உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் அட்லாண்டிஸ் விண்கலத்துக்கு சேதம் திருத்த வேலைகள் ஆரம்பம் அமெரிக்காவில் அண்மையில் வீசிய சூறாவளியால் `அட்லாண்டிஸ்' விண்வெளி ஓடம் சேதமடைந்து விட்டது. அதையடுத்து ஏவுதளத்திலிருந்து விண்வெளி ஓடம் அப்புறப்படுத்தப்பட்டு பழுது பார்ப்பதற்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏவுதளத்திலிருந்து 5.5 கி.மீ தொலைவில் உள்ள பணிமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அதைக் கொண்டு செல்ல 7 மணி நேரம் ஆனது. சில நாட்களுக்கு முன் சூறாவளி வீசியபோது பறந்து வந்த குப்பைகளும் கற்களும் ,மண்ணும் அட்லாண்டிஸ் ஓடத்தின் எரிபொருள் கலனின் மீது பொருத்தப்பட்டுள்ள காப்புறைத் தகடுகளைத் தாக்கிச் சேதப்படுத்தி விட்டன. அதற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்…
-
- 0 replies
- 611 views
-
-
பாக்தாத்தில் 9 அமெரிக்கப் படையினர் பலி ஈராக்கின் வீதியோரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 6 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளதுடன் பிறிதொரு சம்பவமொன்றில் 3 படையினர் பலியாகியுள்ளனர். ஸுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பாக்தாத்தின் வடபகுதியிலுள்ள சலஹட்டின் மாகாணத்தில் அமெரிக்கப் படையினரின் வாகனத்திற்கருகிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதில் மேலும் மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தியலா மாகாணத்திலும் மூன்று அமெரிக்கப் படையினர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார். வீதியோர குண்டுகள் கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை எனவும் அமெரிக்க தளபதிகள் இவ் விடயம் தொடர்பாக அக்கறை செல…
-
- 0 replies
- 597 views
-
-
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆணைக்குஎதிராக தடை உத்தரவு பெற்ற இந்திய மருத்துவர்கள் ஆகஸ்ட் முதல் திகதிக்குப் பிறகு பிரிட்டனில் தங்க `விசா' இல்லாத ஐரோப்பியர் அல்லாத டாக்டர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்த ஆணைக்கு தடை உத்தரவு பெற்றுவிட்டனர் அங்கு சென்றுள்ள இந்திய வம்சாவளி டாக்டர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரிட்டனில் டாக்டராகப் பணிபுரிந்தே தீருவது என்ற முடிவோடு உள்ள டாக்டர்கள், அந் நாட்டு அரசு அடுத்தடுத்து ஏற்படுத்திவரும் சட்டத்தடைகளை மனம் தளராமல் உடைத்துக் கொண்டே வருகின்றனர். பிரிட்டனில் வேலைபார்த்தால் கௌரவம், பணம் அதிகம் கிடைக்கும் என்பதையெல்லாம்விட தங்களுடைய படிப்புக்கும் திறமைக்கும் அது பெருத்த அங்கீகாரம் …
-
- 0 replies
- 491 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஆகியோருக்கு பிறந்தவர் ஆரித்ரா. வேலூர் சிறையில் இவர் பிறந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது இலங்கையில் வளர்ந்து வரும் ஆரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆரித்ரா இந்தியாவில் பிறந்தவர், எனவே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்த…
-
- 0 replies
- 750 views
-
-
