் பலியானார்கள். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் நேற்று இரு சரக்கு கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இரு சரக்கு கப்பல்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் கப்பலில் இருந்த 23 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். 4 பேர் மட்டும் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்கள். கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://content.msn.co.in/Tamil/News/Intern...l/0703-19-5.htm

  5. 8.5 அடி நீள மீசை வளர்த்து "கின்னஸ்' சாதனைக்கு முயற்சி ஈரோடு: ஈரோடு வணிக வரித்துறையில் பணிபுரியும் அலுவலர், 8.5 அடி மீசை வளர்த்து கின்னஸ் சாதனை புரிய ஆவலுடன் காத்திருக்கிறார்.ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் வசிப்பவர் தங்கவேல் (58). ஈரோடு வணிக வரித்துறையில் பணிபுரிகிறார். மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். தங்கவேலுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்று லட்சியம். இளம் வயதில் சாதனை செய்ய முடியவில்லை என்றால் என்ன? தற்போது சாதனை புரிவோமே என்று தனது மீசையை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முடிவு செய்தார். கடந்த 25 ஆண்டுகளாக வளர்த்ததன் விளைவாக 8.5 அடிக்கு இவரது மீசை வளர்ந்திருக்கிறது.அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் துõத்துக்குடி மாவட்டம் சி…

  6. சூரிய கிரகணம்நாடு முழுவதும் கோவில்கள் மூடல் மார்ச் 19, 2007 சென்னை: இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 6.08 மணி முதல் 9.55 மணி வரை இந்த கிரகணம் நீடித்தது. இதனை மத்திய ஆசியா, கிழக்காசியா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளில் காண முடிந்தது. இந்தியாவில் இதை பாதியளவே காண முடிந்தது. இந்தியாவில் இன்று காலை 6.45 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 7.23 வரை நீடித்தது. இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதால் தொலைநோக்கி உதவியுடன் மக்கள் இதைப் பார்த்து ரசித்தனர். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்…

  7. முக்கிய பிரமுகர் பிடிபட்டார்! இலங்கைக்கு உலோக உருளை கடத்தல்! நவீன படகு பறிமுதல்; டிரைவர் கைது. விடுதலைப்புலிகளுக்கு உலோக உருளை கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பல முறை கடத்தலில் ஈடுபட்ட படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டார். நவீன படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகு டிரைவரும் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நடைபெறும் கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் தேசிய பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் சென்னை வேப்பேரியில் ஒரு குடோனில் இருந்து உலோக உருளைகள் பறிமுதல…

    • 0 replies
    • 690 views
  8. சேலம்: காதலியை பதிவுத் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்த தனது முறை மாப்பிள்ளையை உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்து, காரில் கடத்திச் செல்ல முயன்ற முறைப்பெண்ணான வழக்கறிஞரையும், அவரது உறவினர்களையும் போலீஸார் கைது செய்தனர். சேலம் அருகே உள்ள சிவதாபுரம், நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. சொந்தத் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், மல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இந்தக் காதலுக்கு ராஜாவின் குடும்பத்தார் அனுமதி தரவில்லை. மேலும், முறைப் பெண்ணான வழக்கறிஞர் இந்திராணிக்கும், உனக்கும் தான் கல்யாணம் என்றும் ராஜாவிடம் கூறினர். ஆனால் ராஜா இதை ஏற்கவில்லை. இப்படியே விட்டால் சரிப…

  9. கருநீல லிப்ஸ் டிக் உதடுகளில் அவள் சிகரெட்டை செருக, அருகில் நின்றிருந்தவர் `லைட்டரை' உயிர்ப்பித்து தீவைத்தார். இரண்டு இழுப்பு இழுத்து புகையை உள்ளும்-புறமும் விட்டாள். ஏதோ சிந்தித்தவளாய் சிகரெட்டை கீழே போட, ஹைஹீல்ஸ் நசுக்க, இருவரும் அந்த ஷாப்பிங் சென்டருக்குள் நுழைந்தார்கள். ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை விலைபேசி வாங்கி, அதற்கு உயிரூட்டினாள். வெண்டைக்காய் விரல்களால் யாருக்கோ நம்பர் அழுத்தினாள். "ம்...'' என்ற முணகலோடு ஒரு சிரிப்பை உதிர்த்தாள். "இதுதான் என் புது நம்பர். நீங்க மட்டும் எப்போ வேணும்னாலும் போசலாம். உங்க அன்பளிப்பா நானே இதை வாங்கிட்டேன்... 16 ஆயிரம்தான். கொடுத்தனுப்பிடுங்க... பை...''-நிறைய வழிந்தாள். பக்கத்தில் நின்றிருந்தவர் அவள் கன்னத்தில் கிள்ளி உ…

