Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கிளேமோர் கொண்டொன்ரை கொழும்பில் இன்று சனி காலை மீட்கப்படுள்ளது. [saturday February 03 2007 08:13:57 AM GMT] [pathma] மீட்கப்பட்ட இக்குண்டு பழுதுபார்ப்பதற்காக கராஜ் ஒன்றில் விடப்பட்டிருந்த ஆட்டோவில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது .மாளிகாவத்தை பிரதேச வாசி யொருவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ ஸ்தலத்திற்கு விரந்து கிளேமோர் குண்டினை மீட்டுள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்த்திய நிலையம் தெரிவித்துள்ளது. Tamilwin

  2. தூத்துக்குடி: திருச்செந்துõர் முருகன் கோவிலுக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மைத்துனியும், எம்.பியுமான நிரூபமா ராஜபக்ஷே அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ராஜபக்ஷேவின் மனைவியின் சகோதரி நிரூபமா ராஜபக்ஷே தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் திருச்செந்துõர் வந்தார் நிரூபமா. உலக நன்மைக்காகவும், இலங்கைஇந்திய நல்லுறவுக்காகவும் அங்குள்ள பஜனை மடத்தில் வெள்ளியன்று யாகம் துவக்கினர். நேற்று மூன்றாவது நாளாக யாகம் நடந்தது. திருச்செந்துõர் முருகனுக்கு பள்ளியறை பூஜையின் போது பயன்படுத்த தங்கத் தாள் பூசப்பட்ட சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குவதாக இவர்கள்…

    • 9 replies
    • 3.1k views
  3. [05 - February - 2007] [Font Size - A - A - A] * சேர்பியா கடும் எதிர்ப்பு கொசோவோவை சுதந்திர பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும் திட்டமொன்றை ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மார்ட்டி அஹ்பிசரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதேவேளை பெல்கிரேட் இதனை நிராகரித்துள்ளது. கொசோவோவின் பெரும்பான்மை அல்பேனியர்கள் இதனை வரவேற்றுள்ளனர். குறிப்பிட்ட யோசனையில் சுதந்திரம் குறித்தோ அல்லது சேர்பியா கொசோவோ மீதான தனது இறைமையை இழப்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இரு தரப்பும் தமது கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன. கொசோவோ ஏனைய நாடுகளைப் போல இறைமையுடையதாக இருக்கும் என அதன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொசோவோ விடுதலை இராணுவத்தின் போராளியான பிரதமர் ஐக்கிய…

  4. காண்பிக்கப்பட்ட இராணுவபலமும் காணாமல் போன அரசியல் புள்ளிகளும். [திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007, 02:21 ஈழம்] [அ.அருணாசலம்] நேற்று காலிமுகத்திடலில் நடைபெற்ற சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது சிறீலங்கா அரச படைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படைபல விளம்பரங்களுக்கு மத்தியில் சிறீலங்காவின் அரச தலைவர் பங்குபற்றிய விழாவில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது அரசு தனது நெருக்கடிகளை இராணுவ அணிவகுப்புக்குள் மறைத்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற விழாவானது அரசு தனது இராணுவ பலத்தை காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவே காணப்பட்டது. மேஜர் அலுவிகரே தலைமையில் கஜபா படைப்பிரிவை சே…

  5. உதவிகளை இடையூறின்றி தொடர்ந்து வழங்குவதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதி - சிறீலங்கா அரசு ஞாயிறு 04-02-2007 01:58 மணி தமிழீழம் [மயூரன்] பொருண்மிய ஒத்துழைப்பு உதவிகளை இடையூறின்றி தொடர்ந்து வழங்குவதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பேர்லினில் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவிற்கும், ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி (Frank Walter Steinmeier) பிராங்க் வோல்டர் ஸ்ரெய்ன்மியர் அவர்களுக்கும் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதன்போது சிறீலங்கா அரசாங்க சமாதான செயலக பணிப்பாளரும், வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளருமான பாலித்த கோஹொன்னவ…

