உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26594 topics in this forum
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா, சிங்கள அரசுக்கு முட்டுக் கொடுப்பது மிகப்பெரும் கேலிக் கூத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அரசியல் நேர்மையில்லாத, பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த சிங்கள அரசின் வான் படையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு வலிய வலிய வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. பாகிஸ்தான் சிங்கள இனவெறிக் கும்பலுக்கு பல வகையிலும் உதவிகள் செய்வது போன்று, இந்திய அரசும் போட்டி போட்டிக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஓரே அணியில் நின்று கொண்டு சிங்கள அரசுக்கு…
-
- 0 replies
- 686 views
-
-
April 20, 2012 ஈராக்கில் நான்கு இடங்களில் நேற்று குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாயினர்.ஈராக்கில் பாக்தாத், கிர்குக், சலாஹிதின் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 30 பேர் பலியாயினர். பாக்தாத் குண்டு வெடிப்பில் 17 பேரும், கிர்குக் மாகாண குண்டு வெடிப்பில் ஒன்பது பேரும், சலாஹிதின் மாகாணத்தில் சமாரா என்ற இடத்தில் மூன்று பேரும் குண்டுவெடிப்பில் பலியாயினர். தியாலா மாகாணத்தில் வெடித்த குண்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். http://www.paristami...Tg0NjYxNDQ4.htm
-
- 0 replies
- 420 views
-
-
பிரேசில்: பழங்கால ரயில் நிலையம் தீயில் எரிந்து நாசம் பிரேசில் தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையம் சேதமடைந்துள்ளது. பிரேசிலின் சா பாலோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் சில பகுதிகள் எரிந்து நாசமாயின. அந்த ரயில் நிலையத்தில் போர்ச்சுக்கீசிய மொழியின் வரலாற்றை ஆவணப்படுத்தியிருந்த மிகப் பிரபலமான ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டுவந்தது. இந்த விபத்தில் அந்த அருங்காட்சியகமும் பெருமளவில் சேதமடைந்தது. ஸ்டேஷன் ஆஃப் லைட் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த ரயில் நிலையத்தை பிரிட்டிஷ்காரர்கள் கட்டினர். இந்தத் தீ விபத்தில் இதன் கூரை முழுவதுமாக எரிந்து போனது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் ரயில் நிலைய வ…
-
- 0 replies
- 556 views
-
-
லெபனான் நாட்டில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர். லெபனானில் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்த்திருத்தங்கள், புதிய வரி விதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அங்கு கனமழை பெய்தபோதும், ரெயின் கோட் அணிந்தும், குடைகள் மற்றும் கொடிகளை பிடித்தபடி Jal el Dib நகர் சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அமைதியாக போராடி வருவதால், அவர்களை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். https://www.p…
-
- 0 replies
- 296 views
-
-
தூத்துக்குடி மாதா நகரில், இன்று காலை திடீரென்று பூமிக்கு அடியில் இருந்து கரும்புகை வெளிப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு புகை வெளிவந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, வெப்பத்துடன் கூடிய கரும்புகை வெளிப்பட்டது. தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இருவரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 818 views
-
-
அவுஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்! அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள ஒரு கடற்கரை பகுதியில் 150 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரையொதுங்கிய நிலையில் சிக்கித் தவிக்கின்றன. கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் டஜன் கணக்கான டொல்பின்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், புதன்கிழமை (19) காலை நிலவரப்படி சுமார் 90 டொல்பின்கள் மாத்திரமே தற்சமயம் உயிருடன் உள்ள நிலையில், அவற்றை காப்பாற்றும் பணிகளில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சிக்கித் தவிக்கும் டொல்பின்கள் பொய் கொலைத் திமிங்கலம் (false killer whales) என்று நம்பப்படுகிறது, டாஸ்மேனியாவின் இந்தப் பகுதியில் 50 ஆண்டுகளில் இது போன்ற திம…
-
- 0 replies
- 224 views
-
-
பிரான்ஸ் அதிபர், பிரதமருக்கான சம்பளத்தை 30 சதவீதம் வரை குறைக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பிரான்ஸில் அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கான சம்பளத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கான சம்பளத்தை குறைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தின் மாத சம்பளம் சுமார் ரூ.14 லட்சம் என்பதில் இருந்து ரூ.10 லட்சமாகக் குறையும். கடந்த மே மாதத்தில் ஹொலந்த், பிரான்ஸ் அதிபராகப் பதவியேற்ற பின் எடுத்த முதல் சிக்கன நடவடிக்கை இது…
-
- 0 replies
- 470 views
-
-
மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர். அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால்…
-
- 0 replies
- 843 views
-
-