    • 1 reply
    • 931 views
  10. உலகம் முழுவதும் சுற்றி இந்து கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர் துாத்துக்குடி: உலகம் முழுவதும் சுற்றி இந்துக் கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர் பலராமதாஸ் ஹெல்லர், திருச்செந்துõர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவைச் சேர்ந்தவர் யுதிஷ்டிரர் தாஸ். அவரது மனைவி பெயர் கமலாவதி தாசி. கடந்த 1965ம் ஆண்டு இஸ்கான் அமைப்பை தோற்றுவித்த சுவாமி பிரபு பாதாவின் ஆன்மிக உரையை அமெரிக்காவில் கேட்ட அவரும், மனைவியும் கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினர். பின்னர் அவர் அங்கு புதிய விருந்தாவன் பகுதியிலுள்ள கிருஷ்ணர் கோவில் கோசாலையில் பணிக்கு சேர்ந்தார். தனது மகன்கள், மகளுக்கு கிருஷ்ணர் சார்ந்த பெயர்களையே வைத்தார். யுதிஷ்…

    • 12 replies
    • 2k views
  11. சடலங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை பிரிட்டனின் மருத்துவ மாணவர்கள் அவதி இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது பிரிட்டனில் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்கள் போதிய பயிற்சி பெற முடியாத நிலைமை உருவாகியுள்ளது. லண்டனில் உள்ள `ரோயல் கொலேஜ் ஒவ் சேர்ஜன்ஸ்' கல்லூரியின் இயக்குநர் டிக் ரெயின்ஸ்பரி கூறியதாவது; மருத்துவ மாணவர்களுக்கு உடற்கூறு (அனாடமி) பற்றிய நேர்முக பயிற்சி அளிக்க, ஆண்டுக்கு ஆயிரம் சடலங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது தற்போது குறைந்துவிட்டது. சடலங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், புதிய டாக்டர்களுக்கும் சேர்ஜன்களுக்கும் வழங்கப்படும் செய்முறை பயிற்சி போதுமானதாக இல்…

  12. சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 50 போலீசார் பலி: வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிசூடு சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் ராணிபோட்லி எனும் காட்டுப்பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அங்கு சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த 23 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக 55 சிறப்பு போலீஸ் அதிகாரி கள் அங்கு இருந்தனர். பிஜப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளை ஒடுக்க இவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். நேற்றிரவு2.15 மணிக்கு நூற்றுக்கணக்கான நக்சலைட் டுக்கள் அந்த போலீஸ் நிலையத்தை சூழ்ந்தனர். போலீசார் உஷராவதற்குள் நக்சலைட்டுக்கள் நாலாபுறமும் நின்று அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். போலீஸ் நிலையத்துக்க…

  13. Watch this video: ~ Paal Pandi

  14. BBC உலகசேவை தொலைக்காட்சியில் இன்று (15.03.2007) ஓளிபரப்பப்படுகிறது 0930 GMT (Worldwide) 1430 GMT (Worldwide) 1830 GMT (South Asia including Sri Lanka only) 1930 GMT (Worldwide excluding South Asia/Sri Lanka) 2330 GMT (USA only)

  15. சென்னை விமான நிலையத்தில் பயங்கர தீவிபத்து மார்ச் 14, 2007 சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு பயங்கர தீவிபத்து நடந்தது. மளமளவெனப் பற்றிக் கொண்ட தீ அலுவலகம் முழுவதும் வியாபித்து கொளுந்து விட்டு எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கம்ப்யூட்டர்கள், பல்வேறு ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. ரூ. 50 லட்சம…

    • 1 reply
    • 1.2k views
  16. பெல்ஜியத்தில் விலையுர்ந்த வைரங்கள் கொள்ளை பெல்ஜியம் நாட்டின் பெலிகான்ஸ்ராட்டிலுள வங்கியொன்றிலிருந்து விலையுயர்ந்த வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன இவ் வைரங்களின் பொறுமதி 28 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது கடந்த 5ம் திகதி இடம் பெற்ற இக் கொள்ளை சம்பவத்தையடுத்து பொலிஸார் சந்தேகநபரை தீவிரமாக தேடிவருகின்றனர். சந்தேக நபரை கைது செய்ய மக்களின் உதவியை நாடுவதாவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். . ஒரு வருட காலத்திற்கு மேலாக திட்டமிடப்ட்டே இக் கொள்ளை இடம் பெற்றுள்ளது . ஒரு வாடிக்கையாளராக குறித்த வங்கியுடன் தொடர்பினை ஏற்படுத்திய 55 வயது மதிக்கத் தக்க சந்தேக நபர் வங்கி ஊழியர்களது நம்பிக்கைக்கு மாத்திரமாவராக நடந்துள்ளதாகவும் தம்மை ஆர்ஜெண்டீனா நா…

  17. ஓவியத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு சுவிஸை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விசாரணை' தாய்லாந்து அரசரின் ஓவியத்தை அழித்ததன் மூலம் அவரை அவமானப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகளுக்காக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதான நபர் ஒருவர் தாய்லாந்துக்கு வந்துள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒலிவர் யூவெர் என்னும் இவர் 75 ஆண்டு கால சிறைத் தண்டனையை எதிர்நோக்க நேரிடும். அரசர் பூமிபோல் அதுல்யாதேவ் 60 வருடமாக தாய்லாந்தை ஆட்சி புரிந்து வருகிறார். அரசரையோ அரச குடும்பத்தினரையோ விமர்சிப்பதற்கு தடைவிதிக்கும் சிறப்புரிமை சட்டம் தாய்லாந்தில் நடைமுறையிலுள்ளது. அரசரின் சில ஓவியங்களை கறுத்த மையினால் அழித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த டிசம்பரில் ஒலிவர் கை…