  6. இன்று நாடு திரும்பும் ரணிலுக்கு அமோக வரவேற்பளிக்க ஏற்பாடு! கட்டுநாயக்காவிலிருந்து வாகன பவனியில் அழைத்து வரப்படுவார் தென்னிலங்கை அரசியல் களத்தில் திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தபோது வெளிநாடுகளில் தங்கியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்புகிறார். இன்று நண்பகல் நாடு திரும்பவுள்ள அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க ஐக்கியதேசியக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.தே.கட்சி இழந்துள்ள மிகவும் நெருக்கடியான ஒரு தருணத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்புகிறார். அவர் கட்டுநாயக்கவிலிருந்து வாகனத் தொடரணி மூலம் கொழும்புக்கு அழைத்துவர கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்க …

    • 8 replies
    • 1.9k views
  7. உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி சென்னை, பிப்.2-: புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு தொடக்க விழாவையட்டி முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இன்று (1&2&2007) முழுமதி நாள். 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் முழுநிலவை வாழ்த்துகிறது. பூம்புகாரில் இந்திரவிழா நடந்தது சித்திரை முழுமதி நாளில்தான். நிறைமதியாளரான புத்தரின் வாழ்க்கையில் முழுமதிக்குப் பெரும் பங்குண்டு. சித்தார்த்தராகப் பிறந்தது, ஞானம் பெற்றுப் புத்தரானது, மண்ணுலகிலிருந்து மறைந்தது ஆகியவை புத்தர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் யாவு…

  8. பகுத்தறிவாளரான முதல்வரின் வீட்டுக்கு சாய்பாபா சென்றதும், முதல்வரின் முன்பாகவே அமைச்சர் துரைமுருகன் மோதிரம் கேட்டு வாங்கியதும் பலவிதமான விமர்சனங்களுக்கு இடமளித்தது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என்ன நினைக்கிறார்? பெரியார் திடலில் அவரைச் சந்தித்தபோது... ‘‘ஒரு பகுத்தறிவாளரின் வீட்டுக்குள் சென்று பாபா நடத்தி வந்த சந்திப்பு... அங்கே நடந்த சம்பவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?" ‘‘கலைஞர் என்றைக்குமே ஒரு நாத்திகர். சாய்பாபாவைத் தேடி அவர் போகவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் எல்லாம் பாபாவின் காலடியில் போய் உட்கார்ந்திருக்கும்போது, அதே பாபாவைத் தன் வீடு தேடி வரவழைத்தவர் கலைஞர். கிருஷ்ணா நதிக் கால்…

  9. ஆட்கள் குறித்த தகவலை பெற அமெரிக்கா பயன்படுத்தும் முறை தொடர்பாக விவாதம் பயங்கரவாத சந்தேக நபர்களை அடையாளம் காண ஒரு வேளை பயன்படக் கூடிய தகவல்களை சேகரிக்க அமெரிக்கா பயன்படுத்தும் முறைகள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் விவாதித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் அடையாளம் காணும் பிரிவிற்கு, சட்டவிரோதமான வகையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல்வார்கள். பல இலட்சக்கணக்கான மக்களின் சர்வதேச அளவில் பணத்தை அனுப்புவதைக் கையாளும் ஸ்விஃப்ட் என்கின்ற ஒரு தனியார் நிறுவனம், சென்ற ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிப்பட்ட தகவல்கள் தொட…

    • 6 replies
    • 2.3k views
  10. கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் கைது கும்பல் தலைவியிடம் தீவிர விசாரணை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு சென்னை, ஜன.30: தமிழகத்தை கலக்கி வந்த, கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கும்பலுக்கு இளம்பெண் தலைமை வகித்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. கும்பல் தலைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தமிழகப் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 2002 முதல் தொடர்ந்து கிரில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன. தமிழகத்தின் பல நகரங்களில் அவர்களுடைய கைவரிசை தொடர்ந்து கொண்டே இருந்தது. கும்பலை பிடிக்க கூடுதல் துணை கமிஷனர் …