ஈராக் நாட்டின் மொசூல் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 100 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மொசூல் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சர்வதேச நாடுகளின் வான்வெளிப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈராக் இராணுவம் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளது.தாக்குதலின் போது மொசூல் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் யாரும் இல்லை என்றும் பல்கலைக் கழக கட்டிடங்கள் பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ஈராக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 17 மூத்த தலைவர்களும், பல்வேறு உள்ளூர் ஆதரவாளர்களும் இந்த வான்வெளி தாக்க…
-
- 0 replies
- 408 views
-
-
ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சாதுர்யமான காய்நகர்த்தலால் பந்தை அரசாங்கத்தின் பக்கம் நகர்த்தியுள்ளார்.ஒரு இக்கட்டான சூழ்நிலைய அரசாங்கத்திற்கு இதன் முலம் ஏற்படுத்தியுள்ளார். இவ்வறிக்கையின் பின் வெளிவிவகார அமைச்சர் பதில் அறிக்கைகளை வெளியிட்டு பிதற்றிக்கொண்டிருக்கிறார். பொருத்தமான நேரத்தில் வந்த தலைவரின் அறிவிப்பு. விஷேடமாக இந்திய தலைவர்களுக்கு சற்று தடுமாற்றத்தை உண்டாக்கலாம். இன்றைய நாளில் நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் தோற்றால் தேர்தல் நடைபெறும் வரை ஒரு இடைக்கால…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது இரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது, இருவரை பெல்ஜியம் போலிசார் தடுத்து வைத்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நபர், கிழக்கில் உள்ள வெர்வியர்ஸ் நகரிலும் மற்றொருவர் பிரெஞ்சு எல்லைக்கு அருகில் உள்ள டூர்னை என்ற நகரிலும் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து பேசுவதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்றார் அவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், ஞாயிறன்று நடைபெற உள்ள பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி அணிகள் இடையேயான யூரோ 2016 கால்பந்து ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக உறுதி செய்ய முடியாத…
-
- 0 replies
- 318 views
-
-
விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் : ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அல்லது நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தின் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும். அதேபோன்று இங்கிலாந்தின் ஹீத்ரோ, விம்பிள்டனின் அகமது விமான நிலையங்களையும் தாக்குவோம் என மிரட்டியுள்ளனர். எனவே விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து இருநாட்டு விமான நிலையங்களிலும் பாத…
-
- 0 replies
- 308 views
-
-
சென்னை: தங்களை கொன்றுவிடுவதாக பாமக மிரட்டுகிறது என்று காதல் திருமணம் செய்த ஆசிரியை கணவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்து புகார் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள படைத்தலைவன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகள் வினோதா (22).இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வினோதா ஆசிரியை பயிற்சி படிப்பை முடித்துள்ளார்.தேவேந்திரன் ஓட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துள்ளார்.சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்,வினோதாவின் வீட்டி…
-
- 0 replies
- 508 views
-
-
சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) உரத் துறையில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள அந்தத் துறையின் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமன் மன்மோகன் சிங்கிட வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உரங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிலையாக இருக்கும் வகையில், உரத்துக்கான மானியத்தை அவ்வப்போது மாற்றி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு கடைப்பிடித்து வந்தது. இதனால் உரங்கள் விவசாயிகளுக்கு ஓரளவு நியாயமான விலையில் கிடைத்து வந்தன. 2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் என்ற புதிய கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கொள்கையின்படி, உரங்களுக்…
-
- 0 replies
- 364 views
-
-
ஐ.நா., சபையில் முதலை கண்ணீர் வடித்த நவாஸ் Share this video : நியூயார்க் : காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி பயங்கரவாதத்தை பரப்பி விட்டவர்களுக்கு ஆதரவாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார். இதன் மூலம் எதிர்பார்த்தது போலவே காஷ்மீர் பிரச்னையை எழுப்பி முதலை கண்ணீர் வடித்தார். காஷ்மீரில் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை வைத்து பாகிஸ்தான் அரசியல் செய்கிறது. இதனால் காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு ஊரடங்கு அமலில் உ…
-
- 0 replies
- 591 views
-
-
-
- 0 replies
- 369 views
-
-
பைலட்கள் வேலைநிறுத்தம்: லுப்தான்ஸா நிறுவனத்தின் 876 விமானச் சேவைகள் இன்று ரத்து ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிர்வாகத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான விமானிகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 876 விமானங்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராங்ப்ரட்: ஐரோப்பா மற்றும் ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஜெர்ம…