ஜெகத் கஸ்பர் ராஜ்... அரசின் ஆசி பெற்ற மர்ம மனிதரா? மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘சென்னை சங்கமம்.. -மர்மங்கள்’ என்ற செய்தித் தொகுப்பில் பல கேள்விக் கணைகள் விடப்பட்டது. குறிப்பாக சென்னை சங்கமம் நிகழ்ச்சியை அரங்கேற்றிய ‘தமிழ் மைய’த்தின் அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் ராஜ், விடுதலைப்புலிகளுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்... அமெரிக்காவில் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் அந்த நாட்டு அரசாங்கத்தால் வளைக்கப்பட்ட நாச்சிமுத்து சாக்ரடிஸ் என்பவரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்... இவர்களைப் பற்றி மத்திய, மாநில ப…
-
- 3 replies
- 2.5k views
-
-
இந்தோனேஷியாதரையிறங்கியபோது விமானம் வெடித்து சிதறியது49 பேர் பலி மார்ச் 07, 2007 ஜகார்தா: இந்தோனேஷியாவில் விமானம் தரையிறங்கியபோது ரன் வேயில் இருந்து விலகி ஓடி சுவரில் மோதி நொறுங்கி, வெடித்துச் சிதறியது. விமானத்தில் 140 பேர் இருந்தனர். இதில் 49 பேர் பலியாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகம் எனத் தெரிகிறது. யோக்யகார்தா நகர விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. இந்தோனஷிய அரசின் கருடா விமான நிறுவனத்தைச் சேர்ந்த அந்த போயிங் விமானத்தில் 133 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர். தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயில் இருந்து விலகி ஓடியது. ரன் வேயின் முடிவில் இருந்த சுவரில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் 48 பேர் சம்பவ…
-
- 0 replies
- 702 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்க விரும்பும் 11 பிரபலங்கள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் 2008 ஆம் ஆண்டு முடிகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது. இதில் அங்குள்ள பிரதான 2 கட்சிகளில் இருந்து மொத்தம் 11 பேர் போட்டியிடுகிறார்கள். இப்போதைய ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக 8 பிரபலங்கள் அறிவித்து உள்ளன. அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அரிசோனா செனட்டர் ஜோன் மெக்கைன். அவருக்கு 70 வயது ஆகிறது. வியட்நாம் போர் நடந்த போது அதில் கலந்து கொண்டு வீரதீர சாகசங்கள் செய்து கதாநாயகன் ஆனார். இவர் 2000 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட மனுச் செய்து கட்சியின் நியமனத்தைப்…
-
- 5 replies
- 1.1k views
-
-
பங்களாதேஷ் வங்கியை சவூதி இளவரசர் கொள்வனவு பங்களாதேஷின் ரூபாலி என்ற வங்கியை ரூ.4,200 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்குகிறார் சவூதி இளவரசர் பந்தர் பின் முகம்மது பின் அப்துல் ரெஹ்மான். பங்களாதேஷில் 4 ஆவது பெரிய வங்கி இது. கொடுத்த கடனை திரும்பப்பெற முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படவே விற்றுவிடுவது என்று அரசு முடிவு செய்தது. இவ்வங்கியின் 93% பங்குகளை இளவரசர் வாங்கிக் கொள்கிறார். மிகச் சாதாரணமாக விலை நிலவிய இவ்வங்கியின் பங்குகள், வங்கியை விற்கப் போகிறார்கள் என்ற தகவலுக்குப் பிறகு விலை மதிப்பில் உயர்ந்து இப்போது ஆறு மடங்காகிவிட்டது. ஒரு பங்கின் விலை சுமார் ரூ.4,000 ஆகிவிட்டது.
-
- 0 replies
- 622 views
-
-
http://earthquake.usgs.gov/eqcenter/recent.../us2007zpah.php நடுக்கம் மலேசியா வரை உணரப்பட்டதாம். http://earthquake.usgs.gov/eqcenter/recent.../us2007zpal.php after shocks உம் உணரப்பட்டுள்ளது.