  18. சர்வதேச தகவல் தொடர்புக் கண்காட்சி 2007 ஆனது 15 மார்ச் முதல் 21 மார்ச் வரை ஜேர்மனியின் கனோவர் நகரில் இடம்பெறவுள்ளது.கடந்த வருடம் 9 மார்ச் முதல் 15 மார்ச் வரை நடைபெற்று இருந்தது.சுமார் 6300 கண்காட்சியாளர்கள் ஏறத்தாழ 70 நாடுகளில் இருந்து கலந்து கொண்டு தமது பொருட்களை அறிமுகம் செய்து இருந்தார்கள். இவ்வருடம் மைக்றோ சொப்டின் விண்டோஸ் விஸ்ராவும் அப்பிள் நிறுவனத்தின் புதிய கைத்தொலைபேசியும் (iPhone touch screen) மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. Source : tamiltalk.uk.tt

  19. பேரணியில் கலந்து கொண்ட திமுக ஆதரவாளர்கள் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக தலைநகர் சென்னையில் திங்கட்கிழமையன்று தமிழ்நாட்டை ஆளும் திமுக சார்பில் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதாகவும்இ இதில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் படுகாயமடைவதும் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இன்றைய ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகனும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக…

    • 0 replies
    • 1.1k views
  20. டெல்லி: தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றுவது தொடர்பான மத்திய அரசின் முடிவைக் கண்டித்து லோக்சபாவில் இடது சாரி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பான மசோதாவை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்ய முயன்றபோது அதைப் பறித்து, பாலுவை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.பிக்களும், திமுக மத்திய அமைச்சர்களும் கம்யூனிஸ்ட் எம்.பிக்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய கப்பல்துறை சார்பில், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. இது முதலில் கொல்கத்தாவில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது சென்னைக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட…

  21. ஈழத்தில் வாழும்எமது உறவுகளை நாளும் கொன்று குவித்து, இன படுகொலை நடத்தும் இலங்கை இராணுவத்துக்கு எந்த உதவியும் அளிக்க கூடாது என்று தி.மு.க உள்ளிட்ட பெருவாரியான தமிழக கட்சிகள் சில வாரங்களூக்கு முன்பு இந்திய மத்திய நடுவன் அரசை வலியுறுத்தியது அனைவரும் அறிந்தது. அதற்க்கு மத்திய அரசும் சாதகமான பதில்களை கொடுத்தது. அது பற்றி இந்த யாழ் களத்தில் கூட காதல் கடிதம் என்று கூட கிண்டல் செய்தார்கள். இன்று இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கியதற்க்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க பேரணி நடத்தி இலங்கை இராணுவமும் இந்திய ராணுவமும் கூட்டாக ரேந்து செல்ல தீர்வு கண்டுள்ளது. இதில் எம்மை போன்றோருக்கு புரிய வேண்டியது. கலைஞர் இலங்கை இரானுவத்திற்க்கும் இந்தியா இராணுவத்திற்க்கும் கூட்டு ஏற்பட மறைமுகமாக பா…

  22. நியூயோர்க்கில் பாரிய தீ விபத்து 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி வீரகேசரி நாளேடு நியூயோர்க் நகரிலுள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 8 சிறுவர்கள் உள்ளடங்கலாக 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 க்கு மேற்பட்டோர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று முன்தினம் அந்நாட்டு நேரப்படி இரவு 11.00 மணியளவில் ஆரம்பித்த இந்த தீ விரைவாக பரவி முழுக் கட்டிடத்தையும் ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்குள்ளாகிய கட்டிடத்தில் அளவுக்கதிகமானோர் குடியிருந்தமை காரணமாகவே பலரைக் காப்பற்றுவது சாத்தியமில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இத் தீவிபத்தில் காயமானவர்கள் சிலர் மிகவும் அபாய நிலையில் உள்ளதாகவும் இதன் காரணமாக இச்சம்பவத்தில் இறந்தவர்களின் தொகை…

  23. பாக்கு நீரிணையில் இலங்கை கடற்படைக்கும் சோதனை பாகு நீரிணையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா கடற்படை கப்பல்களும், படகுகளும் இந்திய கடற்படையால் சோதனைக்கு உட்படுத்தப்படும் இதற்கான சகல அதிகாரங்களும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாம் என தமிழக முதல்வர் கருணாநிதி எனும் நபர் அறிவித்துள்ளாராம் என PTI செய்தி ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி இலங்கை சூரியன் வானொலி அறிவித்துள்ளது. ஆதாரம்: இலங்கை சூரியன் FM

  24. சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே திருப்பி அனுப்பி விட்டது. மத்திய அரசின் இந்த செயல் குறித்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், அதேசமயம், அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தாமல் இதை அமல்படுத்துவது சரியாக இருக்காது என்றும் கூறியிருந்தார். அதற்கு கருணாநிதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.