-
- 0 replies
- 269 views
-
-
கத்தார்: வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற அரசு முடிவு கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறவும்,வேறு பணிகளுக்கு செல்லவும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்தின் அனுமதியை வாங்க வற்புறுத்தும் தொழிலாளர் ஆளெடுப்பு குறித்த சட்ட அமைப்பினை அந்நாடு நிறுத்த முடிவு செய்துள்ளது. 2022 கால்பந்து உலகக்கோப்பைக்காக கத்தாரில் உள்கட்டமைப்பை உருவாக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்போது அமலில் உள்ள ''கஃபாலா'' அமைப்புக்கு பதிலாக அதிக நெகிழ்வுத்தன்மையுள்ள மற்றும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் புதிய ஒப்பந்த அடிப்படையிலான சட்டம் கொண்டுவரப்படும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, வர…
-
- 0 replies
- 273 views
-
-
போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள் BharatiDecember 21, 2020 போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள்2020-12-21T08:32:16+05:30கட்டுரை FacebookTwitterMore போட்டி போட்டுக்கொண்டு கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகளை தாமே முதலில் பயன்படுத்துகின்றனர். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளோ தமக்கு எப்போது ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற நிலையிலேயே உள்ளன. ஆனாலும் இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம் போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சியில் மும…
-
- 0 replies
- 955 views
-
-
நிலக்கரி சுரங்க ஊழலை மூடி முறைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 142 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போது நடந்த முறைகேட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பேரில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநில தலைநகரங்களில் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளரான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக மாநில ஆளுநர்களிடம் மனு அளிக்க…
-
- 0 replies
- 330 views
-
-
தனி தெலுங்கானா கோரி சட்டசபையை நோக்கி பேரணி நடத்தப்போவதாக தெலுங்கானா போராட்ட குழு அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்கள் . பேரணியில் மாவேஸ்டு தீவிரவாதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா திட்டவட்டமாக கூறி விட்டார். தடையை மீறி போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார். ஆனாலும், தடையை மீறி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கானா போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ஐதராபாத் நகரில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட ஆயிரக்கணக…
-
- 0 replies
- 368 views
-
-
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கின்றது. இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. 4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானிஸ்தான், சோமாலியா,…
-
- 0 replies
- 377 views
-
-
அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி தொடர்ந்தும் 200 தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள். கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரலிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஒரே சம்பவத்தில் அதிகளவில் தீயணைப்பு…
-
- 0 replies
- 488 views
-
-
தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு துறை, இன்சூரன்ஸ் துறை ஆகியவற்றில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவையே விற்றுவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துடிப்பதாக மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்காக அவமானப்பட்டுதான் நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினோம். காங்கிரஸ் காரர்களை பார்ப்பது கூட எனக்கு அவமானமாக உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பல காங்கிரஸ் காரர்கள் எங்கள் கட்சி தயவால் தான் மத்திய மந்திரிகளாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. சில்லரை வர்த்தகத்தில்…
-
- 0 replies
- 521 views
-
-
கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல சி.ஐ.ஏ சதி -வடகொரியா குற்றச்சாட்டு அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியாவின் உளவாளிகள் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொல்ல சதி செய்ததாக வட கொரியா குற்றம் சாட்டியிருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்கா மற்றும் தென் கொரிய ஏஜெண்டுகள் வட கொரியத் தலைவரான கிம் ஜோங்-உன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளதாக வட கொரிய தேசிய ஊடகங்கள் கூறியுள்ளன. வடகொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய புலனாய்வு முகமையின் ஆதரவு பெற்ற "பயங்கரவாதக் குழு", உயிரியல் இரசாயனப் பொருள் கொண்டு தாக்குதல் நடத்துவதற்காக வட கொரியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தெ…
-
- 0 replies
- 339 views
-