-
- 6 replies
- 1.7k views
-
-
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு படகு மூழ்கடிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கலியபெருமாள் என்ற நாகை மாவட்ட மீனவர் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் போதாது என்று இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக மீனவர்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 100 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென …
-
- 4 replies
- 1.1k views
-
-
பயங்கரவாதம் குறித்து அண்டை நாடுகளுடன் பேச வேண்டும் - சிவசங்கர மேனன் கருத்து வாஷிங்டன்: "எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியாவின் கவலைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம். ஆனால், இந்த பிரச்னை குறித்து உள் நாட்டு அதிகாரிகளுடனும், நமது அண்டை நாடுகளுடனும் இறுதியாக விவாதிக்கப்பட வேண்டும்," என்று இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர மேனன் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, வாஷிங்டனிலுள்ள இந்திய துõதரகத்தில் நடந்த அமெரிக்க இந்திய உயர் தொழில்நுட்ப கூட்டுறவு குழுவின் ஐந்தாவது கூட்டத்தில் பேசுவதற்காக துõதரகம் வந்த சிவசங்கர் மேனன், செய்திய…
-
- 0 replies
- 648 views
-
-
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தாக்குதல் தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் அமைதி காக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அமைதி காக்க மாட்டார்கள், அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்காது என எச்சரிக்க விரும்புகிறேன். இந்த மாதம் மட்டும் நான்கு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அரசு பலமுறை கடிதம்…
-
- 9 replies
- 1.9k views
-
-
ரஷ்யாவில் சுதந்திரம் கோரி ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் ரஷ்யாவில் 2000 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு சென்று சென்பீட்டர்ஸ் பேர்க்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கிரெம்ளினிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழமைக்கு மாறான ஆர்ப்பாட்டம் இதுவென சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரம் கோரி கோஷங்களை எழுப்பிய பின்னர் கலைந்து சென்றுள்ளனர். முன்னதாக அவர்கள் பொலிஸாருடன் மோதியுள்ளனர், 100 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சென் பீட்டர்ஸ்பேர்க் ஜனாதிபதி விளாமிடிர் புட்டினின் சொந்த நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆர்ப…
-
- 0 replies
- 581 views
-
-
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் குறித்து கடும் கண்டனம் பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பான தனது சட்டங்கள் மூலம் பிரிட்டன் ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டுப் பயங்கரவாத சந்தேக நபர்களை கால வரையறையின்றி சிறையிலடைக்கும் செப்டெம்பர் 11 இற்குப் பின்னரான சட்டங்களை நீதிமன்றம் நிராகரித்த பின்னர் 2005 இல் டொனி பிளயர் பாராளுமன்றம் மூலம் புதிய சட்டங்களைக் கொண்டு வந்திருந்தார். பயங்கரவாத சந்தேக நபர்களினது கடவுச் சீட்டுகளைப் பறிமுதல் செய்வது அவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது உட்பட பல வகையான கட்டுப்பாடுகள் …
-
- 0 replies
- 533 views
-
-