  11. முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் க…

  12. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மூன்று முக்கிய பயனாளிகள்' * அமெரிக்கப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியரான ஜேம்ஸ் பெட்ராஸ். பிரேசில், ஆர்ஜென்டீனா முதலிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாராளுமன்றப் பாதையிலிருந்து இடப்புறமாக விலகிய இடதுசாரித் தொழிலாளிகளோடு இணைந்து களப்பணி செய்தவராதலால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகிவரும் இடதுசாரி அரசியல் முனைப்புப் பற்றி விரிவாகப் பேசத் தகுதிவாய்ந்தவராவார். பேராசிரியர் நோம் சோம்ஸ்கியோடு இணைந்து கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள அவர், தற்போது `கனேடியன் டைமென்சன்' (Canadian Dimension) என்ற இதழின் சிறப்பாசிரியராக உள்ளார். அரசு சாராத் தன்னார்வக் குழுக்களின் செயற்பாடுகள் எப்படி ஏகாதிபத்தியத்தின் ஆசி பெற்ற சேவைகளாக மாறுகின்றன எ…

  13. கடலூர்: கல்யாண விருந்தில் இட்லிக்குப் பதில் பொங்கல் பரிமாறப்பட்டதால், பெரும் ரகளை ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திராடன். இவரது மகன் முத்துலிங்கத்திற்கும், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரைச் சேர்ந்த பத்மநாபன் மகள் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர். முத்துலிங்கம், கஸ்தூரியின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு கல்யாண விருந்து தொடங்கியது. அப்போது இட்லி, பொங்கல், வடை ஆகியவை ப>மாறப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் இட்லி, வடை ஆகியவை காலியாகி …

  14. திருச்சி: என்னால் எல்லாம் முடியும், ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள் சாதித்துக் காட்டுகிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் பித்தலாட்டக்காரர்களை மக்கள் அடையாளம் கண்டு அவர்களை நெஞ்சுரத்தோடு எதிர்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மாமன்ற வளாகத்தில், முன்னாள் நகராட்சித் தலைவர் ரத்தினவேல்தேவரின் சிலையை கருணாநிதி திறந்து வைத்துப் பேசுகையில், அப்போது, ஆட்சி மாறி, நம்மிடம் ஆட்சி வந்தபோது, எங்கள் முன் 2,000 கோப்புகள் தேங்கிக் கிடந்தன. அதில் தேவர் சிலைக்கான அனுமதி கோரி வந்த கோப்பும் ஒன்று. அதை கோப்புகளில் தேடிக் கண்டுபிடித்தோம். உடனடியாக ஆணை பிறப்பிக்கப்பட்டு சிலை திறப்புக்கு அனுமதி தரப்பட்டது. தேவர் என்றால் தமிழகத்தில் இரண்டு பேர்தான…

  15. ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சேது சமுத்திரத் திட்ட கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் தற்போது ஆழப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை) உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பாலத்தை உடைப்பதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரிஸ் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள தோண்டும் கருவி 50 டன் எடை கொண்டது. இதை வைத்துத்த…

  16. இந்தியின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி. சல்மான் கான் உள்பட பல ஸ்டார்களின் முன்னாள் காதலியான இவர் சினிமாவிலிருந்து டி.வி.க்கு வந்திருக்கிறார். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சேட்டிலைட் சேனல் 'சேனல் 4.' இதன் பிரதான நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' பிரபலமான நபரின் ஒருமாத வாழ்க்கையை அப்படியே லைவ்வாக காண்பிக்கும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதன்முறையாக இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டியை 'சேனல் 4' தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒருமாதம் வேறு சில பிரபலங்களுடன் தங்கியிருக்கும் ஷில்பாவை லைவ்வாக காண்பிக்கப் போகிறார்கள். எழுத்தாளர்கள், பாப் இசைக்கலைஞர்கள் கொண்ட இந்த குழுவில் அனைவரையும் கவர்ந்தவர் ஷில்பா ஷெட்டிதான் என்கிறார்கள். ஒருமாத…