காரைக்கால் : காரைக்காலில் நடந்த வேளாண் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் வைத்திலிங் கம் மலர் அரங்குகளை சுற்றிப் பார்த்தார். ஒவ்வொரு ஸ்டால் களிலும் விவரங்களை கேட்டறிந்த வைத்திலிங்கம் வனத் துறை சார்பில் அமைக்கப்பட் டிருந்த பாம்புக் கூண்டுகள் பக்கமாக வந்தார். அப்போது வனத்துறை ஊழியர் ஒருவர் ஆர்வக் கோளாறில் கண்ணாடிக் கூண்டுக்குள் கைவிட்டார். நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்தவர் பொசுக்கென்று அமைச்சரின் கைகளில் திணித்தார். "ஏதோ பொக்கே போல' என்று நினைத்து கை நீட்டியவர் திடுக்கிட்டு பின்வாங்கினார். உடன் வந்த எம்.எல். ஏ.,க்கள் உற்சாகப்படுத்த "ஐயோ வேண்டாம்ப்பா' என் றபடி அலறி பின்வாங்கினார் அமைச்சர். உடன் வந்த கட் சிப் பிரமுகர் ஒருவர், "மனிதனை விட பாம்பு எவ் வளவோ தேவலை' என்று குரல் கொடுத்தார்…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 6ந் தேதி சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். அந்தளவுக்கு இலங்கை அரசின் இனவெறி ஈழத்தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழக மக்கள் மீதும் திணிக்கப்படுகிறது. அண்மையில் கலியபெருமாள் என்ற மீனவத் தமிழர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ள…
-
- 2 replies
- 1.1k views
-
-
டென்மார்கில் ஆர்ப்பாட்டம்:இளைஞர் இல்ல விவகாரம், தீக்கிரை 200 பேர் கைது ! [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007] டென்மார்க் தலைநகர் கோபன்¦?கனில் இள வயதினருக்கான மையம் ஒன்றில் தர்ணா செய்து கொண்டிருந்தவர்களை அகற்றியது தொடர்பாக இரண்டாவது இரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிட்டதட்ட இருநூறு பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்நொர்ரிபுரோ மாவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வாகனங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர்.கூட்டத்தினரை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர், இதற்கு பதிலடியாக கூட்டத்தினர் காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசினர்.சர்ச்சைக்குரிய யுவ வயதினருக்கான மையத்தினை இடதுசாரி குழு…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆசிரியை 'சல்வார்' அணிவது தப்பா? மார்ச் 04, 2007 சென்னை: சல்வார் கமீஸ் உடையில் பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வந்த ஆசிரியையை, தேர்வு மையப் பள்ளியின் தலைமை ஆசிரியை திட்டி அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை டிஏவி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் சித்ரா. இவருக்கு தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் டூ தேர்வு கண்காணிப்புப் பணிக்காக சித்ரா சென்றார். சல்வார் கமீஸ் உடையில் அவர் இருந்தார். அவரைப் பார்த்ததும் சுப்பையா பிள்ளை பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி சித்ராவை தடுத்து நிறுத்தி…
-
- 29 replies
- 3.4k views
-
-
பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேர இரு கொரியாக்களும் இணக்கம் வட கொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் ஏழு மாதங்களின் பின்னர் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இரு நாடுகளினதும் எல்லைகளுக்கப்பால் பிரிந்திருந்த குடும்பங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இம் மாதமளவில் வீடியோ ஒளிப்பதிவுடன் கூடிய பேச்சுவார்த்தை இடம்பெறவிருப்பதை தொடர்ந்து எதிர்வரும் மே மாதமளவில் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் , வடகொரியாவுக்கான மனிதாபிமான உதவிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. வடகொரியா அணுவாயுத பரிசோதனையை மேற்கொண்ட ப…
-
- 0 replies
- 718 views
-
-
நேபாளத்தில் 113 வயது பெண்ணுக்கு குடியுரிமை சான்றிதழ் நேபாளத்தில் 113 வயது பெண்மணிக்கு முதன் முறையாக குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மேற்கு பகுதியில் மயாக்டி மாவட்டத்தில் உள்ளது கடானா கிராமம். மலைகள் சூழ்ந்த இந்த கிராமத்தில் 113 வயதான சரஸ்வதி ராய் என்ற பெண்மணி வாழ்ந்து வருகிறார். இவருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வியாழக்கிழமை குடியுரிமைச் சான்றிதழ் வழங்கினர்.