  17. [29 - January - 2007] [Font Size - A - A - A] ஈராக்கில் மறைமுகமாக செயல்பட்டு வரும் ஈரான் புரட்சிகர படையினர் மற்றும் அந்நாட்டு உளவுத் துறையினரை சுட்டுக் கொல்லலாம் அல்லது உயிருடன் பிடிக்கலாம் என அமெரிக்கப் படையினருக்கு ஜனாதிபதி புஷ் அனுமதி வழங்கியுள்ளார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை அமெரிக்கப் படையினருக்கு கடந்த ஆண்டு இறுதியில் ஜோர்ஜ் புஷ் வழங்கியதாக "வாஷிங்டன் போஸ்ட்" நாளிதழ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் பலம் ஓங்கி வருவதைக் கட்டுப்படுத்தவே இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஈரான் உளவாளிகளை சந்தேகத்தின் பேரில் அமெரிக்கப் படையினர் பிடித்து விசாரித்துப் பின்ன…

  18. பெங்களூரு: புகழ் பெற்ற விஞ்ஞானியான விஸ்வேரய்யா பெயரில் பெங்களூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் 800 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புகழ் பெற்ற விஞ்ஞானி விஸ்வேரய்யா. கட்டிடக் கலையில் வல்லுனரான அவர் இந்தியாவின் பல புகழ் பெற்ற கட்டடங்களை வடிவமைத்தவர். மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையையும் அவர்தான் வடிவமைத்தார். அவரது பெயரில் பெங்களூரில் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை மிகக் கொடுமையாக உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் 800 மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான் பாடம் நடத்தி வருகிறார். கம்ப்யூட்டர் அறிவியல் துறைத் தலைவராக உள்ள டாக்டர் கே.ஆர்.வேணுகோபால்தான் 800 மாணவர்களுக்கும் பாடம் எ…

  19. சென்னை: சென்னை புறநகர்ப் பகுதி மக்களை கடந்த 6 ஆண்டுகளாக கலக்கி வந்த கிரில் கொளளையர்கள் கூண்டோடு பிடிபட்டுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்தவர்கள் கிரில் கொள்ளையர்கள். வீடுகளின் ஜன்னல் கிரில் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து திருடிச் செல்வது இவர்களது பாணி. நகை, பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பார்கள், ஆள் இல்லாத வீடுகளைத்தான் நோட்டமிட்டுக் கொண்டு நுழைந்து கொள்ளை அடிப்பார்கள். புறநகர்ப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த கிரில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை தவிர மதுரையில் 11 வீடுகள், வேலூரில் 7 வீடுகள் சென்னைக்கு வெளியிலும் துணிகரத் திருட்டை நடத்தியுள்ளனர். தாங்கள் நுழையப் போகும் வீட்டை முன்கூட்டி…

  20. -வெளிநாட்டு செய்திச் சேவை- நேட்டோவின் தாக்குதலில் சேர்பிய படைகள் தோற்கடிக்கப்பட்டு 8 வருடங்களுக்குப் பின்னர் கொசோவோ முழுமையாக சுதந்திர நாடாக மிளிர்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொசோவோ இதன் மூலம் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றில் உறுப்புரிமை பெறுவதற்குமான உரிமையை பெற்றுள்ளது. மேலும், முன்னாள் யுகொஸ்லாவியா, சேர்பியா போன்றவற்றிற்கு உரிய பொருளாதார சொத்துகள் மற்றும் கடன்கள் மீதான தனது உரிமையையும் கொசோவோ பெறுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகளின் இந்த திட்டம் சேர்பியாவை சீற்றமடையச் செய்யலாம் என சுட்டிக் காட்டப்படுகின்றது. வியன்னாவில் இது குறித்து யோசனைகள் ஆராயப்பட்…

  21. ரெய்டு தாக்குதல்... கொதிக்கும் விஜயகாந்த் ‘‘பழிக்குப்பழி அரசியலுக்குள் இழுக்கிறார் கலைஞர்!’’ கல்லூரி, கட்சி அலுவலகம், வீடு என எங்கும் ரெய்டு மயமாகிவிட, அது போதா தென்று தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் புகுந்து புறப்பட்டதில் கண்சிவந்து போயிருக்கிறார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ரெய்டில் ஏராள மான சொத்துக்கள் சிக்கியதாகவும் கணக்கில் காட்டப்படாத பணமும், வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் வெளியில் பரபரப்பாகச் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்... ‘‘ரெய்டுக்குக் காரணம் அரசியல் பழிவாங் கல்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், முறையான வரி செலுத்தாததினால்தான் உங்கள் வங்கிக் கண…