-
- 0 replies
- 698 views
-
-
2008 ஒலிம்பிக் போட்டிக்கு முன் பெய்ஜிங்கிலிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற சீன அரசு திட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2008 இல் நடைபெறவுள்ளன. அதற்கு முன் அந்த நகரத்திலிருந்து பிச்சைக்காரர்களையும் வீதியோர வியாபாரிகளையும் வெளியேற்றிவிட சீன அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பிச்சைக்காரர்கள் வீதியோரக் கடைக்காரர்கள் வீதிகளில் நின்றுகொண்டு விளம்பர பிரசுரங்களை விநியோகிப்பவர்கள் ஆகியோரை வெளியேற்றி, பெய்ஜிங் நகரத்துக்குப் புதுப் பொலிவூட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கிவிட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பெய்ஜிங்கில் வாழும் ஆதரவற்ற முதியோர், உடல் ஊனமுற்றோர், அநாதைச் சிறார்கள் உள்ளிட்டோரைக் கண்டு பிடித்து, அரசு நடத்தும் இலவச …
-
- 0 replies
- 610 views
-
-
பாகிஸ்தான் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் அங்குள்ள அல்-ஹைதா முகாம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷினை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். செனட்டின் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியினதும் செனட்டினதும் உறுப்பினர்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலில்லாத பகுதியில் உள்ள அல்-ஹைதா முகாம்கள் மீது ஆப்கானிலுள்ள அமெரிக்க படையினர் தாக்குதல் மேற்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளனர். 2001 இல் ஆப்கான் மீது தாக்குதலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட நியாயங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளலாம் என குடியரசுக் கட்சி செனட்டர் தெரிவித்துள்ளார். முஷாரவ் அல்-ஹைதாவிற்கு ஆதரவு வழங்குகின்றார். அல்லது நாட்டின் மீ…
-
- 1 reply
- 856 views
-
-
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் கத்தியுடன் சென்று வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அதை வைத்து கட்டிடத்தை தகர்க்கப்போவதாகவும் மிரட்டினார். இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிசோரி ரோல்லா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கல்வி கற்பவர் சுஜித்குமார் வெங்கட்ராமொல்லா. 22 வயதான இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ஆந்திராவில் உள்ள நிஜாமாபாத் நகரைச் சேர்ந்தவர். இவர் வியாழனன்று கையில் கத்தியுடன், கடதாசி பை ஒன்றை எடுத்துக்கொண்டு கட்டிடத்துக்குள் நுழைந்தார். அதில் வெடிகுண்டும், அந்திராக்ஸ் பவுடரும் இருப்பதாகவும், அவற்றை பயன்படுத்தி எல்லோரையும் அழித்துவிடுவேன் என்றும் கூறி மிரட்டினார். உடனே பல்கலைக்கழக ஊழியர்கள் பொலிஸில் புகார…
-
- 1 reply
- 814 views
-
-
சீனாவின் மக்கள் தொகை 131 கோடி 44 லட்சம் வீரகேசரி நாளேடு சீனாவில் 2006ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சீனாவின் மக்கள் தொகை 131 கோடியே 44 இலட்சம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 51.5 வீதமானோர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் பெற்றோர் பெண் குழந்தைகளைவிட ஆண்குழந்தை பிறக்கவேண்டுமென்றே கருதுகின்றனர். ஒரு தம்பதி ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு சீனாவில் காணப்படுகின்றது. அந்த ஒரு குழந்தையும் ஆணாக இருக்க வேண்டுமென்பதே பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. இதனால் ஆண் குழந்தையின் பிறப்பு வீதம் அதிகமாக உள்ளது. பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் நடவடிக்கை பரவலாக நட…
-
- 1 reply
- 794 views
-
-
ஆதிதிராவிடர்’’ என்றுதான் குறிப்பிட வேண்டும்: அரசு உத்தரவு சென்னை, மார்ச்.3-: தலித், தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதையும், எழுதுவதையும் விடுத்து இனி, ஆதிதிராவிடர் என்றே குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய அரசியல் அமைப்பின் 1950-ம் ஆண்டின் ஆதிதிராவிடர் ஆணையில் வெளியிடப்பட்ட ‘‘ஷெட்யூல்டு காஸ்ட்’’ என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் `அரிசன்' என்று அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல், ‘‘ஷெட்யூல்ட் காஸ்ட்’’ இனத்தவருக்கான நல இயக்ககம் ‘‘அரிசன நல இயக்கம்’’ என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், ‘‘அரிசன்’’ என்று அழைக்கப்பட்டு வருவதை ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும…
-
- 0 replies
- 1.3k views
-