    • 2 replies
    • 857 views
  22. ஆச்சே விடுதலையை மூச்சாக கொண்ட ஒரு தேசத்தின் கதை -ச.பா.நிர்மானுசன்- Sunday, 28 January 2007 இந்தோனேசியாவின் விசேட ஆட்புலமாக அமைந்துள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்த ஆச்சேயினுடைய விடுதலைக்கான போராட்டம் 1990களின் இறுதியிலும் 2000 இன் ஆரம்ப காலப்பகுதியிலும் உலகளாவிய ரீதியில் முனைப்படைந்திருந்தது. 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுகள் ஆச்சேனியர்களையும் இந்தோனேசியர்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை நோக்கி சிந்திக்க வைத்தது. அதன் விளைவு போரினால் சிந்திய குருதிகளுக்கும்,…

    • 0 replies
    • 1.2k views
  23. தென் கொரிய அதிகாரிகள் நிராகரிப்பு வடகொரிய தலைவர் கிம் ஜொங் இல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இராணுவம் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என வெளியான தகவல்களை தென் கொரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளனர். ஜப்பானின் ஜிஜி செய்தி, தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வடகொரியாவின் வூன்சான் கிராமத்தில் கிம் ஜொங் இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது. இதுபற்றி எதுவும் எமக்குத் தெரியாது என தென் கொரிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வழமைக்கு மாறான சூழ்நிலை எதுவும் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிம் ஜொங் இல் குறித்த தகவல்களை நம்பகத்தன்மையுள்ளவை என்றும் தென் கொரிய புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

  24. இலங்கையின் புனிதநகரத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது? இலங்கையில் பழமையான, புராதனச் சின்னங்களும், கோயில்களும் புனித நகராக அரசால் அறிவிக்கப்படும். அந்தப் புனித நகரத்தின் தொன்மையையும், புனிதத்தையும் குலைக்கும் வகையில் அந்தக் கோயிலைச் சுற்றியும் அதன் அண்மையான பகுதிகளிலும் புதுக் கட்டிடங்களோ, வேற்று மதச் சின்னங்களோ, சிலைகளோ, கோயில்களோ அனுமதிக்கப் படுவதில்லை. தமிழ்நாட்டின் பல நகரங்களில் நான் பார்த்த அசிங்கமான தோற்றம் என்னவென்றால் பழம்பெரும், புராதனக் கட்டிடக் கலையுடன், தமிழ் முன்னோர்களின் சிற்பக் கலையின் சிறப்பையும், பழம் பெருந்தமிழரசர்களின் சரித்திரத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த கோயில்களுக்கு அருகாமையிலேயே, அந்தக் கோயில்களின் பழமையையும், ப…

    • 4 replies
    • 1.4k views
  25. கோபாலபுரத்தில் சாய்பாபா... அதிசயம் நிகழ்ந்தது எப்படி? அத்தி பூத்தது போல் எப்போதாவது சில அபூர்வ சந்திப்புகள் நிகழ்வது உண்டு. அப்படி ஓர் அபூர்வ சந்திப்பு கடந்த 20&ம் தேதி, சென்னை கோபாலபுரத்தில் நடந்திருக்கிறது! கொள்கையிலும் நம்பிக்கையிலும் எதிரெதிர் துருவங்களாக இயங்கிவரும் முதல்வர் கருணாநிதியும், புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவும் 20&ம் தேதி ஒருவரையருவர் சந்தித்து சுமார் முக்கால் மணி நேரம் அளவளாவி இருக்கிறார்கள். பகுத்தறிவையே தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் கருணாநிதியும், பக்திமார்க்கத்தையே தன் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வரும் சாய்பாபாவும் சந்தித்துக் கொண்டது& தமிழக அரசியல் களத்திலும் சரி, ஆன்மிக தளத்திலும் சரி... வியப்பையும் பர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.